யாகவா- எதை வணங்க வேண்டும், எது ஆன்மிகம்கண்ணிற்கு இரவு, பகல் தெரியும்உன் நாசிக்குத்தான் தெரியுமா?ஆன்மீகம், ஆன்மீகம் என்கிறாயேதரையும், தண்ணீரும், தாவரமும், உப்பும் ஒரு ஆன்மீகமே. சத்யம் இனிது, ஓர் போதும் சாகாதுநீ சுகத்தோடு வாழ சூழ்ச்சிகள் செய்யாதேமரணம் காத்திருக்கிறது மதம் என்று சொல்லாதேவிதி அளவு மதி சொல்லும்மதி அளவு விதி சொல்லும்உன் அளவு என் சொல்லு ம்? பாவாடை கட்டிய சாமியாரும்பகை கொண்ட கற்சிலையும்வணங்கி என் பலன் கண்டாய்?தவளை கத்தி னால் அதற்கு ஆபத்துபெருங்காற்று சீறினால் மரத்துக்கு ஆபத்துஆகாயம் சீறினால் மரத்துக்கு ஆபத்துதரை சீறினால் யாவருக்கும் ஆபத்துநீ சீறினால் உனக்கு ஆபத்துகாவி உடைக்காரணையும், காவடி எடுப்போனையும்நம்பினால் திருவோடுதான் கிடைக்கும்மரம் சுற்றினால் மனம் கிடைக்கும். தாய், தந்தை யரை நிற்க வைத்து வணங்கினால்பெருஞானம் கிடக்கும்தலைநோக்கி மேல் வளரபின் தலை சாய்த்து தலைகீழ் இறங்கநீயும் கதற, இவளும் கதறகை விரித்துதான் பிறந்து, வளர்ந்து, உழைத்து நீ பிறர்க்கு உதவா பின் பாடையிலே கைவிரித்துஎன் பலன் கண்டாய்?மண்பான்டமும், மனிதப்பிறவியும் ஒன்றேஉண்ணாத சாமிக்கு உணவும் தான் கொடுத்துஉணராது இருப்பவனேபல்லில்லாத சிலைக்கு பல்லாக்கு தேவைதானோ?நந்தவனம் உதவக் கண்டேன்நந்தி உதவக் கண்டாயோ?செய்த தர்மத்தை பிறர்க்கு சொல்லாதேசிந்திக்க தெரியாதவன் சோம்பேறிஉழைக்க தெரியாதவன் முன்டம்உதவத் தெரியாதவன் பிண்டம்கொக்கி உடலெடுத்து கொள்ளி மலைதான் ஏறிநீ கும்பிட்டு பலன் என்ன கண்டாய்? உண்பது எல்லாம் நல்லதுஉணராது இருப்பது நல்லதோ?புத்திமான் என்று பெயரெடுபக்தி மான் என்று பெயரெடுக்காதேசட்டிமீது சட்டி வைத்தேன்சாகும் நாளை எழுதி வைத்தேன்சாத்திரம் பார்த்து பலனென்ன கண்டாய்?வாழ்நாளில் உணராத ஜீவனை நீவாடியபின் உணர்ந்து பலன் என்ன கண்டாய்?
No comments:
Post a Comment