நான் சிருஷ்டி கர்த்தாவின் ஆண்மா ! நான் சத்யம் ! என் சொல் சத்யம் ! நான் பொய்யானவன் அல்ல. நான் மெய் !
அறிவு
அறிவு மட்டுமே உன் துன்பத்தை போக்கும் ! அறிவுக்கு வேலை கொடு ! ஆத்மத்தை அறிய முற்படு ! அறிவு எப்படி வரும் என்ற கேள்வி இங்கே நித்யம். ஆனால் செயல் வடிவம் சொல்ல திராணி இல்லை. பொருளை அறிய அறிவு தேவை இல்லை. உணர்வு இருந்தால் போதும். ஆனால் உன்னை அறிய அறிவு தேவை !
தினமும் ஏன் ? எதற்கு ? எப்படி ? என்று உன்னிடம் கேள்வி கேட்டு அறிவை அறிய விடை பெறு ! அறிவு வளத்தை பெறுக்க தினமும் பயிற்சி செய் !
அறிவு துன்பத்தை போக்கும் சக்தி கொண்டது. அறிவை வளர்த்தால் எதையும் புரிந்து கொள்ள முடியும். புரிந்தால் தெளிவு வரும். தெளிந்தால் உன்னை யாரென்று ஒரு விநாடியில் உணர்ந்து கொள்ளலாம். ஆதலால் குருவின் பேச்சை தினமும் கேள். நல்குருவை அடைந்து உன்னை அறிய முற்படு.
நீ வேண்டினால் கடவுள் உடனே உன் துன்பத்தை தீர்க்கமாட்டான். உன்னை தேடும் பொழுது தான் கடவுள் உன் துன்பத்தை துடைக்க தயாராக உன்னில் வருகின்றான். பின் உன் ஆண்மா விழிப்படைந்து உன் இலக்கு, வழி காண்பிக்கும் !
படைப்பில் மனிதர்களுக்கு மட்டுமே பாவ, கர்ம, இன்பம், துன்பம் உண்டு ! எல்லாம் மறை பொருள். எல்லாம் ரகசியம் ! ஆனால் உனக்கு தெரிய வேண்டிய ரகசியத்தை உடைக்க உன்னால் மட்டுமே முடியும் ! நீ தேடினால் நான் உனை அறிய வைப்பேன். தெளிந்தால் உன்னை யாரென்று உணரலாம். இங்கே யாரும் எதையும் புரிந்து கொள்ளாததால் தான் துன்பம் அடைகின்றனர்.
கோடி கணக்கில் கடன் வாங்கி, மனம் நொந்து, கடவுளை நோக்கி கதறுகின்றான் மனிதன். கடவுள் தன்னை கைவிட்டதாக புலம்புகிறான். வாழ்வை முடிக்கின்றான். அட மூடனே, உன் ஆசை தானடா உன் துன்பத்திற்கு காரணம். நான் இல்லையடா ! உப்பை அளவாக சேர்த்து உண்ணும் மானிடா, தன் குடும்பம், குழந்தை, கடமை மறந்து கோழைத்தனமாக இறப்பதற்கு கடவுள் எப்படி பொறுப்பாக முடியும் ? வீரியம் கொண்டு எழுந்து அதை தீர்க்க போராடாமல் கடவுளை நிந்திக்காதே !
என்னிடம் வழி கேள். வழி சொல்வேன். என் நாமம் பாவம் கரைக்கும் நிச்சயமாக ! போராட்டம் தான் வாழ்க்கை. போராடித் தான் எதையும் பெற முடியும். என்னையும் அழைத்துப் பார் ! உன் போராட்டத்தில் உனக்கு துணை இருப்பேன் வெல்வதற்கு !
இங்கே இறப்பது மிக எளிது. இங்கே வாழ்ந்து சாதிப்பது தான் மிக மிக கஷ்டம். துன்பத்தில் துவண்டு போகாதே ! நீ ஒரு பொம்மை. தற்கொலை என்பது கோழைத்தனம். மிருகங்கள், பறவைகள் தற்கொலை செய்வதில்லை. இந்த பாழ்பட்ட மனிதன் தான் தனக்கு எல்லாம் தெரியும் என்று பிதற்றி அறியாமையில் வாழ்கின்றான். காட்டில் மிருகங்கள் மிக மிக வறுமையில் நீர் இல்லாமல் வாடும் போது கூட தற்கொலை செய்வதில்லை. தொலைவில் நீரைத் தேடி அலைந்து சென்று தன் உடலை வருத்தி வாழ்கின்றன. மிருகங்களுக்கு இருக்கும் அறிவு கூட இந்த அற்ப மனிதனுக்கு இல்லையே ? ஏன் ? உணர் !
கடமையை செய்யாமல் தப்பிக்க நினைக்கின்றான் மனிதன். தற்கொலை எண்ணம் கொள்ளாதே ! நினைத்தாலே பதினாறு பிறவி பிறப்பாய். ஆதலால் வீரியம் கொண்டு எப்போதும் வாழ நினை. வீரனாய் வாழ். கோழையாக சாகாதே ! உன் இதய துடிப்பு கருவறையில் பதினாறாம் நாள் தொடங்குகிறது. அதனால் தான் பதினாறின் சூட்சுமத்தை மேன்மைபடுத்தினான். இறந்தால் பதினாறாம் நாள் திதி என்று வணங்குகிறான். பதினாறு செல்வம், பதினாறு நிலை என்று !
இது மேலிருந்து கீழ் வரும் எண் ! உணர் !
எல்லாம் உனக்கு தெரியும், நீ உணர்ந்தால் நான் உனக்கு விளம்ப வேண்டியதில்லை. சிந்திக்க சிந்திக்க தான் தெளிவு வரும். இதை உணர்ந்தால் உனக்கு துன்பமில்லை. மனிதர்களுக்கு மட்டுமே சிந்திக்கும் திறன் உண்டு ! செயல் தான் அறிவை தரும். ஆகவே செயல்பட்டு கொண்டே இரு ! நீ இங்கே வந்த நோக்கம் உண்பதற்கும், உறங்குவதற்கும் அல்ல. உன் அறிவை தெளிவாக்கி மீண்டும் பிறவி இல்லா பேரின்ப வாழ்விற்காக !
அறிவு, தெளிவு, சிந்தித்தல் உனை இன்பமாக்கும். செயல் இல்லாத அறிவு எந்த நன்மையும் தராது. ஆகவே தூங்கிவிடாதே ! விழித்திரு !
அறிவுள்ளவன் என்னை நிந்திக்கமாட்டான். தன் துன்பத்திற்கு தான் காரணம் என்று நினைப்பான். என் நாமம் பாவம் கரைக்கும். அறிவுள்ளவன் என் சொல் கேட்பான். என் செயல் அறிவான். என் எழுத்தை யோசிப்பான். புரியாததை எல்லாம் பொய் என்று சொன்னால் நீ புத்திசாலி அல்ல. அறிவது தான் புத்திசாலிதனம். ஏன் ? எதற்கு என்று யோசிப்பது தான் புத்திசாலிதனம்.
உன் செயல் இன்று தொடங்கட்டும். அதோடு உன் கடமையும் மறவாதே ! காலம் உனக்கு எப்போதும் துணை நிற்கும் !
என் நெஞ்சார்ந்த அன்பின் ஆசிகள் !
செயல் நான் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment