Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Sunday, October 26, 2014

ஆறு ஆதாரங்கள்


ஆறு ஆதாரங்கள்
உடலின் குறிப்பிட்ட சில நரம்புகளில், குறிப்பிட்ட இடங்களில், குறிப்பிட்ட அளவில் தட்டுப்பட்டால் ஒருவர் உணர்விழப்பர். அந்தக் குறிப்பிட்ட இடங்களே வர்மம் எனப்படும். உடல் சீராக இயங்குவதற்காக உடலின் 108 இடங்களில் நின்று இயங்கும் உயிர்நிலைகளே வர்மங்கள் எனப்படும். அதாவது உயிர்நிலைகளின் ஓட்டம் எனக் கூறுவர்.வர்ம மருத்துவத்தை இறையருளும், குருவருளும் நிறைந்தவர்களால்தான் அறிய முடியும். இந்த இறையருள் கிடைப்பதற்கு தியான நிலையே முதலிடம் வகிக்கிறது. தியான நிலையில் பிராண வாயுவின் செயல்பாட்டை அறிந்து அதை சுழிமுனை அதாவது திலர்த காலத்தில் நிறுத்த வேண்டும். அப்போது உச்சந்தலையில் சுவாசம் தெரியவரும். இவை இரண்டும் சுழிமுனையில் சேரும்போதுதான் உடலில் உள்ள ஆதாரங்கள் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் இணைந்து அங்கே சரநிலை ஒடுக்கம் ஏற்படுகிறது. இதையே சக்தி நிலை, சுழிமுனை சூட்சமம் என்று அகத்தியர் முதல் பல சித்தர்கள் கூறியுள்ளனர்.இவ்வாறு சரநிலை ஒடுக்கம் மூலம் பிரபஞ்ச சக்தியை அடைந்தவர்கள் தான் சித்தர்கள். தன்னைத்தானே அறிந்து தெளிந்தவர்கள் தான் இவர்கள். பிரபஞ்ச சக்தியைஅடைந்த சித்தர்கள் உடற்கூறுகளையும் அறிந்தனர். இவ்வாறு அறியப்பட்ட உடல் நிலைகளில் ஏதாவது பாதிப்பு உண்டானால் அவை எவ்வாறு மற்ற உறுப்புகளை பாதிக்கிறது என்பதையும் அறிந்தனர். இதனால் பிரபஞ்ச சக்தியை அடைந்து உலக ஞானங்களை அறிய உடம்பே பிரதான கருவி எனக் கண்டறிந்தனர். இதனால் தான் திருமூலர் ஊண் உடம்பே ஆலயம் என்றார். இந்த உடல் வலுவாக இருந்தால்தான் பிரபஞ்ச சக்தி கிடைக்கும் என்பதை தெளிவாக புரிய வைத்தனர். தாங்கள் செய்த தவத்தின் பலனால் மனித உடம்பின் புதிர்கள் அனைத்தையும் தெளிவாக அறிந்து கொண்டனர்.பஞ்ச பூதங்களின் கலப்பே உடல் என்றும், கோள்களின் ஆதிக்கமே உறுப்புகள் என்றும் கண்டறிந்தனர்.அப்போது மனித உடலின் செயல்பாடுகள் அனைத்தும் வாத பித்த கபத்தின் அடிப்படையாகவே இயங்குகிறது. வாத, பித்த, கபம் அதனதன் நிலையில் சீராக இயங்க வேண்டும். அப்போதுதான் நோய்கள் தாக்காமல் ஆரோக்கியமான உடலைப் பெற முடியும். இந்த நிலையில்தான் பிரபஞ்ச சக்தியை அடைய முடியும்.கண்களை மூடி தியான நிலையில் பிரõண வாயுவை உள்ளிழுத்து திலர்த காலத்தில் நிறுத்த முயற்சிக்கும்போது அது அங்கும் இங்கும் தான் ஓடும். அத்தகைய ஒளியை அதனோடு சேர்ந்து அதுபோக்கில் விளையாடி இறுதியாக சுழிமுனையில் நிறுத்தினால்உச்சந் தலையில்  தனஞ்செயன் வாயுவின் வழியாக சுவாசம் நடைபெறுவது தெரியவரும்.இந்த உச்சந்தலை சுவாசத்தையும், பிராண வாயுவையும் உள்ளிழுத்து மூலத்தை அடைந்து அங்கிருந்து மேல்நோக்கி திலர்த காலத்தில் ஒரு அக்னிப் பிழம்பாக ஒடுங்கும்.அப்போதுதான் பிரபஞ்ச சக்தி அனைத்தையும் உணர முடியும்.வலுவான தேகம் இருந்தால் தான் அண்ட சராசரங்களை அறிய முடியும் என்கின்றனர் சித்தர்கள்.இத்தகைய நிலையை அடைந்தவர்கள் தான் உடலையும் மனதையும் அறிய முடியும்.
உடற்கூறு தத்துவங்களை அறிந்த சித்தர்கள் அவை பிரபஞ்சத்தின் தொடர்பு இருப்பதை தெரிந்து கொண்டார்கள். இதனால் தான் கோள்களின் ஆதிக்கம் அதிகரிக்கும்போது அதனுடன் தொடர்புடைய உறுப்பு பாதிக்கப்பட்டு பல்வேறு உபாதைகளை உருவாக்குகிறது. இத்தகைய உபாதைகள் சில சமயங்களில் இனம் புரியாத நோய்களாக கூட மாறுகின்றன. இந்த நோய்களுக்கு மூலிகை மருந்துகள் மூலம் மட்டும் சிகிச்சையளிக்க முடியாது. இதனால் புரியாத நோய்களைப் பற்றிய விபரங்களையும் அவற்றை குணப்படுத்தும் வழிமுறைகளையும் பற்றி அறிந்து கொள்ள சித்தர்கள் அகத்தியரிடம் சென்று விளக்கம் கேட்டனர். அப்போதுதான் அகத்தியர் உடலின் சூட்சுமத்தையும் அவை அடங்கியிருக்கும் இடங்களைப் பற்றி தெளிவாக எடுத்துரைத்தார். மனிதன் உயிர் நிலை ஒடுக்கம் அனைத்தும் இந்த இடங்களிலே அடங்கியுள்ளன. இவற்றிற்கு பெயர்தான் வர்மப் புள்ளிகள் எனக் கூறினார். எலும்பு, தசை, நரம்பு, இரத்த நாளங்கள் சந்திக்குமிடமே வர்மப் புள்ளிகள் ஆகும். இந்த வர்மப் புள்ளிகள் உடலில் 108 பாகங்களாக அமைந்துள்ளது. இவற்றில் ஏதாவது ஒரு புள்ளி பாதிக்கப்பட்டால் அதன் பாதிப்பு மற்ற வர்மப் புள்ளிகளையும் பாதிக்க ஆரம்பிக்கும். கைதேர்ந்த வர்மானியர்கள் நாடி பிடித்துப் பார்த்து எந்த வர்மம் பாதித்துள்ளது என்பதையும் எதனால் தாக்கப்பட்டிருக்கிறது என்பதையும் அறிந்து, பிறகே அதற்குரிய சிகிச்சையை தொடங்கு வார்கள்.        
ஆறு ஆதாரங்கள் பாதிப்பு ஏற்பட்டால் விளையும் விபரீதங்கள்.
ஆக்கினை -: நெற்றி தலையில் அடிபட்டால் சிலேத்தும நோய், கண்பார்வை குறைவு, காது கேளாமை, ருசியின்மை நீர் தோஷமாகிய ஆஸ்துமா, சயனஸ், பைத்தியம், மண்டை ஓட்டில் அடிபட்டால் நீர் இறங்கும் தன்மை ஆகிய நோய்கள் உண்டாகும். குண்டலீனி யோக தவறாக செய்தாலும் நோய்கள் ஏற்படும்.(பஞ்சபூதங்களின் ஆகாயம் ஆகும்)
விசுத்தி -; நெஞ்சுக்கு மேல் பகுதி அடிபட்டால் நுரையீரல் தாக்கப்பட்டால் சயரோகம், படபடப்பு, ஆஸ்த்மா, குனிந்தால் மூச்சு முட்டுதல், நடந்தால் மூச்சு வாங்குதல் அதிக கோபம் ஆகியவை தாக்கப்படும்.(காற்று தன்மையாகும்)
அளாதகம் -: மேல் வயிற்றுப் பகுதி, பித்தப்பை, கல்லீரல் வீக்கம், வயிறு உப்பிசம், மஞ்சள் காமாலை, ஜீரணக்குறைவு, குடலுருஞ்சிபாதிப்பு, உடல் வீக்கம் முதலியவை ஏற்படும். (நெருப்பு தன்மையாகும்)
மணிபூரகம் :- வயிற்றின் மத்திய பகுதியில் குடல் கிட்னி, நீரடைப்பு, கல்லடைப்பு வரும். (தண்ணீர் தன்மையாகும்.)
சுவதிஷ்டானம் -: வாத சம்பந்தப்பட்ட நோய் பாதிப்பு ஏற்படும். (மண் தன்மை)
மூலாதாரம் -: மூல நோய், சுக்கில நோய்கள் வரும். இதில் குண்டலீனி யோகம் செய்யும் யோகிகள் குரு மூலம் முறையாக இயக்கத் தெரியவில்லை எனில் மேற்குறித்த நோய்களில் மாட்டிக் கொள்வார்கள். மரணம்வரை வந்து விடும். நமது உடலில் தலையும் மூலாதரமும் வட தென் துருவமாகும். மூலத்தில் ஆடும் சப்தமும் உண்டாகும்
குண்டலினி யோகம் செய்பவர்கள் பிராயணாமம் செய்கிறேன் என்று உடல் ஆரோக்கியமாக இருக்கும் உடலில் எந்த பிரச்சனையும் உண்டாகாது என அசட்டையாக இருகக்கூடாது
இதனை முறையாக செய்யவில்லை எனில் சக்தி ஓட்டம் தவறாக ஓடினால் குடலை சுற்றி உள்ள மெல்லிய ஜவ்வு கிழிந்து சிறு குடல் இறங்கி விடும். இதை குடல் இரக்கம் என கூறுவார்கள்.
யோக சக்திக்கேற்ப சாப்பாடு, எண்ணைய் குளியல் வேண்டும், அவ்வாறு செய்யாவிடில் குறி வழியாகவும் குதம் மூலம் வழியே கீளே வெப்பத்தை வீசும். விந்து வெளி வரும், மூலவியாதி தாக்கும். அதிக குளிரால் குறியை செயலிழக்க வைக்கும், குடல் சரியாக வேலை செய்யாது.
எனவே ஆறு ஆதாரங்கள் முறையாக வேலை செய்ய வேண்டும் இவைகளில் வர்ம புள்ளி தாக்கப்பட்டால், செயலிழக்கவில்லை என்றாலும் மேற்கண்ட நோய்களால் பீடிக்கப் படும். இந்த நோய்களை குண்டலீனியின் சரியான இயக்கத்திலும், வர்ம மருத்துவரீதியாக குணப்படுத்த முடியும்.

நிணநீர் சுரபிகள்.     நிணநீர் சுரபிகள்.நிணநீர் சுரபி உடம்பில் உள்ள திரவத் தன்மை பாதிப்பின்றி இரத்த ஓட்டத்துடன் நிணநீர் உறுப்பு திசுக்களின் நீர் தன்மையை பாதுகாப்பது, நச்சுத் தன்மை பாதிக்காமல் நிணநீர் செல் பாதுகாப்பு அளிக்கிறது.அதிகமாக நிணநீர் சுரபி கழுத்துப் பகுதி, தொடை பகுதி கைகளுக்கு அடியில் இச்சுரபி உள்ளது.
டான்சில்.முக்கியமான நிணநீர் சுரபி டான்சில் உள் வாய் முதல் அறைக்கும் தொண்டை பகுதிக்கு இடையில் உள்ளது. சீதோஷ்ண மாறுதலால் குரல் கம்மல், தொண்டை வீக்கம், ஜுரம், தலைவலி, கண்சிவப்பு தோன்றுதல் ஏற்படும்.
