Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Tuesday, October 28, 2014

கடுக்காய் ....வைத்தியம்

பாட்டி வைத்தியம்!!!
அத்திக்காயை வேக வைத்து சிறுபருப்பு சேர்த்து கடைந்து சாப்பிட்டால் கை, கால் வலிகள் நீங்கும்.அதிவிடயம், எள், வெள்ளரி விதை மூன்றும் தலா 100 கிராம் அளவுக்கு எடுத்து அரைத்து கொள்ளவும். காலை மாலை இரு வேளையும் 2 கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் உறுதிப்படும்.அமுக்காரா, ஏலக்காய், சுக்கு, சித்திரத்தை ஆகியவற்றில் தலா 100 கிராம் எடுத்து அரைத்துக் கொள்ளவும் இதில் ஐந்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் கை, கால் மற்றும் மூட்டு வலிகள் குணமாகும்.மூட்டு வலிக்கு அவுரி இலையை விளக்கெண்ணெயில் வதக்கி ஒத்தடம் கொடுக்கலாம்.ஆடாதொடா இலையை கஷாயம் வைத்து குடித்தால் உடல் குடைச்சல் குணமாகும்.ஆளி விதை 100 கிராம் பொடி செய்து அத்துடன் 10 கிராம குங்கிலி பஸ்பம் 10 கிராம் சேர்த்து கலந்து தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.இலுப்பைக் கொட்டையில் இருந்து எண்ணெய் எடுத்து இடுப்பில் தேய்த்தால் நிவாரணம் பெறலாம்.உளுந்து, கோதுமை, கஸ்தூரி மஞ்சள் மூன்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து அதில் வெந்நீரில் கலந்து பற்று போட்டால் மூட்டு வாதம், மூட்டு வலி குணமாகும்.

கடுக்காயை மருந்தாக்குவது எப்படி?
கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்.தரமான கடுக்காயை வாங்கி வந்து உடைத்துஉள்ளே இருக்கும்பருப்பை எடுத்துவிட்டுநன்கு தூளாக அரைத்து வைத்துக்கொள்ளவும். இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின்சாப்பிட்டு வரநோயில்லா நீடித்த வாழ்க்கை யைப் பெறலாம்.
கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்
கண் பார்வைக் கோளாறுகள்காது கேளாமைசுவையின்மைபித்தநோய்கள்வாய்ப்புண்நாக்குப்புண்மூக்குப்புண்தொண்டைப்புண்,இரைப்பைப்புண்குடற்புண்ஆசனப்புண்அக்கிதேமல்படைதோல்நோய்கள்உடல் உஷ்ணம்வெள்ளைப்படுதல்மூத்திரக் குழாய்களில்உண்டாகும் புண்மூத்திர எரிச்சல்கல்லடைப்புசதையடைப்பு,நீரடைப்புபாத எரிச்சல்மூல எரிச்சல்உள்மூலம்சீழ்மூலம்,ரத்தமூலம்ரத்தபேதிபௌத்திரக் கட்டிசர்க்கரை நோய்இதய நோய்,மூட்டு வலிஉடல் பலவீனம்உடல் பருமன்ரத்தக் கோளாறுகள்,ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும்இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய். கடுக்காயை உணவாய்தினசரி சாப்பிட்டு வாருங்கள். உங்களை எந்த நோயும் அணுகாது.பின் வரும் சித்தர் பாடலைக் கவனியுங்கள்.
காலை வெறும் வயிற்றில் இஞ்சி- நண்பகலில் சுக்கு- இரவில்கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர,கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம்.எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வரப் பழகிக்கொள்ளுங்கள். இதனால் முன் சொன்ன அனைத்து நோய்களும்உங்களை அண்டாமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.
தென்னாட்டவருக்கு திரிபலா...
திரிபலா என்பது கடுக்காய்நெல்லிக்காய்தான்றிக்காய் ஆகியமூன்றும் சம அளவு கலந்த மருந்தாகும். இதனை எவர்வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்.குறிப்பாக ஆங்கில மருந்துகள் நிறைய உட்கொள்பவர்கள்,இம்மருந்தினை காலை-இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர,ஆங்கில மருந்துகளால் உண்டாகும் பக்க விளைவுகளைக் குறைத்துக்கொள்ளலாம். மேலும் சர்க்கரை நோய்க்கு இணை மருந்தாய்பயன்படுத்த லாம்.
உடல் வலிமை பெற...
நூறு கிராம் கடுக்காய்சிலாசத்து பற்பம் 50 கிராம்- இரண்டையும்ஒன்றாகக் கலந்து கொள்ளவும். இதில் இரண்டு கிராம் அளவு காலை-இரவு சாப்பிட்டு வந்தால் இளைத்த உடல் தேறும்நரம்புகள்முறுக்கேறும்.
பல் நோய்கள் தீர...
கடுக்காய்கொட்டைப்பாக்குபடிகாரம் ஆகிய மூன்றையும் வகைக்குநூறு கிராம் எடுத்து ஒன்றாகத் தூள் செய்து கொள்ளவும். இதில் பல்துலக்கி வர அனைத்து பல் வியாதிகளும் தீரும்.
மூல எரிச்சல் தீர...
கடுக்காய்த் தூளை நீரிலிட்டு கொதிக்க வைத்து ஆற வைத்துஅந்தநீரால் ஆசன வாயைக் கழுவி வர மூல எரிச்சல்புண்ஆகியனஆறும்.
