மனம்
என்பது என்ன? மனது எங்கே உள்ளது என்பது பற்றி இன்னும்
தெளிவான முடிவிற்கு அறிவிய லாளர்களால் வர முடியவில்லை. ஆனால் மனம் என்பது ஒரு அற்புதமான
கருவி என்பதை அவர்கள் புரிந்துகொண்டுள்ளனர்.மனம் எனபது தீர்மானிக்கும் ஆற்றல், பகுத்தறிவு,
உடல் இயக்க ஒருங்கிணைப்பு, புலன் உணர்வு, ஞாபக சக்தி, சுயநினைவு, மயக்கம், புலனறிவு
ஆகிய எட்டு பகுதிகளை உள்ளடக் கியுள்ளது. நம் ஒவ்வொரு செயலிலும் இவை இணைந்து செயல்படுகின்றன.
ஒரு பந்தை பிடிக்கும்பொழுது உடல் இயக்கத்தோடு புலன் உணர்வு(பந்து நம் கையில் பிடிக்கிறோமா),
பகுத்தறிவு(பந்து எங்கே வரும்) என்பவை செயல்படுகின்றன. நெற்றிப் பகுதியில் உள்ள மூளைப்
பகுதியான superior frontal gyrus அல்லது superior frontal convolutionஐ மேற்கத்திய
உளவியாளலர்கள் மனதின் பிறப்பிடமாக குறிப்பிடுகிறார்கள். அவர்களின் கூற்று: மனம் என்பது
பித்தப்பையில் சுரக்கும் பித்த நீர் போன்று மனம் என்பது மூளையிலிருந்து சுரக்கும் ஒன்று(ஆனால்
அதை காண முடியாது). நெற்றிப் பகுதியை மனதின் பிறப்பிடம் என ஒத்துக் கொள்ளலாம். கண்களை
மூடி ஒரு புள்ளியை நினைத்துக் கொண்டு அதை நெற்றியின் மையத்தில் சில நிமிடங்கள் இருத்தி
வையுங்கள். மனம் ஒருமுகப்படுவதை நீங்கள் உணரலாம்.
மனதின் பிறப்பிடம் எங்கே இருந்தாலும் மனம் நிச்சயம் ஒரே இடத்தில் இருப்பதில்லை அல்லது தன் இருப்பை காட்டிக் கொள்வதில்லை. நம் உணர்வுகளுக்கு தக்கவாறு மனம் தன் இடம் இப்போதைக்கு இதுவெனச் சொல்கிறது. மனம் பற்றிய கோட்பாடுகள் அறிவியல், தத்துவ இயல், ஆன்மீகம் என பல இடங்களில் பலவாறாக கையாளப்பட்டாலும் எல்லோமே முடிவில் மனம் ஒரு அற்புதப் புதிர் என்றே சொல்கின்றன.கனவைப் பற்றி தொடரில் மனம் பற்றி அதிகம் பேசிவிட்டேன். மனம் பற்றி ஓரளவு புரிந்தால் கனவை எளிதாக புரிந்துகொள்ளலாம். அதற்காகவே இப்பதிவு. ஒன்று மட்டும் உறுதி- உலகில் நீங்கள் எவர் ஒருவரின் மனதையும் முழுமையாக புரிந்துகொள்ள முடியாது, உங்களுடையதை தவிர. மனம்... மனம் அறிய ஆவல் அதிகமாகிக் கொண்டே இருக்கும். மனதை பற்றி பேச எக்கச்சக்கமான விசயங்கள் அற்புதங்கள் உள்ளன. வேறு பதிவுகளில் அவற்றை சொல்கிறேன். மீண்டும் கனவிற்குள்செல்வோம்.......ஒரு கனவை ஆராய அதில் வரும் உருவங்கள்தான் முக்கியம் இதை Symbols என சொல்கின்றனர். இது அதில் வரும் நபர்கள், மற்ற உயிர்கள், பொருட்கள், இடங்கள், ஒலிகள், சுவை, மணம், வெளிச்சம், தொடு உணர்ச்சி, காலநிலை, உணர்வு(பயம், மகிழ்ச்சி போன்றவை), முக்கியமாக உங்களின், மற்றவர்களின் செய்கைகள் போன்றவை ஆகும். இது ஒவ்வொன்றும் மிக முக்கியமானதாகும் எல்லாவற்றையும் நினைவில் வைத்தால் தவிர முழுமையாக கனவை புரிந்துகொள்ள முடியாது.உதாரணமாக....என் கனவில் நான் ஓடிக் கொண்டிருக்கிறேன். ஒரு பிணம் என்னை துரத்திக் கொண்டே வருகிறது. அதற்கு அருகில் நான் செல்லும்போதெல்லாம் அது என்னை கடித்து விடுகிறது. நான் விழித்துக் கொண்டு விடுகிறேன். சில சமயங்களில் கனவு மிக பயங்கரமாக இருக்கும்போது நான் கனவின் நடுவிலேயே விழித்து விடுகிறேன். இருப்பினும் சில சமயம் சமாதனமாகி தூங்கினாலும் மீண்டும் அதே கனவு வருகிறது.நீங்கள் எதைக் கண்டோ பயப்படுவதை கனவு குறிப்பிடுகிறது. கனவு கண்டவர் சிறியவரானால்-நீங்கள் சிறுவயதில் இருந்தபோது உங்கள் பெற்றோரின் பாதுகாப்பிலிருந்து விடுபட்டு சுதந்திரமாக இருக்க/வாழ நினைத்திருக்கலாம். கனவு கண்டவர் பெரியவரானால்-நீங்கள் சில சமூக மரபுகளை உடைத்து உங்கள் வழியில் வாழ நினைத்திருக்கலாம். இருப்பினும் சமூக வற்புறுத்தல் குறித்து பயப்படுகிறீர்கள். அந்த பிணம் உங்கள் பயத்தை குறிக்கிறது.கனவை நாம் புரிந்துகொள்வது எளிதுதான் ஏனெனில் அதில் வருபவை தொடர்பானவை நம் வாழ்வில் ஏதேனும் சந்தர்ப்பத்தில் வந்துள்ளதா என நமக்கு மட்டுமே தெளிவாக தெரியும் அதனால் எளிதுதான்.இவ்வளவெல்லாம் செய்து என் கனவை நான் புரிந்துகொள்வதால் என்ன பயன் உள்ளது? பார்ப்போம்................................ மனம், மனம் அறிய ஆவல்...... வெளிப்படையாய் தெரியாதது, கண்ணுக்குத் தெரியாதது, தொட்டு உணர முடியாதது, அது எங்கே உள்ளது என தெரியாது, அதன் அளவை அளவிய முடியாது, அது இருக்க இடம் தேவையில்லை.