மன அதிர்ச்சி (Trauma)
(Trauma)மன அதிர்ச்சி எனப்படுவது ஒரு நோயல்ல , அது ஒரு ஆழ் மனத்தில் ஏற்படும் தடையே . ஆழ்மனம் எப்பொழுதும் எமது மனதையும் உடலையும் சுத்திகரித்துக் கொண் டும் , திருத்திக் கொண்டுமே இருக்கின்றது , ஒரு கவலையான சம்பவத்தை பார்த்து விட்டு , அதை மறந்து சிறிது நேரத்தின் பின் எம்மால் மகிழ்ச்சியாக கதைக்க முடிகின்றது . சிரிக்க முடிகின்றது .ஆழ் மனதில் மன அதிர்ச்சி இருக்குமாயின் , அது ஆழ் மனதின் வழமையான இயக்கத்தை தடுக்கும் . ஒரு சிறிய கவலையைப் பார்த்தாலும் அதிலிருந்து மீள பலகாலம் செல்லும் . மன அதிர்ச்சி என்பது நோயல்ல , அது ஆழ் மனத்தின் செயற்பாட்டைத் தடுக்கும் ஒரு தடையே (block).
எந்த சம்பவங்களால் மன அதிர்ச்சி ஏற்படும் ? வீட்டில் பெற்றொர் சண்டை இடும் பொழுது , குடும்பம் பிரியும் பொழுது ,ஏதாவது பயப்படும் பொழுது, பாலியல் வன்முறை ,காதல் தோல்வி . பிரிவு , இடம்பெயர்வு , உயிராபத்தான் வருத்தங்கள் , விபத்து , வன் முறை படங்களை பார்த்தல் , கொலைகளை பார்த்தல் ,உறவினரின் இளப்பு,பெற்றொரின் தண்டனைகள் , பெற்றொரின் கடுமையான் வார்த்தைப் பிரயோகங்கள்,ஆசிரியரின் தண்டனைகள் , இளம் வயதில் பராமரிப்பு குறைந்து இருத்தல் ,இளவயதில் பிள்ளைக ளுக்குரிய அடிப்படை உரிமைகள் மறுக்கப்படல் போன்றன . இவை எல்லோருக்கும் எல்லா நேரத்திலும் அல்ல . சந்தர்ப்பம் சூள்நிலைகளைப் பொறுத்து சிலருக்கு மன அதிர்ச் சியாகி விடுகின்றது . சிலருக்கு சம்பவமாகி விடுகிறது – இன்னும் சிலருக்கு புதினமாகி விடுகிறது.இவை உடலுக்கு நேரடியாக எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது , மனதுக்கே ஏற்படுத்தும்.
மன அதிர்ச்சிகளால் வரும் நோய் அறிகுறிகள்.
சாப்பாட்டுப் பிரச்சனைகள் , நித்திரைப்பிரச்சனை ,பாலியல்பிரச்சனைகள்(sexual disorder), விரக்தி , கவலை ,மனஅழுத்தம் (Stress, Anxiety, and Depression), பயம்(phobia) -(ஆழ்மனதிற்கு தர்க்கம் , பகுப்பாய்வு , பகுத்தறிவு இல்லை , விடயம் பெரிதாக் இருக்கலாம் , சிறிதாக இருக்கலாம் அது பயப்படும்), கோபம்,தற்கொலை போன்றவற்றிற்கு தூண்டுதல்(compulsions) ,உணர்வுகள் மங்கிய நிலமை ,ஞாபக மறதி, ஒவ்வாமை(Allergy) ,அமைதியின்மை,இடுப்பு – கழுத்துக்குக் கீள் நோ போன்றன .இருவர் ஒரு இடத்தில் ஒரே மாதிரியான விபத்தை அனுபவித்து இருந்தாலும் அவர்களுக்கு ஏற்ப டும் நோய் அறிகுறி வேறு வேறாக இருக்கும்.நோய் அறிகுறி தோன்ற பல வருடங்களும் எடுக்கலாம் . துப்பாக்கியில் நிரப்பிய குண்டுகள் போல் மன அதிர்ச்சிகள் நிரம்பியிருக்கும் . எப்பொழுது வேண்டுமானாலும் தட்டுப்பட்டு வெடிக்கலாம்.ஹிப்னோதெரபி மூலம் எல்லாப் பிரச்சனைகளையும் தீர்க்கலாம் என்று குறுக்கு வளிதேடாதீர்கள் .ஹிப்னோ தெரபி – முதல் சந்திப்பில் நீங்கள் , மருத்துவர்களிடம் சென்றீர்களா , மருத்துவர்களின் பதில் என்ன ? உடலியல் ரீதியான் பிரச்சனைகள் அவருடைய மனப் பிரச்சனைக்கு காரணம் இல்லை என்பதை அறிந்த பின்பே அவரிற்கு ஹிப்னோதெரபி வழங்கப் படுகிறது. ஹிப்னோதெரபிஸ்டுக்கு உடல் ரீதியான பிரச்சனைகள் தான் காரணமென சந்தேகம் வரும் பொழுது மீண்டும் அவர்கள் மருத்துவரிடம் , மேலதிக சோதனைகளு க்காகச் செல்வார்கள். சில மருத்துவர்கள் ஹிப்னோதெரபிஸ்டுடன் இணைந்து செயற் படுகிறார்கள். மன அழுத்ததிற்கு ஆளானவர் ஹிப்னோதெரபி மூலம் மாத்திரைகளைக் குறைத்து மாத்திரைகளை முற்றாக நிறுத்த முடியும். மருத்துவரின் அனுமதியுடனேயே மாத்திரைகள் குறைக்கப்படும். மாத்திரைகளால் ஏற்படும் பக்க விளைவுகளைத் தடுக்க ஹிப்னாடிஸம் வளி காட்டுகிறது. ஹிப்னாடிசத்தால் பாதிப்புகள் ஏற்பட்டது என்பது உடனுக்குடன் புதினம் தரும் நவீன உலகில் ஆதாரம் எதுவும் இல்லை.ஹிப்னாடிஸம் பக்கவிளைவுகளை ஏற்படுத்தாது.ஒருவருடைய விருப்பத்துக்கு மாறாக அவரை ஹிப்னாடிஸம் செய்ய முடியாது என்பதும் உண்மையே.
No comments:
Post a Comment