எனவேகடுக்காய் உங்கள் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டியபொக்கிஷ மாகும். கடுக்காய் திருமூலரின் ஆசி பெற்றது. நாமும்அதைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால்இந்த உடல் பெற்ற உபாயம்அறிவோம். நல்லன செய்து நலம் பல பெறுவோம். கடுக் காயைக்கருத்தில் வையுங்கள். திருமூலர் ஆசி உங்களுக்கு எப்பொழுதும்உண்டு. வாழ்க வளமுடன்!
கடுக்காய்:
அறு சுவையில் ஒரு சுவையான உப்பு தவிர்த்து துவர்ப்புஇனிப்பு,புளிப்புகசப்புஎரிப்பு ஆகிய ஐந்து சுவை நிறைந்த கடுக்காயில்வாத-பித்தகப தன்மையை சீர்படுத்தும் சக்தி இருக்கிறது. கடுக்காயின் விதைப் பகுதி நஞ்சு போல் பாவிக்கப்படுவதால் அதைநீக்கிவிட்டு பயன்படுத்த வேண்டும்.
பயன்கள் :
ஜீரண சக்தி அதிகரிப்புஇளமை பாதுகாப்புபுத்தி சக்தி மேம்பாடு,ஐம்புலன்களுக்கும் சக்தி தருதல் ஆகியவை உள்ளன. கனமானதொடைப்பகுதியை சுருக்குதல்தோல்வியாதியை குணப்படுத்துதல்,மண்ணீரல் சக்தியை மேம்படுத்துதல்உடல் வீக்கங்களை போக்குதல்,சுவாசநோய்களை கட்டுப்படுத்துதல்ரத்த நாள அடைப்பை நீக்கிஇதயத்தை வலுப்படுத்துதல் போன்ற பல பலன்களை கடுக்காய்தருகிறது.
இரவு படுக்கச் செல்வதற்கு முன்பு கிராம் கடுக்காய் தூள் எடுத்துசூடான நீரில் கலந்து பருகவேண்டும். இஞ்சிசுக்குகடுக்காயை ஒருமண்டலம் எனப்படும் 48 நாட்கள் காலைமதியம்இரவு என மூன்றுவேளையும் மேலே குறிப்பிட்டதுபோல் உட்கொண்டால் நன்றாகஜீரணமாகும். ஜீரணம் ஆன பின்பு மலமும் நன்றாக வெளியேறும்.
இதனால் உடலின் முழு இயக்கமும் சீரடையும். நோய் அண்டாது.இளமையோடு நீண்ட நாள் வாழலாம். அதனால்தான் "காலையில்இஞ்சி... நண்பகல் சுக்கு... மாலையில் கடுக்காய் மண்டலம் உண்ணகோலை ஊன்றி குழைந்து நடந்தவர் கோலை வீசி குலாவிநடப்பரே..''- என்று சித்த மருத்துவ பாடல் குறிப்பிடுகிறது.      
கடுக்காய்
இயற்கை நமக்கு பல்வேறு வளங்களை வழங்கியுள்ளது. உடல் உறுதிபெறவும்நோயற்ற வாழ்வைப் பெறவும்நோய்களைக்குணப்படுத்தவும்ஆரோக்கியம் மேம்படவும்உடல் உள்ளுறுப்புகள்பலப்படவும் உதவக்கூடிய வழிமுறைகளைதாவரங்கள் மூலம்இயற்கை நமக்கு வாரி வழங்குகிறது. இந்த இயற்கை தரும்முறைகளை செவ்வனே பயன்படுத்தினால் நோயற்ற வாழ்வைவாழலாம். அவ்வகையில் மிகவும் சிறப்பு வாய்ந்தது கடுக்காய்.
கடுக்காயின் தாயகம் இந்தியா. இது மிகவும் பழமையான மரம்.புராணங்களில் இம்மரத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.தேவலோகத்தில் இந்திரன் அமிர்தத்தை அருந்தும்பொழுது ஒரு துளிஅமிர்தம் சிந்தியதாம். அத்துளி பூமியில் விழுந்து கடுக்காய் மரமாகஉருவெடுத்தது என புராணம் உரைக்கிறது. சுமார் 4000 ஆண்டுகட்குமுற்பட்ட சித்த மருத்துவ நூல்களில் கடுக்காய் பற்றிக்குறிப்பிடப்பட்டுள்ளது.
கடுக்காய் மரம் ஓங்கி உயரமாக வளரும் தன்மை கொண்டது. சுமார்20 முதல் 25 மீட்டர் உயரத்தில்அரை மீட்டர் விட்டமுடையஅடிமரத்துடன் காணப்படுகிறது. இது குளிர் காலத்தில் இலையுதிர்த்து,மார்ச் மாத வாக்கில் துளிர்க்கிறது. இலைகள் சிறுகாம்புடன் முட்டைவடிவத்துடன் இருக்கும். பூக்கள் பச்சை நிறம் கலந்த வெண்மைநிறமாகசிறிது மணத்துடன் காணப்படும். காய்கள் பச்சைநிறமுடையதாகவும்முதிரும்போது கரும்பழுப்பு நிறமாக நீண்டபள்ளங்களுடைய தடித்த ஓட்டோடு காணப்படும். ஓட்டினுள்கொட்டை காணப்படும்.
கடுக்காயானது முட்டை வடிவிலோ அல்லது நீண்ட முட்டைவடிவத்துடனோ காணப்படும். கடுக்காயில் ஏழு வகைகள் உள்ளதெனநமது சித்த மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன. அவை முறையேஅபயன்விசயன்பிரிதிவிசிவந்திஅமுர்தம்ரோகினிதிருவிருதுதம்என்பதாகும். மேலும் மரங்கள்இடம்காயின் வடிவம்தன்மைஇவற்றைப் பொறுத்து கருங்கடுக்காய்செங்கடுக்காய்வரிக்கடுக்காய்,பால் கடுக்காய் எனப் பல வகைகள் உள்ளன.
சிறப்புத் தன்மைகள் :
கடுக்காய் சிறந்த மருத்துவத் தன்மையுடையதாகும். வடமொழியில்மருத்துவரின் காதலி’ எனப்படுகிறது. மருத்துவத்தில் மட்டுமின்றிபொருளாதா£ரம்தொழிலியல் துறைகளில் வெகுவாக பயன்படுகிறது.திரிபலா’ என்பது சித்த மருத்துவத்தில் புகழ்பெற்ற ஒரு கூட்டுமருந்தாகும். இதில் கடுக்காய்தான்றிக்காய்நெல்லிக்காய் என்றமூன்றும் சேர்க்கப்படுகின்றன. கடுக்காய் என்பது ஒரு கடினமானமருந்து என்று நாம் கருதுகிறோம். ஆனால் கடுக்காயை நாட்டுமருந்துக் கடைகளில் எளிதாக வாங்கலாம். கடுக்காயின் தோலைமட்டுமே பயன்படுத்த வேண்டும். உள்ளிருக்கும் பருப்பைப்பயன்படுத்தக்கூடாது. இதன் ஓட்டைப் பொடியாக்கி வைத்துக்கொண்டுபயன்படுத்தலாம்.
பொருளாதாரப் பயன்கள்:
கடுக்காய் மரத்தழைகளை கால்நடைத் தீவனமாகப் பயன்படுத்தலாம்.
கடுக்காய் மரத்திலிருந்து பிசின் எடுக்கலாம்.
மரப்பட்டை பொடியிலிருந்து மோல்டிங் மாவு தயாரிக்கப்படுகிறது.
பல்வேறு தொழில்களுக்கு ஒரு உப மூலப்பொருளாக விளங்கும்டானின் சத்து கடுக்காய்த் தோலிருந்து பெறப்படுகிறது.
தோல் பதனிட டானின் பயன்படுகிறது.
துணிகளுக்குச் சாயமேற்றசிமெண்ட் தயாரிப்புசிலேட் கற்களுக்குநிறமூட்டநிலக்கரியைச் சுத்தம் செய்ய டானின் உதவுகிறது.
டானின் பிரித்தெடுத்த பின் எஞ்சும் கடுக்காய்ச் சக்கை அட்டைக்காகிதம் செய்யவும்ஒட்டுப்பசை தயாரிக்கவும் பயனாகிறது.
முற்காலத்தில் கட்டடம்கோவில் கட்ட கடுக்காய்ச்சாறுசேர்க்கப்பட்டது.
கடுக்காய் கொட்டையிலிருந்து ஒருவகையான எண்ணெய்எடுக்கப்படுகிறது.
குணங்கள் :
வலிமையூட்டிநீர்ப்பெருக்கிஉள்ளழலகற்றி போன்ற குணங்களைக்கொண்டுள்ளது. புண்கள்கண்நோய்இருமல்காமாலைகைகால்நமச்சல்தலைநோய்இரைப்புதொண்டை வலிநாவறட்சிமார்புநோய்மூலம்மேகம்வயிற்றுப்பொருமல்விக்கல் போன்றவைகளைக்குணப்படுத்தும்.
மருத்துவப் பயன்கள் :
கடுக்காய் ஓட்டைத் தூளாக்கி இரவு உணவு உண்டதும் அரைதேக்கரண்டி பொடியைத் தின்றுஒரு டம்ளர் நீரைக் குடித்துவர உடல்வலுவாகும். வாதம் குணமாகும்.
மூன்று கடுக்காய்த் தோல்களை எடுத்துதேவையான இஞ்சிமிளகாய்,புளிஉளுத்தம்பருப்பு சேர்த்து எல்லாவற்றையும் நெய்யில் வதக்கிஎடுத்து உப்பு சேர்த்து துவையலாக அரைத்து சாதத்துடன் பிசைந்துஉண்டு வரஜீரண சக்தி கூடும். மலச்சிக்கல் மாறும்உடல் பலம்பெறும்.
கடுக்காய்த்தூளை 10 கிராம் எடுத்துஅதே அளவு சுக்குத்தூள்,திப்பிலித்தூள் எடுத்து கலந்துகொண்டு காலைமாலை அரை ஸ்பூன்வீதம், 21 நாட்கள் சாப்பிட்டு வரவாதவலிபித்த நோய்கள் குணமாகும்.

15 
கிராம் கடுக்காய்த் தோலை எடுத்து நசுக்கி, 15 கிராம் கிராம்புசேர்த்து ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைத்துஆறியபின்அதிகாலையில் குடிக்க நாலைந்து முறை பேதியாகும். அதன்பின்மலச்சிக்கல்வயிற்றுப் பிணிகள் மாறிவிடும்.

200 
கிராம் கற்கண்டை தூளாக்கிநீர் விட்டுப் பாகு போலக் கிளறி,அதோடு 20 கிராம் கடுக்காய்த் தூளைக் கலந்து வைத்துக்கொண்டு,காலைமாலை அரை தேக்கரண்டி தின்றுவெந்நீர் குடிக்க குடல்புண்,சுவாச காசம்மூலம்வாதநோய்கள் குணமாகும்.
