* ஆல்பா மைண்ட் நிலை பற்றிய விழிப்புணர்வு இருக்கிறதா?
எம்மாதிரியானவிழிப்புணர்வுதேவை?
விழிப்புணர்வு ஓரளவிற்கு வந்துள்ளது. பல பிரச்சினைகளால் பாதிக்கப்படும் நாம், அதற்குரிய தீர்வை நோக்கி, நமது தேடலைத் தொடருகிறோம். இதற்காக சில சாமியார் களிடமும், மந்திரவாதிகளிடமும் செல் கிறோ ம். ஆனால் இந்த முறையை விட, ஆல்பா தியானத்தை தொடர்ந்தோமானால், நாம் எங்கும் செல்லாமலே, நமக்குள் உள்ள சக்தி யை உணர்ந்து, சுயமாக சிந்திக்கத் தொடங்கி விடுவோம். இதற்குரிய சக்தி ஆல்பாவிற்கு உள்ளது. * ஆல்பா தியானம் எந்த வயதில் பின்பற்றலாம்? நாம் தியானம் செய்யும் போது, குழந்தையை அருகில் அமர வைத்து, தியானம் செய்வதைக் கவனிக்கச் செய்யலாம். பத்து வயதாகும் போது, முறைப்படி கற்றுக் கொடுக் கலாம்.
* ஆன்மிகம், மூட நம்பிக்கை, மதம் இம்மூன்றின் விளைவுகளிலிருந்து ஆல்பாஎம்மாதிரியாகவேறுபடுகிறது? ஆல்பா நிலை, எந்த மதக் கோட்பாடுகளுக் குள்ளும் வராது. மதம் சாராதது. கர்ம வினைகளின்படி தான் நாம் ஒரு குறிப்பிட்ட மதபின்னணியில் பிறக்கிறோம். மதம் என்பது ஒரு டிசிப்ளின். கோட்பாடு. எல்லா மதமும் நல்லனவற்றைத் தான் வலியுறுத்துகின்றன. மதம் மனிதனுக்கு சில சடங்கு, சம்பிரதா யங் களை மட்டுமே கற்பித்திருக்கின்றது. ஆனால் இப்படி தான் சிந்திக்கவேண்டும் என்று வலியு றுத்தவில்லை. பயிற்சி வகுப்புகள் எல்லாமே ஒரே நாள் தான். அது தான் எல்லோருக்கும் சவுகரியமாக இருக்கிறது. ஒரே நாளில் பல வகுப்புகள் எடுத்து, அவர்களையே இதற்கான செயல் முறையை, நடைமுறைப் படுத்த பயிற்சி அளித்து விடுகிறோம். ஒவ்வொரு துறைக்கும் அத்துறை சார்ந்த திறமைகள் வேண்டும். ஆன் மிகம் அப்படி அல்ல. இந்தத் துறையில் ஈடுபடுவது என்பது நான் எடுத்த முடிவு அல்ல. எனக்குள் இருக்கும் சக்தி எடுத்த முடிவு. நான் பல விட யங்களையும், அனுபவங் களையும், தியானத்தால் கற்றுக் கொண்டேன், தியானத்தால் பல விடயங்கள் நடந் தன. இதையே மற்றவர்களுக்கும் சொல் லிக் கொடுத்து அவர்கள் வாழ் க்கை யிலும் மாற்றம் கொண்டு வரலாம் என்ற எண்ணம் 2005-ல் வந்தது. ஏதோ ஒரு சக்தி என்னைப் பயன்ப டுத்திக் கொண்டி ருக்கிறது என்ற எண்ணம் ஏற்பட்டது. இப்போது ஏழுவிதமான பயிற்சிகள் கற்றுக் கொடுக்கின்றோம். ஆயிரக்கணக்கானோர் பயி ற்சி பெற்று பலன் அடை கின்றார்கள். இதற் காகத் தான் நான் பிறந்தேன் என்று எண் ணுகி றேன். மற்ற துறைகளில் நான் ஈடுபட்ட போது இல்லாத திருப்தி, இந்தத் துறையில் தான் ஏற்பட்டுள்ளது. எனக்குள் மாறுபாடான எண்ணம் ஏற்படவில்லை. ஆன்மா, ஆன்மிகம் இரண்டிற்கும் ஆண், பெண் பேதமில்லை, என்னால் வீட்டையும், குடும்பத் தையும் பார்த்துக் கொண்டு, இதையும் பார்த்துக் கொள்வது என்பது மனதுக்கு நிறைவாக இருக்கிறது. நமது மூளையை முன்மூளை, நடுமூளை,பின்மூளை என பகுக்கலாம். அதில் முக்கியமாக முன்மூளைப்பகுதி எனப்படும் இரு அரைவட்டப் பகுதிகள் உணர்தல், மொழி, சிந்தனை போன்றவைகளைக் கட்டுப்படுத்துகிறது. இப்பகுதிகள் இடதுமூளை, வலது மூளை எனவும்அழைக்கப்படுகின்றன. இடது மூளைப்பகுதி மொழியறிவு, ஒன்றைத் தொகுத்துச் சொல்லுதல், தொடர்ச்சியாக எண்ணுதல், கருத்தாக்கம் போன்ற திறன்களைக் கொண்டிருக்கிறது. எண்கள், தொடர்ச் சியாக கணித்தல், காலம் பற்றிய அறிவு, கணக்கறிவு, பெயர்கள் மற்றும் அடையாளங் களை அறிகிறது. ஒவ்வொரு செய்திகளையும் அதன் அடிப்படைப் பகுதிகள் வரை பல கூறுகளாக்கி ஆய்வு செய்கிறது. முழுமையான செய்திகளிலிருந்து தொடர்புடைய சிறுசிறு செய்திக்கூறுகளைப் பிரித்து அறிகின்றது. நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு எதையும் விவேகத்தால் பகுத்து (analytical) அறியும் தன்மை கொண்டது. தர்க்க உணர்வு அதிகம். படித்தல், எழுதுதல்,செய்திகளை நினைவுக்கு கொண்டு வருதல்,உலகியலுக்கு வேண்டியவைகளை நன்கு நிர்வகிக்கிற்து. உள்ளுணர்வுத் தொடர்பில்லாத அறிவுலக, பொருளாதார வாழ்வை நிர்ணயிப்பதில் இதன் பங்கு மிக முக்கியம்.
