முதலில்
நாடி பரிசோதனையில் எந்த உறுப்பின் இயக்கம் குறைந்துள்ளது என்பதை கண்டறியவேண்டும் .
இரண்டவது
அந்த உறுப்பின் இயக்கத்தை எந்த உறுப்பின் இயக்கம் பாதிக்கிறது என்பதை கண்டறிய வேண்டும்
.
மூன்றாவது
அந்த பாதிப்பை சரி செய்யும் புள்ளி எது என்பதை கண்டு பிடிக்க வேண்டும் .
நான்காவது
அந்த புள்ளியை எதற்காக தேர்வு செய்தோம் என்பதில் நமக்கு தெளிவு வேண்டும் .
ஐந்தாவது
அந்த புள்ளி நோயை எவ்வாறு சரி செய்கிறது என்பதில் தெளிவு வேண்டும்.
ஆறாவது
அந்த புள்ளிக்கும் நோயிற்கும் உள்ள தொடர்பு என்ன என்பது தெரிய வேண்டும் .
ஏழாவது
அந்த புள்ளி குணமாக்கும் என்பதில் நமக்கு தீவிரமான உறுதி வேண்டும்.
மேற்கண்டவாறு
செயல்படும் போது மட்டுமே நாம் வெற்றி பெற முடியும் . அகுபஞ்சரில் எல்லா நோய்களையும் குணபடுத்த
முடியாது. 100 நபர்கள் சிகிச்சைக்கு வந்தால் அதில் 40 முதல் 50 நபர்களை மட்டுமே குணபடுத்த
முடியும். மற்றவர்களுக்கு நாளமில்லா சுரப்பிகளில் பாதிப்புகள் இருக்கும்
(Endogrine glands) . சிலருக்கு ரெய்கி சக்கர மையங்களில்(Chakkaras) பிரச்னை இருக்கும்.
இன்னும் சிலருக்கு வர்ம புள்ளிகளில் பாதிப்பு
இருக்கும். அதை போன்ற நபர்களுக்கு
Acupressure, Reiki, Varma Theraphy, Mudras, Breathing Technique, போன்ற சிகிச்சை
முறைகளையும் இணைத்து பயன்படுத்தினால் மட்டுமே குணம் கிடைக்கும் . அகுபஞ்சரின் அடிப்படை நோக்கமே பஞ்சபூத
சக்திகளை சமநிலை படுத்துவது ஆகும் . நோய்களுக்கு என்று குறிப்பிட்ட புள்ளிகள் கிடையாது.
No comments:
Post a Comment