ஸ்ரீ அரவிந்தரின் சரணாகதி:
சரணாகதியைக் கீழ்ப்படிதல் என நினைக்கத்தோன்றும்.எதிரி யின் வலிமைக்குக் கீழ்ப்படிதல் பணிவு, obedience, submission, accepting a
defeat எனப் பெயர்.உடலால் பணிந்தால் உணர்ச்சி கொந்தளிக்கும்.உணர்வாலும் அடங்கினாலும், மனம் பணிவை ஏற்காது.மனமும் பணிவு சரி என ஏற்றாலும் ஆழத்தில் உணர்வு ஒத்துக் கொள்ளாது.நாம் ஒரு காரியத்தை உணர்வாலோ, அறிவாலோ செய்யும்பொழுது,நிர்ப்பந் தத்தால் செய்தால் கீழுள்ளதும், மேலுள்ளதும் ஏற்கா. மாமன் கடுமையை உணர்வு ஏற்றாலும், மனம் சரியில்லை எனக் கூறும். உடல் பணியாது.பூரணமாக ஏற்க நாம் பயன்படுத்தும் கரணமும், அதன் மேலும், கீழும் உள்ள கரணங்களும் ஏற்கவேண்டும். மேலுள்ள கரணம் ஏற்பது ascent சரி என்றாகும். கீழுள்ளது ஏற்றால் descent சரி என்றாகும்.Descent சரி எனில் செயலுக்கு ஆன்மிக அனுமதியுண்டு எனப் பெயர்.ஒரு கரணத்தில் அதன் சுபாவமும், ஜீவாத்மாவின் பகுதியின் சுபாவமும், சைத்தியப் புருஷனின் பகுதியின் சுபாவமும் உண்டு.மேல் பாகம் ஜீவாத்மாவின் பகுதியின் (உ.ம். மனோமயப் புருஷன்) சுபாவம் ஏற்பதைக் காட்டும். கீழ்ப்பாகம் சைத்தியப் புருஷனின் சுபாவம் ஏற்பதைக் காட்டும்.அதனால் சரணாகதி பூரணச் சரணாகதியாகிறது.முடிவான பலன், முதலிலேயே வரும்.கீதைபோல் சரணாகதி மோட்சமடைவதற்கில்லை, திருவுருமாற்ற த்திற்கு.ஸ்ரீ அரவிந்தரின் சரணாகதி காலத்திலிருந்து காலத்தைக் கடந்ததையும் கடப்பது.லீலையில் இறைவன் திருவுள்ளத்தைப் பூர்த்தி செய்து அஞ்ஞானத்திலிருந்து ஞானம் வெளிவருதல் இன்பம் பெறுவது ஸ்ரீ அரவிந்தரின் சரணாகதி.பணிவு உடலின் செயல். கீதையின் சரணாகதி மனத்தின் செயல். ஸ்ரீ அரவிந்தரின் சரணாகதி சைத்திய புருஷனின் செயல்.சரணாகதி ஸ்ரீஅரவிந்தர் உலகத்திற்கு அளித்த முடிவான பெரிய பரிசு.
