ஜீவகாருண்யம் கடைப்பிடிப்பதால் வரும் நன்மை!
உள்ளே... ஐம்பொன்னாலான திருவுருவம்,தாய், தந்தை, மனைவி, குழந்தைகள், நிலம், பொன், மணி ஆகியவற்றைக் காணும்போது கொள்ளும்
மகிழ்ச்சியைவிட, பசியால்
வேதனைப்படுபவர்கள் உணவைக் காணும்போது அதிக மகிழ்ச்சி அடைவார்கள். உணவைக்
கண்டவுடனேயே அவ்வளவு மகிழ்ச்சி ஏற்படும் என்றால், அதை உட்கொண்டபின் அடையும் ஆனந்தம்
எப்படிப்பட்டதாக இருக்கும்?ஆதலால், உணவைக் கடவுளுக்குச் சமமாக ஏற்றுக்கொள்ள
வேண்டும்.
பிற உயிர்களின் பசியாற்றி, ஒப்பில்லா திருப்தி இன்பத்தை அளிப்பவர்கள்
புண்ணியர்கள். இந்தப் புண்ணியத்துக்கு எந்தப் புண்ணியத்தை இணையென்று சொல்ல முடியும்?
இந்தப் புண்ணியத்தைச் செய்கிற புண்ணியர்களை,எந்தத் தெய்வத்துக்கு ஈடாகச் சொல்வது?
இவர்களை, எல்லாத் தெய்வங்களுக்கும் மேலாகிய கடவுளின்
அம்சமென்றே சத்தியமாக அறியவேண்டும்.
சூலைநோய், குஷ்டநோய் போன்ற தீராத வியாதிகளால் அவதிப்படும்
இல்லறவாசிகள், அந்நோய்களிலிருந்து
விடுபடுவார்கள் என்பது சத்தியம்.
பல நாட்கள் குழந்தை பாக்கியம் இல்லாமல்
மனவருத்தம் கொண்டவர் களுக்கு, குழந்தை பாக்கியம் உண்டாகும்.
தனக்கு அற்ப ஆயுள் என்றுஜோதிடம் மூலமாகவோ,மருத்துவம் மூலமாகவோ அறிந்து, மரணத்துக்குப் பயந்து கலங்கு கிறவர்களுக்கு
ஜீவகாருண்ய ஒழுக்கம் நீண்ட ஆயுளைக் கொடுக்கும்.
கல்வி, அறிவு, செல்வம், போகம் ஆகியவற்றில் குறை உள்ளவர்கள், பசித்த ஏழைகளின் பசியாற்றினால் கல்வி,அறிவு, செல்வம் மற்றும் மகிழ்ச்சியை அளிக்கவல்ல
போகங்கள் அனைத்தும் கிட்டும்.
உடல் வேறு உயிர் வேறு!
வள்ளலார் தருமச்சாலையின் வெளியே
உச்சிப்பொழுதில் வெயிலில் அமர்ந்து தியானத் தில் மூழ்கி இருப்பார். அந்தச்
சமயங்களில் வள்ளலாரின் தலைக்கும் சூரியனுக்கும் இடையே ஓர் அக்னிக் கம்பம் இருப்பது
போல் தோன்றும்.இது அனைவருக்கும் பழக்கப்பட்ட காட்சியாக இருந்திருக்கிறது. இதைவிட
இன்னொரு காட்சிதான் வள்ளலாரை வெறும் துறவியாக மட்டுமின்றி மாபெரும் சித்தராக
உலகுக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறது.ஒருநாள் உச்சிவேளையில் தருமச்சாலையில்
இருந்து வள்ளலார் வெளியே புறப்பட்டுச் சென்றார். வெகுநேரம் ஆகியும் அவர் திரும்பி
வராததால், கவலைப்பட்ட
சண்முகம் பிள்ளை என்னும் அன்பர் வெளியே வந்து தேடினார்.ஓரிடத்தில் வள்ளலாரின் கை, கால் என்று அனைத்து அங்கங்களும் வெவ்வேறாகிக்
கிடப்பதைக் கண்டு பயந்து பதறி மயங்கி விழுந்தார் அவர்.உடனே வள்ளலாரின் அங்கங்கள்
எல்லாம் ஒன்றாகி,சண்முகம் பிள்ளையை எழுப்பி,
"இனி இப்படி என்னைத் தேடி வர வேண்டாம்!"
என்று கூறி அவருடன் தருமச்சாலைக்குத் திரும்பினார்.
No comments:
Post a Comment