இதெல்லாம் கடவுளைப் பற்றிய விளக்கம் மட்டுமல்ல மனதிற்கும்தான்!!! மனம் பற்றி மனிதன் எப்போது ஆரம்பித்தானோ தெரியாது ஆனால் இன்று வரை அவன் தேடல் தொடர்ந்து கொண்டிருக்கிறது! இது ஆன்மீகரீதியாவும் சரி, அறிவியல்ரீதியாகவும் சரி! உலகில் புரியாத எல்லாவற்றையும் ஒரு கட்டத்தில் நீங்கள் புரிந்துகொள்ள முடியும். ஆனால் முழுமையாக புரிந்துகொள்ள மிக கடினமான ஒன்று மனம்தான்! ஏனெனில் இங்கே மனதை பற்றி புரிந்துகொள்வது அதே மனம்தான்!மனம் என்பது என்ன? மனம் எங்கே உள்ளது?நீங்கள் சந்தோசமாக இருக்கும்போது நெஞ்சில் இனம்புரியா உணர்வு ஏற்படுகிறதே அப்படியானால் இதயம் மனதின் இருப்பிடமா?நீங்கள் கவலையாக இருக்கும்போது தலைவலிக்கிறதே அப்படியானால் தலை மனதின் இருப்பிடமா?நீங்கள் பயப்படும்போது வயிற்றில் ஏதோ ஒரு கலக்கம் உருவாகிறதே அப்படியானால் வயிறு மனதின் இருப்பிடமா?நம் உணர்வுகள் ஒவ்வொன்றிற்கு நம் உடலின் சில பாகங்களில் மாற்றங்கள் ஏற்படுவதை உணராலம். மனம் தன் வெளிப்பாட்டை உடலில் காண்பிக்கிறது. அப்படியானால் உடல் செயல்பாடுகளை கட்டுப்படுத்துவது மூளைதானே அப்ப்படியானால் மூளைதான் மனமா? மூளையின் படத்தை நீங்கள் கண்டிருக்கலாம். சில மேடுகள்(கைரஸ்), சில பள்ளங்கள்(சல்கஸ்) என அதன் அமைப்பு இருக்கும். நம் நினைவுகள் ஓவ்வொன்றும் நம் மூளையில் பதிகின்றன. இதில் நமக்கு அடிக்கடி ஞாபகத்தில் இருப்பவை மேட்டில் பதியும். உபயோகத்தில் இல்லாத நினைவுகள் பள்ளத்தில் தங்கிவிடும். ஆனால் எல்லாமே மூளையில்தான் இருக்கும். நாம் பிறந்து முதல் இறக்கும் வரை எல்லாமே அது ஒரு முறை பார்க்கப்பட்டாலும், கேட்க பட்டாலும், உணரப்பட்டாலும்,............பத்து வருடம் முன் பார்த்த ஒருவரை இப்போது பார்த்தால் எங்கோயோ பார்த்தது போல் உள்ளதே என நெற்றி சுருக்கி யோசிக்கிறோமா! அப்போது பள்ளத்தில் உள்ள நினைவுகளை தூண்டி எழுப்புகிறோம். அது நன்றாக தூண்டப்பட்டால் நிச்சயம் நினைவுக்கு வரும்.Unconscious மனது பள்ளத்திலும் Conscious மனது மேட்டிலும் உள்ளது. நம்மால் பலவந்தமாக மறக்கடிப்படும்/மறக்கடிக்க முயற்சிக்கப்படும் நினைவுகள் பள்ளத்திற்கு சென்றாலும் மேட்டிற்கு வர முயற்சிக்கும். இதுவே கனவின் மூலமும் நடக்கிறது. வெறும் மூளையில் நினைவை தக்க வைக்க முயலும் போராட்டம் தான் இது. ஆனால் அது Conscious மனதில் இருந்தால் மட்டுமே நீங்கள் அதை கருத்தில் கொண்டு நடப்பீர்கள். அதனால்தான் இந்த போராட்டம்!
