Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Sunday, November 2, 2014

ஆலையம்=ஆன்மா+லயம்.

ஆலையம்=ஆன்மா+லயம்.  (BODY OF TEMPLE) ஆன்மாவை லயமாக்கும் இடம் ஆலையம்!உயிர்கள் செய்த வினைக்கேற்ப இறைவன் அவற்றைச் செயல்படுத்துவான் என்பதனை மெய்கண்டார் சிவஞானபோதம் இரண்டாம் நூற்பாவில் குறிப்பிட்டுள்ளார். உயிரை ஆன்மா என்பது தத்துவ மரபு. ஆன்மா உண்டு என்பதனை மூன்றாம் நூற்பாவில் நிலைநாட்டியுள்ளார். ஆன்மாவாகிய உயிர் எது? என்பதனைப் பற்றிக் கருத்து வேறுபாடுகள் உள்ளன.1. ஆன்மா என்ற ஒன்று இல்லை என்று கூறுவோர் சூனிய ஆன்மவாதிகள்.2. உடம்பே ஆன்மா என்போர் தேகான்ம வாதிகள்.3. மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்பொறிகளே ஆன்மா என்பர் இந்திரிய ஆன்மவாதிகள்.4. கனவில் செயல்படும் நுண்ணுடம்பே (சூக்கும தேகம்) ஆன்மா என்பர் சூக்கும தேகான்மவாதிகள்.5. பிராணவாயுவே ஆன்மா என்பர் பிராணான்மவாதிகள்.6. சுத்த பிரமமே ஆன்மா என்பர் ஏகான்மவாதிகள்.7. எல்லாக் கருவிகளும் கூடிய கூட்டமே ஆன்மா என்பர் சமூக ஆன்மவாதிகள்.இவ்வாறு கூறும் எழுவர் கருத்துக்களையும் மறுத்துத் தனியாக ஆன்மா உளது என்று நிலைநாட்டி உள்ளார் மெய்கண்டார்.1. ஆன்மா சூனியம் என்று கொள்பவர் பௌத்தரில் ஒரு பிரிவினர். உடம்பில் உள்ள ஒவ்வொரு உறுப்பையும் பகுத்து ஆய்ந்து பார்த்து ஆன்மா இன்னது என்று அறிய முடியாமையினால் ஆன்மா சூனியம் என்றனர்.ஆன்மா இல்லை என்று கூறும் சூனிய ஆன்மவாதிகளும் இல்லை என்று வாளா கூறாமல் உடல், பொறி முதலியவற்றையெல்லாம் முறையே இது ஆன்மா அன்று, இது ஆன்மா அன்று என்று ஒவ்வொன்றாகக் கழித்து அங்ஙனம் இல்லை என்று கூறும் ஓர் அறிவு உண்டல்லவா? அவ்வறிவே ஆன்மா ஆகும். (இலது என்றலின் ஆன்மா உளது).2. உடம்பில்தான் அறிவு நிகழ்கின்றது, அதனால் உடலையே ஆன்மா என்பர் தேகான்மவாதிகள். எனது வீடு, எனது மனைவி, எனது கணவன் என்பதைப் போலவே எனது கை, கால், எனது உடல் என்று கூறுகின்றோம். எனது உடல் என்று கூறும்போது உடலுக்கு வேறாக ஆன்மா உள்ளது என்பது தெரிய வருகிறது. நான் உடல் என்று யாரும் கூறுவதில்லை. தொல்காப்பியரே காலம், உலகம், உயிரே, உடம்பேஎன்று உயிர் வேறு உடல் வேறு என்று குறிப்பிட்டுள்ளார். (எனது உடல் என்றலின் ஆன்மா உளது).3. உடம்பில் உள்ள செவி, தோல், கண், நாக்கு, மூக்கு ஆகிய ஐம்பொறிகளே ஓசை, ஊறு, ஒளி, சுவை, மணம் ஆகியவற்றை அறிகின்றன. ஆதலால் ஐம்பொறிகளே ஆன்மா என்பர் இந்திரிய ஆன்மவாதிகள்.உடலில் உள்ள பொறிகளில் ஒன்று ஒன்றை மட்டும் அறியும், மற்றொன்றை அறியாது. கண் உருவத்தை அறியும், ஆனால் கேட்காது. காது கேட்டலைச் செய்யும், ஆனால் பார்க்காது, ஏனைய பொறிகளும் இவ்வாறே ஆகும். ஐம்பொறிகள் தம்மை உணரமாட்டா, தம்மைச் செயல்படுத்துகின்ற ஆன்மாவையும் அறியமாட்டா. ஐம்பொறிகளையும் செயல்படுத்துகின்ற & அனுபவிக்கின்ற ஆன்மாவானது ஐம்பொறிகளுக்கு வேறாக உள்ளது. (ஐம்புலன் அறிதலின் ஆன்மா உளது).4. ஓசை, ஊறு, ஒளி, சுவை, மணம் ஆகிய ஐந்து & மனம், புத்தி, அகங்காரம், ஆகிய அந்தக் கரணங்கள் மூன்று என்ற எட்டும் சேர்ந்தது நுண்ணுடம்பு (சூக்குமதேகம்) ஆகும். கனவு நிலையில் இச்சூக்கும உடலே செயல்படும். ஐம்பொறிகளையும் சூக்குமதேகம் உள்ளே இருந்து செலுத்தி அறிகின்றதாகையால் அச்சூக்கும தேகமே ஆன்மா என்பர் சூக்கும தேகான்மவாதிகள்.சூக்கும தேகம் ஆன்மா என்றால் கனவில் கண்டவற்றை நனவில் தெளிவாக அறிந்து கூற வேண்டும். முந்திய நாள் நடைபெற்ற நிகழ்ச்சிகளை நனவில் மறுநாள் மாறாமல் தெளிவாகக் கூறுகின்றோம். ஆனால், இரவில் கண்ட கனவு நிகழ்ச்சிகளை மறுநாள் காலையில் மறவாமல் முழுவதும் கூற முடிவதில்லை. கனவு கண்டதும் விழித்துக் கொண்டாலும் உடனே மறந்து விடுகின்றது. தெளிவாக அறிந்துகூற முடிவதில்லை. கண்ட கனவைத் தெளிவாகத் தெரிந்து கூற முடியாமைக்குக் காரணம், ஆன்மா பருஉடம்பு (தூலதேகம்), நுண்ணுடம்பு (சூக்கமதேகம்) ஆகிய இரண்டிற்கும் வேறாக உள்ளதே ஆகும். நனவு நிலையில் ஆன்மா பருஉடம்பில் நின்று புறத்து நிகழ்ச்சிகளை அறிந்து வருகின்றது. கனவு நிலையில் பருஉடம்பு செயலற்றுக்கிடக்க, ஆன்மா சூக்கும உடம்புடன் கூடி நின்று அகத்தே நிகழும் நிகழ்ச்சிகளை அறிந்து வருகின்றது. கனவு நீங்கி நனவுக்கு வரும்போது சூக்கும உடம்பை விட்டு நீங்கிப் பருவுடம்பிற்கு வருகின்றது. அந்த மாற்றத்தால் ஆன்மா சூக்குமதேகத்தில் இருந்து கண்டவற்றை மறநதுவிடுகின்றது. தூலதேகம், சூக்குமதேகம் ஆகிய இரண்டிற்கும் வேறாகிய ஆன்மாவே ஒரு தேகத்தை விட்டு மற்றொரு தேகத்தைப் பற்றும்போது தேக மாற்றத்தால் மறதியைப் பெறுகின்றது. ஆதலால் ஆன்மா சூக்கும தேக மாற்றத்தால் மறதியைப் பெறுகின்றது. ஆதலால் ஆன்மா சூக்குமதேகத்தின் வேறாக உள்ளது என்பது புலனாகிறது. (ஒடுக்கம் அறிதலின் ஆன்மா உளது). ஒடுக்கம் ஐம்பொறிகளும் செயல்படாமல் ஒடுங்கி நிற்கின்ற கனவு நிலையாகும்.5. பிராண வாயு என்ற மூச்சுக் காற்று உடலில் உள்ளே புகுந்து தொழிற்பட்டு, உடலில் உள்ள கருவிகளைச் செயல்படுத்தி அறிந்து கொள்ளும் தன்மை உடையதாய் இருத்தலால் அப்பிராணவாயுவே ஆன்மா என்பர் பிராணான்மவாதிகள்.ஒடுங்கிய உறக்க நிலையில் பிராணவாயு இயங்கிக் கொண்டிருந்தாலும் இன்பத் துன்ப நுகர்ச்சியும் உடலின் தொழிற்பாடும் நிகழவில்லை. நனவில் ஏனைய கருவிகள் இயங்கும் பொழுது இன்பத் துன்ப நுகர்ச்சியும் உடலின் தொழிற்பாடும் நிகழ்கின்றன. பிராணவாயுவே ஆன்மா என்றால் நனவைப் போலவே உறக்கத்திலும் அப்பிராணவாயு இயங்கிக் கொண்டிருப்பதால் நனவில் நிகழ்கின்ற இன்பத் துன்ப நுகர்ச்சியும் உடம்பின் தொழிற்பாடும் உறக்கத்திலும் நிகழ்தல் வேண்டும். அவ்வாறு நிகழாமையால் பிராணவாயுவே ஆன்மா என்பது பொருந்தாது. (கண்படில் உண்டி, வினை இன்மையின் ஆன்மா உளது).கண்படில்உறக்கத்தில், உண்டிஇன்பத் துன்ப நுகர்ச்சி, வினைஉடல் தொழிற்படுதல் இன்று பலரும் பிராண வாயுவே ஆன்மா என்று கருதுகின்றனர். அக்கொள்கை மறுக்கப்பட்டுள்ளது. 6. பருவுடம்பு, ஐம்பொறிகள், சூக்குமதேகம், பிராணவாயு ஆகியன அறிவற்ற சடப்பொருள்கள் ஆகும். அவற்றைத் தனித்தனி ஆன்மா என்று கூறுதல் பொருந்தாது. பரம்பொருள் என்னும் பிரமம் அறிவாய் உள்ளது. ஆதலால் பிரமமே ஆன்மா என்பர் ஏகான்மவாதிகள். பிரமமே ஆன்மா என்பதால் பிரமான்மவாதி என்றும் பிரமம் பேரறிவுடையது, அவ்வறிவே ஆன்மா என்பதால் விஞ்ஞான ஆன்மவாதி என்றும் வழங்கப்பெறுவர்.ஆன்மாவானது கருவிகள் தொழிற்படாமல் அடங்கிய நிலையில் எதனையும் அறிவதில்லை. எல்லாக் கருவிகளும் கூடிய விழிப்பு நிலையில் அனைத்தையும் நன்றாக ஆன்மா அறிகின்றது. ஆனால் பிரமமோ கருவிகள் எவற்றின் துணையும் இல்லாமல் என்றும் ஒரே தன்மையாக அறிகின்றது. ஆன்மா எதனையும் தானே அறிய மாட்டாது. துணையாகிய கருவிகள் உணர்த்தவே ஆன்மா உலகப் பொருள்களை உணர்கின்றது. அறிவித்தால் அன்றி அறிய மாட்டாத ஆன்மா, எல்லாவற்றையும் தானே அறிந்து நிற்கும் பிரமத்தின் வேறாகும். (உணர்த்த உணர்தலின் ஆன்மா உளது).உணர்த்த உணர்தலின் ஆன்மா உள்ளது என்ற கொள்கை தொல்காப்பியர் காலநதொட்டு வரும் உண்மையாகும். உயிர் எத்தன்மைத்து என்று வினாயவழி உணர்தல் தன்மைத்து என்று சேனாவரையர் தொல்காப்பிய உரையில் குறிப்பிட்டுள்ளார்.7. உடல், ஐம்பொறி, சூக்கும தேகம், பிராணவாயு ஆகியவற்றுள் ஒவ்வொன்றே ஆன்மா என்றால் பொருந்தாது. அவற்றுள் ஒன்று குறைந்தபோது அறிவு நிகழாமையால் அவை எல்லாம் கூடியபோது அறிவு நிகழ்வதால் அவை அனைத்தும் கூடிய கூட்டமே (சமூகம்) ஆன்மா என்பர் சமூக ஆன்மவாதிகள்.