பச்சைகுத்தூ வலியினொடு ஒவ்வொரு வடுக்களும்காலங்கள்
கடந்த நிலையிலும் வண்ணம் ஆழ பதிந்த நிழலைசொல்லிய விதம் மௌன இருப்பில் உணர்ந்த
தன்மையாய் மிக ஆழமா ய் உண்மைகளை உரத்து சொன்னது.....நர உடல் முழுதும் தடங்கள்
பதிந்தாலும் நாதன் உன் அன்பில் பயணிக்கிறேன்..... பிரம்ராஜன் என்றுஆசானன் என்றுகண் கண்ட தெய்வம் என்றுபோற்றுதலுக்குறிய
தாய் தந்தையரே போற்றுதலுக்கும் வணங்கு தற்கும் உறியவர் என்று உணர்த்திட்ட உத்தமனே....பொற்றோர்
வணக்கத்தில் உருகி மகிழும் தயாளனே....கொண்ட வாழ்கை கண்ட கடமையே உயர்வென உணர்த்திட்ட
சீராளனே...செதுக்க படும் கல்லில் கழிக்கப்படும் துகள்களில் வலியை உணர்த்திட்டகர்ம யோகியே....உளி
பட்ட இடத்தில் வலி தடம் தெரியாதுசிற்பத்தின் தன்மையை உணர்த்திட்ட பேரன்பே....எல்லையில்லா
மாயயைகளை விள(ல)க்கிவானமே வாழ்வதன் எல்லை பஞ்சபூதமேஉள் இருப்பின் நிலை என்று உணர்த்திட்டபர
பிரம்மமே....வந்த நோக்கம் வறையறுத்த வாஞ்சையே....உணர் திட்ட தன்மையால் தந்தாய் உன்
அன்பையே.... சிவகங்கை சீமை கண்ட வேலுநாச்சியார்களும் மருது சகோதரர்களின்எழுச்சியும் வீரமும்
எழுத்தில் கண்ட கண்கள் இன்றுஒட்டு மொத்த தமிழகமும் பரவிஅமைதியாக தன் வீரத்தை சொல்லி
கொண்டிருப்பது வியப்பில்லை.மரியாதை தெரிந்த மற தமிழர்கள் என்பதை மீண்டும் தமிழ் உணர்வாளன்
நிருபித்துள்ளான்.இனி இந்த தமிழ் உணர்வு கலப்பைகள் நம் தமிழ் மண்ணை உழுது உரப்படுத்தும்
நிச்சயம்."வீழ்வேன் என்று நினைத்தாயோ"என்று ஒவ்வொரு உணர்விலும் கேள்வி தகித்து
கொண்டிருக்கிறது.தமிழ் மண் செழுமை பூக்க விதைத்த அடையாளம்.தமிழ் நாடு தானிய கிடங்காக
ஆக போகிறது.இழந்த மரபை மீட்டெடுக்க போகிறது.ஆதி காலம் நோக்கி உலக வாழ்வு திரும்ப போகிறது.கண்கள்
வேர்க்க கடவுள் சொல்லிய வார்த்தைகளை எண்ணி ஆணந்திக்கிறேன். ஆண்ம நேசனேஆயர் மாயனேஆணந்த
தூயனேஆதியின் நாயகனே ஆட்சியில் நேயனேஆதாரத்தில் யாகவனே ஆர்பரிப்பில்லா எளியவனேஆசையில்லாது
மீண்டவனேஆழ் கடலின் அகண்டனேஆறின் நித்சலனனேஆசானாய் இருப்பவனேஆகாரம் தருபவனேஆகாயதின்
சஞ்சாரனேஆதித்ய ஔியோனேஆதார சுருதியோனே ஆசியில் உச்சனேஆச்சரியத்தை தருபவனே ஆத்மார்த்த
மான ஐய்யனேஇநன்யனே.... உம் கருணையால் அன்பால் தமிழ் செழித்தது.தமிழ் ஆழமாக அடையாளம்
கண்டது.தமிழன் என்ற அடையாளத்தால் தடம் பதித்தான் மீண்டும்.எல்லை கடந்த தொல்லைகளை எதிர்க்கும்
ஆற்றல் பெற்றான்.தழிகம் ஞான தேசமாய் உருவாக உருமாற வித்திட்ட பேரன்பே இநன்யத்தை பரப்பும்
ஞானக்கூட்டத்தின் தேறீ யாக உம் பிள்ளையை மாற்றி எமக்கும் அடையாளம் தந்த பேராளனே உம்
சத்திய சொல் கேட்க இப் பிறவி பூத்தமை பெரும் பேறு ஐய்யனே.தங்களின் வருகையின் தேர்வு
முகநூலி்ல் வழியே ஏன் என காரணமும் உணர்த்தப்பட்டது.அன்பின் தந்தையே...!!! உய்விக்க வந்த உத்தமரே...!! மெய்யான எம் தாயுமானவரே..!!தண்டனைக்காக
பெற பட்ட யுக வாழ்வை அர்த்தமானதாய் அடையாளத்துக்கு உரியதாய் மாற்றி அமைத்திட பேரன்போடு
அருகழைத்து அமிழ்த மொழியில் உண்மைகள் பல கூறி கண்மலரசெய்தனையே. பிரம்மத்தை உணர்வில்
ஊட்டி கர்மத்தை செதுக்க நீயும் செய்யும் சோதனைகள் காரண காரிய மாய்....!!!தாங்கி பிடிக்கவும்
உம் கரங்கள்...தட்டி கொடுக்கவும் உம் கரங்கள்...கொட்டி தட்டவும் உம் கரங்கள்...எதனை
நீ செய்தாலும் உன் சத்திய வழியில் நோக்கதினொடு எம்மை கரம் பிடித்து அழைத்து செல்லாது
விடுவதும் இல்லை. எது நடப்பினும் உம் அன்பினொடு அடைகாக்கும் எம் அன்னையே...உன்னில்
புசிக்கும் ஞானபால் செரிக்க எம்மை நீ கவனித்து கொள்ளும் ஆளுமைஅலாதியானது. உம்மை உம்
சுவாசத்தை உணர்ந்து முகந்து உம் மடியின் பிள்ளயைாய் ஆணந்தமாய் வளர்ந்து கொண்டுள்ளேன்.
இதுவும் உன் நிழலின் பரிணாமமே....இநன்ய யுகத்தின் பிள்ளை என்பதான அடையாளத்தோடு உம்மில்
கரைத்து கொள்ளுங்கள் அம்மை யே....அப்பனே...ஆசனே....அனந்தனே....ஆணந்தனே...!!!!!
****************************
No comments:
Post a Comment