யாகவா உரையாடல் ;;; இவன் செயல் நான் அறிவேன் ;;; நீ யார் என அறியவே - ஓடு ஏந்தி யாசித்தேன்.உன்னை கண்டேன் ! என்னை நீ கண்டுபிடித்தாயா ? நான் உண்ணுகின்ற காலத்தில் ஒரு பயலும் உண்ண கொடுக்க வில்லை.நான் உண்ணா காலத்தில் பழங்களை தருகின்றான். இவனை சோதிக்க ஓடு ஏந்தி பசி என்று இவன் முன் நின்ற போது கொடுக்க வில்லை. சோதித்து முடித்து விட்ட பின் உட்க்கார்ந்து இருக்கும் போது பழங்கள் தருகின்றான்.நான் கொடுக்கின்ற காலத்தில் இவன் வர வில்லை.என்னிடம் வாங்கி வளர்ந்த இவனோ,வளர்ந்த பின் ,நான் யார் தெரியுமா என்று என்னிடமே கேட்க்கிறான்.பசு என்னும் தர்மாவிடம் பால் கறந்து ,அதனை பாம்பு என்னும் கர்மாவிடம் காட்டுகிறான்.ஒரு மூட்டை தானியத்தை நூறு மூட்டையாக கரை சேர்க்கும் உழவனின் உழைப்பை பார்க்காத இவன்,நவ தானியங்களை நெருப்பில் போட்டு எரிக்க ,பசுவின் உத்திர நெய்யை பயன் படுத்தி யாகம் வளர்ப்பவனுக்கு மண்டியிடுகின்றான்.இரு நூறு ஆண்டுகளுக்கு முன் கூட சற்று அறிவோடு வாழ்ந்தான். காலை நேரம் உழவனை போல் தொழில் தொடங்கும் முன் (உதயம்)சூரியன் உதயமாகும் திசையான கிழக்கு திசையை வணங்கினான் .தற்போது கூத்தாடி வணங்கிய (அஸ்தமம்) ஒளி மறையும் திசையான மேற்கு திசையை வணங்குகிறான்.கூத்தாடி மட்டுமே தொழில் தொடங்கும் முன் மேற்கு திசையை நோக்கி வணங்கினான்.இத்தனையும் அறிந்த நான்இவனை பாசமாக பார்த்தால்,இவன் என்னை பகையாக பார்க்கிறான்.எனவே இவன் செயல் அறிந்த நான்,இவனை உள்ளே வர விடாமல் கதவை பூட்டு போட போகிறேன்.நீ யார் என எனக்கு தெரியும்,நான் யார் என கண்டு பிடி.
யாகவா உரையாடல் ;;; உதவி செய் ; உதவி செய்து மற ;;; என்னிடம் வர வழி காட்டு . நீ அழைத்து வராதே.உன் சுமையை நீ சுமை . அவன் சுமையை அவன் சுமக்கட்டும். யாரையும் இங்கு கூட்டி கொண்டு வராதே, யாருக்கும் நீ ஜாமீன் கை எழுத்து போடாதே, நான் கொடுக்கும் காசை வெளியில் இருக்கும் பிச்சக்காரனிடம் கொடுத்து விடாதே.நீ பிறர் வாங்கும் கடனுக்கு உத்திரவாத கையெழுத்து போடுவாயானால்,அவன் அக்கடனை செலுத்த தவறினால், அக்கடன் உன்னுடைய சுமையாகி விடும்.நீ பெறா க்கடனை அடைக்க வேண்டியதாகி இருக்கும்.அது போல நீயாக இங்கு யாரையும் கூப்பிட்டு கொண்டு வந்தால் ,அவனிடமிருந்து இறக்கப்படும் சுமையை உன் மீது வைக்க வேண்டி வரும்.அவன் சுமை எவ்வளவு என்பதனை அறியா நீ ,அதனை சுமக்க வேண்டி வரும் .அவனுக்கு வழி சொல்.அழைத்து கொண்டு வராதே.உழவன் ஒரு போதும் விதைக்கு என உள்ள நெல்லை வீண் செய்ய மாட்டான்.இவர் உனக்கு தரும் பொருள்கள் யாவும் நாள் விதை பொருள்கள்.அதனை நீ பிறருக்கு தானமாக கொடுக்காதே.ஜாமீன்,ஸூரிட்டி கையெழுத்து போட்டு உதவி செய்து அதனை மறக்க முடியாமல் தவிப்பது உதவி ஆகாது.உதவி செய்து மறக்க கூடிய அளவு ,உன்னால் இயன்ற அளவு செய்.அதுவே தர்மா .உன்னை சோதிக்க உன் முன் கோல் ஏந்தி (மரக்கொம்பு)ஒருவன் உதவி என்று கேட்ப்பான் .அவனிடம் இல்லை என்று கூறி விடாதே.
