முப்பகை வெல்வாய் ! கடவுள் உன் நெஞ்சில் இருப்பதை அறிவாய் ! எப்போது உணர்வாயடா ?
உண்மை
குரம்பையில் நாற்றம் உண்டு ! குறை போக்க எதை அறிந்தாய் ? சத்தியம் தான் இங்கே உண்மை. நீ சத்தியத்தின் பாதையில் நடப்பதால் எல்லாம் கிடைக்கப் பெறுவாய் ! சத்தியத்தின் பாதையில் நடக்கும் போது தான் இன்பத்தை உணர்வாய் ! தர்மத்தின் வழி செல்லும் போது தான் எல்லாம் உணர்வாய் ! நீ உன் மனம் சொல் கேட்பதால் துன்பம் அடைகின்றாய்.
உன் மனம் தான் உன்னை தீர்மானிக்கின்றது. ஒருவன் சத்திய பாதையில் அடியெடுத்து வைக்கும் போது மிகுந்த சோதனையும் வலியும் உணர்கின்றான். ஆனால் சிறு சோதனைக்கு கடவுள் இல்லை என்று பிதற்றுகிறான். துன்பங்கள் உன்னை சாதிக்க நினைக்கும் தூண்டுகோல். முடிவில் பேரின்பம் தர காத்திருக்கிறது. அதனால் துன்பத்திலும் கடவுள் பாதம் இறுக பற்று !
மிகுந்த உஷ்ணம் மழைக்கு அறிகுறி. அதுபோல் துன்பத்திற்கு பின்னால் இன்பம் உண்டு. அதனால் கடவுள் துணையோடு எல்லா துன்பத்தையும் வெல்ல ஆயத்தமாகு ! எதுவும் உன்னை தீண்டாது நீ உண்மையாய் இருக்கும் போது ! சத்தியம் தவறாதே !
பிரார்த்தனை என்பது கூட இங்கே சுயநலம் தான். இங்கே அன்பே உயர்வு, அறிவு, உணர்வு ! அதனாலே அன்பை விதை ஆளமாக ! ஆள்வாய் உன்னை ! பின் ஆண்மா உனை ஆளும். கிரகஸ்தத்தில் சரணாகதி தத்தவமே விளக்கபட்டிருக்கின்றது. தொண்ணூற்றி ஆறு தத்துவத்தில் முதன்மையாக்கபட்டதும் இதுவே !
நான் நானல்ல என்று எப்போதும் உன்னில் விதை ! எல்லாவற்றையும் கடவுளின் பாதத்தில் சமர்ப்பித்துவிடு ! மன உளைச்சலுக்கு ஆளாகமாட்டாய் ! மனம் என்பது உன்னை உருக்குலைக்கும். உண்மையை மறைக்கும். எதையும் எளிதாக எடுத்துக் கொள். ஒரு புன்னகையோடு எப்போதும் வாழ கற்றுக் கொள்.
நான் நானல்ல என்று எப்போதும் உன்னில் விதை ! எல்லாவற்றையும் கடவுளின் பாதத்தில் சமர்ப்பித்துவிடு ! மன உளைச்சலுக்கு ஆளாகமாட்டாய் ! மனம் என்பது உன்னை உருக்குலைக்கும். உண்மையை மறைக்கும். எதையும் எளிதாக எடுத்துக் கொள். ஒரு புன்னகையோடு எப்போதும் வாழ கற்றுக் கொள்.
அன்பை தவிற கடவுளை நெருங்கும் வழி ஏதுமில்லை. நீ வேறு எதை செய்தாலும் கடவுளை நெருங்கமாட்டாய் ! உடலை வருத்தி மனதை வருத்தி எதையும் அடைய முடியாது. கடமையும், அன்பும் காலத்தின் சூட்சுமம். இதை அறிந்தவன் அடுத்த இலக்கை நோக்கி பயனிக்கின்றான் !
கடுங்குளிர் உன் எலும்பை தாக்குவது போல, நீ கடவுளிடம் விளைவித்த அன்பு, உன் எலும்பின் மஜ்ஜையில் கலக்கும், எலும்பில் உள்ள மஜ்ஜை உன்னை நோயில்லாமல் ஆணந்தமாக்கும் ! உன் ஊன் காற்றில் கலக்கும். பூமியில் வடிந்து மீண்டும் பிறக்க வழி செய்யாது.
உள்ளங்கை நெல்லிக்கனி அறிவாய் ! கன்னலில் கணிவு உண்டு ! உன் ஆக்கையில் நாற்றம் உண்டு !
உணரடா ! உன் உள்ளத்தை இனிதாக்கு !
கிருகிணியில் விப்புருதியானேன் என்று புலம்ப கண்டேன். முப்பகை நீக்காமல் முழுமதியாய் மாற நினைக்கின்றான். இங்கே தன்நிலை மறந்தவன் என் நிலை அறிவான் ! என்னை உணராதவன் எந்த நிலையையும் அடைய மாட்டான்.
என் சொல் உணர்ந்தவன், செயல் அறிந்தவன், சுகமாக வாழ்வான் !
நான் சொல்லும் சத்திய சொல் நிச்சயம் வெல்லும் ! உண்மை நானென்று உரக்க சொல்வேன் ! பொய்யன் தான் எனை தெரியாது புலம்புகின்றான். என்ன சொல்வேன் ? மூளையை படைத்தவன் மூளையை சரி செய்வான். இயந்திரத்தை படைத்தவனால் மட்டுமே இயந்திர பழுதை சரி செய்ய முடியும். ஆதலால் படைத்தவனிடம் உன்னை ஒப்புவித்து வாழ் !
அத்துகமானியாய் ஆள்கின்றேன் !
முத்துளம் போல் நீள்கின்றேன் !
சமீரணணாய் உன்னுள் இருக்கின்றேன் ! உண்மை நான் எனை உணராது அலைகின்றாயே ?
உன் வாயிலில் காத்திருக்கின்றேன், உனக்கு வேண்டியதை தருவதற்கு ! எப்போதும் விழி நிலையில் இரு ! தூங்கிவிடாதே !
உண்மை நானடா ! எப்போதும் நன்மை நானடா !
நானே சத்தியம் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment