யாகவா உரையாடல் ;;; மரங்கள் பல வேறுபட்டிருப்பினும், அவற்றின் எல்லைகள் பல வேறுபட்டிருப்பினும் , அவற்றின் மலர்கள் பல வேறுபட்டிருப்பினும், அவற்றின் நறுமணம் பல வேறுபட்டிருப்பினும் , அவற்றின் தேன் (நெக்டார்) ஒன்று தான். அதை தேனீ அறியும். இனம் பல வேறுபட்டிருப்பினும், முகம் பல வேறுபட்டிருப்பினும் , உடல் பல வேறுபட்டிருப்பினும் , அவற்றின் ஆத்துமா (சோல்) ஒன்று தான். அதை நான் என்கிற யாகவா அறிவேன்.
யாகவா உரையாடல் ;;; முகம் பார்க்கும் கண்ணாடி ;;; எனக்கு உன் போல் மேக்கப் போட தெரியாது. நான் கட்டிய கோட்டையில் முகம் பார்க்கும் கண்ணாடி கிடையாது.இவரிடம் உன் போல் தினம் தினம் மேக்கப் போட்டு உன் நிலையில்லா அழகை அழகு என சொல்ல செய்யும் நிலை கண்ணாடி கிடையாது .உழைப்பால் அழகிய நந்தவனத்தை உருவாக்கும் தோட்டக்காரனுக்கு ஏன் நிலை கண்ணாடி?அழகினை பயிர் செய்யும் தோட்டக்காரன் அழகாக மேக்கப் போட்டு கொண்டு பயிர் செய்வதில்லை .இவன் உழைப்பே இவனுக்கு அழகு .பொய் வேடதாரிகளுக்கோ ,பொய்யை பயிர் செய்ய பொய் வேடம் கண்ணாடி தேவைப்படுகிறது .உன் அறிவு என்னும் நிலையான அழகை பயிர் செய்ய சொல்லும் இவரை நீ எவ்வாறு காண்கிறாயோ ,அவ்வாறே உன் முன் தோன்றுகிறார். தர்மாக்களுக்கு தர்மாவாக, கர்மாக்
களுக்கு கர்மாவாக,பொய்யர்களுக்கு பொய்யர்களாக, சூழ்ச்சிக்காரர்களுக்கு சூழ்ச்சியாக, விடை காண யூகிப்பவர்களுக்கு ,விடை காணும் யூகிப்பாக இருக்கும்.இவரே உன் நிலை கண்ணாடி.உன் நிலை சரி என்றால்,என் நிலையும் சரியே .
யாகவா உரையாடல் ;;; எறும்பு கூடையில் இட்ட நண்டுகள் ;;; உன் சுமையை நீயே சுமப்பது தான் கடமை... யாகவா ;;; வாழ்க்கை சாரம்- புரிந்து கொள் மனிதா;;; அடிப்பட்ட எறும்பு ஒன்றை கையில் பிடித்து வைத்து பார்.அதன் குரல் கேட்டு உதவ பல எறும்புகள் வரும்.எறும்பினை போல வாழ நினை.எறும்பை விட சிறப்பாக காலத்தை அறிந்து இளமை காலத்தில் முதுமை காலத்திற்கு வேண்டிய பொருளை சம்பாதித்தல், சேமித்தல், பெருக்குதல், பாதுகாத்தல்,என இருந்தும், கண்டம் விட்டு கண்டம் பேசும் வசதி இருந்தும்,நீ ஏன் நிம்மதி காண வில்லை.ஒன்றன் பின் ஒன்றாக செல்லும் எறும்பினை பார்.அவை எப்போதும் தனக்கு முன் செல்லும் எறும்பினை முந்த என்னாது.தனக்கு பின் வரும் எறும்பை ஏளனமாக என்னாது.தன் சுமையை தானே சுமந்து கொண்டு,அதன் வேத நாதத்தை ரசித்து கொண்டே செயல் படுகின்றது.நீ உனக்கு மேலே செல்பவரிடம் போட்டி;பொறாமையும்,உனக்கு கீழே உள்ளவர்களிடம் ஏளனமும்,அதிகாரமும் செய்யாமல் இவரால் உனக்கு கிடைத்த ஆதி வேத நாத சொல்லை,சப்த நாதத்தை,ரசித்து கொண்டு உன் சுமையை நீ சுமந்து கொண்டு நிம்மதி காண யூகி,சிறந்த கூடையில் இருந்து வெளிவர முடியாதவாறு,ஒன்றை ஓன்று ,பின்னுக்கு இழுத்து தள்ளும் நண்டுகள் போல்,நீயோ மதம் என்னும் பொய் வேடதாரிகளால் பின்னப்பட்ட கூடையில் இருந்து வெளி வர முடியாமல் இருப்பது ஏனோ ? சிந்த்தித்து விடை கொள்.
யாகவா உரையாடல் ;;; மரச்சட்டம் ;;; கடவுளை தேட (கற்சிலையிலும் ,புகைப்படத்தில் ) வேண்டாம். கடவுளை உணர (அகத்திலும், ஆன்மாவிலும் ) வேண்டும். இறைவனும்,கடவுளும் குழந்தைகளாய் உன் இல்லறத்தில் காத்து நிற்க அவையர்க்கு நீ கொண்டு சென்ற பொருள் யாது?தித்திப்பு தான் வேண்டி குழந்தை ,தாயின் வருகைக்காக காலை நேரம் வாசலில் காத்து நின்றது.கடை வீதி சென்று வந்த தாய்,தன பையில் இருந்து எடுத்து வைக்கும் பொருட்களை ஆவலுடன் எதிர் பார்த்து நின்றது.எடுத்து வைத்த பொருள்கள்,எண்ணெய்,விளக்கு திரி,கற்பூரம்,விபூதி, மஞ்சள் ,குங்குமம்,.- குழந்தை இவை எல்லாம் எதற்க்காக என கேட்க தாய் கூறியது -இவை அனைத்தும் சாமிக்காக என .மாலை தந்தையின் வருகைக்காக காத்து நிற்க ,அவன் கொண்டு வந்த பையை,ஆவலுடன் பிரிக்க சென்ற போது,அவன் சொன்ன வார்த்தை தொடாதே அவை சாமிக்காக என.பையில் உள்ள பொருள்களோ ஊதுவத்தியும்,பூமாலையும் ,இருவரும் சேர்ந்து (தாய்,தந்தையும்)மரசட்டத்தில் அலங்கரிக்க பட்ட பொருளுக்கு ,அளக்காரமும்,ஆராதனையும் செய்ய தொடங்கினர்.இவர்கள் செயலால் மிகவும் ஏமாற்றம் அடைந்த தித்திப்பு தான் வேண்டி காத்திருந்த குழந்தை திகைத்தது. இக்குழந்தையை திகைக்க செய்த உன்னை நானும் திகைக்க செய்யாமல் விடுவேனா ?உன் மர சட்டத்தில் அடைப்பட்ட பொருள் அல்ல நான். என் நீர் சட்டத்தில் அடைப்பட்ட பொருள் நீ.நான்கு புறமும் நீர் வைத்து நடுவிலே உன்னை வைத்தேன்.
No comments:
Post a Comment