மனதின் பிறப்பிடம் எங்கே இருந்தாலும் மனம் நிச்சயம் ஒரே இடத்தில் இருப்பதில்லை அல்லது தன் இருப்பை காட்டிக் கொள்வதில்லை. நம் உணர்வுகளுக்கு தக்கவாறு மனம் தன் இடம் இப்போதைக்கு இதுவெனச் சொல்கிறது. மனம் பற்றிய கோட்பாடுகள் அறிவியல், தத்துவ இயல், ஆன்மீகம் என பல இடங்களில் பலவாறாக கையாளப்பட்டாலும் எல்லோமே முடிவில் மனம் ஒரு அற்புதப் புதிர் என்றே சொல்கின்றன.கனவைப் பற்றி தொடரில் மனம் பற்றி அதிகம் பேசிவிட்டேன். மனம் பற்றி ஓரளவு புரிந்தால் கனவை எளிதாக புரிந்துகொள்ளலாம். அதற்காகவே இப்பதிவு. ஒன்று மட்டும் உறுதி- உலகில் நீங்கள் எவர் ஒருவரின் மனதையும் முழுமையாக புரிந்துகொள்ள முடியாது, உங்களுடையதை தவிர. மனம்... மனம் அறிய ஆவல் அதிகமாகிக் கொண்டே இருக்கும். மனதை பற்றி பேச எக்கச்சக்கமான விசயங்கள் அற்புதங்கள் உள்ளன. வேறு பதிவுகளில் அவற்றை சொல்கிறேன். மீண்டும் கனவிற்குள்செல்வோம்.......ஒரு கனவை ஆராய அதில் வரும் உருவங்கள்தான் முக்கியம் இதை Symbols என சொல்கின்றனர். இது அதில் வரும் நபர்கள், மற்ற உயிர்கள், பொருட்கள், இடங்கள், ஒலிகள், சுவை, மணம், வெளிச்சம், தொடு உணர்ச்சி, காலநிலை, உணர்வு(பயம், மகிழ்ச்சி போன்றவை), முக்கியமாக உங்களின், மற்றவர்களின் செய்கைகள் போன்றவை ஆகும். இது ஒவ்வொன்றும் மிக முக்கியமானதாகும் எல்லாவற்றையும் நினைவில் வைத்தால் தவிர முழுமையாக கனவை புரிந்துகொள்ள முடியாது.உதாரணமாக....என் கனவில் நான் ஓடிக் கொண்டிருக்கிறேன். ஒரு பிணம் என்னை துரத்திக் கொண்டே வருகிறது. அதற்கு அருகில் நான் செல்லும்போதெல்லாம் அது என்னை கடித்து விடுகிறது. நான் விழித்துக் கொண்டு விடுகிறேன். சில சமயங்களில் கனவு மிக பயங்கரமாக இருக்கும்போது நான் கனவின் நடுவிலேயே விழித்து விடுகிறேன். இருப்பினும் சில சமயம் சமாதனமாகி தூங்கினாலும் மீண்டும் அதே கனவு வருகிறது.நீங்கள் எதைக் கண்டோ பயப்படுவதை கனவு குறிப்பிடுகிறது. கனவு கண்டவர் சிறியவரானால்-நீங்கள் சிறுவயதில் இருந்தபோது உங்கள் பெற்றோரின் பாதுகாப்பிலிருந்து விடுபட்டு சுதந்திரமாக இருக்க/வாழ நினைத்திருக்கலாம். கனவு கண்டவர் பெரியவரானால்-நீங்கள் சில சமூக மரபுகளை உடைத்து உங்கள் வழியில் வாழ நினைத்திருக்கலாம். இருப்பினும் சமூக வற்புறுத்தல் குறித்து பயப்படுகிறீர்கள். அந்த பிணம் உங்கள் பயத்தை குறிக்கிறது.கனவை நாம் புரிந்துகொள்வது எளிதுதான் ஏனெனில் அதில் வருபவை தொடர்பானவை நம் வாழ்வில் ஏதேனும் சந்தர்ப்பத்தில் வந்துள்ளதா என நமக்கு மட்டுமே தெளிவாக தெரியும் அதனால் எளிதுதான்.இவ்வளவெல்லாம் செய்து என் கனவை நான் புரிந்துகொள்வதால் என்ன பயன் உள்ளது? பார்ப்போம்................................ மனம், மனம் அறிய ஆவல்...... வெளிப்படையாய் தெரியாதது, கண்ணுக்குத் தெரியாதது, தொட்டு உணர முடியாதது, அது எங்கே உள்ளது என தெரியாது, அதன் அளவை அளவிய முடியாது, அது இருக்க இடம் தேவையில்லை.இதெல்லாம் கடவுளைப் பற்றிய விளக்கம் மட்டுமல்ல மனதிற்கும்தான்!!! மனம் பற்றி மனிதன் எப்போது ஆரம்பித்தானோ தெரியாது ஆனால் இன்று வரை அவன் தேடல் தொடர்ந்து கொண்டிருக்கிறது! இது ஆன்மீகரீதியாவும் சரி, அறிவியல்ரீதியாகவும் சரி! உலகில் புரியாத எல்லாவற்றையும் ஒரு கட்டத்தில் நீங்கள் புரிந்துகொள்ள முடியும். ஆனால் முழுமையாக புரிந்துகொள்ள மிக கடினமான ஒன்று மனம்தான்! ஏனெனில் இங்கே மனதை பற்றி புரிந்துகொள்வது அதே மனம்தான்!மனம் என்பது என்ன? மனம் எங்கே உள்ளது?நீங்கள் சந்தோசமாக இருக்கும்போது நெஞ்சில் இனம்புரியா உணர்வு ஏற்படுகிறதே அப்படியானால் இதயம் மனதின் இருப்பிடமா?நீங்கள் கவலையாக இருக்கும்போது தலைவலிக்கிறதே அப்படியானால் தலை மனதின் இருப்பிடமா?நீங்கள் பயப்படும்போது வயிற்றில் ஏதோ ஒரு கலக்கம் உருவாகிறதே அப்படியானால் வயிறு மனதின் இருப்பிடமா?நம் உணர்வுகள் ஒவ்வொன்றிற்கு நம் உடலின் சில பாகங்களில் மாற்றங்கள் ஏற்படுவதை உணராலம். மனம் தன் வெளிப்பாட்டை உடலில் காண்பிக்கிறது. அப்படியானால் உடல் செயல்பாடுகளை கட்டுப்படுத்துவது மூளைதானே அப்ப்படியானால் மூளைதான் மனமா? மூளையின் படத்தை நீங்கள் கண்டிருக்கலாம். சில மேடுகள்(கைரஸ்), சில பள்ளங்கள்(சல்கஸ்) என அதன் அமைப்பு இருக்கும். நம் நினைவுகள் ஓவ்வொன்றும் நம் மூளையில் பதிகின்றன. இதில் நமக்கு அடிக்கடி ஞாபகத்தில் இருப்பவை மேட்டில் பதியும். உபயோகத்தில் இல்லாத நினைவுகள் பள்ளத்தில் தங்கிவிடும். ஆனால் எல்லாமே மூளையில்தான் இருக்கும். நாம் பிறந்து முதல் இறக்கும் வரை எல்லாமே அது ஒரு முறை பார்க்கப்பட்டாலும், கேட்க பட்டாலும், உணரப்பட்டாலும்,............பத்து வருடம் முன் பார்த்த ஒருவரை இப்போது பார்த்தால் எங்கோயோ பார்த்தது போல் உள்ளதே என நெற்றி சுருக்கி யோசிக்கிறோமா! அப்போது பள்ளத்தில் உள்ள நினைவுகளை தூண்டி எழுப்புகிறோம். அது நன்றாக தூண்டப்பட்டால் நிச்சயம் நினைவுக்கு வரும்.Unconscious மனது பள்ளத்திலும் Conscious மனது மேட்டிலும் உள்ளது. நம்மால் பலவந்தமாக மறக்கடிப்படும்/மறக்கடிக்க முயற்சிக்கப்படும் நினைவுகள் பள்ளத்திற்கு சென்றாலும் மேட்டிற்கு வர முயற்சிக்கும். இதுவே கனவின் மூலமும் நடக்கிறது. வெறும் மூளையில் நினைவை தக்க வைக்க முயலும் போராட்டம் தான் இது. ஆனால் அது Conscious மனதில் இருந்தால் மட்டுமே நீங்கள் அதை கருத்தில் கொண்டு நடப்பீர்கள். அதனால்தான் இந்த போராட்டம்!
No comments:
Post a Comment