யோக
விளக்கம்
மனிதன்
தன் உயர்ந்த கரணமான ஆன்மாவை உடலிலிருந்து விடுவித்து அதன் ஆதியை அடைவது மோட்சம். ஆன்மா
வேறு, உடலும் மனமும் வேறு என ஏற்றுக் கொள்வதால் மேற்கொள்ளும் பாதை மோட்சம்.உடலும்,
வாழ்வும், மனமும் ஆன்மாவின் வேறு உருவங்கள், அவற்றுள் ஆன்மா பொதிந்துள்ளது. அது அனுபவம்
பெற உடலைத் தாங்கியுள்ளது, விடுவிக்கக் கூடாது. பள்ளிக்குப் படிக்க வந்த பையனிடம் படிப்பை
முடிக்கச் சொல்ல வேண்டும், வீட்டுக்கு அனுப்புவது மோட்சம் போலாகும். உடல் உழைப்பதும்,
உயிர் வாழ்வதும், மனம் சிந்திப்பதும் ஆன்மா அவற்றுள் பிறவியின் அனுபவத்தைப் பெறுவதாகும்.
அனுபவம் சேருமிடம் சைத்தியப் புருஷன். இவனை உடலில், முதலில் காண முடியாது. மனத்தில்
காணலாம். அங்கு கண்டு அவன் வளர்ச்சியை மேலே 4 நிலைகளிலும் கீழே 3 நிலைகளிலும் தொடர்ந்து
உடல் சத்திய ஜீவனாகவும், சத்திய ஜீவியத்தில் ஈஸ்வரனாகவும் முடிப்பது ஆன்மீகப் பரிணாமமாகும்.
இதைப் பல பிறவிகளில் முடிக்க வேண்டும் என்பதால் மறுபிறப்புண்டு.ஞானம் knowledge என்பது
ஜீவியத்தின் வெளிப்பாடு.ஞானம் அடுத்த கட்டத்தில் Light ஒளியாகிறது.மீண்டும் Light மனிதனுக்குப்
புரியும் அறிவாகும்.அவற்றுள் கடைசி கட்டமான அறிவு புலன்கள் மூலம் நாம் பெறும் அறிவு.
கண்ணால் பார்ப்பதும், காதால் கேட்பதுமான அறிவு கண், காது என்ற பொறிகளால் நாம் பெறுவது.அறிவது
மனம். புலன் கருவி. மனம் நேரே அறிய முடியும். அதற்குப் புலன் உதவிஅத்தியாவ சியமில்லை
.இன்று நமக்கு ஐம்புலன்களுண்டு. 12 புலன்களிலிருந்து மனம் வளர்ந்ததால் மற்ற புலன்களை
நாம் இழந்துவிட்டதாக அன்னை கூறுகிறார்.அடிமனம் புலனின்றி நடப்பவற்றை பதிவு செய்து கொள்ளக்
கூடியது.ஒரு கிரேக்கப் பேராசிரியரிடம் வேலை செய்த படிக்காத பெண்ணுக்கு ஜன்னி வந்தபொழுது
அவர் படித்த பாடங்களை அவள் மனப்பாடமாகக் கூறினாள்.ஒரு சமஸ்கிருதப் பண்டிதரின் சமையல்காரன்
ஸ்லோகங்களை சரளமாகச் சொன்னான்.நம் அறிவு மேல் மனத்திற்குரியது. அடுத்தது அடிமனம்.நேரடி
ஞானம் (intution) யோகியுடையது. அவருக்குப் புலனோ மனமோ இல்லாமல் நேரடியாக அறிய முடியும்.முடிவான
ஞானம் இறைவனுடன் ஐக்கியம் பெறுவதால் எழுவது.
முரண்பாடு
Contradiction
முரண்பாடு
Matter ஜடம்
Conflict
பிணக்கு
Life வாழ்வு
Compromise
விட்டுக்கொடுப்பது
Mind
மனம்
Harmony சுமுகம்
Supermind சத்திய ஜீவியம்
Union இணைவது
Consciousness ஜீவியம்
Unity
ஐக்கியம் Sat
சத்
பிரம்மம்
சிருஷ்டியில் மேலிருந்து கீழே வரும்பொழுது ஏற்படும் பல மாறுதல்களில் மேற்சொன்னதும்
ஒன்று. மாறுதல்கள் பல.1. சத் பல நிலைகளைக் கடந்து ஜடமாகிறது.2. எதுவுமேயில்லாத பிரம்மம்,
எப்படியும் விவரிக்க முடியாத பிரம்மம், ஐக்கியமே உருவான பிரம்மம் ஜீவனாக முதல் மாறுகிறது.
அது சத் புருஷன்.3. அந்நிலையில் ஐக்கியம் பாதிக்கப்படுவதில்லை.4. ஐக்கியம் தன்னைக்
கொஞ்சம் கொஞ்சமாக இழந்து முடிவில் ஜடத்தில் முரண்பாடாகிறது.5. ஜடத்தில் முரண்பாடும்,
வாழ்வில் பிணக்கும், மனத்தில் விட்டுக் கொடுத்து வாழ்வதும், சத்திய ஜீவியத்தில் சுமுகமும்,
ஜீவியத்தில் இணைவதும், சத்தில் மீண்டும் ஐக்கியம் பெற்று பரிணாமம் பூர்த்தியாகிறது.6.
ஐக்கியத்தை இழந்து முரண்பாடாவது சிருஷ்டி. கீழே வருவது.7. முரண்பாடு மீண்டும் ஐக்கியமாவது
பரிணாமம்.8. பிரம்மம் தன்னைத் தன்னுள் மறைத்து ஜடமாகும் பாதை ஐக்கியம் முரண்பாடாவது.
No comments:
Post a Comment