எனை வெல்வதும் இல்லை ! இனி வெல்லப்போவதும் யாருமில்லை ! நான் உன்னை கர்ம மார்க்கத்தில் அழைத்து செல்லவில்லை ! ஞான மார்க்கத்தில் அழைத்து செல்ல வந்தேன் !
உன் மேல் குற்றம்
பூஜை, பக்தி, தியானம், தவம் எதுவுமே தேவை இல்லை. நீ பிறப்பது உன்னால் தான் ! பாவத்தின் தண்டனைக்காக இந்த சிறைச்சாலைக்கு அனுப்பப்படுகின்றாய். ஆனாலும் உனக்கு கடவுள் எல்லா வசதிகளையும் செய்து தந்தான் ! வீடு, வாசல், தோட்டம், தானியம், இன்பம் ! இவை எதிலும் திருப்தியடையாமல் துன்பத்தை தேடி செல்கின்றாய். மீண்டும் மீண்டும் பாவம் செய்து மீண்டும் மீண்டும் பிறக்கின்றாய், இறக்கின்றாய் இங்கு !
பெண் பூப்படைவது எப்போது இல்லையோ அன்றே இந்த யுகம் அழியும். என் தந்தையின் வேதம் இது !
நீ தான் பொய் ! உனை அழகாக வைப்பது உன் கடமை ! உன் எண்ணம் தான் உன்னை அழகாக வைக்கின்றது. கடவுள் இல்லை என்று சொல்கின்றாய் ! மனிதர்கள் எல்லாம் சுய நலம். இந்த உலகத்தை நரகம் எனக் கூறி புலம்புகின்றாய். இது பொய் உலகம் என்றால் இங்கே ஏன் இருக்கின்றாய் ! இது நரகமாக இருந்தாலும், சுபிட்ஷமாக வாழும் ரகசியம் இங்கு உள்ளது. முடிந்தால் கண்டுபிடி ! உணர் !
வெளியே குற்றம் சொல்லாதே ! சிறிது காலம் அடுத்தவர்களைப் பற்றி சிந்திப்பதை விட்டு விட்டு உன்னை பற்றி ஒரு ½ நாழிகை யோசி ! உலகம் உன் வசமாகும் ! உன் வாழ்க்கை உன் கர்மப்படி தான் நடக்கின்றது. யாரும் குறுக்கிடுவதில்லை. எல்லா கட்டத்திலும் என்னை கூப்பிடுவாய் என்று உன் பக்கத்திலே நிற்கின்றேன் !
உன்னை வழிபடுத்தி மீண்டும் பிறவா நிலை தருவதற்கு ! எனை எப்போது அழைத்தாலும் ஓடி வருவேன் உன் அருகில் !
உனக்கு வேண்டும் என்றால் மழை, வெயில் வேண்டும். உனக்கு வேண்டாமென்றால் ஏன் என்று வான் நோக்கி கூச்சலிடுகிறாய். நீ தான் சுயநலமாக இருக்கின்றாய். யாருக்கும் தெரியாமல் பாவம் செய்கின்றாய். யாருக்கும் தெரியாது என நீயே உனை சமாதானபடுத்துகின்றாய். உன் மனசாட்சியாக நான் இருக்கின்றேன். ஏன் மறக்கின்றாய் ? பாவம் நீ. நீ தான் பாவி ! நான் அல்ல !
நான் உனைத் தேடி அலைகின்றேன். நீ வெளியே எதை எதையோ தேடி அலைகின்றாய். ஏன் நிம்மதி தொலைத்தாய் ? நான் பூடகமாக உலாவுகின்றேன்.
எதையும் மன்னிக்க கற்றுக் கொள். நம்பிக்கையாக இரு ! ஆயிரம் புரவியின் வேகமும், ஆயிரம் யானையின் பலமும் தருவேன், உன் ஆண்மாவுக்கு. நான் கரை கடந்தவன். நீ கரையை கூட பார்க்காதவன். ஏதோ உலகம் உருண்டை என்று உன் விஞ்ஞானத்தில் உளர்கின்றாய்.
எனக்கு என்றும் அழிவில்லை. நான் உனக்குள்ளே இருக்கின்றேன் ! இன்று முதல் பிறரை குற்றம் சொல்லாதே ! இந்த உலகம் நல்லவன் கண்களுக்கு நல்லதாகவும், கெட்டவன் கண்களுக்கு கெட்டதாகவும் தெரியும். கண் பார்க்கும் தூரம் கால்வழி நடப்பாயோ ? (சூரியன், சந்திரன், நட்சத்திரம்) செல்ல முடியுமா ?
உன்னை உணர் ! நீ கண் பார்க்கும் தூரத்திற்கு அழைத்து செல்கின்றேன் !
உணர்ந்து பார் ! உண்மையாய் நான் ! உனக்கு தெளிவை, அழகை, பேரின்பத்தை (ஆண்மா) தருகின்றேன், நீ திகட்டும் வரை !
குற்றமற்றவன் நான் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment