Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Sunday, October 26, 2014

சித்த வித்யா பாடங்கள்: 08

மனிதனின் அமைப்பு ஸ்தூலம் சூஷ்மம் என இருவகைப்படும் எனமுன்னரே கண்டோம். இன்றைய பதிவில் சூஷ்ம உடல் எனறால் என்னவென்று பார்ப்போம். சூஷ்ம உடல் மனம், புத்தி, சித்தம், அஹங்காரங்களினால் ஆக்கப்பட்டிருக்கிறது. அதன் வடிவம் எனது உடலின் வடிவத்தினை ஒத்து இருக்கும், ஏனெனில் நாம் எமது உடலைவைத்தே எம்மை மனதில் நாமே அறிந்துகொள்கிறோம். அதேவேளை சாதனை/பயிற்சியுள்ள மனம் சூஷ்ம உடலை மாற்றக்கூடிய திறமை உள்ளது. அதாவது நாம் கூறவருவது "மனிதன் தனது மனம் புத்தி, சித்த, அஹங்காரங்களில் தன்னை உருவகப்படுத்திக்கொள்வதற்கேற்ப அவனது சூஷ்ம உடல் வடிவத்தினை பெறும், சாதாரணமாக இயற்கையின் பரிணாமத்தில் நாம் பெற்ற வடிவத்தினை ஒத்ததாக காணப்படுகிறது."இந்த சூஷ்ம உடலின் வடிவத்திற்கேற்றவாறே ஸ்தூல உடல் உருவாக்கப்படுகிறது. அதாவது அடிப்படை சூஷ்ம உடலாகிய எமது எண்ணம், அவற்றின் சேர்க்கையால் உருவாகும்  மனம், சித்தம், புத்தி, அஹங்காரம் எனபனவே. சூஷ்ம உடலினை வசப்படுத்தும் சாதனையில் முதலில் மனதினை, எண்ணத்தினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவேண்டும். ஏற்கனவே விளக்கப்பட்டுள்ளது. அடுத்து சித்ததினை வசப்படுத்த வேண்டும், சித்தம் என்பது ஆழ்மனதின் ஒரு கூறு அல்லது இணைப்பு, இது பிரபஞ்ச மனதுடன் தொடர்பு கொள்ளக்கூடியது. இதனை வசப்படுத்தும் சாதனையினை பின்னர் விளக்குவோம். மனம், சித்தம் வசப்பட்டாலும் அதனை சரியான பாதையில் வழிநடாத்திச் செல்ல புத்தி வலுப்பட்டிருக்கவேண்டும். இதற்கான வழி தியானம். இறுதியாக மனிதனை சூஷ்மத்திலும், ஸ்தூலத்திலும் இயக்கும் அகங்காரத்தினை சுத்தி செய்து வசப்படுத்த வேண்டும். இதற்கு ஒரேயொரு வழி பக்தி எனும் மேலான சக்தியினை பணிதல். இதனை சற்று விளக்கமாக பார்ப்போம். எந்த ஒரு செயலையும் செய்வதற்கு விருப்பு வேண்டும், விருப்பு என்பது உண்மையில் எமது நான் எனும் அகங்காரம் அதுவாக விரும்புதல் ஆகும். நான் நல்லவன் என்ற அகங்காரத்தில் நாம் செயற்படவேண்டுமாயின் முதலில் எமது மனம் நல்ல எண்ணங்களை எண்ணப்பழக வேண்டும், பின் அவை சித்ததில் பதியவேண்டும், அவற்றை புத்தி இது நல்லது, இது கெட்டது என பகுத்து இறுதியாக எமது அகங்காரம் நான் நல்லவன் என உறுதி அடையும் போது நாம நல்லவராகிறோம். இந்த செயன்முறைதான் கடவுளை அடைதலிலிருந்து, நாளாந்த வாழ்க்கை வரைக்கும் அனைத்திற்கும் அடிப்படை, இந்த அடிப்படையில் நீங்கள் கடவுளையும் உணரலாம் (இதற்குதான் தெய்வ உபாசனை வகுக்கப்பட்டிருக்கிறது)வியாபாரம் தொடங்கலாம், உயர்ந்த உத்தியோகத்தினை அடையலாம். இறுதியாக சூஷ்ம உடல் எப்படி இயங்குகிறது என்பது பற்றி விளக்கு இன்றை பாடத்தினை முடிவிற்கு கொண்டுவருவோம். சூஷ்ம உடலின் கூறுகள் எவை என அறிந்தோம், இவற்றை இணைத்து இயக்கும் ஒரு சக்தி பிராணன், பிராண சக்திதான் சூஷ்ம, ஸ்தூல உடல்களின் இணைப்பு, ஆக பிராணனின் அளவு, அதிர்விற்கேற்ப ஒருவரின் சூஷ்ம உடலின் பலம் இருக்கும். இதனைக் கொண்டு மானசீகமான சாதனைகள் பல செய்யலாம். உதாரணமாக பிரார்த்தனை செயற்படுவது இந்த சூஷ்ம உடலின் மூலம்தான், இது எப்படி எனப்பார்ப்போம், "எனக்கு தேவையான அளவு பணம் தேவை" என பிரார்த்திக்கிறோம் எனக்கொள்வோம்.

முதலில் ஒவ்வொரு நாளும் குறித்த நேரத்தில் குறித்த அளவு இந்த பிரார்த்தனையினை செய்துவர பணம் வேண்டும் என்ற எண்ணம் உருவாக்கப்படுகிறது, பின்னர் அது படிப்படியாக சித்தத்தில் படிந்து பிரபஞ்சமனதிற்கு செலுத்தப்படுகிறது, அது எப்படி கிடைக்கும் என்ற வழிமுறையினை புத்தி ஆராய்கின்றது, அதேவேளை பிரபஞ்ச மனதில் பதியப்பட்ட எண்ணம் பிரபஞ்சஞானத்தினால் அதற்குரிய சந்தர்ப்பங்களை அவனிற்கு ஏற்படுத்துகிறது, அதன் பின் அவன் அவனது அகங்காரம் "நான்" இந்த வியாபாரத்தினை ஆரம்பித்தால் எனக்கு பணம் வரும்" என உறுதி அடைந்து செயலில் இறங்கி வெற்றிபெறவைக்கிறது. இதே செயல்முறையினை இறைவனை நம்பும் பக்தர்கள், "பகவானே" என தமக்கு வெளியில் அகங்காரத்தினை உருவாக்கி காரிய வெற்றி பெறுகின்றனர். இவற்ற்றில் விளக்கப்பட்ட அடிப்படையில் சூஷ்ம உடலின் அங்கங்களான மனம், சித்தம், புத்தி, அஹங்காரங்களினை செயற்படுவதனால் பெறும் சித்திகள்தான் தொலைவில் உணர்தல், தூரக்கேட்டல், தூரதரிசனம் எனபவையெல்லாம். இவற்றின் அடிப்படையினை வரும் பதிவுகளில் பார்ப்போம்.  

No comments:

Post a Comment