மூக்கிலிருந்து இரத்தம் வந்தால்சிறிதளவு கடுக்காய்த்தூளை எடுத்துமூக்கால் உறியரத்தம் வருவது நின்றுவிடும்.

10 
கிராம் வீதம் கடுக்காய்த்தூள்காசுக்கட்டித் தூள் எடுத்து பொடியாக்கிசிறிதளவு பொடியைவெண்ணெயில் குழைத்துநாக்குப்புண்உதட்டுப்புண்ணில் பூசிவர புண்கள் ஆறும்.
கடுக்காய்நெல்லிக்காய்தான்றிக்காய் மூன்றும் கலந்த திரிபலாசூரணத்தை அடிக்கடி நீரில் கலந்து குடிக்க உடல்பலம் ஏற்படும்.வயிற்றுக் கோளாறு மாறும்.
நாவறட்சிதலை நோய்ஈரல் நோய்வயிற்றுவலிகுஷ்டம்இரைப்பு,தொண்டை நோய்புண்கண்நோய்வாதம்வயிற்றுப்புண்காமாலைபோன்ற நோய்களைக் குணப்படுத்தும் தன்மையும் கடுக்காய்க்குஉண்டு
வேறு பெயர்கள் : அமுதம்அம்ருதாஅரபிஅரிதகிரோகினிவரிக்காய்,ஜீவந்திஅமரிதம்.
தாவரவியற் பெயர் :Terminalla Chebula
ஆங்கிலப் பெயர் : Chebulic Myrobalam, Ink nut
இது மரவகுப்பைச் சேர்ந்தது. இது சில இடங்களில் உயர்ந்தும்சிலஇடங்களில் மிக உயரமின்றித் தாழ்ந்தும் பயிராகின்றது. இதன்பிஞ்சும் பழமுமே மருத்துவத்தில் உபயோகமாகின்றன. தாயோஅறுசுவை உணவை ஊட்டி வளர்ப்பாள். கடுக்காயோ உடற்பிணிகளைஓட்டி உடலைத் தேற்றும். இதனால் தாயினும் கடுக்காய் சிறந்ததுஎனக் கூறப்படுகின்றது. மருத்துவப் பாவனைகளாவன;
குடற்புழுக்களிற்கு
கடுக்காய்த் தோல்வேப்பிலை ஈர்க்குசமஅளவு எடுத்து அம்மியில்வைத்து மைபோன்று அரைத்து அதில் நெல்லிக்காய்ப் பிரமாணம் 1தே. கரண்டி ஆமணக்கெண்ணெயில்  கலந்து காலையில் வெறும்வயிற்றில் நாட்கள் தொடர்ந்து அருந்திவர குடலில் உள்ள புழுக்கள்வெளியேறி குடல் சுத்தம் அடையும்.
கரப்பான் நோய்க்கு (எக்ஸிமா)
கடுக்காய்த் தோலை சூரணித்து 1/2 தே.கரண்டி காலைமாலைபாலுடன் உட்கொண்டு அச்சூரணத்தையே வெந்நீரில் கலந்து உடலில்பூசி ஸ்நானம் செய்து வந்தால் குணமாகும்.
மலச்சிக்கலுக்கு
பச்சைக் கடுக்காயை கொட்டை நீக்கி இடித்து அதற்கு 1/5 பங்குஉப்பிட்டு, 15 நாள் சென்ற பின் பிசைந்து அதை சோற்றுடன்சேர்த்தவாறு தனித்தாவது புசிக்கின் மலம் கழியும்.
உடல் எடையைக் குறைக்க
கடுக்காய்த் தோல்தான்றித்தோல்நெல்லி வற்றல் சம எடை எடுத்துசுத்தம் செய்து இடித்து வஸ்திரகாயஞ் செய்து அதில் 1/2 தே. கரண்டிஅளவு கொள்ளுக் குடிநீருடன் காலைமாலை என இருவேளைசாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.
தலைவலிக்கு 
வேப்பம்பட்டை கடுக்காய் (கொட்டை நீக்கியது)கோரைக்கிழங்கு,நிலவேம்பு சம எடை எடுத்து தட்டி ஒரு சட்டியில் போட்டு 400 மி.லீ.நீர் விட்டு பாதியாக சுண்டுமளவுக்கு காய்ச்சி ஒரு நாளைக்கு 3வேளை வீதம் தேன் கலந்து சாப்பிட தலைவலி குணமாகும்.
மூலத்திற்கு கடுக்காய் லேகியம்
கடுக்காய் 300 கிராம் எடுத்து இடித்து பங்கு நீர்விட்டு எட்டிலொன்றாகவற்றக் காய்ச்சி வடித்த கசாயத்தில் 300 கிராம் சர்க்கரையைக்கரைத்துப் பாகு செய்து  அதில் சிவதை இஞ்சிமிளகுஓமம்,வாய்விளங்கம்திப்பிலி வகைக்கு 30 கிராம் எடுத்து அரைத்துப்போட்டு பசு நெய் படி விட்டுக் கிண்டி லேகியஞ் செய்து வேளைஒன்றுக்கு கொட்டைப் பாக்குப் பிரமாணம் உட்கொள்ள மூலநோயுடன்பசியின்மைமலசலக்கட்டும் தீரும். கரப்பான் பதார்த்தம் நீக்கவேண்டும்.
கண் மறைப்பிற்கு (கட்காசம்)
கடுக்காய்த் தோலைத் தட்டி சூரணமாக்கி துணியில் முடித்துஆமணக்கெண்ணெயில் இட்டுச் சூரிய ஒளியில் வைத்து  கண்ணில்பிழியலாம்.
கரப்பான்குட்டம் போன்ற நிலைக்கு
கடுக்காய் சூரணத்தை 1/2 தே.கரண்டி காலைமாலை பாலில்அரைத்துச் சாப்பிட வேண்டும்.
பல்லீறு வலிஇரத்தம் வடிதலுக்கு
கடுக்காய்த் தோலை பொடி செய்து அதனைக் கொண்டு பல்துலக்கவிரணம் ஆறுவதுடன் பல்லும் இறுகும்.
நீரிழிவு நோய்க்கு
கடுக்காய்த்தோல் பங்குநெல்லி வற்றல் பங்குகறிவேப்பிலை 1பங்குசிறுகுறிஞ் சா இலை1/2 பங்கு தனித்தனியாக பொடி செய்துஒன்று கலந்து காலைமாலை தே. கரண்டி வெந்நீருடன் பருகலாம்.ஆனால் இலங்கன இரத்தப் பரிசோதனையின் பின் வேண்டுமானால் 3வேளையும் பருகலாம். பாவித்து நல்ல பலன் கிடைத்த ஒன்றாகும்.
இருமலிற்கு
கடுக்காய்த் தோல்திப்பிலி சம எடை எடுத்து இடித்து தூள் செய்து 2கி. தூளை தேனில் சேர்த்து தினமும் வேளை சாப்பிட்டு வரஇருமல் குணமாகும்.
காலையில் இஞ்சி 1 துண்டுமதியம் சுக்கு துண்டுஇரவு 1/2தே.கரண்டி கடுக்காய் தோல் பொடி உண்டால் இளமையுடன்வாழலாம்.
புற்று நோயை குணமாக்கும் எளிய மூலிகைமருத்துவம் !
புற்று நோய் எவ்வளவு கொடூரமானது என்பதைபலரும் அறிந்திருப்போம்.புற்று நோயை குணப்படுத்துவதற்க்கான சிகிச்சைகள் மிகவும்கடினமானதும் செலவு மிகுந்ததும் பக்க விளைவுகளைஏற்படுத்துவதாக அமைந்துள்ளன.
இதற்க்கு மாறாக மிகவும் எளிதான பக்க விளைவற்றஓர் மூலிகை மருத்துவத்தை தெரிந்துகொள்வோம் . 
இந்த சிகிச்சையை கண்டுபிடித்தவர் பிரேசில் நாட்டில்பிறந்தவரும் சிறந்த மருத்துவரும் பாதிரியாருமாகியFr ரோமனோ சகோ (Fr Romano Zago) என்பவர். இவர்கண்டு பிடித்த இம்மருந்தை புற்று நோயால் மிககடுமையாக பாதிக்கப் பட்டவர்கள்கூட உபயோகித்துகுணமடைந்துள்ளனர். . 
இனி இம்மருந்தை எப்படி தயாரிப்பது என்பதைபார்ப்போம் .இதில் பயன்படுத்தப்படும் மூலிகைஎங்கும் எளிதாக கிடைக்கும் சோற்று கற்றாழை ஆகும்.
தயாரிப்பு முறை
சோற்று கற்றாழை 400 கிராம்
சுத்தமான தேன் 500 கிராம்
whisky(or)brandy 50 மில்லி
சோற்றுக் கற்றாழையை எடுத்து பக்கவாட்டில் உள்ளமுட்களை நீக்கி கொள்ள வேண்டும்
தோலை நீக்கிவிடக்கூடாது 
தோலை சுத்தமான துணியினால் துடைத்துக்கொள்ளவேண்டும்
அடுத்த படியாக எவ்வளவு முடியுமோ அவ்வளவுசிறியதாக கற்றாழையை நறுக்கிக் கொள்ளவேண்டும்
நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில் கொட்டிதேன் மற்றும் whisky (or) brandy யுடன் சேர்த்து ஒருகரண்டியால் நன்றாக கலக்க வேண்டும்
இப்போது மருந்து தயாராகி விட்டது 
மருந்தை உட்கொள்ளும் விதம் 
இம்மருந்தை தினமும் மூன்று வேளை உணவுஅருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு 15 ml வீதம்உண்ணவேண்டும் .
ஒவ்வொரு முறை பயன்படுத்தும்போதும் மருந்தைநன்றாக குலுக்கிக் கொள்ளவேண்டும்
ஒரு முறை தயாரித்த மருந்து தீர்ந்தவுடன் 10 நாள்இடைவெளி விட்டு மீண்டும் தயாரித்துஉண்ணவேண்டும்
இடையிடையே மருத்துவ பரிசோதனை செய்துகொண்டு நோய் நன்கு குணமாகும் வரை மருந்தைஉட்கொள்ளவேண்டும் .சிலருக்கு மிக குறுகியகாலத்திலேயே இதன் மூலம் நிவாரணம்கிடைத்துள்ளது .இது மிகவும் எளிதான சக்தி மிகுந்த மருந்து ஆகும் .மருந்தை குளிர்சாதன பெட்டியிலோ அல்லது அதிகவெப்பம் இல்லாத இடங்களிலோ காற்று புகாதபாட்டிலில் வைத்திருப்பது நல்லது .
குடற்புண் குணமாக...
பொன்னாங்கண்ணி கீரைச்சாறு, கரிசலாங் கண்ணி கீரைச்சாறு வகைக்கு 100 மி.லி.அளவு எடுத்து ஒன்றாய் கலந்து கொள்ளவும். இதில் 50 கிராம் அதிமதுரத்தை பால்விட்டரைத்து விழுதாக்கி, மேற்படி சாறுடன் கலந்து கொள்ளவும். பின்னர் இதனைமெழுகுப் பதமாய்க் காய்ச்சி வைத்துக் கொள்ளுங்கள். இதை தினமும் காலை, மாலைஇருவேளையும் ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டு வர வாய்ப்புண், வயிற்றுப்புண்போன்றவை குணமாகும்.
நரம்புத் தளர்ச்சி நீங்க...
பொன்னாங்கண்ணிக் கீரை, செம்பருத்திப்பூ, ஆவாரம்பூ, ரோஜாப்பூ, கொன்றைப்பூஆகியவற்றை வகைக்கு 50 கிராம் எடுத்து ஒன்றாகத் தூள் செய்து கொள்ளவும்.இதில் ஐந்து கிராம் அளவு தினசரி உணவுக்குப்பின் இரவில் மட்டும் சாப்பிட்டுவர வேண்டும். இத்துடன் மறக்காமல் ஒரு டம்ளர் பாலும் சாப்பிட்டு வர, இரண்டுமாதங்களில் நரம்புத் தளர்ச்சி பூரணமாய் குணமாகும். மேலும் ஆண்மைக்குறைபாடுகளும் தீரும்.
அபார நினைவாற்றல் பெற...
பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி, சீந்தில், வல்லாரை ஆகியவற்றை வகைக்கு 100கிராம் எடுத்து ஒன்று கலந்து தூள் செய்து கொள்ளவும். இதில் மூன்று கிராம்அளவு, ஒரு டம்ளர் பசும்பாலுடன் சேர்த்து காலை- மாலை சாப்பிட்டு வர, அபாரநினைவாற்றல் உண்டாகும். மேலும் சோர்வு, பட படப்பு, தூக்கமின்மை, ரத்தஅழுத்தம், மன அழுத்தம், மன உளைச்சல் போன்ற கோளாறுகளும் தீரும்.
வெள்ளைப்படுதல் குணமாக...
பொன்னாங்கண்ணிச்சாறு, கரிசலாங் கண்ணிச்சாறு, பசு நெய், பசும்பால் எனஒவ்வொன்றிலும் வகைக்கு 60 மி.லி. அளவுக்கு எடுத்து ஒன்றாகக் கலக்கிக்காய்ச்சி, மெழுகு பதத்தில் இறக்கி வைத்துக் கொள்ளவும். இதில் தினமும்காலை- மாலை இரு வேளையும் ஒரு ஸ்பூன் (ஐந்து கிராம்) அளவுக்குச்சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் ஒரே வாரத்தில் குணமடையும். கை- கால்எரிச்சல், பித்த மயக்கம் போன்ற பாதிப்புகளும் குணமாகும்.
கண் நோய்கள் விலக...
பொன்னாங்கண்ணிக் கீரையுடன் சிறிது மிளகு, சீரகம், பூண்டு, மஞ்சள்,பெருங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து சூப் செய்து தொடர்ந்து 48 நாட்கள் (ஒருமண்டலம்) சாப்பிட்டு வர, கண் தொடர்பான அனைத்து வியாதிகளும் தீரும்.
மேனியழகு உண்டாக...
100 கிராம் பொன்னாங்கண்ணி (காய்ந்தது), 100 கிராம் பிஸ்தா பருப்புஇரண்டையும் ஒன்றாக்கி அரைத்துத் தூள் செய்து சலித்து வைத்துக் கொள்ளவும்.இதில் ஒரு ஸ்பூன் அளவு காலையும் மாலையும் சாப்பிட்டு வர, உடலுக்கு அழகும்பொன்னிறமும் ஒருசேர உண்டாகும்.
முகப்பரு, தேமல், படர்தாமரை விலக...
முந்திரிப் பருப்பு, முள்ளங்கி விதை சம அளவு எடுத்து, பொன்னாங்கண்ணிச் சாறு விட்டரைத்து பரு, தேமல், படர்தாமரை யின்மீது போட்டுவர, ஒரே வாரத்தில் குணமாகும்.
உஷ்ணம் தீர...
பொன்னாங்கண்ணிக் கீரையை விழுதாய் அரைத்து தலையில் தேய்த்துக் குளிக்க, உடல் உஷ்ணம், கண்நோய்கள் போன்றவை விலகும்.
நீண்ட கூந்தல் வளர்ச்சிக்கு...
இங்கு நான் உங்களுக்காக சித்தர்களால் அருளப்பட்ட ஒரு மிகச் சிறந்த கூந்தல்தைலத்தைப் பற்றிய குறிப்பை சொல்கிறேன். கவனமாய் குறிப்பெடுத்து, கருமையானகூந்தலுக்கு அச்சாரம் போடுங்கள்.
தேவதாருக்கட்டை- 50 கிராம்
கோஷ்டம்- 50 கிராம்
ஏலக்காய்- 50 கிராம்
வெள்ளைக் குண்டுமணிப் பருப்பு- 50 கிராம்
ஏலரிசி- 50 கிராம்
பொன்னாங்கண்ணிச் சாறு- அரை லிட்டர்
முதலில், வெள்ளைக் குண்டுமணியை பசும்பாலில் 12 மணி நேரம் ஊறவைத்து அதன்தோலை அகற்றிவிடவும். பின்னர் ஏலக்காயை உடைத்து உள்ளிருக்கும் விதையைமட்டும் 50 கிராம் அளவுக்கு எடுத்துக்கொள்ளவும். தேவதாரு, கோஷ்டம்இரண்டையும் நன்றாகத் தூள் செய்து, அத்துடன் வெள்ளைக் குண்டு மணிப்பருப்பு, ஏலரிசி ஆகியவற்றைச் சேர்த்து, சிறிது பொன்னாங்கண்ணிச் சாறுவிட்டரைத்து விழுதாக்கவும். அரைத்த விழுதை மீதமுள்ள பொன்னாங்கண்ணிச்சாற்றுடன் கலந்து மறுபடியும் 12 மணி நேரம் ஊற வைக்கவும்.இனி, இரண்டு லிட்டர் நல்லெண்ணெயை அடுப்பிலேற்றி, ஏற்கெனவே தயாரித்துவைக்கப்பட்டுள்ள பொன்னாங்கண்ணி விழுதையும் சேர்த்து, பதமுறக் காய்ச்சவும்.தைலம், கடுகு பதத்தில் திரளும்போது இறக்கவும். சூடு ஆறியபின் தைலத்தைவடிகட்டி பத்திரப்படுத்தவும்.இந்தத் தைலத்தைப் பயன்படுத்தினால் தலைமுடி நன்றாக வளரும். குறிப்பாகப்பெண்களுக்கு அவர்களே அதிசயிக்கத்தக்க அளவில் கூந்தல் மிக நீளமாகவும் கறுமையாகவும் வளரும். வழுக்கைத் தலையில்கூட முடி முளைக்கும். மேலும் உஷ்ணநோய்கள், கண்ணெரிச்சல், பித்த மயக்கம் போன்றவைகூட இருந்த இடம் தெரியாமல்மறைந்து விடும்.
இளநரை நீங்க...
பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி, கொட்டைக் கரந்தை, குப்பைமேனி, சிறுசெருப்படை ஆகியவற்றை வகைக்கு 50 கிராம் சேர்த்து தூள் செய்து கொள்ளவும்.இதில் ஒரு ஸ்பூன் அளவு காலை- மாலை சாப்பிட்டு பசும்பால் அருந்தி வர இளநரைமறையும். மேலும் நரை வருவதும் நின்றுவிடும்.
நூறாண்டு வாழ...
பொன்னாங்கண்ணியில் தங்கத்தின் சத்து அடங்கியுள்ளது. பொன்னாங்கண்ணியைத்தவறாது நமது உணவில் சேர்த்து வர வேண்டும். பொன்னாங்கண்ணித் தைலம் கடைகளில்வெகு சாதாரணமாய்க் கிடைக்கிறது. அதனை வாங்கி வாரம் ஒரு முறையேனும் தலைமுழுகி வர வேண்டும். பொன்னாங்கண்ணி சித்தர்கள் நமக்கு அருளிய வரம்.பொன்னாங்கண்ணியால் இந்த உடலைப் பண்படுத்தி, ஆத்ம சுகம் பெறுவோம்.

புற்று நோயை குணமாக்கும் எளிய மூலிகை மருத்துவம் ! சோற்றுக் கற்றாழை...
தேடிய சொர்க்கம் அதிசயத் தாவரம் கிராமங்களின் மருந்தகம் எனப் பல்வேறு அடைமொழிகளால் அழைக்கப்படும் கற்றாழை அழகுக் குறிப்புகளின் அத்தியாவசிய மூலப் பொருளாக விளங்குகிறது.
சித்த மருந்துவர்களால் குமரி’ என்றழைக்கப்படும் இத்தாவரத்தின் தாயகம் தென்னாப்பிரிக்கா மற்றும் அரேபிய நாடுகளாகும்.
எப்பொழுதும் வாடாத பெரணி வகையைச் சார்ந்த இத்தாவரம் வெப்பமான பகுதிகளில் வயல் வரப்புகளிலும் உயரமான பகுதிகளில் வேலிகளிலும் வளரக்வடியது. பல பருவங்கள் வாழக்கூடியது.சதைப்பற்றுள்ள நீச்சத்து மிக்க குறுச்செடி. இலைகள் அடுக்கடுக்காக ரோஜா இதழ்கள் போன்று அமைந்திருக்கும்.
கற்றாழையில் சோற்றுக் கற்றாழை சிறு கற்றாழை பெரும் கற்றாழை பேய்க் கற்றாழை கருங் கற்றாழை செங்கற்றாழை இரயில் கற்றாழை எனப் பல வகை உண்டு. இதில் சோற்றுக் கற்றாழை மருத்துவகுணங்களுக்கென்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. இலைச்சாறுகளில் ஆந்த்ரோகுயினோன்கள்இ ரெசின்கள் பாலிசக்கரைடு மற்றும்ஆலோக்டின்பி’ எனும் பல வேதிப்பொருட்கள் உள்ளன. கற்றாழையிலிருந்து வடிக்கப்படும் மஞ்சள் நிற திரவம் மூசாம்பரம்எனப்படுகிறது.
தளிர்பச்சை இளம்பச்சை கரும்பச்சை எனப் பலவிதமாக உள்ள சோற்றுக்கற்றாழை முதிர்நதவற்றில்தான் மருத்துவத்தன்மை மிகுந்து காணப்படுகின்றன.