உமிழ் நீர் கோளம்.உமிழ் நீர் உணவை ஸ்டார்ச்சை சர்கரையாக மாற்றும். உணவை மிருதுவாக மாற்றும், தொண்டைக் கேற்ப உணவை தள்ளி விடுகிறது.உமிழ்நீர் பாதித்தால்-இறைப்பைக்கு உணவு செல்லும் போது ஏப்பம், வயிற்றுவலி, ஜீரணக் கோளாறு, வாந்தி ஏற்பட வாய்ப்பு உள்ளது.
மண்ணீரல்.குடலுக்கு கீழ் சிறுநீரகத்திறுகு இடையில் அமைந்துள்ளது. சிகப்பு அணுக்களை உற்பத்தி செய்யும். சிவப்பு வெள்ளை நிணநீர் திசுக்களை கொண்டது.உடற் திசுக்களிலிருந்து நிண நீர் தந்துகிகள் மூலம் வெளியேறுகிறது. தந்துகிகள் எல்லா உறுப்புகளிலும் இருக்காது.இச்சுரபியால் வரும் நோய்-வளர்சிதைமாற்றம் கை கால் வீக்கம், தோல் ஒவ்வாமை இன விருத்தி உறுப்பு பாதிப்பு, மாதவிலக்கு தொடர்பான நோய், இரைப்பை புண் ஏற்படலாம்.கல்லீரல்.கல்லீரல் சுரபி ஹார்மோன்களில் தேவையற்ற சிகப்பணுக்களை அழித்து இரும்பு சத்தினை சேமிக்கும் கொழுப்புக்களை ஆக்கல், அழித்தல் செய்யும். பித்த நீரை உற்பத்தி செய்யும். நமது உடலுல் நோய்களிலிருந்து பாதுகாக்கும். இரத்த சிவப்பணுக்களை உணவாக தேவையாகும்.இரத்தத்தை உறையவிடாமல் தடுக்கும்.மூத்திரத்தில் உள்ள யூரியாவை அமிலமாக தயாரிக்கிறது. குடலில் நச்சுத் தனமையை அகற்றுகிறது.                                                           பித்த நீர்.கல்லீரல் சுரக்கும் ஜீரண நீர் பித்த நீர் ஆகும். கணைய நீரோடு கலந்து உணவு குழம்பை ஆல்கலின் ஆக மாற்றுகிறது. கணைய நீரோடு கொழுப்பைப் பிரிக்கும், கொழுப்பை செரிக்க துணை புரிகிறது. உடலில் தீங்கு விளைவிக்கும். அணுக்களை அழிக்கும் மலச்சிக்கலை சரி செய்யும் தன்மையுடையது.கல்லீரல் சுரபியால் வரும் நோய் மன நோய், தசை நோய், வளர்சிதை மாற்றம். இரத்த அழுத்தம்.மேற்கண்ட நாளமில்ல சுரபிகள், நிணநீர் சுரபிகள் பாதிப்பால் வரும் நோய்களுக்கு சிகிச்சை செய்யும் முறைகள்.
1. யோகா மூலம்.
2. அக்கு பஞ்சர் மருத்துவ மூலம்..
3. வர்ம மருத்துவ மூலம்.
4. சித்த வைத்தியம் மூலம்.
5. ஆயுர்வேத முறையில் வழி உண்டு.
யோகா முறையில்
நாளமில்லா சுரப்பிகளும் அக்குவர்மா மருத்துவமும்.
உடலில் பல வகை சுரபிகள்உள்ளன. தனித்தனியாக திரவங்களை சுரந்து அதற்கென இருக்கும் பாதைகளின் மூலம் இரத்தத்தில் கலந்து மூளை மற்றும் உடலின் சக்திகளை கட்டுப்படுத்தி சரயான முறையில் செயல்படுத்துகிறது. இவை நாளமில்லா சுரபிகள் ஆகும்.
