ஜீவாத்மா,
சைத்தியப் புருஷன்:
ஜீவாத்மா,
பரமாத்மாவின் பகுதி என்பது மரபு.ஜீவாத்மாவே பரமாத்மா என்பது ஸ்ரீ அரவிந்தம்.உலகில்
ஒரு பிரகிருதியும் இலட்சக்கணக்கான ஜீவாத்மாக்களும் இருப்பதாக சாங்கியம் கூறுகிறது.பிரகிருதி
ஒன்று, ஜீவாத்மாவும் ஒன்றே என்கிறார் அன்னை.பிரபஞ்ச பிரகிருதி தன்னுள் பலபுள்ளிகள்
போல் பல ஜீவாத்மாக்களை உண்டு பண்ணுகிறது. பலவாகத்
தோன்றினாலும் அவை ஒன்றே.சத்திய ஜீவியத்திற்குள்ள மூன்று நிலைகளில் ஜீவாத்மாவும் ஒன்று.ஜீவாத்
மாவை நாம் மனத்தில் சாட்சிப் புருஷனாகவும், உடல் அன்னமயப் புருஷனாகவும், வாழ்வில் பிராணமயப்
புருஷனாகவும் காண்கிறோம்.இவை தொடர்ந்து விஞ்ஞானமயப் புருஷனாக சத்திய ஜீவியத்திலும்,
ஆனந்தமயப் புருஷனாக ஆனந்தத்திலும்தெரிகின்றன. ஜீவாத்மா வுக்குப் பரிணாமமில்லை.சைத்தியப்
புருஷன் பரிணாமத்தில் ஜீவாத்மாவின் பிரகிருதி.ஜீவாத்மாவை Being எனவும் சைத்தியப்
புருஷனை Being of the becoming எனவும் கூறுவோம்.ஜீவாத்மா காலத்தைக் கடந்தது.சைத்தியப்
புருஷன் காலத்துள், காலத்தைக் கடந்துள்ளது.ஜீவாத்மாவின் பகுதியான மனோமயப் புருஷன் மேல்
மனத்திலிருக்கிறான்.சைத்தியப் புருஷன் அடிமனக் குகையிலிருக்கிறான். சைத்தியப்
புருஷனும் ஜீவாத்மாபோல் மோட்சத்திற்கு அழைத்துக் செல்வான். ஆனால் ஜீவாத்மாவுக்கு திருவுருமாற்றமில்லைகிருஷ்ணபரமாத்மா
வந்த பிறகே பக்தியோகம் வந்தது. சைத்தியப் புருஷன் அதன் பிறகே பிறந்தான்.1947க்கு முன்
இந்தியாவில் தொழில்கள் இருந்தன. அவை ஆங்கிலேயருடையவை. இந்தியர் தொழில்கள் இருந்தாலும்
ஆங்கிலேயர் அனுமதியிலிருந்து கிடைத்தவை. இன்றுள்ள தொழில்கள் சுதந்திர இந்தியர் நடத்துபவை.
ஜீவாத்மா 1947க்கு முன் உள்ள நிலைக்கும் சைத்தியப் புருஷன் பின்னுள்ள நிலைக்கும் ஒப்பிடலாம்.ஜீவாத்மாவை
விடுதலை செய்ய, பிரகிருதியை விட்டு அகல இதுவரை யோகம் செய்தனர். ஸ்ரீ அரவிந்தம் பிரகிருதியின்
யோகம், சைத்தியப் புருஷன் பிரகிருதிக்கு பூலோகத்தில் மோட்சம் கிடைக்க யோகம் செய்கிறது.
அதை ஆன்மீகப் பரிணாமம் என்கிறோம்.
அனந்தத்தின் தத்துவம்அனந்தம் என்பது அந்தமில்லாதது,
முடிவில்லாதது. நடந்து போனால் நாம் ஓர் இடத்தில் முடிவடைகிறோம் என்பதன்று. காலத்தைக்
கடந்ததில் நினைத்தாலும், எதிர்காலத்தில் நினைத்தாலும் முடிவு தெரிவதில்லை.காமதேனு,
கற்பக விருக்ஷம், அட்சயபாத்திரம் என்பவை புராணங்களில் கேட்டவை. எடுக்க எடுக்கக் குறையாது
எனக் கேள்விப்பட்டுள்ளோம் (inexhaustible). கணித சாஸ்திரத்திலும், தத்துவத்திலும் அனந்தம்
ஒரு கருத்தாக (conception) விளக்கப்படுகிறது. ஆன்மிகத்திற்கு அனந்தம் வெறும் கருத்தன்று,
அது ஓர் அனுபவம். எடுக்க எடுக்கக் குறையாதது மட்டுமன்று, எடுத்தால் வளரும் என்பது அனந்தத்தின்
அம்சம்.வாழ்வில், நடைமுறையில் இது உண்மை என்பதை ஸ்ரீ அரவிந்தம் எடுத்துக்காட்டுகிறது,
வலியுறுத்துகிறது. இது புரிந்தால் ஸ்ரீ அரவிந்தம் புரியும். இது புரியாமல் புரியாது.
உபநிஷதம் முழுமையிலிருந்து முழுமையை எடுத்தபின் முழுமை மீதியாக இருக்கும் என்று இக்கருத்தைக்
கூறுகிறது.கல்வியைப் பொருத்தவரை எடுத்தால் வளரும் என்பதை ஏற்கலாம். தெம்பு, சக்தி,
பணம் ஆகியவற்றுள் இக்கருத்தை ஏற்பது எளிதன்று என்றாலும் அங்கும் இவை உண்மை.உழைப்பவன்
உடலால் உழைக்கிறான். உழைத்தால் உடல் களைப்படையும். உடலில் உணர்வுண்டு, உணர்வில் அறிவுண்டு,
அறிவில் ஆன்மா உண்டு. உடல் உழைப்பில் ஆன்மா அறிவு, உணர்வு மூலம் வெளிப்பட உழைத்தால்
12 மணி, 18 மணிநேர வேலைக்குப் பின் களைப்புத் தெரியாது என்பது அனுபவம். போரில் பலர்
அனுபவம் இது.வயதாக ஆக, மேற்சொன்னதுபோல் வாழ்பவர், வயோதிகம் வராமல், இளமை நிறைவது அனுபவம்.பணம்
உழைப்பால் வரும். அதற்கு உணர்வும், கடமையும், லட்சியமும் உண்டு. அதன்படி பணம் செலவானால்,
உபரியாவது அனுபவம்.ஒரு செயல் அதன் உயர் அம்சம் வெளிப்பட்டால், செயலும், சக்தியும்,
பொருளும் உபரியாவது அனுபவம். உபநிஷத தத்துவத்தை அனுபவத்தால் அறிந்தவர் கூறுவதை மனம்
தெளிவாக அறியுமானால் (conceive) அத்தெளிவை மனத்தில் உறுதி ஏற்குமானால் (as a
concrete conception of Infinite) அத்தெளிவுக்குப் பலனாக வாழ்வு உபரியாகும். அதிர்ஷ்டமாக
முடியும்.
No comments:
Post a Comment