Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, February 15, 2017

குழிமிட்டானில் குறை ஒன்றும் இல்லை. குறை எல்லாம் உனக்குள் தான் ! இராக்கினி போல் வாழ்வு வரும். உபராசனை போல மேன்மை வரும். என் நாமம் சத்தியமே !

குழிமிட்டானில் குறை ஒன்றும் இல்லை. குறை எல்லாம் உனக்குள் தான் ! இராக்கினி போல் வாழ்வு வரும். உபராசனை போல மேன்மை வரும். என் நாமம் சத்தியமே !
எப்போதும் விலகாதே !
உன்னில் இருந்து விலகாதே ! மேலிருந்து வரும் மெல்லிய நரம்பிலையை விட்டு விலகி விடாதே ! கடவுளின் உறவை விட்டு விலகி போகாதே ! உன் குடும்பம், பந்தம் மட்டுமே இன்பம் என்று நினைத்துவிடாதே ! என் இனியவர் படைப்பின் மூலத்தை மறந்துவிடாதே !
எல்லா உயிரினமும், படைப்பும் கடவுளின் உறவை மறப்பதில்லை. கடவுளுக்கும், உயிருக்கும் இடையில் இருக்கும் மெல்லிய நரம்பிலையை மறப்பதில்லை. மனிதன் தான் மறக்கின்றான்.
கருவறையில் கடவுளின் உறவோடு பினைந்து வாழ்ந்தாய். இன்பம் பேரின்பமாக நீயே ராஜன் என்று இறுமாந்து துள்ளிக் குதித்தாய். கடவுளோடு ஒரு நாள் மிக மகிழ்ச்சியில் ஆனந்த துள்ளலோடு உழண்டு வாழ்ந்தாய். மேல் லோக கணக்குபடி உனக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள்.
பந்த பாசம், கனவுகள் இல்லாமல் வாழ்ந்தவனே, யுகத்தில் பிறந்தவுடன் எங்களை மறந்து தோற்று போனாயடா ! மறவாதே ! விலகாதே ! கடவுளின் அன்பே பேரன்பு !
இருக்கும் நாளெல்லாம் இறை (பூமி) நினைவோடு கடவுளிடம் ஐக்கியமாக இரு ! எப்போதும் நிலையான இன்பம் தரும் சத்யமாக !
பீலிகை மறப்பதில்லை. ஆலிகை மனதில் உள்ளவன் இறுமாந்து மறந்து அலைகின்றான். இன்பம் தனக்குள் இருப்பதை மறந்து எங்கெங்கோ ஓடி திரிகின்றான். கடல் அலை கரை தாண்டி வராமல் இருப்பது மாயத் திரை. உன்னிலும் ஒரு மாய திரை உள்ளது. அதை விலக்க யாருக்கும் திராணி இல்லை. அத்துகமானி இருக்கும் இடத்தில் ஆளுமை அதிகம் உண்டு. பூகம்பம், வெள்ளம் தாக்குவதில்லை. இனி அத்துகமானி இருக்கும் இடத்தில் மனிதன் குடியேறுவான்.
படைத்தவை எல்லாம் எல்லை மீறுவதில்லை. பாழ்பட்ட மனிதன் எல்லை மீறுகின்றான். இரண்டாயிரம் வருடத்திற்குள்ளாக மதத்தை உருவாக்கி மனிதம் தொலைத்து அலைகின்றான்.
இமைபொழுதில் யுகம் மாறும் ! நீ வழிபடும் இடங்கள் எல்லாம் இனி இடுகாடுகளாக மாறும். எறும்பு கடிக்க தாளாத உடல் வைத்து கொண்டு என் மதம் பெரிது என்று மார்தட்டுகின்றான். கடவுள் பொது உடமை ! மதமில்லா உப்பை உண்டு உண்மை தெரியாமல் புலம்புகின்றான்.
வாராகரம் சென்று வாழ்வை இழக்கின்றான். தாயின் உறவின் ஆழம் கடவுளின் மேன்மை. தாய் அன்பை விட பூமியில் ஏதுமில்லை. அதை விட மேலான அன்பு கடவுளிடம். உன்னை ஒப்புவித்து பார். உண்மை புரியும். அன்பு எல்லாம் சாதிக்கும். இங்ஙனம் நிம்மதி காண அன்பு கொள். எல்லோரிடமும் அன்பை விதை !
நெருஞ்சியில் கூர் உண்டு. ஆனாலும் அதன் மகத்துவம் அளவிடற்கரியது. கடவுளோடு பயணம் இரயில் தண்டவாளம் போன்றது ! கொஞ்சம் விலகினாலும் துன்பம் துரத்தும். மனம் பாரமாகும். சம்மட்டியால் தலையில் அடிக்கின்றதை போல மாய தோற்றம் உருவாகும். ஆதலால் கடவுளைவிட்டு எப்போதும் விலகாதே ! கடவுளின் அன்பில் திளைத்து ஆனந்தம் கொள் ! பின் உன்னை வென்றுவிடு ! சொல்லில் உண்மை வை !
ஒழுகுமாடத்தில் நவ துவாரங்கள் ! அதில் ஓடி பிடிக்கும் உயிர் ஒன்று வைத்து உனை கண்காணிக்கின்றான் உள்ளிருந்து. உண்மை தெரியாமல் ஊமையாய் திரிகின்றாய். மறுத்தும், எதிர்த்தும் கடவுளை பற்றி பேசி காலத்தை வீணாக்குகின்றான். விதிர்த்து போய் வீழ்கின்றான்.
கடவுளின் அன்பை தக்க வைக்க தரணியில் எவருக்கும் துணிவில்லை. ஒரு சிறு மாத்திரை துன்பத்தில் துவண்டு போகின்றான். பந்தபாசத்தில் எப்போதும் விலகி நில் ! மெல்லிய மயிற்பீலி உடலை வருடுவது போல கடவுளை நெருங்கு !
நான் மழைக்கும், புயலுக்கும், இடி மின்னலுக்கும், எதற்கும் அஞ்சாதவன். நீயும் எதற்கும் அஞ்சாதே ! ஏனென்றால் உன் விரல் பிடித்து நிற்பது நானல்லவோ ! நான் உன் நெஞ்சில் இருப்பதை மறவாதே !
இடையூறுகளும், துன்பங்களும் கடவுளை ஏறெடுப்பதற்காகவே ! ஆதலால் எப்போதும் ஆணந்தமாக இரு ! ஆளுமை உள்ளவன் நான் ! உன்னை எப்போதும் கண்கானிக்கின்றேன். நான் உன்னைவிட்டு எப்போதும் விலகமாட்டேன். ஒர்மையில் சொல்கிறேன் சத்தியமாக !
நீ வெல்வாய் ! என் ஆசிகள் !
நான் இநன்யா !

No comments:

Post a Comment