யாகவா உரையாடல் ;;; சட்டி மீது சட்டி வைத்து நான் உன்னை வேக வைத்தேன் ; நீயோ சட்டிக்குள் எதையும் போடாமல்,சட்டி மீது (நெற்றியின் மீது)பட்டை போடுகின்றாய்.நாமம் போடுகின்றாய்.நெற்றியில் திருநீறு அணிந்தால் செல்வம் என்கின்றாய்.அப்படியானால் அத்திருநீரை அமெரிக்காவுக்கும் ,ஜப்பானுக்கும் ஏற்றுமதி செய்ய வேண்டியது தானே.நெற்றியில் திருநீறு அணிவது என்றேனும் ஓர் நாள் சாம்பலாக போகிறேன் என்பதனை காட்ட என்கிறாய்.அப்படியானால் உனக்கு உயிராய் பழகியவரின் மரணத்திற்கு சென்று ஏன் அழுகிறாய்.அதற்க்கு பதிலாக இறந்தவரின் ஒரு பிடி சாம்பலை வாங்கி வரலாம் தானே பிடி சாம்பலையும் சீ சீ ,என்பாரை தான் நான் கண்டேன்.பின் ஏன் எதற்கு இந்த பொய் வேடம்.என சிந்திக்காமல்,பொய்யான வேடத்திற்கு,பொய்யான பல காரணங்களை ,அவன் சொன்னான்,இவன் சொன்னான் என்கிறாய்.நீ என்ன சொல்கிறாய்.உயிர் மதம் தான் கொள்ளா,உடல் மதம் தான் கொள்ள செய்யும் உனக்கு தாடி,குடுமி,தொப்பி,போன்ற வேடங்கள்.தேவை தானா என்பதனை உனக்குள் போட்டு (சட்டிக்குள்)சிந்தி .தழைத்த மரம் நிழலுக்காவது உதவ கண்டேன்.உன் தாடியும் குடுமியும் எதற்கடா உதவுகிறது.
யாகவா உரையாடல் ;;; யாமிருக்க பயமேன் ;;; என்றான். பாவம் செய்துவிட்டு பாலபிஷேகம் செய்தால் மன்னிப்பு கிடையாது
;;; யாமிருக்க பயமேன் என கூறும் சாமி படத்தினை வணங்கிய பக்த்தன் ஒருவன்.ஒரு நாள் குடும்பத்துடன் கோவில் குளங்களுக்கு செல்ல புறப்படும் முன்,அப்படத்தை பார்த்து வேண்டி வணங்கினான்.அப்படத்தில் வேலுடன் இருந்த சாமியோ யாமிருக்க பயமேன் என்றான்,பின் பக்த்தன் நம்பிக்கையுடன் வீட்டை பூட்டி சென்றான்.அன்று வீட்டின் பூட்டை உடைத்து கொண்டு திருடன் ஒருவன் பயத்துடன் நுழைய,வீட்டில் மாட்டப்பட்ட சாமி படத்தில் உள்ளவனோ,திருடனுக்கும் யாமிருக்க பயமேன் என்றான்.திருடன் அங்குள்ள பணம்,நகை திருடிய பின் படத்தில் உள்ளவனை வணங்கி சென்றான்.கோவில்களுக்கு சென்று வழி பட்டு வீடு திரும்பிய பக்த்தன் திக்கற்று, ஏமாந்து, தெளிவு பெற்றபின் படத்தில் உள்ள சாமியை பார்த்து எண்ணினான்.யாமிருக்க பயமேன் என்பது கள்வனுக்கா ,அல்லது தனக்காகவா என்று,நீ வணங்கும் பொருள் யாருக்கு உதவுகிறது தர்மாக்களுக்கா, கர்மாக்களுக்கா சிந்தி.திருடன் திருட்டுக்கு உதவிய சாமி சிலைக்கு பாலாபிஷேகம் செய்தான்.பணத்தை பறி கொடுத்த ஏமாளி பக்த்தன் அதனை வணங்கி ஏமாந்தான்.நீ பாவத்தை செய்து விட்டு பாலாபிஷேகம் செய்து தப்பிக்கலாம் என்று எண்ணாதே.