இன்றைய அனைத்து அழகுசாதனப் பொருட்களின் தயாரிப்பிலும் தவறாது இடம் பெறுவது கற்றாழைதான். இதன் சாறு சருமத்தின் ஈரப்பதத்தை சமன் செய்வதுடன்இ சர்ம நோய்களையும்குணப்படுத்துகிறது.
முகத்திலுள்ள கரும்புள்ளிகள் தழும்புகள் வெயில் பாதிப்புகள் உலர்ந்த சருமம் என சரும நோய் எதுவாக இருந்தாலும் சிறிது கற்றாழைச் சாறை தினமும் தடவி வர நல்ல குணம் கிடைக்கும்.

தலைமுறையின் இனிய தோழி தானே! வீட்டிற்கொரு கற்றாழை வளர்ப்போம்..

ஆண்கள் சவரம் செய்யும் பொழுது ஏற்படும் கீறல்கள் காயங்களுக்கும் உடனடி நிவாரணம் பெற கற்றாழைச் சாறை பயன்படுத்தலாம்.தீக்காயங்களுக்கும் உடனடி டாக்டர்’ கற்றாழைச்சாறுதான்.
இதன் சாறை இரவு வேளையில் முகத்தில் தேய்த்து காலையில் வெந்நீரால் கழுவ முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் பொலிவு பெறும்.
தோலோடு கற்றாழையை பச்சை மஞ்சளோடு சேர்த்து மைய அரைத்து முகம் கழுத்து கை கால்களில் தடவி சில மணி நேரத்துக்குப் பின்னர் வெந்தய நுரை கொண்டு தேய்த்து குளித்தால் உடல் பளபளப்பாகும். தோல் நோய் வராது. கற்றாழை கழியைத் தலை முடியில் தடவி சீவினால் மடி கலையாது. தலையின் சூடும் குறையும். உடல் குளிர்ந்து காணப்படும்.
பிரயாணக் களைப்பினால் சோர்வுற்ற கால்களுக்கு கற்றாழை சாறைத் தடவலாம். சருமத்தில் ஏற்படும் எரிச்சலை அடக்கி சருமத்திற்கு குளிர்ச்சி தரும். திசுக்களைப் புதுப்பித்து ஈரப்பதம் அளிக்கும்.எல்லா வகை சருமத்திற்கும் ஏற்றது. முகத்தின் சுருக்கங்களைப் போக்கி புத்துணர்ச்சியையும் இளமைப் பொலிவையும் தக்க வைத்துக் கொள்ள உதவும். குறிப்பாக வடுக்கள் இருந்த சுவடு தெரியாமல் மறையும்.
கண்நோய் கண் எரிச்சலுக்கு கற்றாழைச் சோற்றை கண்களின் மேல் வைக்கலாம். விளக்கெண்ணெயுடன் கற்றாழைச் சோறைக் காய்ச்சி காலை மாலை என இரு வேளை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர உடல் அனல் மாறி மேனி பளபளப்பாகத் தோன்றும். நீண்ட கால மலச்சிக்கல் நீங்கும். கல்லீரல் ஆரோக்கியமாக விளங்கும்.
கேசப் பராமரிப்பில் தலைக்கு கறுப்பிடவும் கேசத்தின் வளர்ச்சியைத் தூண்டவும் பயன்படுகிறது. தலையில் ஏற்படும் கேசப் பிரச்னைகள் மற்றும் பொடுகை நீக்குகிறது. தோல் இறுக்கத்திற்கு சுகமளிக்கும் மருந்தாகிறது. கற்றாழை சோறை தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி தலைக்குத் தேய்த்து வர கேசம் நன்கு செழித்து வளரும். எண்ணெய் குளியல் செய்ய கண் குளிர்ச்சி மற்றும் சுக நித்திரை உண்டாகும்.
நமது தோலில் நீரை விட நான்கு மடங்கு வேகமாக கற்றாழைச் சாறு ஊடுருவக் கூடியது. வைட்டமின் சி மற்றும் பி சத்துகளும் தாதுக்களும் நிறைந்தது இச்சாறு. சருமத்திலுள்ள கொலாஜன்எனப்படும் கொழுப்பு சத்தை குறைக்கக்கூடிய புரோட்டீன் கற்றாழையில் அதிகம் காணப்படுவதால் முகத்திலுள்ள சுருக்கம் வயோதிக தோற்றத்தை குணப்படுத்துகிறது. மேலும் இந்த எண்ணெய் பெண்களின் மாதாந்திர ருதுவை ஒழுங்குபடுத்தும். கர்ப்பவதிகளுக்கு கருச்சிதைவை உண்டாக்கும்.
உள் மருந்தாக வயிற்றுப் புண் மற்றும் வயிறு சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்தும்.
சோற்றுக் கற்றாழை சோறை எடுத்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைமுழுகி வர மயிர் வளர்வதுடன் சுகநித்திரையும் உண்டாகும்.

சிற்றாமணக்கெண்ணெயுடன் கற்றாழை சோறு ஊறு வைத்து அரைத்த வெந்தயம் அரிந்த வெள்ளை வெங்காயம் சேர்த்துக் காய்ச்சிப் பதத்தில் இறக்கி வடிகட்டி காலை அல்லது இரவு படுக்கைக்குபோகுமுன்னராகிலும் ஓர் கரண்டி சாப்பிட்டு வர உடற்சூடு நீங்கும். உடல் பெருகும். மேகஅனல் மாறும்.



1 comment:

  1. கடுக்காய் பொடியை எந்தளவு சுடுதண்ணீரில் சேர்க்க வேண்டும்?

    ReplyDelete