இறைவன் ஆனந்தம் தேடி
உலகை சிருஷ்டித்தான்.தேடுவது அவன் திறமை, நாடுவது அவன் உரிமை.கண்டுபிடிப்பது ஆனந்தம்.மறைந்ததைக் காண்பது ஆனந்தம்.தானே தன்னுள் மறைந்து, மறைந்ததை மறந்து, மீண்டும் நினைவு வருவது ஆனந்தம். நினைவைத் தொடர்ந்து தன்னை மீண்டும் கண்டுபிடிப்பது பேரானந்தம்.இது லீலைக்கு ஸ்ரீ அரவிந்தர் அளிக்கும் விளக்கம்.மறைவது சிருஷ்டி.கண்டுபிடிப்பது பரிணாமம்.காலத்தைக் கடந்த அனந்தமான பிரம்மம் தன்னை மறைக்க தன் அம்சங்களை ஒவ்வொன்றாய் இழக்கிறது.சிருஷ்டிக்கு அப்பாற்பட்ட பிரம்மம் தன் நிலையை இழந்து சிருஷ்டிக்குள் வருவது முதல் நிலை.அம்முதல் நிலை சத் என்ற சத் புருஷன், Self-Conscious Being.இதை Being,Existence சத், ஜீவன் எனவும் கூறுகிறோம்.ஒன்றை எதிரெதிரான இரண்டாகப் பிரித்து ஒன்றை மற்றதினுடன் இணைத்து முழுமையை அடைய இயற்கை பின்பற்றும் முறை சிருஷ்டியின் ஆரம்பத்தில் ஆரம்பிக்கிறது.பிரம்மம் தன்னை சத், அசத் எனப் பிரித்து சிருஷ்டியை ஆரம்பிக்கிறது.Being வந்தவுடன் Non-Being வரும்; Existence வந்தவுடன் Non-Existence வரும். அவற்றையே சத், அசத் என்கிறோம்.சத் என்ற சத் புருஷன் சச்சிதானந்தமாகும்.பிரம்மத்திற்கு சத்தாக வேண்டிய அவசியமில்லை என்பதுபோல் சத்திற்கு சித்தாக வேண்டிய அவசியமில்லை. சித்திற்கு ஆனந்தமாகும் அவசியமில்லை. அவசியமில்லாததை ஏற்பது சுதந்திரத்தை இழப்பது, அதுவே மறையும் பாதை.சத் சித் ஆக மாறி சித் ஆனந்தமாக மாறுவது சச்சிதானந்தம் ஏற்படுவது.வேறு வகையான மாற்றமும் உண்டு. இதை அகம், புறம் என்போம்.சத் என்ற அகம் சத்தியம் என்ற புறமாகும்.சத் என்ற அகத்தையும், சத்தியம் என்ற புறத்தையும் இணைப்பது ஆன்மா Spirit எனப்படும். இதை Spiritual substance என்கிறார்.பிரபஞ்சமும், உலகமும் இந்த substanceஆல் ஆனவை.மேல் லோகங்களில் Spiritual
substance ஆக இருப்பது கீழ் லோகங்களில் material substanceஆக மனத்தால் மாறுகிறது.இந்த spirit ஆன்மா, என்பது ஆதியில் பிரம்மம்.பிரம்மம் மறைவது எனில் Spirit மறைவதாகும்.Spirit ஆன்மா தன்னுள் மறைந்து Matter ஜடமாகிறது.Spirit அதுபோல் மறைவதன் முன் 12 அம்சங்களாகப் பிரிந்து தலைகீழ்மாறி எதிராக உருவம் பெற்று சிருஷ்டி involutionயைப் பூர்த்தி செய்கிறது.இதையே சச்சிதானந்தம் உலகமாக மாறுகிறது என்கிறோம்.அதுவே சிருஷ்டி.சத், சித், ஆனந்தம், சத்திய ஜீவியம் தலைகீழே மாறி ஜடம், சைத்திய புருஷன், வாழ்வு, மனமாக மாறுவதும் ஆன்மாவின் 12 அம்சங்கள் தலைகீழே மாறுவதும் ஒன்றே. இருவகையாக விளக்கப்படுவது.சத் சித்தாக மாறி ஆனந்தமாக மாறுவது ஒரு மாற்றம். சத் என்ற அகம் சத்தியம் என்ற புறமாக மாறுவது அடுத்தவகை மாற்றம்.சத் சத்தியமாகவும், சித் ஞானமாகவும், ஆனந்தம் அனந்தமாகவும் மாறினால் சத்தியம் ஞானம் அனந்தம் என்பது சத்திய ஜீவியமாகும். இவை அகம் புறமாகும் மாற்றமாகும்.சத், சித், ஆனந்தம் என்பவை ஆன்மாவாக மாறும்பொழுது ஆன்மாவின் அம்சங்கள் 12 என்றோம். சத் என்பது ஐக்கியம், சத்தியம், நன்மை எனவும், சித் என்பது ஞானம், உறுதி எனவும், ஆனந்தம் என்பது அழகு, அன்பு, சந்தோஷம் எனவும் மாறுகின்றன.ஆன்மாவுக்கு அடிப்படையில் 4 அம்சங்கள் உள்ளன. அவை மௌனம், சாந்தி, அனந்தம், காலத்தைக் கடந்த நிலை.இந்த 12 அம்சங்களும் எதிராக மாறுவது சிருஷ்டி.
Silence
*
Activity
|
Peace
*
Movement
|
Unity
*
Division
|
Truth
*
Falsehood
|
Goodness
*
Evil
|
Knowledge
*
Ignorance
|
Will
*
Weakness
|
Beauty
*
Ugliness
|
Love
*
Hatred
|
Joy
*
Pain
|
Infinite
*
Finite
|
Timeless
*
Time
|
மௌனம்
*
சப்தம்
|
சாந்தி
*
சலனம்
|
ஐக்கியம்
*
பிரிவினை
|
சத்தியம்
*
பொய்மை
|
நன்மை
*
தீமை
|
உறுதி
*
உறுதியின்மை
|
அழகு
*
விகாரம்
|
அன்பு
*
வெறுப்பு
|
சந்தோஷம்
*
வலி
|
அனந்தம்
*
அந்தம்
|
காலத்தைக் கடந்த நிலை
*
காலம்
|
|
எப்படிப் படிப்படியாக தங்கள் நிலையை இழந்து எதிராக மாறுகின்றன என்பது சிருஷ்டியின் பல்வேறு நிலைகள்.சிருஷ்டியில் 12 அம்சங்கள் மாறுவதும் ஒரே சமயத்தில் நடந்தாலும் சிருஷ்டியை விளக்க ரிஷிகளும், ஸ்ரீ அரவிந்தரும் பயன்படுத்திய அம்சம், Knowledge எதிராக Ignorance ஆக மாறுவது ஞானம் அஞ்ஞானமாக மாறுவது.இதுவரை மனிதன் பெற்றிருந்த பெரிய கருவி மனம்.மனம் பகுக்கும் கருவி, பகுதியானது. இதனால் முழுமையை அடைய முடியாது.ரிஷிகள் பிரம்மத்தை மனத்தால் பார்க்க முயன்றபொழுது முடியவில்லை என்பதால் சமாதியில் பிரம்மத்தைக் கண்டனர். பிரம்மத்தின் பகுதியைக் கண்டனர்.கண்டது பகுதி, பார்த்தது மனம், சமாதியில் (unconscious) பார்த்தனர்.அதனால் காண முடியும், விளக்க முடியாது என்றனர்.சத்திய ஜீவியம் முழுமை. முதல் ஸ்ரீ அரவிந்தருக்கு சித்தித்தது.சத்திய ஜீவியத்தில் பிரம்மம் என்றும் நின்று நிலை பெறும்.சத்திய ஜீவியத்தால் பிரம்மத்தை முழுமையாகக் காணலாம்.விழிப்பில் காணலாம்.அதனால் விளக்கலாம்.அப்படி விளக்கி எழுதப்பட்ட நூல் Life Divine.காலம், இடம் என்பவை ஜீவியத்தின் அகம், புறம்.ஜீவியத்தின் அகமான காலம், புறமான இடமாகிறது.காலமும், இடமும் உலகம் செயல்பட அவசியம்.பரமாத்மா ஜீவாத்மாவானதும், புருஷன் பிரகிருதியானதும், ஒன்று பலவாக மாறியதும் சிருஷ்டி. அது எப்படி நடந்தது என நாம் கேட்கக் கூடாது என்பது இதுவரையுள்ள நிலை.இதை double opening என்கிறார் ஸ்ரீ அரவிந்தர். பரமாத்மா இரண்டாகப் பிரிந்து ஜீவாத்மாவாகி, மீண்டும் ஒன்றாவது சிருஷ்டியின் இரகஸ்யம் என்பது ஸ்ரீ அரவிந்தம்பரமாத்மா என்பது ஜீவன் Being,Purusha அதன் ஜீவியம் சித் எனப்படும். சித் தன்னுள்ளிருந்து சக்தியை வெளிப்படுத்துகிறது. சக்தி பிரகிருதி எனப்படும். மனம் என்ற பகுக்கும் கருவி சக்தியைப் பகுப்பதால் பல ஜீவாத்மாக்கள் பிரகிருதியில் எழுகின்றனர். பலவாகத் தோன்றினாலும் ஜீவாத்மா என்பது ஒன்றே.பரமாத்மா ஜீவாத்மாவாக மாறுவது அகந்தை ஏற்பட்ட வழி.பரமாத்மா, ஜீவாத்மா, அகந்தை என்பவை சத்திய ஜீவியத்தின் 3 நிலைகள்.