நோக்கு வர்மமும் பிராண சக்தியும் (நோக்கு வர்மத்தின் செயல்முறை
இரகசியம்) சென்ற
பதிவில் நோக்குவர்மத்திற்கும் சித்த, மன சக்திகளிற்கும் அதனை தாரணைப் பயிற்சியின் மூலம்
ஒருங்கு படுத்துவதனால் செயற்படுகிறது என்பது பற்றி அறிந்தோம். இதனை செய்ற்படுத்துவதற்கு
சக்தி அவசியம் அல்லவா? அந்த சக்திதான் "பிராண சக்தி", தமிழில் "வாசி"
சீன மொழியி "Chi- சீ" ஜப்பனிய மொழிவில் "Ki-கீ" என்றேல்லாம் அழைக்கப்படுகிறது.
இது சுவாசத்தினால் பெறப்படும் ஒட்சிசன் வாயுவல்ல! பிராணன் என்பது பிரபஞ்ச மஹா சக்தி,
அதனது ஓட்டம் மூச்சுடன் தொடர்புபட்டதேவொளிய உட்சுவாசிக்கும் மூச்சல்ல பிராணன், பிராணனை
கட்டுப்படுத்தும் இலகுவான வழி மூச்சுப்பயிற்சியாகிய பிராணாயாமம், அதே வேளை பிராணனை
கட்டுப்படுத்தும் மற்றைய சாதனங்கள் மந்திரம், மனம், மூலிகை மருந்துகள் என்பனவாகும்.இந்த
பிராணன் தலை உச்சிக்குழியினூடாக (fontanelle) ஈர்க்கப்பட்டு பின் ஆறாதாரங்களில் சேமிக்கப்பட்டு,
பின் எழுபத்தீராயிரம் நாடிகளினூடாக தச வாயுக்களாக உடல் முழுவதும் பரவுகிறது. இந்த பிராண
ஓட்டம் குறிந்த நாழிகைகளுக்கு ஒருமுறை வெவ்வேறு நாடிகளில் மாறி ஓடும். அந்த ஓட்டத்தின்
படியே உடலியக்கம், மனவியக்கம் என்பன ஆளப்படுகின்றன என்பதுவே சித்தர்களது யோக மருத்துவ
சாஸ்திர அடிப்படை, சீன மருத்துவத்தின் அக்குபிரசர், அக்குபஞ்சர் என்பவற்றினதும் அடிப்படை.
இங்கு
எடுத்துக்கொண்ட விடயம் நோக்கு வர்மத்திற்கும் பிராணசக்திக்கும் உள்ள தொடர்பினை ஆராய்தலாகும்.
இந்த நாடிகளில் ஓடும் பிராணணை மூன்று விதங்களில் கட்டுப்படுத்தலாம்.
1.
அதிக பிராணனை உட் செலுத்துதல்.
2.
பிராண ஓட்டத்தினை தடைப்படுத்துதல்
3.
பிராணணை உறிஞ்சுதல்
அதிக பிராணனை உட் செலுத்துதல்.
இந்த
முறை பாதிப்பில்லாது, இதனால் செலுத்துபவரிடம் இருந்து வாங்குபவர் அதிக பிராணனை பெற்று
அதனை தாங்க முடியாமல் மயங்கி அல்லது நிலை குலைந்து போவர். ஆனால் செலுத்துவரது நோக்கத்தினைப்
பொறுத்து பாதிப்பு வேறுபடும்.
பிராண ஓட்டத்தினை தடைப்படுத்துதல்
இது
ஆபத்தானது, மரணத்தினை அல்லது உறுப்புகளை செயலிளக்க வல்லது. சரியான நேரத்தில் பிராணன்
திரும்பவும் பெறாவிட்டால் பாதிப்பு அதிகமாகும்
பிராணனை உறிஞ்சுல்
அதி
ஆபத்தான முறை, இதனைதான் மெய்தீண்டாகாலம் என்பர், அதாவது மெய் (உடலினை) தீண்டாமல் காலனினை
வரவைக்கும் முறை.
