Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Saturday, October 25, 2014

மூளை - மனம் - சிந்தனை

   மூளை - மனம் - சிந்தனை சுக துக்கங்களை அறிய காரணமாயிருப்பது மனம் என்று தர்க்க சாஸ்திரம் கூறுகிறது (சாட்சாத்காரே சுக துக்காநாம் கரணம் மன உச்யதே) . ஆனால் அந்த மனம் என்ன என்பதை ஒருவரும் சொல்ல வில்லை. சிந்தனா சக்தி மூளையில் ஆரம்பமாவதாக விஞ்ஞானங்கள் கூறுகின்றன. வியாதியின் பாதிப்பால் மூளையின் வேலை திறன் குன்றினாலோ, தலைக்காயத்தினால் மூளை பாதிப்படைந்தாலோ மனதின் பாதிப்பை அம்மனிதனின் செயல்கள் மூலம் நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. அதனால் மூளைக்கும் மனதிற்கும் சம்பந்தம் உள்ளது, ஆனால் என்ன வகையான சம்பந்தம் என்றுதான் தெரியவில்லை. பித்தம் கல்லீரல் பகுதியிலிருந்து சுரந்து தன்னுடைய செயலை செய்கிறது. அதுபோல உடலில் பல கணையங்களிலிருந்து வெளிப்படும் திரவங்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள வேலைகளை சரிவர செய்கின்றன. அதே போன்று மூளையிலிருந்து மனமும் சிந்தனையும் உண்டாகிறதா? அது திரவமா? அல்லது காரியத்தின் வாயிலாக அறியக்கூடியதா? என்பது சரியாகத் தெரியவில்லை. உணர்ச்சிக்கு மூல காரணமாக இருப்பது மூளை என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம். இந்த உணர்வு பல காரணங்களால் மாறக்கூடும். உடலில் சில உறுப்புகளாகிய இதயம், மூச்சுக்காற்றை இயக்கும் நுரையீரல் தம் தம் வேலைகளை செய்துகொண்டிருந்த போதும் ஞானேந்திரியங்களாகிய கண், காது, மூக்கு போன்றவற்றின் செயல்கள் தடைப்பட்டிருக்கும் போது, மனிதன் உணர்வற்றவனாகிவிட்டான் என்று கூறுகிறோம். இந்நிலைமைதான் மதம் அல்லது மூர்ச்சை என்று சொல்கிறோம். இந்நிலைமை மது அருந்துவதாலும், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமானாலும், அதிர்ச்சி தரக்கூடிய விஷயங்களைக் கேட்டாலோ, பார்ப்பதாலோ வரக்கூடும். ஆக, உடலுக்குத் தேவைப்படாத விஷவஸ்துக்கள் அதிகரித்தால் மூளை பாதிப்பு ஏற்பட்டு சுயநினைவை இழக்க நேரிடுகிறது. ரத்தத்திலும், பிற உடலின் திரவங்களிலும் இருக்கும் ரஸாயனப்பொருள்கள் மூளையை பாதிக்கின்றன என்பதை நாம் அறிந்து கொள்கிறோம். மூளையைப் பற்றிய ஆராய்ச்சிகள் இன்றுவரை தொடர்ந்து கொண்டேயிருந்தாலும் அதன் ஆளுமை சக்தி பற்றிய விபரங்கள் போதவில்லை. ஆனால் மூளை சதா உழைத்துக் கொண்டேதான் இருக்கிறது. தூக்கத்திலும் கூட அது உழைக்கிறது. அதற்கு ஓய்வு தேவையில்லை என்று விஞ்ஞானபூர்வமாக தெரிவித்திருக்கிறார்கள். அதிலும் யோகிகளைத் தவிர மற்றவர்கள் அதன் தொழிலைத் தடுக்கவோ குறைக்கவோ முடியாதென்னும் தெரிவிக்கிறார்கள். அது எப்போதும் சர்வ ஜாக்கிரதையாக உடலை பாதுகாக்கிறது. சர்க்கரையின் அளவு ரத்தத்தில் கூடும் போது pancreas (பேன்கிரியாஸ்) எனும் கிரந்திக்குச் செய்திகளை அனுப்பிவீ Insulin திரவத்தை அதிக அளவில் பெருக்கி சர்க்கரையின் அளவை அதிரடியாகக் குறைக்கச் செய்கிறது. சர்க்கரை அளவை மிகவும் குறைந்துவிட்டால் கல்லீரலுக்கு செய்தி அனுப்பி அதனிடமிருக்கிற சர்க்கரையின் மூலப் பொருளை அதிகரிக்கச் செய்கிறது. உடலுக்கு எது தேவையோ அதனிடத்தில் விருப்பம் உண்டாக்குகிறது. உடலுக்கு எது தேவையில்லையோ, எது இருந்தால் நோய்க்குக் காரணமாகிறதோ அதன் மேல் வெறுப்பை உண்டாக்குகிறது. மூளையை சுற்றி பல வகைப்பட்ட திரவங்களும் ரத்தமும், கிரந்திகளும் அமைந்துள்ளன. மூளைக்கும் உடலுக்கும் இருவிதமான நரம்புத் தொடர்களால் சம்பந்தம் ஏற்படுகிறது. மூளையிலிருந்து உடலுக்குச் செல்லும் செய்தி மற்றும் செயல்கள் அனைத்தும் ஆஜ்ஞாவஹ நாடிகளில் நடை பெறுகின்றன. சம்ஜ்ஞாவஹ நாடிகள் செய்தி