சத்திய ஜீவியத்தில் காலத்தைக் கடந்த பகுதி மேலேயும், காலத்துள் உள்ள பகுதி கீழேயும் உள்ளது.இவற்றிடையே மனம் ஏற்பட்டது.மனத்திற்கு ஞானம்; உறுதி என இரு அம்சங்கள் உள்ளன.ஞானம் உறுதிமேல் செயல்பட்டால் சக்தி வெளிப்பட்டு வாழ்வு என்ற லோகம் உற்பத்தியாகிறது. இப்பொழுது ஞானம் தன்னை ஓரளவு இழக்கிறது.தன்னை ஓரளவு இழந்த ஞானம், முழுவதும் இழந்துவிட்டால் வாழ்வு ஜடமாகும். இதையே வேறு வகையாகவும் கூறலாம். மனம் புலன்வழி ஆன்மாவைக் கண்டால், மனத்தின் புலன்கட்கு ஆன்மா ஜடமாகத் தெரிகிறது.ஜடம் உற்பத்தியாவதை மேலும் ஒரு வகையாக விளக்கலாம். இருசக்திகள் சந்தித்தால் ரூபம் ஏற்படுகிறது. ரூபம் சலனமிழந்தால் ஜடம் ஏற்படுகிறது.இது ஆன்மா முதல் ஜடம்வரை சிருஷ்டியின் பாதை.இனி பரிணாமம். அது ஜடத்தில் ஆரம்பித்து சத் வரை உயர்ந்து எழுவது.ஆன்மாவுக்கு ஆதியில்லை, அந்தமில்லை, வளர்ச்சியில்லை மாற்றமில்லை என்பது மரபு. சிருஷ்டியிலும், பரிணாமத்திலும் ஆன்மா வளர்கிறது என்பது ஸ்ரீ அரவிந்தம். பூரண யோகத்தை ஆன்மீகப் பரிணாம யோகம் என்கிறார்.ஆன்மா என்பது புருஷன், சாட்சி என்பது மரபு.பிரகிருதி என்ற உலகத்திற்கு ஆன்மா உண்டு என்பதும், பிரகிருதியின் உலக அனுபவ சாரம் அதன் ஆன்மாவில் சேருகிறது எனவும், சேர்வது தொடர்வதால் ஆன்மா வளர்கிறது எனவும், அந்த ஆன்மாவுக்கு சைத்திய புருஷன் எனவும், அது மனிதனில் சைத்திய புருஷனாக ஆரம்பித்து மேலே போய் சத்திய ஜீவியத்தில் ஈஸ்வரனாகவும், கீழே போய் உடல் சத்திய ஜீவனாகவும் மாறுவது என்பது ஸ்ரீ அரவிந்தம்.இந்த ஆன்மீகப் பரிணாமத்தை நாடி ஒவ்வொரு ஜீவாத்மாவும் உடலைத் தாங்கி உலகில் உலவி வருகின்றன.உடலின் கடமையும், திறமையும் முடிந்தவுடன், மறு உடலை நாடுவது மறு பிறப்பு.ஆன்மீகப் பரிணாமம் நெடிய யாத்திரை என்பதால் பல ஆயிரம் உடல்கள் தேவைப்படுவதால் மறுபிறப்பு இன்றியமையாததாகிறது.வளரும் ஆன்மா புது உடலைத் தேடுவதற்கு பதிலாக, வளர்ந்த ஆத்மாவுக்கேற்ப உடல் வளர்வது சத்திய ஜீவன் பிறப்பதாகும். அதுவே சத்திய ஜீவியத் திருவுருமாற்றம்.அஞ்ஞானம் என்பது அசித்தி, அவித்யாயில்லை, ஞானத்தின் மறுஉருவம்.முரண்பாடு என்பது முரணானதில்லை. உடன்பாட்டின் எதிர்ப்புறம்.அகந்தை என்பது மனிதனில்லை, ஜீவனில்லை. பரமாத்மாவிலிருந்து பிரிந்த நிலை.சிருஷ்டி என்பது கடவுளால் ஏற்பட்டதில்லை, கடவுளே சிருஷ்டியாக மாறினார்.சிருஷ்டித்தது பிரம்மாயில்லை, சத்திய ஜீவியம்.இந்த ஞானம் அறிவால் பெறப்படுவதில்லை. அனுபவத்தால் பெறக்கூடியது.உலகில் தீமை படைக்கப்படவில்லை. பிரிந்து நிற்கும் அகந்தை பிரிந்து நிற்பது தீமையாகத் தோன்றுகிறது.மேற்சொன்னவை ஸ்ரீ அரவிந்தத்திற்குரிய புதிய நிலைகள். பகவான் இவற்றை விளக்க முயன்றால் நாம் புரியவில்லை என்கிறோம். இதைத்தான் விளக்குகிறார் என்று தெரிந்தவுடன் புரியும். அது போன்ற சிக்கல்கள் ஆயிரம். சில உதாரணங்களை மட்டும் கூறுகிறேன். புரியாத இடம் இதுபோன்ற விளக்கத்தால் புரிந்தால், அளவு கடந்த சக்தி மனத்துள் எழும். அது மந்திர சக்தி.பிரபஞ்ச சிருஷ்டியைப் பற்றிய அத்தியாயத்தில் சிருஷ்டியின் இரகஸ்யத்தைப் பற்றி விளக்கமாகக் கூறியபின், அடுத்த பாராவில் முதல் வரியில் பிரம்மம் நமக்கு சச்சிதானந்தமாகத் தெரிகிறது என்று ஆரம்பிக்கிறார். சிருஷ்டிக்கும் இதற்கும் தொடர்பு தெரியவில்லை. தொடர்பும் ஏற்படுத்த முடியாது தவிப்போம். இந்த அத்தியாயத்தின் கடைசி பக்கங்களில் திடீரென ஒரு பாராவில் இங்கு நாம் அஞ்ஞானத்தைப் பற்றி அறிவது அவசியம் என்கிறார். சிருஷ்டிக்கும் அஞ்ஞானத்திற்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியாது. சத்திய ஜீவியத்தைப் பற்றிய மூன்று அத்தியாயங்களுக்குப் பின் மனத்தைப் பற்றிய அத்தியாயத்திற்கு முன் தெய்வீக ஆத்மா என்று ஒரு அத்தியாயம். இதற்கு முன் அத்தியாயத்துடனோ, பின் அத்தியாயத்துடனோ இந்த அத்தியாயத்திற்கு என்ன தொடர்பு என்றால் சிந்தனைக்கு எட்டாது. சிந்தனை ஆரம்பிக்காது. சட்டம் சக்தி வாய்ந்தது. ஆனால் நாம் போட்டது சட்டம். நாம் சட்டத்தை மாற்றலாம். கர்மம் சக்தியின் விளைவு. சக்தி ஜீவனுக்குட்பட்டது. சக்திக்குக் கட்டுப்பட்ட மனிதனை கர்மம் ஆளும். ஜீவனை கர்மம் ஆளமுடியாது.ஜடம் என்பது ஆழ்மனத்தின் உறுதி என ஒரு விளக்கம் உள்ளது. முதலிரண்டு பாராக்களில் இது விளக்கப்பட்டு முடிவான கருத்தாக எழுதப்பட்டுள்ளது. பத்து, இருபது முறை படித்தபின் எதுவும் புரியவில்லை. இதெல்லாம் தத்துவம். நம் சிற்றறிவுக்கு எட்டாது என்று தோன்றுகிறது. அது பொதுவாக சரி. அதுவே முடிவல்ல. இதுபோல் புரியாத இடங்களில் பேப்பரும் பென்சிலும் எடுத்து குறிப்பு எடுத்து நிதானமாகப் படிக்க வேண்டும் என்கிறார் அன்னை. அதை செய்து ஊன்றி கவனித்தால், ஆசிரியர் மனம் எண்ணத்தை எப்படிக் கருதுகிறது என எழுதியவர் கோணத்தில் பார்த்தால் உதவும். அதையும் கீழே செய்து பார்ப்போம். 1. மனம் சத்திய ஜீவியத்தில் எழுவதால் அதன் ஆதி இறைவன் என முன் அத்தியாயம் கூறியதை முதல் வரி மீண்டும் கூறுகிறது.2. கீழ் லோகத்திற்குரிய மூன்று கரணங்களான உடல், வாழ்வு, மனம் ஆகியவற்றுள் மனம் உச்சியிலுள்ளது.3. மனம் தெய்வசக்தியின் சிறப்பான செயல் அல்லது மேல் லோகத்தில் கடைசி நிலையிலுள்ள கரணம் மனம் எனப்படும்.4. மனம் புருஷனையும், பிரகிருதியையும் பிரித்துக் காட்ட வல்லது. புருஷனும் பிரகிருதியும் ஒன்றானவை. தனித்தனியானவையல்ல. ஆனால் பிரித்துப் பார்க்க விரும்பினால் மனம் பிரித்துக் காட்டும் திறன் உடையது. ஒரு கம்பெனியின் கணக்குகளை மட்டும் தனியாக எடுத்துப் பார்த்தால் விளங்கும். அதனால் கம்பெனி வேறு, கணக்கு வேறு என்றாகாது.5. ஆத்மா அஞ்ஞானத்திலிருப்பதால் மனம் பிரித்துக் காட்டுவதை பிரிந்தவை என தவறாக நாம் நினைக்கிறோம்.6. சத்திய ஜீவியத்திலிருந்து மனம் பிரியாதவரை மனம் அஞ்ஞானத்தின் கருவியாகாது. பிரிக்கும் மனத்தின் திறன் ஞானத்திற்கே பயன்படும். 7. மனம் பிரபஞ்சத்தில் சிருஷ்டிக்கும் கருவியாகிறது.8. மனத்தின் இத்திறனை நாம் அறிவதில்லை.9. மனம் புரிந்து கொள்ளும் கருவி. உலகில் நடப்பவற்றை நமக்குப் புரியவைக்கும் கருவி என நாம் நினைக்கிறோம்.10. ஜடத்தில் உற்பத்தியான சக்திகளை அதன் மனத்தின் ஆரம்பமாகக் கருதுகிறோம்.11. சமீபகாலமாக நடக்கும் சோதனைகள் மூலம் இந்த சக்தியுள் மனம் மறைந்துள்ளது என நாம் அறிகிறோம்.12. மறைந்துள்ள இம்மனம் ஜடத்தினின்று தானே வெளிவரும்.13.முதலில் அது உயிராகவும், முடிவில் மனமாகவும் வெளிவரும் என அறிகிறோம்.14. முதலில் வருவது தாவரங்களுக்குரிய உணர்வு.15. முடிவில் விலங்குகளிலும், மனிதனிலும் வெளிப்படும் மனம் வெளிவரும்.16. ஏற்கனவே ஜடம் என்பது சக்தியின் உருவம் (Matter is only substance of
Force) என நாம் முன்னொரு அத்தியாயத்தில் கண்டோம்.17.எனவே ஜட சக்தி என்பது சக்தி உருவமான மனம்(Energyform of Mind)எனப் புரிகிறது.18. Material force is,in fact,a
subconscious operation of will.. ஜடசக்தி என்பது ஆழ்மனத்தின் உறுதி செயல்படுவதாகும்.ஜடம் என்பது சக்தி (Force).மனம் என்பது சக்தியின் ரூபம் (Energy-Form).Force= Energyஎனவே ஜடம் என்பது மனம்.மனம் விழிப்பாக இருந் தால் மனமாகும்.மனம் மறைந்திருந்தால் ஆழ்மனம் என்கிறோம்.மனம் மறைந்திரு ப்பது ஜடமாகும்.ஜடம் என்பது ஆழ்மனத்தின் உறுதி செயல்படுவதாகும்.இது தத்துவமான விளக்கம்.நடைமுறை உதாரணம்,வாயில் சொன்னால் மனம் உள்ளவன் கேட்டு அதன்படி நடக்கிறான்.மனம் இல்லாதவன் சொல்லுக்கு அசையமாட் டான்.மனம் இல்லாதவன் வெறும் ஜடம், உடல்.மனம் சொல்லாக வெளிப்படாமல் செயலாக வெளிப்பட்டு ஓங்கி ஒரு அறை கொடுத்தால், சொல்லுக்கு அசையாதவன் செயலான அடிக்குப் பணிவான்.நல்லவனுக்கு ஒரு சொல். நல்ல மாட்டுக்கு ஒரு அடி என்பது பழமொழி.ஜடம் மனம் என்பது அடிபட்ட பின் உத்தரவை ஏற்பவனைக் காட்டுகிறது.
No comments:
Post a Comment