சென்ற
பதிவுகளில் மனித காந்த சக்தி பற்றிய விளக்கங்களும் அவற்றை வளர்ச்சியுற செய்யும் முறைகள்
பற்றியும் கூறியிருந்தோம். இந்த பதிவில் அதனை நாளாந்த வாழ்க்கையில் எப்படி இவை பயன்படுத்த
படுகிறது என்பதானியா பார்போம்.மனித காந்த சக்தி மனிதனது உடலை சூழ முட்டை வடிவில் காணப்படுகிறது.
இதனையே ஆரா (Aura) என்பார்கள். இந்த காந்த சக்தி உடலில் இருந்து அதிகம் வெளியாகும்
பாகங்கள் கண்கள், கைகள், கால்கள் ஆகும். இதை அடிப்படையாக வைத்தே கண்திருஷ்டி, நட்பிற்கு
கை குலுக்குதல், தீமை செய்ய காலடி மண் எடுத்தல் என்பன வழக்காகின. இதே அடிப்படையில்
பிராண மன ஏகாக்கிர தன்மை பெற்றவர்கள் பழம், நீர், விபூதி போன்றவற்றில் தமக்கு தேவையான
காந்த சக்தியினை பதிப்பித்து பயன்படுத்தி வரலாம். கண்திருஷ்டி கழித்தல் என்பது
எம்மை சூழ உள்ள தீய காந்த சக்தியினை அகற்றும் செயல் முறைதான்.இதனை செய்வதற்கு மனம்
எகாகிரம் அடைந்த நிலையும் பிராண சக்தியும் அவசியம். இவற்றை மேலும் விரிவாக அறிந்துகொள்ள
கேள்வி பதில் மூலம் தொடரலாம் என எண்ணி இந்த கட்டுரையினை முடிக்கிறோம். சத்குரு
பாதம் போற்றி! நீங்கள்
கேட்கும் கேள்விகள் இந்த பதிவுகள் தொடர்பானது என்ற அனுமானத்திலேயே பதிலளிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment