ஆத்மாவின் இரு
முனைகள் மனிதனுடைய
ஆயுள் முடிய அவனுடைய சம்மதம் தேவை.
மனிதனாகிய ஜீவாத்மா முடிவு செய்யாமல் உயிர் உடலை விட்டுப் பிரியாது என்கிறார்
ஸ்ரீ அரவிந்தர்.மேலும் பரமாத்மாவின் உத்தரவும் தேவை.பரமாத்மாவும்,
ஜீவாத்மாவும் சம்மதிக்கா மல் உயிர் உடலை விட்டுப் போகாது.எந்த சிறு காரியத்திற்கும்
பிரபஞ்ச சட்டம் இதுவே.ஜீவா த்மாவும், பரமாத்மாவும் ஆத்மாவின் இருமுனைகள்
என்பதால் ஒன்று சம்மதப்பட்டால் இரண் டும் சம்மதப்படுவதாக அர்த்தம்.உலகிலும்,
பிரபஞ்சத்திலும் உயிருடையது ஆத்மா மட்டுமே. மற்றஅனைத்தும் ஆத்மாவுடன்
தொடர்பு கொள்வதால் உயிர் பெறுகின்றன.ஆத்மாவின் ஒரு முனை பிரம்மம். அடுத்தமுனை வாழ்வு.ஆத்மாஅறிவாலும், அறிவின் திறனாலும் செயல்படுகி றது.பிரம்மமே முதல்,
அதுவே முடிவு என்பது ஸ்ரீ அரவிந்தம்.மேலிருந்து கீழே
வருவது சிரு ஷ்டி, கீழிருந்து மேலே போவது பரிணாமம்..மறைந்த பிரம்மம்மறந்தது
ஜடம். நினைவுபடுத்து வது அருள். ஏற்பது அறிவு. நடப்பது
யோகம்.ஆத்மா அசைந்தால் அனைத்தும் அசையும்.ஆத்மாஅசைக்காதது
இல்லை. ஆத்மா அறிவால் எதையும் அசைக்கும்.மனிதன் விரும்பினால் எதையும்
சாதிப்பான் என்பது ஆத்மாவின் தத்துவம்.
ஆன்மா உற்பத்தியான வகை அகமான சத் சத்தியமாகப் புறத்தில் மாறும்பொழுது ஆன்மா உற்பத்தியாகிறது.
சத் தன்னுள் சித்தையும், ஆனந்தத்தையும் கொண்டது. சத்திற்குத் தன்னை அறியவோ, அனுபவிக்கவோ
அவசியமில்லை, ஆனால் முடியும். சத் தன்னை அறிவதால் சித் ஆகிறது. சத் தன்னை அறிந்தபின்
சித் மூலம் தன்னை உணர்ந்து அனுபவிப்பதால் ஆனந்தமாகிறது. சத் தன்னைப் புரிந்து கொள்ள
முயன்றால் (comprehend) சத்திய ஜீவியமாகிறது. சத்திற்குத் தான் சத்தாக இருக்கவேண்டிய
அவசியமும் இல்லை என்பதைச் செயல்படுத்தினால் சத் மீண்டும் பிரம்மமாகும். சத் is
Self-Conscious Being.. இதன் அம்சங்கள்
மூன்று. ஆத்மா- புருஷா- ஈஸ்வரா. மனம் ஆத்மாவை அக்ஷரப்பிரம்மமாகக் காணும். தெய்வீக மனம்
ஆத்மாவைப் புருஷனாகவும், புருஷோத்தமனாகவும் காணும். சத்திய ஜீவியம் ஆத்மாவை
ஈஸ்வரனாகக்காணும்.அக்ஷர பிரம்மம் புருஷோத்தமனில் அடக்கம்.அக்ஷர பிரம்மமும், புருஷோத்தமனும்
ஈஸ்வரனுள் அடக்கம்.Self என்பது பிரம்மம். பிரபஞ்சத்தைக் கடந்தது.Soul என்பதும் அதுவே.
நாம் ஆத்மா என்போம். இது பிரபஞ்சத்திற்குரியது.Being என்பது பொதுச் சொல். ஜீவன் எனலாம்.Spirit
என்பது ஆன்மா எனப்படும்.Self,soul.being என்பவை Spiritஇன் பல நிலைகள், பல தோற்றங்கள்.புருஷன்,
ஈஸ்வர அம்சங்கட்கு முன் நிலை பிரம்மம்.
No comments:
Post a Comment