Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, February 22, 2017

நான் சிருஷ்டி கர்த்தாவின் ஆண்மா ! நான் சத்யம் ! என் சொல் சத்யம் ! நான் பொய்யானவன் அல்ல. நான் மெய் !


நான் சிருஷ்டி கர்த்தாவின் ஆண்மா ! நான் சத்யம் ! என் சொல் சத்யம் ! நான் பொய்யானவன் அல்ல. நான் மெய் !
அறிவு
அறிவு மட்டுமே உன் துன்பத்தை போக்கும் ! அறிவுக்கு வேலை கொடு ! ஆத்மத்தை அறிய முற்படு ! அறிவு எப்படி வரும் என்ற கேள்வி இங்கே நித்யம். ஆனால் செயல் வடிவம் சொல்ல திராணி இல்லை. பொருளை அறிய அறிவு தேவை இல்லை. உணர்வு இருந்தால் போதும். ஆனால் உன்னை அறிய அறிவு தேவை !
தினமும் ஏன் ? எதற்கு ? எப்படி ? என்று உன்னிடம் கேள்வி கேட்டு அறிவை அறிய விடை பெறு ! அறிவு வளத்தை பெறுக்க தினமும் பயிற்சி செய் !
அறிவு துன்பத்தை போக்கும் சக்தி கொண்டது. அறிவை வளர்த்தால் எதையும் புரிந்து கொள்ள முடியும். புரிந்தால் தெளிவு வரும். தெளிந்தால் உன்னை யாரென்று ஒரு விநாடியில் உணர்ந்து கொள்ளலாம். ஆதலால் குருவின் பேச்சை தினமும் கேள். நல்குருவை அடைந்து உன்னை அறிய முற்படு.
நீ வேண்டினால் கடவுள் உடனே உன் துன்பத்தை தீர்க்கமாட்டான். உன்னை தேடும் பொழுது தான் கடவுள் உன் துன்பத்தை துடைக்க தயாராக உன்னில் வருகின்றான். பின் உன் ஆண்மா விழிப்படைந்து உன் இலக்கு, வழி காண்பிக்கும் !
படைப்பில் மனிதர்களுக்கு மட்டுமே பாவ, கர்ம, இன்பம், துன்பம் உண்டு ! எல்லாம் மறை பொருள். எல்லாம் ரகசியம் ! ஆனால் உனக்கு தெரிய வேண்டிய ரகசியத்தை உடைக்க உன்னால் மட்டுமே முடியும் ! நீ தேடினால் நான் உனை அறிய வைப்பேன். தெளிந்தால் உன்னை யாரென்று உணரலாம். இங்கே யாரும் எதையும் புரிந்து கொள்ளாததால் தான் துன்பம் அடைகின்றனர்.

கோடி கணக்கில் கடன் வாங்கி, மனம் நொந்து, கடவுளை நோக்கி கதறுகின்றான் மனிதன். கடவுள் தன்னை கைவிட்டதாக புலம்புகிறான். வாழ்வை முடிக்கின்றான். அட மூடனே, உன் ஆசை தானடா உன் துன்பத்திற்கு காரணம். நான் இல்லையடா ! உப்பை அளவாக சேர்த்து உண்ணும் மானிடா, தன் குடும்பம், குழந்தை, கடமை மறந்து கோழைத்தனமாக இறப்பதற்கு கடவுள் எப்படி பொறுப்பாக முடியும் ? வீரியம் கொண்டு எழுந்து அதை தீர்க்க போராடாமல் கடவுளை நிந்திக்காதே !
என்னிடம் வழி கேள். வழி சொல்வேன். என் நாமம் பாவம் கரைக்கும் நிச்சயமாக ! போராட்டம் தான் வாழ்க்கை. போராடித் தான் எதையும் பெற முடியும். என்னையும் அழைத்துப் பார் ! உன் போராட்டத்தில் உனக்கு துணை இருப்பேன் வெல்வதற்கு !
இங்கே இறப்பது மிக எளிது. இங்கே வாழ்ந்து சாதிப்பது தான் மிக மிக கஷ்டம். துன்பத்தில் துவண்டு போகாதே ! நீ ஒரு பொம்மை. தற்கொலை என்பது கோழைத்தனம். மிருகங்கள், பறவைகள் தற்கொலை செய்வதில்லை. இந்த பாழ்பட்ட மனிதன் தான் தனக்கு எல்லாம் தெரியும் என்று பிதற்றி அறியாமையில் வாழ்கின்றான். காட்டில் மிருகங்கள் மிக மிக வறுமையில் நீர் இல்லாமல் வாடும் போது கூட தற்கொலை செய்வதில்லை. தொலைவில் நீரைத் தேடி அலைந்து சென்று தன் உடலை வருத்தி வாழ்கின்றன. மிருகங்களுக்கு இருக்கும் அறிவு கூட இந்த அற்ப மனிதனுக்கு இல்லையே ? ஏன் ? உணர் !
கடமையை செய்யாமல் தப்பிக்க நினைக்கின்றான் மனிதன். தற்கொலை எண்ணம் கொள்ளாதே ! நினைத்தாலே பதினாறு பிறவி பிறப்பாய். ஆதலால் வீரியம் கொண்டு எப்போதும் வாழ நினை. வீரனாய் வாழ். கோழையாக சாகாதே ! உன் இதய துடிப்பு கருவறையில் பதினாறாம் நாள் தொடங்குகிறது. அதனால் தான் பதினாறின் சூட்சுமத்தை மேன்மைபடுத்தினான். இறந்தால் பதினாறாம் நாள் திதி என்று வணங்குகிறான். பதினாறு செல்வம், பதினாறு நிலை என்று !
இது மேலிருந்து கீழ் வரும் எண் ! உணர் !
எல்லாம் உனக்கு தெரியும், நீ உணர்ந்தால் நான் உனக்கு விளம்ப வேண்டியதில்லை. சிந்திக்க சிந்திக்க தான் தெளிவு வரும். இதை உணர்ந்தால் உனக்கு துன்பமில்லை. மனிதர்களுக்கு மட்டுமே சிந்திக்கும் திறன் உண்டு ! செயல் தான் அறிவை தரும். ஆகவே செயல்பட்டு கொண்டே இரு ! நீ இங்கே வந்த நோக்கம் உண்பதற்கும், உறங்குவதற்கும் அல்ல. உன் அறிவை தெளிவாக்கி மீண்டும் பிறவி இல்லா பேரின்ப வாழ்விற்காக !
அறிவு, தெளிவு, சிந்தித்தல் உனை இன்பமாக்கும். செயல் இல்லாத அறிவு எந்த நன்மையும் தராது. ஆகவே தூங்கிவிடாதே ! விழித்திரு !
அறிவுள்ளவன் என்னை நிந்திக்கமாட்டான். தன் துன்பத்திற்கு தான் காரணம் என்று நினைப்பான். என் நாமம் பாவம் கரைக்கும். அறிவுள்ளவன் என் சொல் கேட்பான். என் செயல் அறிவான். என் எழுத்தை யோசிப்பான். புரியாததை எல்லாம் பொய் என்று சொன்னால் நீ புத்திசாலி அல்ல. அறிவது தான் புத்திசாலிதனம். ஏன் ? எதற்கு என்று யோசிப்பது தான் புத்திசாலிதனம்.
உன் செயல் இன்று தொடங்கட்டும். அதோடு உன் கடமையும் மறவாதே ! காலம் உனக்கு எப்போதும் துணை நிற்கும் !
என் நெஞ்சார்ந்த அன்பின் ஆசிகள் !
செயல் நான் !
நான் இநன்யா !

No comments:

Post a Comment