இந்த
வித்தையில் சித்த சக்தியினையும் பிராணசக்தியினையும் செலுத்தும் சாதனமாக கண் விளங்குகிறது.
இவைதான்
நோக்கு வர்மத்தின் அடிப்படை, இவை குருவில்லமல் கற்பது கற்பவர்களுக்கே ஆபத்தினை விளைவிக்க
வல்லது, ஏனெனில் தமது உடலிலுள்ள பிராண ஓட்டத்தின் மூலம் மற்றவரை கட்டுப்படுத்தும் போது
சரியான முறையில் அணுகவில்லையானால் தாக்க விளைபவரையே பாதிப்புற செய்யும்.
எமது
சித்த வித்யா விஞ்ஞான பதிவுகளின் நோக்கம் சித்தர்களின் வித்தைகளில் உள்ளவற்றை தற்கால
நடைமுறைக்கேற்றவாறு புரிந்து கொள்ளுதலாகும். ஆர்வமுடையவர்கள் தகுந்த குருவை அண்டி கற்றுக்கொள்ள
விளையுங்கள்.
சென்ற
பதிவில் நோக்கு வர்மத்தின் பிரயோக உத்தி தாரணா சித்தி என்பதனை விளக்கியிருந்தோம், இன்றைய
பதிவில் தாராணா சக்தி என்பது என்ன? அதன் பயன்பாடுகள் நோக்கு வர்மத்திலும் அன்றாட வாழ்விலும்
எப்படி இருக்கிறது என்பது பற்றி சிறிது ஆராய்வோம்.
அஷ்டாங்க
யோகம் என்பது ஒருவர் ஆதியுடன் கலக்கும் சமாதி எனும் நிலைக்கு செல்வதற்கான சரியான இலகுவான,
ஒழுங்கு படுத்தப்பட்டஒரு வரை முறையாகும். பதஞ்சலியார், திருமூலர் ஆகிய சித்தர்கள்
இதனை தெளிவாக விரிவாக முறைப்படுத்தி வைத்தனர். இதன் படி ஒருவன் தன் மனதை இயம, நியமங்களால்
சுத்தி செய்து, பின் சூஷ்ம ஸ்தூல உடலை ஆசன, பிராணாயாமங்களால் வலுப்படித்தி, பின் மனதை
புறப்பொருட்களில் இருந்து பிரத்தியாகாரத்தினால் பிரித்தெடுத்து, குறித்த ஒரு இலக்கில்
தாரணை எனும் பயிற்சியால் ஒருமைப்படுத்தி, பின் ஒருமைப்படுத்திய வஸ்துவில் மனதை கரைத்து
(தியானம்) மனமற்ற நிலையுடன், ஆதியான பரம்பொருளுடன் ஒன்றாதல் (சமாதியாகும்).
இந்தக்கட்டுரையில்
நாம் எடுத்துக்கொண்ட விடயம் நோக்கு வர்மத்தின் பிரயோக செயல் முறை எப்படி என்பதனை அறிந்து
கொள்வதாகும். ஒருவன் நோக்கு வர்மத்தினை பிரயோகிக்க தியானம், சமாதி ஆகிய நிலைதவிர்ந்த
அஷ்டாங்க யோகத்தின் படிமுறைகள் அனைத்தையும் அறிந்திருத்தல் அவசியம்.
- இயம, நியமம்
அவனது மனம் தவறு செய்ய தூண்டாமல் வைத்திருக்கும்.
- ஆசனம் -
உடலை சீர் செய்யும்
- பிரணாயாமம்
- பிராண சக்தியினை சீர் செய்யும்.
- பிரத்தியாகாரம்
- உணர்ச்சி வசப்பட்டு தாக்குதல் நடத்தாமல் இருக்க மனதை பணடுத்தும்.
- தாரணை -
நோக்கு வர்ம தாக்குதல் நடத்தும் முறை.
சரி
தாரணை என்பது அசையாமல் கட்டுப்படுத்தப்பட்ட சித்த சக்தி என பதஞ்சலியார் வரை விலக்கணப்படுத்தியுள்ளார்.
அது என்ன என்பது பற்றி சற்று விளக்கமாகப் பார்ப்போம். மனம் மேல்மனம், ஆழ்மனம், மறைமனம்
என்ற மூன்று அடுக்குகளை அல்லது வலயங்களை உடையதாக பிரித்துக்கொள்ளலால்.
சாதரணமாக
பெரும்பாலானோர்க்கு மேல்மனம் மாத்திரமே உபயோகத்தில் இருக்கும், எப்படியென்றால் கேள்வி
கேட்டு தர்க்கத்தின் மூலம் அறிதல் மேல் மனத்தின் செயல்முறை, சற்று ஆழ்ந்து சிந்திப்பவர்கள்,
கலைஞர்கள், எழுத்தாளர்கள் போன்றவர்களுக்கு ஆழ்மனம் செயல்பாட்டில் இருக்கும், இதைத்தான்
பதஞ்ச்சலி முனிவர் சித்தம் என்று கூறுகிறார். இந்த சித்தம்தான் மனதில் வரும் எண்ணங்களுக்கு
தூண்டுகோல், சக்தியின் இருப்பிடம், இந்த சித்தத்தினை ஒரு நிலைப்படுத்தி ஒரு இடத்தில்
பாய்ச்சும் சக்தி பெற்றால் அது பல சித்திகளை கொடுக்கும். இதனை பொதுவாக தாரணா சக்தி/ஏகாக்ர
சக்தி எனக் கூறலாம்.
சித்திகள்
பெறுவதற்கு தனியே தாரணாசக்தி மட்டும் போதுமா? சட்டியில் இருந்தால் தானே அகப்பையில்
வரும் ஆதாலால் இதனை சாதிப்பதற்கு பிராணசக்தியும் அவசியம். அதற்கு பிராணாயாம பயிற்சி
கட்டாயம் சித்தியாகியிருக்க வேண்டும். சித்த சக்தியுடன் பிராண சக்தி கலக்கும் போது
அதன் வலிமை அதிகமாகும். இவை ஒன்றோடு ஒன்று கலந்தவை.
சரி
பிராண சக்தி பற்றி இன்னொரு பதிவில் விளக்குவோம். இங்கு தாரணா சக்தி பற்றி மட்டும் பார்ப்போம்.
இதனை சாதிப்பதற்கான பொறிமுறை "திராடகம்" எனப்படும். இதனை (அந்தர்)அகத்திராடகம்,
(பாஹ்ய)புறத்திராடகம் என இருவைகைப்படுத்தலாம். நோக்கு வர்மத்திற்கு தேவையானது புறத்திராடகம்.
அதாவது கண்களால் சித்த சக்தியினையும், பிராணசக்தியினையும் செலுத்தும் ஆற்றலைப்பெறுவது.
இப்படி கண்களால் பிராண, சித்த சக்திகளை செலுத்தும் ஆற்றலைப்பெற்ற ஒருவர் நோக்கு வர்ம
பிரயோகத்தினை பயன்படுத்தலாம்.
திராடகம்
என்ன என்பது பற்றி நல்ல குருவிடம் பயிற்சி பெறுதலே சித்தியை தரும், ஏனெனில் நல்ல பிராண
சக்தியும், சித்த சக்தியும் உடலிலோ, மனதிலோ இல்லாமல் இதனை செய்தால் கண்கள் பழுதாகும்
அபாயம் உண்டு, ஆதலால் இங்கு அதன் செயன்முறை பற்றி விளக்கம் தரவில்லை. சென்ற பதிவின்
பின்னூட்டத்தில் அன்பர் ஒருவர் இது பற்றிய குறிப்பு கொடுத்துள்ளார்.
No comments:
Post a Comment