சீடனுக்கு ஞானம் பற்றிய அறிவு தீர்க்கமாக இருந்தாலும், அவனது வாசனைகளால் உலகை இன்னமும் பார்க்கிறான். அதனுடன் சம்பந்தப்பட்ட நான்-நீ பேதங்களோடு, காலம், தேசம் முதலான மற்ற விருத்திகளையும் பார்க்கிறான். அவனுடைய இந்தப் பார்வைகளுக்கு ரமணர் சொல்வதென்ன?
ஆழ்மனமும் கடந்த கால அனுபவங்கள், செயல்கள் இங்கு தான் பதிவாகின்றன. இதுவே சுபாவமாக, வழக்கமாக, நம்பிக்கையாக, திறமையாக, பண்புகளாக பிறவி குணங்களாக உருவெடுக்கிறது. எண்ணற்ற ஆசை கனவுகள் இதன் அடித்தளத்தில் தான் புதைந்து கிடக்கிறது.
மனமும் புத்தியும் மனம் என்பது உணர்வு சார்ந்தது. புத்தி அறிவு சார்ந்தது. சிந்தனைகள் அறிவு சார்ந்தவையாக இருக்கின்ற காரணத்தினால் புத்தியை பயன்படுத்தி நம்மால் திறமையாக செயலாற்ற முடிகிறாது. அறாஇவு சொல்கிறபடி நாம் நமது உணர்வுகளை பெற்றுவிட்டோமா னால் மனதை நாம் ஆட்சி செய்யவும் தன் உணர்ச்சிகளுக்கு அடிமையாகாமல் தன்னை பாதுகாத்து கொள்ளவும் நம்மால் முடியும்.
புத்தி ஆன்மாவின் முடிவெடுக்கும் திறன், மற்றும் ஆன்மாவை புரிந்து கொள்ளும். புத்தி இல்லையா என்று கேட்கிறோமே. அது மனதில் எந்த சிந்தனை வந்தாலும் முடிவெடுப்பது புத்தி தான். மனத்திற்கு ஒரு குறிப்பிட்ட பாதையை காட்டுவதனால் புத்தி முக்கியத்துவம் பெறுகிறது. உதாரணத்திற்கு மனதை அமைதியாக இருக்க கட்டளையிடுவது. மனமும் அமைதியாகும்.
மனம் ஆன்மாவின் சிந்திக்கும் திறன். கற்பனை செய்வது, எண்ணுதல், ஆசைகள், உணர்ச்சிகள், நினைவாற்றல், இவை அனைத்தும் மனத்தின் செயல்கள். மனதிற்கு குறிக்கோள் இல்லையேல் கண்டபடி தன் விருப்பபடிஎங்கெங்கோஓடும்.
ஆன்மாவிற்கு உடலும், மனமும் கருவிகள்.உதாரணத்திற்கு ,உடல் – கார் ஓட்டுனர் – ஆன்மா என்ஞின் - மனம்பெட்ரோல் – உயிர் எரிபொருள் (பெட்ரோல்) காலி ஆகிவிட்டால் வண்டி நின்றுவிடும். ஓட்டுனர் (ஆன்மா) வண்டியை விட்டு வெளியேறி விடுவார் இந்த உடலை விட்டு உயிர் பிரிந்ததும் ஆன்மாவும் உடலை விட்டு வெளியேரும்.ஆன்மா, மனம், உயிர் இதில் எது, அதிக சக்தி வாய்ந்தது என்றால் ஆன்மா தான். ஆன்மாவிற்கு அழிவில்லை.
பிர என்பது பரம்பொருளையும், பஞ்சம் என்பது பஞ்ச பூதத்தையும் குறிக்கும். இப்பிரபஞ்சம் தோற்றமெடுக்கும் போது எங்கும் சூன்யமான இருளாக இருந்த்து. பிறகு பஞ்ச பூதங்களான வானம், காற்று, நீர், நிலம், மண் உருவாகி, வானமாகவும், பூமியாகவும், கடலாகவும் விரிந்தது.
சிந்தனைகளின் பிறப்பிடம் மனம். கடலின் அலைகளை போல் சிந்தனைகள் ஓயாது வந்து கொண்டே இருக்கும். மனதின் எண்ணம் தான் செயல் வடிவம் பெறுகிறது.சிந்திக்கும் தன்மை ஒரு வரப்பிரசாதம்;ஆனால் சிந்தனையை நிறுத்துவதோ மாபெரும் வரப்பிரசாதம்.
No comments:
Post a Comment