பிட்யூட்டரி சுரபி -: இது மூளையின் அடிப்பகுதியில் அமைந்துள்ளது. சிறு பட்டாணி அளவு உள்ளது. இச்சுரபி மூளையுடனும் மூளையின் நரம்பு மண்டலத்துடனும் இணைந்து செயல்படும். சுரபிகளின் தலைமையாக வேலை செய்யும். இரத்த அழுத்தத்தை அதிகரிக்க செய்வதும் சிறுநீர் உரிய நேரத்தில் வெளிப்படவும் இதவும். தாய்மார்களுக்கு குழந்தை பிறந்தவுடன் தாய்பாலைச்சுரக்க வைக்கிறது.
1. பிட்யூட்டரி சுரபி அதிகமாக சுரந்தால் மனிதன் மிகவும் உயரமாக வளருவான். முகத்தின் தாடை எலும்பு, கை விரல்கள், கட்டை விரல்கள், தேவைக்கு அதிகமாக வளரும். தலை எலும்பு பெருத்துவிடுதல்..
2. அதிகமாக வியர்த்தல், பெருத்த உடல் வளர்ச்சி.
3. மாணவ பருவத்தில் அபரிதமாக இருத்தல்.
4. ஆண்மை குறைவு, முதுகு தண்டு வலி, அடிக்கடி தலை வலி, தூக்கமின்மை.
5. உடல் பலஹீனம்.
6. பெண்களிக்கு மாதவிடாய் குறைவு, கூடுதல், சரியான நேரம் வருவதில்லை, கருப்பை வீக்கம், சிறுநீர் அதிகம் போதல், கண்பார்வை கோளாறு.
7. மூளை கட்டிகள்.
8. இதய கோளாறு.
9. நீரிழிவு.
பிட்யூட்டரி சுரபி குறைவாக சுரந்தால் -:பசியின்மை, குமட்டல், குறை இரத்த அழுத்தம், குட்டை வளர்ச்சி, பிறப்பு உறுப்பு பாதித்தல், உடலில் தோல் சுருக்கம், கட்டிகள், மன வளர்ச்சி குறைந்து போதல், தலை தொண்டையில் உருவாகும் கட்டி, மேக கிரந்தி, சர்க்கரை அளவு குறைதல்.
தைராய்டு.தொண்டை இரு பக்கங்களிலும் கழுத்தின் முன் புறத்திலும் இரண்டு சுரபிகள் உள்ளன. மூச்சுக் குழலின் மேல் பகுதியில் இரு புரமும் குறுகிய தைராய்டு திசுவினால் ஆனவை.
தைராய்டு அதிகமாக சுரந்தால் –நோய்கள்.மாதவிடாய் குறைவு, உடல் அரிப்பு, எரிச்சல், கண் பாதிப்பு, ஜன்னி, வாந்தி, எடை குறைவு, பசி அதிகரிப்பு, சுண்ணாம்பு சத்து குறைவு, உயர் இரத்த அழுத்தம், விரல் நடுக்கத்துடன் பலவீனம், தொண்டை வீக்கம், தலையில் கொழுப்புக்கட்டி, இதய தசை துடிப்பு அதிகம், இளம் பெண்கள் இச்சுரபியால் பாதிப்பு.
தைராய்டு குறைந்தால் -: நோய்கள்.ஹார்மோன் குறைவால் பிறவியிலிருந்து குழந்தை பாதிப்பு அடைதல். பிட்யூட்டரி சுரபியின் கோளாறு, எடை அதிகரிப்பு, தைராய்டு வீக்கம், வறட்சி, மூட்டு வீக்கம், முதுகு வலி, நகங்கள் ஒடியும், மந்தமாக இருப்பார்கள், பெண்கள் மாதவிடாய் 10 நாள் நீடிக்கும், உடலின் நீர் வீக்கம், மலசிக்கல், கை கால் வீக்கம். வம்சா வழியுடன் திருமண உறவு கொள்ளும் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தை மன வளர்ச்சி பாதிப்பு, உடல் வளர்ச்சி குறைவு.