யாகவா உரையாடல் ;;; கால்வாய் வழி வந்தவன் ;;; தர்மம் செய்தவன் உயர் ஜாதி , கர்மா செய்தவன் கீழ் ஜாதி (வேறு ஜாதி இல்லை ) யுகத்தில் யாவரும் "பிரம்ம கோத்திரம்" ! ஆகா நீரிலே உதயமாகி கழிவு நீர் பாதையிலே கால்வாய் வழி வந்தவன் தானே நீ.உதவாத நீரிலே உருவெடுத்து,கழிவு நீர் பாதையிலே கால்களுக்கு இடைப்பட்ட வாய்வழிவந்தவன் தானே நீ .(கைபர், போலன்கால்வாய் வழி வந்தவன்) வந்த வழி தான் மறைத்து,நான் பிரம்மனுக்கு வாயில் இருந்து பிறந்தவன் உயர் ஜாதி என்றும்,பிறரை இடையில் இருந்து பிறந்தவன் இடை ஜாதி என்றும் ,காலில் இருந்து பிறந்தவன் கடை ஜாதி என்றும் கூறி என் குலத்தவரை ஏமாற்றுகிறான்.தர்மத்தை செய்பவன் உயர்ந்த ஜாதி லோகத்திற்கு உரியவன்.கர்மத்தை செய்பவன் தாழ்ந்த ஜாதி,பின் மீண்டும் யுகம் அடைகின்றான்.எக்குலத்தில் பிறந்தாலும், தர்மா எனும் நற்குணம் கொண்டோரே உயர்ந்த குலம் ஆவார்.அவரே யாகவாவின் சப்த நாதத்தின் வழி நடப்பவர்.இவரது நாதம் என்பது தர்மத்தின் நாதம்.தர்மத்தின் கீதம்,தர்மம் எனும் பிரம்மத்தினை அறியும் உன் அறிவு,பிரம்மம் என்பது உன் உயிருக்கு தந்தையை அறியும் உன் அறிவு.எக்குலத்தில் பிறந்தாலும் இவர் வழி நடப்போர் பிரம்ம கோத்திரம் ஆவார்,உன்னை பார்த்து எவரேனும் உன் கோத்திரம் எது என்று கேட்டால் தைரியமாக சொல்லுடா நான் பிரம்ம கோத்திரம் என்று.
யாகவா உரையாடல் ;;; பயப்படாதே ;;; எரிவதை பிடுங்கி விட்டேன்.கொதிப்பது தானாக அடங்கி விடும்.பக்கத்து வீடு தீ பிடித்து எரிந்தால், உன் வீட்டில் அணல் அடிக்க தானே செய்யும்.இவர் 02 -01 -1986 க்கு முன் பூமியில் தர்மாக்களை பயமுறுத்தி கொண்டிருந்த மந்திரம்,பில்லி,ஏவல், சூன்னியம், ஆகியனவற்றை ஏவி மன்னரையும்,மக்களையும், கொதிக்க செய்த அசுரன்,அரக்கன்,தடாயன்,அவரது துணைவிகள் 21 பேரையும் அழித்து, முப்பது முக்கோடி தேவர்களையும் விடு வித்து 11 -11 -1993 காலை 1 -54 மணிக்கு 111 காலமும் வென்றார். யாகவா கர்மத்தின் மூல காரணத்தினை பிடுங்கி விட்ட படியால் ,இனி நீ அதன் முண்டத்தினை கண்டு பயப்படாதே.கர்மாக்களின் வேள்வி தீயில் விழுந்து பலர் எரிந்து கொண்டு இருக்க அதன் அருகில் நீ செல்வாயானால் அணல் அடிக்க தானே செய்யும்.இவையில் இருந்து தப்பிக்க நீ ஒரு சொம்பில் நீர் வைத்து வணங்கி யாகவாவின் ஆதி வேதத்தை படித்து உன் சப்தத்தை அந்த நீரில் பதிவு செய்து பின் அந்த நீரை உட் கொண்டு சுகம் காண யூகி .பயப்படாதே.நீ போடா நான் பார்த்து கொள்கிறேன் .
சத்யம் சாந்தி ப்ரண்ணம் , சாந்தி சத்யம். ப்ரண்ணம் ,வாசி வசியந்தம் வசியந்தஹா
No comments:
Post a Comment