சென்ற
பாடத்தில மனித கந்த சக்தியினை வளர்ச்சியுற செய்யும் அடிப்படைகளை விளக்கினோம், அதனை
படித்த சில நண்பர்கள் அவற்றை தெளிவான பயிற்சி முறையுடன் விளக்கினால் நன்றாக இருக்கும்
என கூறியிருந்தனர். அவர்களது விருப்பபடி அந்த முறைகளை தொகுத்து தந்துள்ளோம்.மனித காந்தம்
மனம் பிராணன் என்ற இரு பகுதிகளை உடையது. மனம் காந்தத்தின் தன்மையினை (Quality) தீர்மானிக்கும்,
பிராணன் அதன் வலிமையினை (Strength) தீர்மானிக்கும். இதன் அடிப்படையில் கீழே
கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கும், கடவுளை சாராமல் தமது காந்த சக்தியினை வளர்த்துக்கொள்ளவும்
ஆன பயிற்சிகளை தருகிறோம்.
முதலாவது பிராணா சக்தியினை வளர்ப்பதற்கான பயிற்சி
;அடிப்படை
முதுகுத்தண்டு
நேராக இருக்குமாறு நிமிர்ந்து உட்கார்ந்து கொள்ளுங்கள், முடியுமானால் பத்மாசனம், சித்தாசனம்,
சுகாசனத்தில் அமர்ந்து கொள்ளவும். இயலாதவர்கள் நேராக நின்று கொண்டும் செய்யலாம்.
கைகளை
பக்க வாட்டில் தளர்ச்சியாக பக்கவாட்டில் தொங்க விட்டு மெதுவாக மூச்சினை முழுவதும் வெளியேற்றி
விட்டு பின் மூச்சினை உள்ளிழுக்கும் பொது கைகளை மேலுயர்த்தி நன்றாக மூச்சினை எடுத்து
பின்னர் மூச்சினை வெளிவிடும் பொது கைகளை பக்கவாட்டில் விடவும். இப்படி ஆரம்பத்தில்
மூன்று தடவைகளும் பின்னர் 5 தடவைகளும் செய்து வரவும். இப்படி செய்யும்
போது மூச்சிழுக்கும் போது நல்ல காந்த சக்தி உங்களுக்குள் வந்து நிரம்புவதாகவும் வெளியேறும்
போது உங்கள் உடலில் மனதில் உள்ள தீயவை வெளியேறுவதாக பாவிக்கவும்.
இதனால்
உங்கள் காந்த சக்தி அதிகரிக்கும்.
நடு நிலை
சூரிய
நமஸ்காரம் பிராண சக்தியினை அதிகரிக்க செய்யும் ஒரு அரிய செயல்முறையாகும், இதனை தெரிந்த
வர்கள் மேற்கூறிய பாவனையுடன் ஒவ்வொரு அசைவின் உடனும் செய்துவருவதால் அதிகரிக்கலாம.
உயர் நிலை பயிற்சி
கும்பக
பிரணாயமமே அதிகளவு காந்த சக்தியினை பெறுவதற்கான வழி, ஆனால் நேர்முகமாய் பயில் வேண்டியது.
கடவுள் நம்பிக்கை உள்ள நபர்களிற்கான பயிற்சி
உங்கள்
இஷ்ட தெய்வத்தினை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்,அத்தெய்வதிற்குரிய சிறிய மந்திரமொன்ரை
எடுத்துக்கொள்ளுங்கள் (ஓம் "நமசிவாய, நாராயணய, சரவணபவாய, துர்கையை" நமஹா
என்றவாறு அல்லது காயத்ரி மந்திரம், இஸ்லாமிய நண்பர்கள் "பிஸ்மிள்ளஹி ர்ரகுமநிர்ரஹீம் என ஜெபிக்கலாம் )
பின்னர்
குறித்த நேரத்தில் மனதில் உங்களது இஷ்ட தெய்வத்தினை பாவித்த வண்ணம் மந்திரத்தினை உங்களது
மூச்சினை மெதுவாக உள்ளிழுக்கும் போது உங்களது இஷ்ட தெய்வத்தினது அருள் காந்த சக்தி
சென்று உடல் மனதில் கலப்பதாக பாவித்து வரவும்.ஓரிரு மாத கால பயிற்சியில் நிச்சயமாய்
உங்கள் காந்த சக்தி வளர்ந்திருப்பதை அனுபவமாக உணரலாம். இவற்றை எப்படி பிரயோகிப்பது
என்பது பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.சத்குரு பாதம் போற்றி!
No comments:
Post a Comment