தைமஸ் சுரபி.சுவாச குழாயின் அடியில் அதன் முன் பாகத்தில் மார்பு கூட்டில் மூச்சுக் குழல் பிரியும் இடத்தில் இதயத்தின் முன்புறம் காணும் சுரபி தைமஸ். நோய் எதிர்ப்பு பொருட்களை உற்பத்தி செய்தல். இது ஒரு முதன்மை நிணநீர் உறுப்பு ஆகும். உடல் வளர்ச்சியில் பெரிதாகவும், வளர்ச்சி முடிந்த பின் சிறிதாகவும், சில சமயம் இல்லாமலும் போகும்.இது பெண்களின் இன உறுப்பு வளரவும், அழகையும் கொடுக்கும். கருப்பை வளர்ச்சி காரணமாகிறது. கருவுற்ற நிலையில் தாய் குழந்தைக்கு திசு வளர்ச்சிக்கும் உதவுகிறது. குழந்தை பெறும் போது இடுப்பு உறுப்பு தசை, தசை நார் தளர்வடையச் செய்யும்.
தைமஸ் குறைவால் பெண்களுக்கு வரும் நோய்கள்.ஊனமுற்ற குழந்தை பிறத்தல். கருப்பை வளர்ச்சியின்மை, குழந்தைபேறுக்குப்பின் மாதவிடாய் போது தொடை,முதுகுதண்டு, இடுப்பு வலி.
ஆண்களுக்கு விந்து சுரபியைசுரக்கும் தன்மையை உண்டுபண்ணுகிறது. ஆண்களின் வளர்ச்சிகளில் வேறுபாடுகள் ஏற்படும்.
அட்ரீனல் சுரப்பிகள்.சிறு நீரகத்தில் மூடி போட்டால் போல் இச்சுரபி இருக்கும்.

சுரபி அதிகமாக சுரந்தால் தோன்றும் நோய்.
1. பெண்களுக்குஉடல் பருமனாதல், சர்கரை சத்து அதிகம். மீசை வளர்தல், இரத்த அழுத்தம், புத்தி கூர்மை பாதிப்படையும்.
2. உடலில் வெளியேறும் சோடியம் மற்றும் பொட்டாசியம் சோடியம் உடலில் தங்கி பொட்டாசியம் அதிகம் வெளியேறுவதால் CANN’S நோய் ஏற்பட காரணமாக இருப்பது அல்டோஸ்டிரோன் அதிகமாக சுரப்பதால் தான்.
3. பெண்களின் மாதவிடாய் தன்மை மாறும். மனிதன் சகிப்புத்தன்மை குறைந்து அயர்ச்சி உண்டாகும்.
இச்சுரபி குறைவானால்.தசை சக்தி குறைவு, மூச்சு விட கடினம், இரத்த சோகை ஏற்படும், குறைந்த இரத்த அழுத்தம், உடல் சேர்க்கை ஆர்வம், வாந்தி உண்டாகும்.ஜீரண சக்தி குறைபாடுகள்.
கணையம்.இரப்பைக்குப் பின் உள்ளது. உணவு ஜீரணிக்க வைக்கின்றது. இன்சூலின் நீரை உறபத்தி ஆகிறது. இன்சூலின் மட்டும் 51 அமினோ அமிலமாகக் கிடைக்கிறது.

இன்சூலின் கூடினால்.
1. கல்லீரல், தசைநார்கள், உடலின் மென்மையான தசை, சிறுநீர்ப்பை நாளம் பாதிக்கப்படும்.
2. குளுக்கோஸ் அளவு குறைகிறது.
3. கல்லீரல் குளுக்கோசை வெளியேறும் அளவைக் காட்டிலும் தசைகளின் குளுக்கோஸ் பயன்படுத்தும் அளவு அதிகரிப்பதால் சர்கரை அளவு இரத்தத்தில் குறைந்து விடும்.
இன்சூலின் குறைவால்.
1. கொழுப்பு சிதைவு அதிகமாகி குளுக்கோஸாகிவிடும்.
2. சிறு நீரகம் இரைப்பை பாதிப்பு ஏற்படும்.
இன்சூலின் அதிகமாகும் போது.
1. குளுக்கோஸ்குறையும்.
2. கல்லீரல் குளுக்கோஸ் அளவை விட, தசைகளின் குளுக்கோஸ் அதிகரிப்பதால் சர்கரை அளவு இரத்தத்தில் குறைந்து விடும்.
மருத்துவ உடல் பிரிவுகள்.
நமது உடல் பஞ்ச கண்டமாக பிரிக்கப்பட்டுள்ளது.
1. சிரசு அதாவது கழுத்திக்கு மேல் பகுதி.
2. நாபி கண்டம் கழுத்துக்கு கீழ் தொப்புள் வரை.
3. மூலக் கண்டம் தொப்புள் முதல் மூலம் வரை.
4. கர கண்டம் இரு கைகளும்.
5. பாத கண்டம் இரு கால்கள்.உடலில் உள்ள உறுப்புக்கள்-32 ஆகும். இவைகளில் ஒடிவு, முறிவு, குத்து, இடரல், ஏற்பட்டால் வர்ம காயம் ஏற்படும்.நமது உடலில் உள்ள உறுப்புகள் எலும்புகள் 208 ஆகும். நரம்புகள் 72000 உள்ளன. நரம்புகளிலும் ஏற்படும் பேதங்களினால் இடி, குத்து, தாக்குதல் இவைகளால் வர்மங்கள் ஏற்படும் உடலின் உள் பஞ்ச அடுகுகள், தசபூட்டு விசை உடலில் ஐந்துவிதமான தட்டுக்கள் உள்ளன.
உடலில் ஏற்படும் இயற்கை வேகங்களை அடக்கினால் ஏற்படும் விளைவுகள்.
1) சுவாசம்- சுவாசத்தை அடக்கினால் தொடர்ந்து இருமல்,வயிற்று பொறுமல், சுரம், சூலை நோய் சுவையின்மை நீர்த்தன்மையுண்டாகும்.
2) கண்ணீர்- கண்ணீரை அடக்கினால் தலைவலி, வயிற்று குன்ம ம், கண் நோய், மார்பு நோய் பீனிசம் வரும்.
3) வாந்தி- உடலில் தோல் நோய், நமச்சல், கண்நோய், பித்த விஷம், இரைப்பு, இருமல் வரும்.
4) இருமல்-இருமலை அடக்கினால் மூச்சு திணரல், மூச்சு துர்நாற்றம், இதயநோய் உண்டாகும்.
5) கொட்டாவி-கொட்டாவியை அடக்கினால் முகம் வாடும், இளைப்பு வரும், மண்டை பாரம், மேகநோய், வெட்டை நோய், உணவு செரிக்காமை
6) தும்மல்- தும்மலை அடக்கினால் தலை நோய், முகம் வலிக்கும், இடுப்பு வலி, வர்ம நோய், உண்டாகும்.
7) வாயு-வாயு கீழ் நோக்கினால் ஆசன வழியே செல்லும் அடக்கினால் மார்பு நோய், குடல் வாதம், உடல் வலி, துன்பங்கள், மலசலம் கட்டல், ஜீரண கோளாறு ஆகும்.
8) சிறு நீர்- சிறு நீரை அடக்கினால், கல்லடைப்பு, மூட்டு வலி, ஆண்குறி சோர்வு ஆகிய உண்டாகும்.
9) மலம்- அபான வாயு மலத்தை கீழ்நோக்கித்தள்ளும் மலத்தை அடக்கினால் முழங்கால் வலி, தலைவலி, உடல் சோர்வு, முகச்சோர்வு ஏற்படும்.
10) தாகம்,பசி- பசி அடக்கினால், தாகத்தை அடக்கினால்,உடல் உறுப்புகள் தத்தம் வேலைகளைச் செய்யாது. உடல் இளைப்பு, முகவாட்டம், மூட்டுக்களில் வலி, மூல சூடு, வயிற்று ரோகம் உண்டாகும்.
11) தூக்கம்- தூங்காமல் இருந்தால் மூல சுடு ஏற்படும், தலை பாரம், கண்வலி, செவிடு உண்டாதல், பேச்சு குறைதல்.
12) சுக்கிலம் சுரோணிதம்- அடக்கினால் சுரம், நீர்கட்டு கைகால் மூட்டுகளில் வலி, மார்பு அடைப்பு, வெள்ளை கசிதல்.
13) இளைப்பு- இருமலை அடக்கினால் நுரையீரல் நுண்ணிய தவாரங்கள் அடைப்பு, மூர்ச்சை உண்டாகும்.

ஏழு தாதுக்கள் கூடினால் குறைந்தால் என்ன வாகும்.
1.சாரம் கூடினால் பசிகுறைவு.
சாரம் குறைந்தால் தோல் சுரசுரப்பு, நோவு, இளைப்பு, வாட்டம், சப்தத்தில் வெறுப்பு.
2.குருதி கூடினால் புருவம், உதடு, கொப்புள், அண்டம், தோலின் உட்புறம், வெளிப்புறம், உள் பட்ட இடத்தில் கொப்புளம் காணல், ஈரல் வீக்கம், கட்டி, சூலை, பசியின்மை, குருதி வாந்தி, இரத்த மூத்திரம், சிவந்த கண், தோல் சிவப்பு, குருதி தடிப்பு, பெருநோய்,காமாலை, வெறி முதலியன.
குருதி குறைந்தால் புளிப்பு குளிர்ச்சிப் பொருளில் அவா, நரம்பு தளர்ச்சி, வறட்சி, உடல் நிறம் குன்றல் ஆகியவை.
3 ஊனின் கூடினால் கன்னம், வயிறு, தொடை, குறி இவற்றில் கட்டிகள், கண்டமாலை, கிரந்தி, கழுத்து வீங்குதல் முதலியன.
ஊன் குறைந்தால் ஐம்பொறி சோர்வு, கீழ்வலி, தாடை, பிட்டம், தவடை, குறி இவை சுருங்குதல்.
4.கொழுப்பின் அளவு கூடினால் ஊன் மிகுதி பிணிகள், களைப்பு, சின்ன வேலைகளிலும் பெருமூச்சு, பிட்டம், குறி, மார்பு, வயிறு, தொடை ஊன் பெருகி தொங்கல் விழும்.
கொழுப்பு குறைந்தால் இடுப்பு பலவீனமுற்று வலித்தல், உடலிளைப்பு, ஈரல் வளர்ச்சி முதலியன.
5.எலும்பு கூடினால் எலும்புகளும், பற்களும் கூடுதல்.
எலும்பு குறைந்தால் எலும்பு சத்துக்களில் வலி, பற்கள் விழுதல், நகம், மயிர் உதிர்தல், வெடித்தல் முதலியன.
6. மூளை வளர்ச்சி கூடினால் உடல் பாதித்தல், விரல் கணுக்களில் அடி பருத்தல், சிறு நீர் குன்றல் முதலியன.
மூளை குறைவு ஏற்பட்டால் எலும்பு, தோள் விழும், திகைப்பு, கண்கம்மல் இவை காணும்.
7. சுக்கிலம் கூடினால் பெண்ணிச்சையும், கல்லடைபும் வரும்.

சுக்கிலம் குறைந்தால் புணர்ச்சியில் வெண்ணீரும், சுரேணிதமும் துளியாக வரும், குருதி வரும், விதை குத்தலுடன் வலி, குறி கருத்தல் முதலியன உண்டாகும்.
தைராய்டு சரியாக வேலை செய்ய-சர்வாங்க ஆசனம்.,உத்ராசனம்.,மத்ராசனம்.

தைமஸ் சுரப்பிக்கு சுரக்க.சர்வாங்க ஆசனம்.,மத்தியா ஆசனம்.,ஹலா ஆசனம்.

பான்சிரியாஸ் சுரபி சுரக்க,தனுர் ஆசனம்.,புஜங்காசனம்.,அர்த்தமத்திய ஆசனம்.,மயூராசனம்.

அட்ரீனல் சுரபி சரியாக வேலை செய்ய.,சிரசாசனம்., பாதஸத்த ஆசனம்.

பீனியல்சுரப்பி.,மத்தியாசனம்.,சவாசனம்.,பிராணாயாமம்.
அண்ட சுரபி சரியாக வேலை செய்ய., சர்வங்காசனம்.,சிரசாசனம்.,பத்மாசனம்.



No comments:

Post a Comment