ஒரு கேள்வியும் வள்ளலாரின் பதிலும்!
கேள்வி: மரம், புல், நெல் முதலான தாவரங்களும் உயிராகவே
சொல்லப்படுகின்றனவே... அவற்றை இம்சை செய்து ஆகாரமாக உட்கொண்டால்,உயிர்க்கொலை செய்து உண்பது போல்தானே ஆகும்?
வள்ளலாரின் பதில்: மரம், புல், நெல் முதலான தாவரங்களும் உயிர்கள்தான். ஆனால், அவ்வுயிர்கள் தோன்றும் வித்துகள் வெறும்
சடங்களே.
அவ்வித்துகளை நாமே விதைத்து, உயிர் விளைவு செய்ய முடியும். அப்படி நாமே
விளைவு செய்த அந்த உயிர்களைக் கொல்லாமல், அந்தத் தாவரங்களில் உயிரின்றி, உயிர் தோன்றுவதற்குத் தகுதியுள்ள சடங்களான
வித்துகளையும் காய்களையும் கனிகளையும் பூக்களையும் கிழங்குகளையும் தழைகளையுமே
ஆகாரமாகக் கொள்கிறோம். தாவரங்களை வேருடன் பிடுங்கி ஆகாரமாகக் கொள்வதில்லை.
வளர்ந்த தாவரங்களின் விதைகள், காய், கனிகள் முதலானவற்றைப் பறிக்கும்போது, மனிதர்களின் நகம்,ரோமம் ஆகியவற்றை அகற்றும்போதும் துன்பம்
உண்டாகாதது போல் தாவரங்களுக்கும் துன்பம் உண்டாவதில்லை.
மேலும், தாவர வர்க்கங்களுக்கு மனம் முதலியன வளராததால், அது உயிர்க்கொலையும் அல்ல; துன்பம் உண்டுபண்ணுவதும் அல்ல. எனவே, இது ஜீவகாருண்ய விரோதமாகாது.
வள்ளலார் நினைவிடம் மருதூர்...
இந்த முறையைப் பின்பற்றி, வாழைக் கிழங்கின் சாறில் ஊறவைத்து, நிழலில் காயவைத்த மிளகை, அதன்பின் இளநீரில் மூன்று நாள், கரிசலாங்கண்ணிக் கீரைச் சாற்றில் மூன்று நாள், பொன்னாங்கண்ணி கீரைச் சாற்றில் மூன்று நாள், பசுங்கோமயத்தில் மூன்று நாள்,பசும்பாலில் மூன்று நாள் எனத் தனித்தனியாக
இரவில் ஊறவைத்து, பகலில் நிழலில்
காயவைத்து, தேய்த்துப்
புடைத்து எடுத்து வைத்துக்கொண்டு, தினம் காலையில் ஐந்து மிளகுகளை உட்கொண்டால் வலுவான, திடமான சரீரம் அமையும்.
No comments:
Post a Comment