பிரம்மம்
இதுவரை நாமறிந்தது
|
ஸ்ரீ அரவிந்தம்
|
|
விளக்கலாம்
|
சிருஷ்டிக்காது
|
Has
self-determination
பிரபஞ்ச
சிருஷ்டி பிரம்ம சிருஷ்டி
|
தனித்து
வாழ்வது
|
Has
principles and truths and powers
சக்தி
உண்டு, வெளிப்படும்
|
|
உலகமே
பிரம்மம்
பிரம்மம்
வேறு, உலகம் வேறன்று
|
|
ஆனந்தத்திற்காக
லீலை
|
|
Is
an Absolute that is relative
|
|
Seeks
delight in emerging from its opposite
|
|
Must
have endless powers of its being.
Must
have endless truths of its own self-awareness
|
|
Creation
is self-manifestation
Every
possibility is a truth in the Absolute
|
மனிதன் என்பவனை நாம் மனிதன் என்கிறோம்.
அவனிடம் நல்ல குணமிருந்தால் அதை பாஸிட்டிவ் எனவும், கெட்ட குணமிருந்தால் நெகட்டிவ்
எனவும் கூறுகிறோம், அதனால்,
மனிதன்
இரு பிரிவுகளாக இருப்பதாக அர்த்தமில்லை.ஒன்றை விலக்க முடியும் என்றாகாது.மனிதனைப் பிரிக்க
முடியாது, பிரித்து அறியலாம். பிரிக்க முடியாது. அதே போல் பிரம்மம் ஒன்றே, உலகம் ஒன்றே.
அவற்றைப் பிரித்து அறியலாம். தனித் தனிப் பாகங்களாகப் பிரிக்க முடியாது. இரண்டும் சேர்ந்த
முழுமை பூரண யோகத்தின் அடிப்படை.அறிவு பிரித்துப் பார்ப்பதைச் செயலால் பிரித்து அவை
வேறுவேறு பகுதிகள் என்றால் அது உண்மையில்லை. அதன் அடிப்படையில் நாம் புரிந்து கொள்பவை
அனைத்தும் தவறாகும். நமக்கு வேண்டியவை, வேண்டாதவை என உண்டு.நாம் வேண்டியதை சேர்த்துக்
கொள்கிறோம், வேண்டாததை விலக்குகிறோம்.இன்று வேண்டாதது, நாளை வேண்டும் என்பது முக்கியம்.எதையும்
விலக்கக் கூடாது. முழுமை என்பது அதுவே.எந்த அளவுக்கு வேண்டாததைச் சேர்த்துக் கொள்கிறோமோ
அந்த அளவுக்கு முழுமையுண்டு.எவ்வளவு சீக்கிரம் வேண்டாதது வேண்டியது எனப் புரிகிறதோ,
அவ்வளவு சீக்கிரம் முழுமை வரும்.வாழ்வில் விலக்குவதை தேடிப் போக வேண்டியது விதியாக
செயல்படுவதை அனுபவம் கூறுகிறது.அவசியமான நேரம், ஆபத்தான நேரம், முக்கிய விஷயம் வந்த
நேரம் விலக்க முடியாதவை தங்களை வலியுறுத்துவதைக் காண்பது வாழ்க்கையில் ஸ்ரீ அரவிந்த
இரகஸ்யம்.தற்காப்புக்காக விலக்க அனுமதியுண்டு.அப்பொழுதும் இவை விலக்கப்பட வேண்டியதில்லை
என்ற ஞானத்தோடு தற்காப்புக்காக விலக்குவது முறை, சட்டமாகும்.
Sri
Aurobindo has realized God in his body .மோட்சமடைபவன் ஆன்மா அவனைவிட்டுப் பிரிந்து
பரமாத்மாவை அடைகிறது. அவனது 4 கரணங்களும் அதை சாதிக்கவில்லை. அப்படிப்பட்ட யோகம் இதுவரை
இல்லை.ஆன்மா ஆண்டவனை அடைவது மோட்சம்.நான்கு கரணங்களும் இறைவனாக மாறுவதுதிருவுருமாற்றம்.அப்படி
மாற யோகம் செய்தால் மனிதன் மனத்திலிருந்து உயர்ந்து சத்திய ஜீவியத்தை அடைந்து, சத்திய
ஜீவியம் அவனுள் எல்லாக் கரணங்களிலும் இறங்கி வந்து நிரம்பும்.பகவான் சத்திய ஜீவியத்தை
எட்டிய பின்னும் சத்திய ஜீவியம் இறங்கி வரும் அளவில் அமையவில்லை. 1926ஆம் ஆண்டு நவம்பர்
24ஆம் தேதி தெய்வீக மனத்தை பகவான் எட்டியது முழுமை பெற்றதால், அது இறங்கி வர ஆரம்பித்து
அவர் மனம், வாழ்வு, உடலை, நிரப்பியதை சித்தி தினம் என நாம் தரிசன நாளாகக் கொண்டாடுகிறோம்.
அன்று அவர் தனிமையை நாடினார். பிறகு சத்திய ஜீவியத்தை அடைந்தார். இது பிரம்மத்துடன்
நிரந்தரத் தொடர்புள்ளது. சத்திய ஜீவியம் அவர் உடலில் இறங்கி வந்து நிரப்பியது, அப்படி
சித்தித்தது அவருடைய physical consciousness உடலின் ஜீவியத்தில் நடந்தது.
அடுத்த கட்டம் உடலின் ஜடப்பொருள். அதைச் செய்தது அன்னை.வேத ரிஷிகள் இயற்கையோடு இணைந்த
வாழ்வை நடத்திய பொழுது தங்கள் ஜடமான உடலும், ஜடமான மலை, நதியும் ஒன்று எனக் கண்டனர்.
உடலின் அன்னமயப் புருஷன் விழித்து எழுந்ததால் ஏற்பட்ட சித்தியிது. பூரண யோகத்தில் உடலின்
சைத்தியப் புருஷன் அதைச் செய்ய வேண்டும். பகவானுக்குப் பின் அன்னை யோகத்தை உடலில் தொடர்ந்தார்.
Karma
is of the Force, not of the Being.பிரம்மம் என்பது ஜீவன், இது இதன் சக்தியால்
கவரப்பட்டுள்ளது. மனம் துண்டாடும்பொழுது சக்தியைத் துண்டு செய்கிறது. ஜீவனைத் துண்டாடுவதில்லை,
துண்டாட முடியாது. சக்தி, காரண காரியத்திற்குட்பட்டது. ஜீவன் காரணத்திற்கோ, காரியத்திற்கோ
உட்பட்டதில்லை.அதனால் அதற்குக் கர்மம் இல்லை. கர்மம் மேலேயுள்ள சக்திக்கு, ஜீவனுக்கில்லை.சக்தியை
நம்புபவர்க்குக் கர்மம் உண்டு.நம்பாதவர்க்குக் கர்மம் இல்லை.ஸ்ரீ அரவிந்தம் மனத்திலிருந்து
செயல்பட வில்லை. Being of the becoming சைத்தியப் புருஷனிலிருந்துசெயல்படுகிறது.
கர்மம் Being இல்லை. Being of the
becomingக்கு கர்மம் இல்லை.கர்மம் மனத்திற்கும், வாழ்வுக்கும் உண்டு.ஜீவனுக்கு கர்மமில்லை.
Force
is anterior to the instrumentவிஞ்ஞானி சக்தி கருவியிலிருந்து எழுகிறது
என்பதை மறுத்து ஸ்ரீ அரவிந்தர் சக்தி தனக்குத் தேவையான கருவியைச் செய்து அதன் மூலம்
செயல்படுகிறது என்கிறார். மின்சாரம் மோட்டாரை ஓட்டினால், மின்சாரம் மோட்டாரிலிருந்து
வரவில்லை, வெளியிலிருந்து வருகிறது. மனம் தான் செயல்பட ஒரு கருவி வேண்டும் என மூளையை
உற்பத்தி செய்தது, ஜீவாத்மா உலகில் செயல்பட உடலைத் தாங்குவதுபோல். மூளை வேலை செய்வதால்
எண்ணம் உற்பத்தியாவதாக விஞ்ஞானி கருதுவது சரியில்லை என்கிறார் ஸ்ரீ அரவிந்தர்.
No comments:
Post a Comment