காயத்ரி
மந்திரத்தின் வார்த்தைகளின் தமிழ் அர்த்தத்தினை பார்ப்போம்.
- ஓம் - பிரம்மம், பரம்பொருள் அல்லது ஒட்டுமொத்த ஞானசக்தி
- பூர் - ப்ராண சக்தி
- புவஹ - துன்பங்களை அழிக்கும் சக்தி
- ஸ்வஹ - ஆனந்தத்தை தரும் சக்தி
- தத் - அது
- ஸவிதுர் - பிரகாசமான, ஒளிபொருந்திய (சூரியனைப்போன்ற, ஸூரியன்
அல்ல)
- வரேணியம் - உன்னதமான
- பர்கோ - பாபங்களை அழிக்கும்
- தேவஸ்ய - தெய்வ சக்தியினை
- தீமஹி - நிறைவாக்கி
- தியோ - ஞானம்
- யோ - யார்
- ந - எம்மை
- ப்ரசோதயாத் - தூண்டுகிறாரோ
தமிழில்
கீழ்வருமாறு பொருள் கொள்ளலாம்
" பிரபஞ்ச இருப்புக்கு
காரணமானவரும், உலகில் உயிர்கள் வாழ்வதற்கு சக்தியினை கொடுப்பவரும், எமது துன்பங்களையெல்லாம்
போக்கி இன்பத்தை அளிப்பவருமான பரம்பொருளின் சூரியனைப்போல் ஒளி பொருந்திய அந்த
ஞானசக்தி எம்மில் அறிவினைத்தூண்டி தெய்வசக்தியினை நிறைவாக்கி எம்மை சரியான பாதையில்
இட்டு செல்லட்டும்"
No comments:
Post a Comment