பதினெட்டு
வயதுக்கு மேல் ஆனவர்கள் மட்டும், இந்த பயிற்சியை செய்யவும். ஒரு திருவிளக்கை எட்டடி
தூரத்தில் வைக்க வேண்டும். தாமரை நூல் திரியிட்டு , பசு நெய் ஊற்றி விளக்கேற்றுங்கள்.
ஒரு சிறிய காசி செம்பில், சுத்தமான தண்ணீர் எடுத்து விளக்கு முன் வைக்கவும். ஆசனப்
பலகை அல்லது , தரையில் - மஞ்சள் துணி விரிப்பு விரித்து , விளக்கு ஒளி எட்டு அடி தூரத்தில்
- உங்கள் புருவ மத்திக்கு நேர் கோட்டில் இருக்கும்படி, அமர்ந்து கொள்ளுங்கள். நீங்கள்
சந்திக்க விரும்பும் சித்தர் பெயரை , மனதுக்குள் நினைத்துக் கொள்ளுங்கள். பின்பு,
ஓம் சிங் ரங் அங் சிங் என்ற மந்திரத்தை
திருவிளக்கைப் பார்த்தபடி , மனதுக்குள் ஜெபித்து வாருங்கள். இந்த மந்திரம் தான் , விண்வெளியில்
இருக்கும் சித்தரை , உங்கள் பக்கம் ஈர்க்க தேவையான அலைவரிசை ட்யூனர். நீங்கள்
ஆரம்பிக்கும் தினம், அமாவாசை தினமாக இருக்கட்டும். தினமும் இடைவிடாமல் - தொண்ணூறு நாட்களுக்கு
ஜெபிக்கவேண்டும். நீங்கள் பயிற்சி மேற்கொள்ள வேண்டிய நேரம் - இரவு எட்டிலிருந்து ,
ஒன்பது மணி வரை. இந்த ஒரு மணி நேரத்தில் உங்களால் எவ்வளவு ஜெபிக்க முடியுமோ,
ஜெபிக்கவும். எண்ணிக்கை முக்கியமில்லை. ஜெபம் முடிந்த பிறகு, இரவு உணவாக படையல் செய்த
பழங்களை உண்டு , பின் காசி செம்பிலுள்ள நீரை அருந்தவும். இரவு உணவாக பால் சாதம்
சாப்பிடலாம். பயிற்சி மேற்கொள்ளும் மொத்த நாட்களில் - உப்பு ,புளி , காரம் குறைத்துக்
கொள்வது நல்லது. அசைவ உணவு, புகை, மது கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும். இதனால்
, உங்களுக்குமனபலம் கூடும். கண்டிப்பாக , தொண்ணூறு நாட்களுக்குள் உங்களுக்கு
சித்தர் தரிசனம் கிட்டும். எதையோ, எங்கெங்கோ தேடி - முயற்சிகள் வீணடிப்பதைவிட, நேரடியாக
சித்தரையே தரிசனம் செய்து விடுதல் நலம் இல்லையா...?ஒரு சாதாரண செடி வளர்வதே - அந்த
இடத்தின், சூழல் , மண் வளம் என்று வேறுபடும்போது , நம் அனுபவும் இந்த பயிற்சியில் ஒருவருக்கொருவர்
வேறுபடலாம். நம் உடல் அமைப்பு, கிரக அமைப்பு எல்லாம் நமக்கு ஒத்துழைக்க வேண்டும்
இந்த பயிற்சிக்கு. விடா முயற்சியுடன், முயன்றால் , ஒரு அளப்பரிய தெய்வீக அனுபவம் கிட்டும்...
எதெதையோ பேசிக்கொண்டு , விதண்டாவாதம் செய்வதைவிட - நாமே ஒரு சாதனை செய்ய முயன்று பார்ப்பதில்
அர்த்தமுள்ளது.. நம்பிக்கையுடன் செயல்படுங்கள்....! மிக பிரமாதமான அனுபவம்
உங்களுக்கு காத்திருக்கிறது..!பயிற்சி நாட்களில் ஏற்படும் அனுபவங்களை மனதில் நன்றாக
பதிய வைத்துக் கொள்ளுங்கள்...இதைப் போன்ற , பல அபூர்வமான தகவல்களை அவ்வப்போது
முடிந்தவரை பகிர்ந்து கொள்கிறேன்.. ஆனால், வெறுமனே தெரிந்து கொள்வதில் அர்த்தமில்லை.
சின்சியரா , இந்த ஒரே ஒரு பயிற்சி பண்ணிப் பார்த்துடலாம்.. என்ன சொல்றீங்க.. இப்போ
இருந்தே தயாராகுங்கள்... குருவருள் நம் அனைவருக்கும் துணை நிற்கட்டும்..
! இந்த அமாவாசையிலிருந்தே ஒரு நல்ல முயற்சியை ஆரம்பிப்போம்.. இந்த கட்டுரையை படிக்கும்
அனைவரும், பின்னூட்டத்தில் உங்கள் கருத்துக்களை எழுதினால் , மேற்கொண்டு புதிதாக படிக்கும்
அனைவருக்கும் , ஒரு புது உத்வேகம் பிறக்கும். உங்கள் , சொந்தம் , சுற்றம், நண்பர்களில்
தகுதி உள்ளோருக்கு இதை தெரியப்படுத்துங்கள்.. !ஒரு நிம்மதியான, பரிபூரண ஆனந்தம் எல்லோருக்கும்
கிடைக்க மனமார பிரார்த்திக்கிறேன்...
No comments:
Post a Comment