மனிதன் காந்த
சக்தி படைத்தவன் என்பது சித்த வித்யா கோட்பாடுகளில் ஒன்று. அதாவது கந்தம் என்ற சொல்லின்
பொருள் இயற்பியல் அர்த்தத்தினை விட சித்த வித்யா அடிப்படையில் பார்த்தால் ஒருவித கதிர்ப்பும்
ஈர்ப்பும் உடையவன் என்பதனை விளக்கவே இந்த சொற்பிரயோகம் பிரயோகிக்க ப்படுகிறது. எமது
வாழ்க்கையில் சில சம்பவங்களைப் பார்ப்போம்;
முன்பின்
தெரியாத ஒரு சிலரைப் பார்க்கும் பொது சிலர் மீது விருப்பும் வெறுப்பும் வர என்ன காரணம்?
ஒரு
சிலரைப்பார்த்தாலே மனம் கவலைகளை மறந்து மகிழ்வடைய என்ன காரணம்?
ஒரு
சிலர் முக அமைப்பில் அழகு அற்றவர்களாக இருந்த போதும அவர்களை பிடிப்பது ஏன்?
சில
சாமியார்களிடம் பெற்ற விபூதி தீராத நோய்களை தீர்ப்பது எப்படி?
சிலரது
கண்பார்வை பட்டால் காரியம் சரி வராது என்று வழக்கில் கூறுவதன் காரணம் என்ன?
இப்படி
பல உதாரணங்களை கூறிக்கொண்டு போகலாம். இவற்றின் காரணம் எல்லாம் ஒவ்வொரு மனிதனுடைய
காந்த சக்தி கதிர்ப்பில் ஏற்படும் ஒற்றுமை வேற்றுமைகளே.
எப்படி இந்த காந்த சக்தி உருவாகிறது?
எமது
மேல் மனதில் உருவாகும் எண்ண அலைகளும் ஆழ்மன பதிவுகளும், பிராண சக்தியின் அளவுமே ஒருவரது
தனிப்பட்ட காந்த சக்தியின் அளவினை தீர்மானிக்கும் காரணிகளாகும். மனம் ஒரு எண்ணத்தினை
நினைக்கும் பொது எமது உடலை சுற்றி ஒரு காந்தப்புலம் உருவாகின்றது. அது எமது பிராண சக்தியின்
அளவிற்கு ஏற்றவாறு பரவுகின்றது.
எப்படி உங்களுடைய காந்த சக்தியின் தன்மையினை
அளவினை பரிசோதிப்பது?
இரண்டு
ஒரே அளவாக பழுத்த எலுமிச்சம் கனிகளை வாங்கி வாருங்கள், ஒரு கனியினை மனதில் பல நாட்களுக்கு
கெடாமல் இருக்க வேண்டும் என தொடர்ச்சியாக எண்ணிய படி கைகளுக்குள் (நசுங்கி விடாமல்)
10 நிமிடங்கள் வைத்திருந்து விட்டு அதிக வெப்பம் இல்லாத இடத்தில் தனித்தனியாக
வைத்து விடுங்கள். பின்னர் ஐந்து நாட்களுக்கு பின் அவை இரண்டையும் எடுத்துப்பார்க்கும்
போது எது முதலில் பழுதடைந்துள்ளது என்பதனை வைத்து உங்கள் காந்த சக்தியின் தன்மையினை
சோதித்து கொள்ளலாம்.
அல்லது
கீழ்வரும் குறிகளைக்கொண்டும் உங்கள் காந்தத்தின் தன்மையினை அறிந்து கொள்ளலாம்.
மற்றவர்களுடன்
பழகும் போது அவர்கள் உங்களை விரும்பும் அளவு மதிக்கும் தன்மைகைராசி அளவு
எப்படி எமது காந்த சக்தியினை தூய்மைப்படுத்துவது?
ஆழமான
மூச்சும் நல்ல எண்ணங்களும் தான். நாம் முன்னர் குறிப்பிட்ட
மனச்சுத்தி பயிற்சியினை செய்வதன் மூலம்
எமது காந்தத்தினை சுத்தி செய்து கொள்ளலாம். அடுத்த மிகதுரிதமான வழி காயத்ரி மந்திர
ஜெபம் அல்லது இஷ்ட தெய்வத்தின மந்திர ஜெபம்
எப்படி காந்த சக்தியினை பலப்படுத்துவது ?
மன
ஏகாக்கிரம் (தாரணை ) யும் பிராண சக்தி வளர்ச்சியும் மனித காந்தத்தினை சுத்தி
செய்து பலமடையவும் செய்யும் (two in one method) மந்திர ஜெபம் ஒன்றே.
மனித காந்த சக்தியின் பிரயோகங்கள் எவை?
வசியம்
முதலான மந்திர பிரயோகங்கள் ,ஹிப்னாடிசம்
மெஸ்மரிசம் ,நோக்கு வர்மம் ,தீட்சை
நோய்
தீர்த்தல் ,கவர்ச்சி பெறல் போன்ற அனைத்தும் மனித காந்த செயற்பாடுகளின் அடிப்படையிலேயே
நடைபெறுகின்றன.இந்த விளக்கங்கள் அடிப்படையினை விளங்குவதற்கு போதுமானது என எண்ணி இத்துடன்
முடிக்கிறேன். மேலதிக விளக்கங்கள் தேவையானவர்கள் ஈ மேயிலிற்கோ, பின்னூட்டமாகவோ கேட்கலாம்.
No comments:
Post a Comment