ஜீவகாருண்ய ஒழுக்கம்!
வள்ளலார் அறிவுறுத்திய ஜீவகாருண்ய ஒழுக்கத்தின்
முக்கியக் குறிக்கோள், பிற உயிர்களின்
பசியை ஆற்றுவது.
சத்திய தருமச்சாலை & வெளித்தோற்றம்
"ஜீவகாருண்ய ஒழுக்கமானது, மனிதருக்கு முக்தியை அருளும்" என்றார்
அவர். ஜீவகாருண்ய வழியைக் கடைப்பிடிப்பது மிக எளிது.
"பசி என்பது என்ன? உயிர்களுக்குப் பசி என்னும் ஒன்று எதனால்
இருக்கிறது? பசியின் காரணமாக, மனிதர்கள் என்னென்ன கொடுமைகளைச் செய்யத்
துணிவார்கள்?பசியினால் ஓர் உயிருக்கு உண்டாகும் வேதனைகள்
என்னென்ன?" என்று
வள்ளலார் ஜீவகாருண்ய ஒழுக்கத்தை வலியுறுத்த, பசியைப் பற்றி அணுஅணுவாக அலசி
ஆராய்ந்திருக்கிறார். பசியைப் பற்றிய அவரது கருத்துகள் இங்கே:
பசி என்ற ஒன்று இருப்பதேன்?
பசியில்லாவிட்டால் உணவுக்காக மக்கள் ஒருவரை
ஒருவர் எதிர்பார்க்க மாட்டார்கள். அப்படியில்லாதபோது, ஒருவருக்கொருவர் உதவமாட்டார்கள். அப்படி
உதவவில்லை என்றால்,மனிதநேயம் இல்லாமல் போய்விடும்.
சத்திய ஞான சபை & வெளித்தோற்றம்
மனிதநேயம் இல்லாவிட்டால், கடவுள் அருள் கிட்டாது. எனவே, கடவுளை அறிய, கடவுளால் நமக்குக் கொடுக்கப்பட்ட ஓர் உதவிக்
கருவிதான் பசி! பசி என்பது என்ன?
பசி என்பது, ஏழைகளின் உடலில் பற்றி எரியும் நெருப்பு.
பசி என்பது, ஏழைகளின் அறிவாகிய விளக்கை அணைக்க முயலும்
விஷக்காற்று.
பசி என்பது, ஏழைகளின்மேல் பாய்ந்து கொல்லப் பார்க்கும்
புலி.
பசி என்பது, உச்சி முதல் பாதம் வரை பாய்ந்து பரவும் விஷம்.
பசி நோயினால் ஏற்படும் கொடுமைகள்!
பசி நோய் என்பது மிகவும் பயங்கரமானது.
அந்நோயைத் தீர்த்துக்கொள்ள, மக்கள் எத்தகைய
பாவத்தையும் செய்ய அஞ்சமாட்டார்கள்.
பெற்றவர்கள், பிள்ளைகளை விற்பார்கள்.
இதன் விளைவாகப் பிள்ளைகள் அநாதைகளாகத்
திரிவார்கள். பிச்சை எடுப்பார்கள். கடின வேலைகளில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
பிள்ளைகள், பெற்றவர்களை விற்பார்கள்.
வள்ளலார் சந்நிதி
இதன் விளைவாக, வயதானவர்கள் பரதேசங்களில்,பரவீடுகளில் கடின உழைப்பில் ஈடுபட
வேண்டியிருக்கும். பிச்சை எடுக்க நேரிடும். முதியோர் இல்லங்களில் தஞ்சம் புகுந்து, கூனிக் குறுக நேரிடும்.
வீடு, மாடு, நிலம், மற்ற உடைமைகள் அனைத்தையும் விற்று, மக்கள் பசிப்பிணியை அகற்றப் பார்ப்பார்கள்.
முனிவர்களையும் யோகிகளையும்
சித்தர்களையும்கூடப் பசி தாக்கும். அச்சமயங்களில் அவர்கள் பிச்சை கேட்டு ஊருக்குள்
நுழைவார்கள். பிச்சை கிடைக்காவிடில் சித்தம் கலங்குவார்கள்.
எந்நேரமும் காமத்தை விரும்பும் காமுகர்கள்கூடப்
பசிப்பிணி தாக்கும்போது, காமம் மறந்து
கலங்கு வார்கள்.
பசிப்பிணி தாக்கினால் என்னாகும்?அறிவு மயங்கும்.கடவுளைப் பற்றிய நினைப்பு
அடியோடு ஒழிந்து போகும்.சித்தம் கலங்கும்.நம்பிக்கை குலையும்.கண் பஞ்சடைந்து
குழிந்துபோகும்.காதில் இரைச்சல் ஏற்படும்.நாக்கு உலர்ந்துபோகும்.
கை, கால் சோர்ந்து துவளும்.வார்த்தை குழறும்.வயிறு
திகுதிகுவென எரியும்.தாபமும் கோபமும் பெருகும்.உயிர் விலகுவதற்கான அத்தனை
அறிகுறிகளும் மேலும் மேலும் தோன்றும்.நரக வேதனை, ஜனன வேதனை, மரண வேதனை ஆகிய வேதனைகளும் ஒன்றுதிரண்டால் என்ன
வேதனை உண்டாகுமோ, அதுவே பசி வேதனை.பசி
அகன்றால் அடையும் ஆனந்தங்கள்!உணவு கிடைத்து, உண்டு பசியாறியவுடன், பசியால் நேர்ந்த அத்தனை துன்பங்களும்
அகலும்.தத்துவங்கள் மறுபடி தழைக்கும்.உள்ளம் குளிரும்.சித்தம் தெளியும். உள்ளேயும்
வெளியேயும் உயிர்க்களை உண்டாகும்.கடவுள் நம்பிக்கை துளிர்க்கும்.
No comments:
Post a Comment