மூளை உடலின் ஒரு பகுதியே , அங்கு தான் மனமும் இருக்கின்றது . மனம் இரண்டு வகைப்படும் , ஆள்மனம்(உள்மனம்)( subconscious - underbevisst) , புறமனம்(conscious - bevisste ) ஆகும்.புறமனம்(conscious - bevisste )புறமனனமானது குறுகிய கால நினை வை வைத்திருக்கும்,தர்க்கவியலானது ,பகுப்பாய்வு செய்யும் ,பகுத்தறியும்(logical ,analalyze,ratinal) தன்மை கொண்டது . விருப்பங்களையும் வைத்திருக்கும். ஒருவர் எப்பொழுதும் சந்தோசமாக இருக்க விரும்புவார் ,கோபாப்படாமல் இருக்க விரும்புவார், புகைக்காமல் இருக்க விரும்புவார் ஆனால் எல்லோருக்கும் இவை சாத்தியப்படாது . ஆள் மனம்(அடிமனம்) ( subconscious - underbevisst)ஆள்மனமானது நீண்டநாள் நினைவுக ளை தன்னகத்தே வைத்திருக்கும் .அத்துடன் பேரதிர்ச்சியயும்தாங்கியி ருக்கும்(trauma) , பழக்கவழக்கங்களிற்கு அடிமையாகியிருக்கும் . புகைத்தல்,மது , இனிப்புப்பண்டம் சாப்பி டுதல் , அடிக்கடி சாப்பிடுதல் ,நகம்கடித்தல் போன்றவை ஆள்மனதில் பதிந்து இருக்கும். எமது உணர்ச்சிகள் யாவும் ஆள்மனதாலே கட்டுப்ப் படுத்தப் படுகின்றது.தெறிவினை என்பதையும் தன்னகத்தே கொண்டிருக்கும்- தெறிவினை என்பது தர்க்கம் பகுப்பாய்வு , பகுத்தறிவு(logical ,analalyze,ratinal) என்பன இல்லாது தன்னைப் பாதுகாக்கும் . ஒருவர் கண்ணாடி போட்டிருந்தாலும் அவரது கண்ணிற்கு கிட்ட கையைக் கொண்டு சென்றால் கண்ணை உனனே மூடுவார் ,ஒரு பெண் முழுக்காற்சட்டை ஆணிந்து சென்றாலும் காற்று வீசும் போது கையால் கீழ் உடுப்பை அழுத்துவார் , நெருப்புச் சுடும் பொழுது கையை எடுத்தல் ,பனியில் சறுக்கும் பொழுது கையை பின்னே ஊன்றுதல் போன்றன . இவற்றில் இருந்து ஆள்மனதுக்கு தர்க்கம் பகுப்பாய்வு , பகுத்தறிவு என்பன இல்லை என்பதை புரிந்து கொள்ளலாம்.புறமனதில் ஒரு விடயத்தை பலதடவைகள் மீட்கும் பொழுது அவை ஆள்மனதில் பதிந்து விடும் . அதன் கொள்ளளவுக்கு எல்லை இல்லை - பலகோடி Tera byte ஐக் கொண்டது. ஒரு அழகிய எதிர்பாலாரின் தொலைபேசி இலக்கம் ,மின்னஞ்சல் முகவரி அகியவற்றை ஆள்மனதில் நினைவு வைத்துக் கொள்வார்கள். ஆள்மனதில் சாதாரண விடயங்கள் , மகிழ்ச்சியான விடயங்கள் இருந்தால் பாதிப்பு இல்லை . ஆனால் அதிர்ச்சிகள்(trauma) இருந்தால் வாழ்க்கையைப் பெரிதும் பாதிக்கும் . ஆள்மனமும் புறமனமும் ஒன்றுடன் ஒன்று போட்டிபோட்டால் , கடைசியில் வெல்வது ஆள்மனமே. ஒருவர் புகைப்ப் பழக்கத்தை நிறுத்த விரும்புவார் , ஓரிரு நாட்களோ - ஒரு கிளமையோ , ஒரு மாதமோ நிறுத்துவார் . ஆனால் மீண்டும் படு மோசமாக்த் தொடங்குவார். அவரு டைய ஆள்மனம் புகைத்தல் பழக்கத்தையே கொண்டுள்ளது . அவரது புற மன விருப்பம் ஆள்மனதை வெல்ல முடியவில்லை . இது அவரது தவறு அல்ல. ஆனால்சிலர் ( எனது அனுபவத்தின் படி பல ஆண்களும் - பெண்கள் கற்பம் தரித்திருக்கும் பொழுதும் ) தமது புற மன விருப்பத்தை மீண்டும் மீண்டும் மீட்டு இறுக்கமாக்கி ஆள்மனத்தை மாற்றி உள்ளார்கள். புகைப்பதை நிறுத்தி உள்ளார்கள். இது எல்லோருக்கும் சாத்தியமில்லை. அது அவர்களது குற்றமில்லை.
No comments:
Post a Comment