மற்றும் செயல்களை உடலிலிருந்து மூளைக்கு கொண்டு செல்கின்றன. மூளை தலைமை ஸ்தாபனமாகவும் அங்கிருந்த படியே பல பிரிவுகளை உடைய நரம்புக் கூட்டங்கள் மூலம் ஜாக்கிரதை உணர்வையும், வேலையை தடுக்கவோ, அதிகரிக்கவோ செய்கிறது. மூளையின் ஒவ்வொரு பாகமும் தனித் தனியே வேலை செய்கிறது. கைகளை இயக்க ஒரு பகுதி, கால்களை இயக்க மற்றொரு பகுதி, பார்வைக்கு ஒரு பகுதி, பேச்சிற்கு ஒரு பகுதி என்று, மூளையை செயல் இழப்பு அந்தந்த பகுதிகளை பாதிக்கிறது. ஒரு சிலர் அறிவாளியாக திகழ்வதற்குக் காரணம் மூளையின் மேற்புறத்தில் () அநேக வளைவுகள் அளவு கூடுவதால்தான். இவ்வளைவுகளில் கோடிக்கணக்கான கோசாணு (Brain cells) க்களிருக்கின்றன. ஒவ்வொரு கோசாணுவிற்கும் இரண்டிரண்டு படர் கொடிகளி (Tendrils) ருக்கின்றன. இவைகளின் மூலமாக ஒன்றிருந்து மற்றொரு கோசாணுவிற்கு மின் ரசாயனச் (electro chemicals) செய்திகள் பரவுகின்றன. இந்த வலி ஞாபகம் முதலியவைகள் இந்த அணுக்கள் மூலம் மின் ரசாயனச் செய்திகளால்தான் நடைபெறுகின்றன. உடல் பலத்திற்கு தேகப்பயிற்சி தேவை. அதுபோல அறிவு வளர்ச்சிக்குப் பயிற்சி தேவை. அறிவுக்கு எவ்வளவு பயிற்சி அளிக்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு அது சிறப்பாகக் கூடும், பலம் பொருந்தியாதாகும். அறிவை தாய் தந்தையர் மூலம் ஓரளவுக்கு கிடைத்துள்ளது. அதைக் கொண்டு ஒருவன் மேதாவியாவது ஒருவனின் சூழ்நிலையும் பயிற்சியும் சிறப்பாக அமைவதில்தான் உள்ளது. அறிவு வளர்ச்சிக்கு மூல காரணம் கவனித்தலும் சர்ச்சை செய்வதும் ஒரு பொருளுக்கும் மற்றொரு பொருளுக்குமிருக்கும் சம்பந்தா சம்பந்தத்தை அறிந்து கொள்வதும் ஆகும். அறிவு வளர்ச்சி, நேர்மையான சிநத்னையாலும், தர்க்க ரீதியாக பேசுவதாலும், மனதின் பண்பாட்டாலும் ஏற்படும். அறிவு வளர்ச்சிக்குப் பசுவின் நெய் உதவுகிறது. மூளையின் பெரும்பாகம் ஒரு வகை கொழுப்பு (phospholipods) உள்ளதாகயிருக்கிறது. அதுவே ஆகாரமாகவுமாகிறது. அதற்கு வேண்டிய ஆகாரவஸ்து பசுவின் நெய்யிலிருந்து உண்டாகிறது. அதனால்தான் ஆயுர்வதேத்தில், பசு நெய்யின் குணங்களைச் சொல்லுமிடத்து புத்தி, ஞாபகசக்தி, தாரணாசக்தி முதலியவைகளுக்கு உதவும் என்று சொல்லப்படுகிறது. அதாவது விஷயங்களை அறிவதற்கும், அறிந்த பொருள்களை திரும்புவம் ஞாபகப்படுத்துவதற்கும், தெரிந்த விஷயங்களை மனத்திலேயே தேக்கி வைத்துக் கொள்வதற்கும் பசுவின் நெய் உதவுகிறது. சிலருக்கு ஞாபக சக்தி குறைவதற்குக் காரணம் அறிகின்ற விஷயத்தைப் பற்றிய முழு உணர்வுடன் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தாமல் அறியத் தவறுவதால் மூளையில் பதிவுகள் குறைவதால்தான். வயதான காலத்தில் ஞாபக சக்தியோ தாரண சக்தியோ குறையக்கூடும் என்பதற்கு போதுமான சாட்சியங்கள் இல்லை. அறிவு வளர்ச்சிக்கு வயோதிகத் தன்மை கூடாது என்பதற்கும் தேவையான சான்றுகள் கிடையாது. மூளைக்குப் போகின்ற ரத்தக் குழாய்கள் சரியாக வேலை செய்தாலும் போதுமான ஆகார வகைகள் இருந்தாலும் மூளையின் வேலை சரியாகவே நடக்கும். சர்க்கரை நோய், பாண்டு, சோகை போன்றவற்றால் மூளையின் தொழில் குறையக்டும். கிழத்தன்மையில் இந்திரியங்கள் சரிவர வேலை செய்வதற்கென்றே சில 'ரசாயனங்கள்' என்கிற மருந்துகளை சாப்பிட வேண்டியுள்ளது. இவைகளால் ஓரளவு இழந்த சுறுசுறுப்பைத் திரும்பவும் பெற முடியும். மூளைக்கு அதிக ஓய்வு கொடுத்தால் அதை மறுபடியும் இயங்கச் செய்வது கடினமாகக்கூடும். உடலில் ஒரு அங்கத்தின் செயலை சிலகாலம் நிறுத்திவைத்தால் அதன் தசை நார்கள் வலுவிழப்பதுபோல் மூளையும் தூண்டுதல் சக்தியைக் கொடுக்காமலிருந்தால் மழுங்கி விடும் தன்மையை அடைந்துவிடும்.

No comments:

Post a Comment