வலது மூளைப்பகுதி: மொழியறிவு இன்றி சைகைகளாலும், படங்களாலும் சொல்ல முயலும். சிறு சிறு விசயங்களை ஒன்றாக இணைத்து முழுமையாக்கும். இருவேறு விசயங்களுக்கிடையே, உருவங்கள், பொருள்கள் ஆகியவற்றிற்கிடையே உள்ள ஒற்றுமையை உணர்த்துகிறது.
ஒவ்வொரு விசயமும் எப்படி இருக்கிறதோ அதைப்பற்றிய உணர்வைக் கூட்டாமலும், குறைக்காமலும், உள்ளது உள்ளபடி பார்க்கும் பார்க்கும் பண்பைக் கொண்டது. காலம், எண்கள் குறித்து அறியும் ஆற்றல் இதற்குக் குறைவு.உள்ளுணர்வு, உருவ அமைப்பு, கலை, ஞானம், இசை, கனவு, மனக்காட்சிகள், முழுமையான தீர்வு காணல், தத்துவஞான கொள்கைகள், சிறுசிறு விசயங்களை ஒன்று சேர்த்தல், ஒவ்வொரு துணுக்கையும், விசய ஞானத்தையும், செய்தியையும் உருவ அமைப்பையும் ஒன்றோடொன்று தொடர்புபடுத்தி முழுமைப்படுத்துகிறது. அறிவு குறிக்கிடாத உணர்வுலக வாழ்க்கையை நடத்துகிறது,
இப்படித் தனித்தனி சிறப்புப் பணிக்ளை கொண்டிருந்தாலும், ஒன்றுக்கொன்று இவை துணையாகவே இயங்குகின்றன. இதில் எந்நேரத்தில் எந்த மூளையின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறதோ அந்த உணர்வுகள் நமக்கு மேலோங்கி இருக்கும்.
இவ்விரு மூளையும் சரியான விகிதத்தில் இணைந்து செயலாற்றும் போது எந்த செயலும் அறிவு பூர்வமாகவும், உணர்வு பூர்வமாகவும் இருக்கும். நிறைவாகவும் இருக்கும்.
மாறாக இடது மூளை ஆதிக்கம் அதிகமாக இருந்தால் பொருளை முக்கியமாக வைத்து காரியமாற்றுவோம். அங்கே மனிதம் சார்ந்த உணர்வுகள் குறைவாகவே இருக்கும். விளைவு நம் செயலால் பிற உயிர்களுக்கு ஏற்படும் பாதிப்பை உணரமாட்டோம்.
வலது மூளை ஆதிக்கம் அதிகமாக இருக்கும்போது பொருள்சார்ந்த செயல்பாடுகளில் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இழப்புகளை சந்திக்க நேரிடலாம். இவையிரண்டையும் சரியான விகிதத்தில் இயங்க வைப்பது நம் வாழ்வு சிறக்க மிகவும் அவசியம். உள்முகமாக நம்மைக் கவனிக்கும் தியானப் பயிற்சிகளின் மூலம் இதை கொண்டு வரலாம். வாழ்வில் தியானம் செய்வதைவிடவும் வாழ்வையே தியானமாகமேற்கொள்வதுசிறந்தது.
நட்புகள், உறவுகள் இடையே பழகும்போது உங்களை நீங்களே தரம் பிரித்துக்கொள் ளுங்கள். இடதுமூளை ஆதிக்கத்தில் உள்ளீர்களா, அல்லது வலது மூளை ஆதிக்கத்தில் உள்ளீர்களா என. பின் இடதுக்கும் இடதுக்கும் எளிதில் பொருந்தும், வலதுக்கும் வலதுக்கும் எளிதில் பொருந்தும். மாறினால் பொருந்தாது. இதை பொருந்த வைக்கவே தியானம்.
No comments:
Post a Comment