சத்திய ஜீவியம் Supermind
is the nature of Sachchidanandamசத் - சித் - ஆனந்தம் அகமானால்சத்தியம் - ஞானம்
- அனந்தம் புறமாகும்புறம் என்பதை nature என்கிறார். சத்திய ஜீவியத்தில் இருபகுதிகள்
உள்ளன.முதற்பகுதி காலத்தைக் கடந்தது.அடுத்தது காலத்திலுள்ளது.மனம்இவற்றினிடையேபிறக்கிறது. சத்தியஜீவியம்முழுமையானது.இங்கு
ஞானமும், உறுதியும் இணைந்துள்ளன. பிரம்மத்தின்தொடர்பு இங்கு நிரந்தரமானது.மனத்தில் பிரிந்து
தெரிபவை இங்கு இணைந்து தெரியும். புருஷப் பிரகிருதி இங்கு ஒன்றே, சத், சித், ஆனந்தம்
மூன்றாகத் தெரிந்தாலும் ஒன்றானவை. தகப்பன், கணவன் ஒரே மனிதன் என்பதைப்போல் பிரியாத
பாகுபாடுள்ள இடம்.பூரண எண்ணத்தால் சிருஷ்டிக்கிறது.
வாழ்வுமனத்தில்
இரு பகுதிகள் உள்ளன.ஞானம், உறுதி என்பவை அவை.உறுதி என்பது சக்தி.ஞானம் உறுதியுடன் செயல்பட்டால்
சக்தி பிறக்கும்.அப்படிச் செயல்படும்பொழுது ஞானம் தன்னை ஓரளவு இழக்கும்,
சக்தி
எழுந்தால் சக்தியின் லோகம் (Plane of life) உற்பத்தியாகும்.வாழ்வு என்ற லோகம் ஞானம்,
உறுதியில் செயல்படுவதால் எழுவது. இங்கு ஞானம் குறைவாக இருக்கும்.
ஜடம்
ஞானம்
உறுதிமேல் செயல்படும்பொழுது வாழ்வுஉண்டானால், ஓரளவு ஞானம் தன்னை இழக்கும்,முழுவதும்
ஞானம் தன்னை இழந்தால் வாழ்வுஜடமாகும். ஜடம் இவ்விதம் உற்பத்தியாகிறது. இதையே வேறுவிதமாகவும்
கூறலாம்.சத்திற்கும் சத்தியத்திற்கும் இடையேயுள்ளது ஆன்மா.இதை spirit எனவும்
spiritual substance எனவும் கூறுகிறார். சிருஷ்டியில் spiritual substance மாறி
material substance ஜடப் பொருளாக வேண்டும். Spirit கண்ணுக்கு புலனுக்கு தெரியாது. புலனுக்குத்
தெரிய உருவம் வேண்டும். புலன் மனத்தின் கருவி. மனம் புலன் வழி ஆன்மாவைக் கண்டால்
Spiritual substance மாறி material substance, அதாவது Matter ஜடமாகிறது
என்பது தத்துவம்.
சத்திற்கும் சத்தியத்திற்கும் இடையேயுள்ள ஆன்மாவை சத்திய
ஜீவியத்தின் இரு பிரிவுகளிடையே பிறந்த மனம் கண் என்ற புலன் வழி காணும்பொழுது ஜடமாகத்
தெரிகிறது. ஜடம்
என்பது ஆன்மா.ஜடம் என்பது மனத்தின் பார்வைக்கே தவிர ஜடம்என்பதில்லை. ஆன்மாவை மனம் ஜடமாகக்காணபுலன்வழியாகக்காணவேண்டும்.ஆன்மாவுக்கு
உருவமில்லாவிட்டால் மனம் காண முடியாது.உருவம் பெற்ற ஆன்மா புலன் வழி காணும் மனத்திற்கு
ஜடமாகத் தெரிகிறது.
மேல்
மனம்:
மேல்மனம்,
உள்மனம், அடிமனம், ஆழ்மனம் (surface mind,inner mind,subliminal mind,subconscious
mind)ஆழ்மனம் நம் கடந்த கால வாழ்வை உடலும், ஜீன், குரோமசோம், DNA என்பவற்றிலும் வைத்துள்ளது.
இதயம், ஜீரணம், அனிச்சைச் செயல் போன்றவற்றைக் கட்டுப்படுத்துவது, தானே இயங்குவது.மேல்
மனம் என்பதையே நாம் மனம் என்கிறோம். நாம் ஆழம் என்பது மேல் மனத்தின் ஆழம், depth
of the surface. இதன் அம்சங்கள்,மனம், சிறியது, அகந்தை, காலம், மேலேழுந்ததாகஇருப்பது.அஞ்ஞானம் இங்கே
பூர்த்தியாகிறது.உள்மனம் பரந்தது, மேல் மனத்திற்கு அடியில் உள்ளது. சூட்சுமமானது, ஆன்மிகமானதன்று,
பெரியது. அடிமனம் உள் மனத்தில் அமைந்துள்ளது.உள் மனம் மேல் மனத்தின் ஆழம் எனலாம்.மனோமயப்
புருஷனும், நிர்வாணக் கதவும் இங்குள்ளன. சைத்தியப் புருஷன் உள்ள அடிமனத்திற்குப் போக
உதவும்.Superconscient பரமாத்மா வும், ஆழ்மனம் subconscientஉம் உள்மனத்தில் சேருமிடத்தில்
அடிமனம் ஏற்படுகிறது. சைத்தியப் புருஷன் அடிமனக் குகையில் இருக்கிறான். அடிமனம் பிரபஞ்சம்
முழுவதும் பரவக் கூடியது. எல்லா மனிதர்களுக்கும் அவர்கள் மனம், உணர்வு, உடல் அடிமனத்தில்
சந்தித்து ஒன்றாக உள்ளன.நம் கண்ணில் படாதவை, காதில் விழாதவை அடிமனத்திற்குத் தெரியும்.
அங்குப் பதிவாகும்.ஒருவர் சந்தோஷம் உலகத்தின் சந்தோஷம் ஒருவர் வருத்தம் உலகத்தின் வருத்தம்என்பதை
உண்மையாக்கும் மனம் அடிமனமாகும்.உலகம் பெரியது. அது சூரிய மண்டலத்தின் பகுதி, சூரிய
மண்டலம் பிரபஞ்சத்தின் பகுதி. நாம் அறிவது நம் ஊர், சந்தர்ப்பங்கள் மட்டும்.சாதாரண
மனிதனுக்கு ஊர் தெரியும்.படித்தவனுக்கு நாட்டைப் பற்றித் தெரியும். நடைமுறையில் அவனும்
சாதாரண மனிதனே.தவம் செய்தவர்கள் தவிர மற்றவர்க்கு திருஷ்டியில்லை. திருஷ்டியின் நிலைக்கேற்ப,
கவி இயற்கை எழிலைக் காண்கிறான். தவசிகள் காண்பவை மூன்று.1. அக்ஷரப் பிரம்மம்.2. சித்
சக்தி3. ஆனந்தம்,,,சத் புருஷனைக் கண்டவன் அதை அக்ஷரப் புருஷனாகக் காண்கிறான்.அக்ஷரப்
பிரம்மத்தைக் கண்டவனுக்கு உலகம் மாயை.சித்சக்தியைக் கண்டவனுக்கு உலகம் பிரகிருதி. இவன்
நாத்திகன்.ஆனந்தத்தைக் கண்டவனுக்கு உலகம் லீலை.ஒன்றைக் கண்டவர்கள் மற்ற இரண்டையும்
மறுக்கிறார்கள்.மனம் அக்ஷரப் பிரம்மத்தைக் கண்டால், தவசியின் நிலை தெய்வீக மனத்திற்கு
உயர்ந்து மனோமயப் புருஷனை அடையலாம். அப்பொழுது மனம் கண்டஅக்ஷரப்பிரம்மம்முதல்புருஷனாகவும்,
அடுத்த உயர்ந்த கட்டத்தில் கீதை புருஷோத்தமனாகவும் தெரிகிறது.அக்ஷரப் புருஷன் புருஷோத்தமனில்
அடக்கம்.தவசி மேலும் உயர்ந்து சத்திய ஜீவியத்தை அடைந்து சத் புருஷனைக் கண்டால், சத்
புருஷன் ஈஸ்வரனாகத் தெரியும். ஈஸ்வரனுள் புருஷோத்தமன் அடக்கம்.அக்ஷரப் பிரம்மமும்,
புருஷோத்தமனும் பிரளயத்தால் அழிவதில்லை. ஈஸ்வரன் அழிவான். அதனால் ரிஷிகள் ஈஸ்வரனைக்
கருதவில்லை.ஈஸ்வரன் அழிந்தாலும் பிரதமர்போல் சக்தியுள்ளவன். புருஷோத்தமன் ஜனாதிபதிபோல்
அழியாவிட்டாலும் power இல்லாதவர்.அக்ஷரப் பிரம்மமும், புருஷோத்தமனும் சிருஷ்டிக்காதவர்கள்,
ஈஸ்வரன் சிருஷ்டிப்பவன்.
No comments:
Post a Comment