எல்லாக் கருவிகளும் சேர்ந்த கூட்டம் (சமூகம்) உடம்பு என்று பெயர் பெறுவதன்றி ஆன்மா என்று பெயர் பெறுவதில்லை. உடம்பு ஓர் இயந்திரம் போன்ற இயல்பு உடையது. உடம்பில் உள்ள கருவிகள் அந்த இயந்திரத்தினுடைய உறுப்புகள் போன்ற இயல்பின. இயந்திரத்தின் உறுப்புகள் நன்றாக இருந்தாலும் இயந்திரம் தானே இயங்காது, அவ்வியந்திரத்தை இயக்குவோன் வேறாக ஒருவன் இருந்து இயக்க வேண்டும். அதுபோல உடம்பும் கருவிகளுடன் சேர்ந்திருந்தாலும் இயக்கும் ஆன்மா வேறாக இருந்து இயக்கும் போதுதான் செயல்படும். ஆதலால் உடம்பினுள் நின்று உடம்பை இயக்கும் அறிவாகிய ஆன்மா சடமாகிய இக்கருவிகளின் கூட்டத்திற்கு வேறாக இருத்தல் வேண்டும். (மாயா இயந்திர தனுவினுள் ஆன்மா உளது). அதாவது, மாயையின் காரியங்கள் ஆகிய கருவிகளால் ஆக்கப் பெற்ற இயந்திரம் போன்ற உடலினுள்ளே அக்கருவிகளின் கூட்டத்திற்கு வேறாக ஆன்மா உள்ளது.

உயிர்க்கு ஆன்மா, பசு, சீவன், புருடன், பூமான், கிஞ்சிஞ்ஞனன், சுதந்தரவீனன், அகர்த்தா, அணு, அழியாதவன், உள்ளம், சைதன்னியன், பிரகிருதி, புத்தி, பிராணன், சதசத்து, புற்கலன் முதலிய பல பெயர்கள் உள்ளன. எல்லாப் பெயர்களும் காரணப் பெயர்களே.உயிர்த்தலால் உயிர், வியாபகம் உடையது ஆன்மா. பச்&கட்டு, பசு&கட்டப்பட்டது. சீவித்தலால் சீவன். காலம், நியதி, கலை, வித்தை, அராகம் ஆகிய ஐந்தால் ஆனது புருடன். பிரகிருதி மாயை காரணமாக அமைந்த உடலுக்குத் தலைவனாதலின் பூமான், தேகத்தை உடையவன் தேகி. கிஞ்சித் & சிறிய, ஞனன் & அறிவோன், சிற்றறிவுடையவன் கிஞ்சிஞ்ஞனன். இறைவனுக்கு அடிமை ஆதலின் சுதந்தர ஈனன். எச்செயலுக்கும் தான் கர்த்தா அல்லன் ஆதலால் அகர்த்தா. ஆணவமலத்தால் அணுத்தன்மை படுதலின் அணு. மன்னுயிராதலின் அழியாதவன். பூதஉடல், நுண்ணுடல் முதலிய உடலுக்குள்ளே இருத்தலின் உள்ளம். அறிவு வடிவினன் சைதன்னியன். குண தத்துவங்கள் தோன்றுதற்குக் காரணமாக இருத்தலால் பிரகிருதி. புத்தித் தத்துவத்தைப் பொருந்தி நிற்றலால் ஆன்மா புத்தி எனப்படும். பிராணன் & உயிர், சத்தாகிய பதியுடன் சேர்ந்து சத்தாகியும் அசத்தாகிய பாசத்துடன் சேர்ந்து அசத்தாகியும் இருத்தலால் சதசத்து. புற்கலம் & உடம்பு, உடம்பை உடையவன் புற்கலன்.ஆன்மா உளது என்று சேர்த்துப் பொருள் செய்ய வேண்டும். 1 இலது என்றலின் ஆன்மா உளது. 2 எனது உடல் என்றலின் ஆன்மா உளது. 3 ஐம்புலன் அறிதலின் ஆன்மா உளது. 4 ஒடுக்கம் அறிதலின் ஆன்மா உளது. 5 கண்படில் உண்டி வினை இன்மையின் ஆன்மா உளது. 6 உணர்த்த உணர்தலின் ஆன்மா உளது. 7 மாயா இயந்திர தனுவினுள் ஆன்மா உளது என்று நூற்பாவைப் பிரித்துக் காட்டிப் பொருள் செய்ய வேண்டும்.                                                    

No comments:

Post a Comment