யாகவா உரையாடல் ;;; வாழ்த்த தெரியுமா ;;; என் காலில் என்ன தேனா வடிகிறது ,என்னை ஏன் வணங்குகிறாய்.என்னை வணங்க தெரிந்த உனக்கு வாழ்த்த தெரியுமா ,திருமண தம்பதியரை வாழ்த்தும் முறை தெரியுமா, உன் வாழ்க்கை சிறப்படைய இவர் பாதம் பணிந்து வாழ்த்து பெற விரும்பும் உனக்கு
பிறர் வாழ்க்கை சிறப்படைய வாழ்த்த தெரியுமா ,பிறர் வாழ மனத்தால் வாழ்த்தும் குணம் உடையோரை இவரை வணங்கும் தகுதியுடையவர் .திருமண தம்பதியரை
வாழ்க வாழ்க ,திருஞானம் தான் கொண்டு, பெரு
ஞானத்துடன் வாழ்க என்று வாழ்த்த வேண்டும்,திரு ஞானம் என்பது செயல்படுதல் ,இல்லற வாழ்வை
தொடங்கும் இருவருக்கும் ,புதிதாக உண்டாகும் உறவுகள், சொந்தங்கள்,அவர்களின் செயல்பாடுகளால்,
உண்டாகும், இன்பம், துன்பம்,பிரச்சனைகள்,அதன் தீர்வுகள் ,இவற்றால் உண்டாகும் ஞானத்தால்
விளையும் செயல்பாடுகள்.பெருஞானம் என்பது -நீ இயங்குவது திருஞானம் என்றால், உன்னை இயக்கம்
பொருளான இவரது ஞானங்களை சிந்தித்தல், யூகித்தல் ,உணர்தல்,அறிதல் ,கண்டுபிடித்தல், தேடுதல்,
உட்க் கொள்ளுதல்,என யாவும் பெருஞானம் .திரு ஞானத்தில் சிறந்தோர் பெண்களே,இல்லற செயல்பாட்டிற்கு
உரியோர் பெண்களே,எனவே பெண்களே திரு ஞானத்திற்கு உரியோர்.
யாகவா உரையாடல் ;;; செல்வம் வேண்டுமா ;;; வசியால் விருப்பம் ;;; இங்கு ( ப்ராமஸ்தலத்தில் ) யாரும் பெரியவன் இல்லை. மன்னனே ஆனாலும் இங்கு வரவேற்பு கிடையாது ! வேகாத பானையில் நீர் கொண்டு வா ,நான் உனக்கு செல்வம் தருகிறேன்.வெந்த பாண்டம் விலை போக கண்டேன்.நீயோ ஒரு நாள் வேக போகும் பாண்டம் என உயிர் இருக்க நினை.நீ ஒரு நாள் வேக போகும் பாண்டம் என உயிர் இருக்க , நினைப்பாயானால், உன் வேகா பாண்டமான உனக்குள்,நீர் என்னும் இளக்கம் கொண்டு வா.அப்பொழுது இவர் உனக்கு செல்வம் தருகிறார்.வசியால் விருப்பம்;;; ஒரு முறை வசியால் லட்சுமி பிரம்மாவிடம்,நான் யார் வீட்டிலாவது தங்கி வர விரும்புகிறேன் என கூறினாள் .யார் வீட்டிற்கு என பிரம்மா கேட்க ,அதற்க்கு இவ் யுகத்தில் யார் என்னை வரவேற்காமல் இருக்கிறார்களோ அவர்கள் வீட்டில் என கூறினாள்.பின் லட்சுமி புறப்பட்டு சென்ற இடமெல்லாம் ஏக போக வரவேற்பு, மன்னனாலும் ,மக்களாலும்,லட்சுமியை கண்டவுடன் வரவேற்றனர்.லட்சுமியோ யார் வீட்டிலும் தங்க முடியாமல்,வரும் வழியில் விஷ்ணு மட்டும் தன்னை கண்டும் ,சற்றும் கண்டு கொள்ளாது ஆனந்தமாக படுத்து கொண்டே பார்த்தார்.லட்சுமியோ இதுவே சரியான இடம் என அவர் பக்கத்திலேயே அமர்ந்து விட்டால்.இங்கு ஸ்தலத்தில் எவ்வளவு பெரிய மன்னன் வந்தாலும்,எழுந்து நின்று வரவேற்காதே.
யாகவா உரையாடல் ;;; பசுவிற்கு பஞ்ச காலங்கள் உண்டு. ஆடு மாடு மேய்ப்பது சுலபம் . உன்னை மேய்ப்பது பெரும்பாடு.....யாகவா ;;; புலிக்கு பஞ்ச காலங்கள் இல்லை.பஞ்ச காலங்களில் பசுவானது ,நீர் நிலையை தேடி செல்லும் பொழுது ,அங்கு அதனை அடித்து தின்ன புலி காத்திருக்கும்.ஆடு மாடு மேய்ப்பவனை சிந்தி.பசு குணம் கொண்ட தர்மாக்கள், துன்பத்தில் இருந்து விடு பட செல்லும் கோயில்,குளங்கள் எல்லாம்,புலி குணம் கொண்ட கர்மாக்கள் காத்திருப்பர் .அவர்கள் தர்மாக்களின் அறியாமை என்னும் பஞ்சத் தினை,தனக்கு சாதகமாக்கி,அடித்து ஏமாற்றி உண்ணுகின்றனர்.நீ பசு குணம் கொண்ட தர்மவான் என்றால், கண்ட கண்ட கர்மாக்களின் கூடாரத்திற்கு செல்லாமல்,யாகவா பிரம்ம ஸ்தல தொழுவம் நேரத்திற்கு வந்து சேர்ந்து விடு.இங்கு உன் உடலுக்கும் ,அறிவுக்கும் உரிய செல்வ நீர்,ஞான நீர்,அருந்தி எடுத்து செல். மேய்ச்சலுக்காக செல்லும் பசுக்கள் தன் மேய்ப்பாளன்எழுப்பும் ஒளியை ,சப்தத்தை கேட்டு கொண்டே,மேய்ப்பாளனின் எல்லைக்குள் பாதுகாப்பாக செயல்படும். உன் எஜமான் யாகவா என்றால்,நீ இவரது சப்த நாதத்தை கேட்டு கொண்டே, தர்மம் என்னும் எல்லையை தாண்டாமல் செயல் படுவாயானால்,நீ ராஜா வீட்டு கன்று குட்டி.உனக்கு எவ்வாறு பஞ்ச காலங்கள் வரும் என சிந்தி.நான் ஆடு ,மாடு மேய்க்கின்ற காலத்தில் நிம்மதியாக இருந்தேன்.உன்னை நான் மேய்க்க பெரும் பாடு படுகிறேன்.
No comments:
Post a Comment