ஸ்ரீ. அரவிந்தர்.புற மனம், (CONSIOUS MIND) உள் மனம்.(ஆழ்மனம்) புற மனத்தில் சிந்தனை செயல் வடிவம் பெறுகிறது. நல்ல எண்ணம், தீய எண்ணங்கள் தோன்றுகிறது. ஆழ்மனத்திற்கு (unconsious mind) நல்லது, கெட்டது எதுவும் தெரியாது. ஆழ்மனத்தில் சென்று நாம் எது கேட்டாலும் அதை நிறைவேற்றி தரும். பிரார்த்தனை, ஜெபம் எல்லாம் மனத்தின் ஆழத்திற்கு சென்றடகின்றன. வெற்றி இவ்விதமே நம்மை வந்தடைகிறது.சத்சித்தானந்த நிலை (மனமற்ற நிலை) -SUPER CONSIOUS MIND OR UNCONSIOUS
MIND
ஆன்மாவின் கருவிகள் நமது புலன்கள் தான் ஆன்மாவின் கருவிகள். உதாரணத்திற்கு நாம் கண்களால் காண்கிறோம். உண்மையில் கண்களா காண்கிறது. கண் என்னும் கருவி வழியே காண்பது ஆன்மா தான். அழகிய மலரை பார்க்கிறோம், மெய் மறந்து லயித்து போகிறோம். உண்மையில் ஆத்மா தான் மன நிம்மதியும் நிறைவையும் காண்கிறது. ஆன்மாவுக்கு எதெல்லாம் தேவையோ அதையே பார்க்கிறது, அதையே நாடுகிறது.
உடல் மறைந்த பின் ஆன்மாஆன்மா, உடல் மறைந்த பின், ஆன்மா இந்த உடலை விட்டு வெளியேறும். புது உடலை தேடி போகும். அதற்காக பேய் அதெலலாம் கிடையாது. மனிதனின் தீய எண்ணங்கள், விகாரங்கள் தான் எல்லாம். கர்மாவுக்கேற்ப அடுத்த பிறவி எடுக்கும்.ஆதியில் எங்கிருந்தோம், எப்படி வந்தோம் எல்லாம் மறந்து விடும். இறைவனை தேடி அலைகிறது ஆன்மா. பந்த பாசத்தில் பிணைப்பு ஏற்பட்டு, பாச வலையில் சிக்கி, துன்புற்று, அலைகடலில் சிக்கிய படகாய் திசை தெரியாமல் இங்கும், அங்கும் அலைந்து, மறுபடியும்,மறுபடியும்பிறவிஎடுக்கிறது.
ஆன்மா நம் யார்? இந்த உருவமா, சதா எந்நேரமும் நம்மோடு பேசிக்கொண்டே இருக்குமே இந்த மனமா, அல்லது ஆன்மாவா. உருவம் என்றால் ஆண், பெண், பெயர், உறவுமுறை, செய்யும் தொழில், எந்த நாட்டை சேர்ந்தவர், அது போலவா. உதாரணத்திற்கு ஒரு மாமரத்தை எடுத்து கொள்வோம். மாமரம் எது என்றால் பூவா, காயா, பழமா, இலைகளா, கிளைகளா அதில் எது. எல்லாம் என்கிறீர்களா. மாமரத்தின் வித்து எது. அதன் விதை அல்லவா. அது இல்லையேல் மரம் ஏது, பூ ஏது, காயேது, இலை, பூ, காயெல்லாம் அழியும். அழியாத விதை பூமியில் அல்லவா புதைந்துள்ளது. அது போல்தான்ஆன்மாவும். ஆன்மா எங்குள்ளது ஆன்மா அழிவற்றது, உருவமற்றது. உயிர்சக்தி தான் ஆன்மா. அது உடலுறுப்பா, மூளையா, மனமா என்றால், எல்லாம் தான். உடல் பருவங்களில் மாற்றம் அடையும், அழியும் தன்மை கொண்டது. ஆனால் ஆன்மா காற்றாலும், நீராலும், வெப்பத்தாலும் அழியாது. அழிவு உடலுக்கு தானே ஒழிய ஆன்மாவுக்கு அல்ல. உள்ளே ம்றைந்து கிடக்கும் உயிர் தான் நாம். இப்ப சொல்லுங்கள் அந்த உயிர் இல்லையேல் நாம் ஏது. அந்த உயிர் தான் ஆன்மா.கடவுளை அடைய நான்கு வாசல்கள். அவை சொர்க்க வாசல்.பக்தி யோகம், கர்ம யோகம், ஞான யோகம், ராஜ யோகம்.இதில் எந்த வழியிலேனும் கடவுளை அடையலாம். சில நிகழ்வுகள், மனிதனின் அறிவுக்கு (Intelligence) எட்டாத நிலையில்தான் ஞானம்
(wisdom) பிறக்கிறது. அறிவு என்பது உடல் வலிமையை போன்றது எனில், ஞானம் மனவலிமையைப் போன்றது. உடல் வலிமையை, அதன் பொலிவை கண்களால் காண இயலும். மனவலிமையை உணரவே இயலும். அறிவு மனசாட்சியை மீறி விடும். ஞானம் மனசாட்சியாய் செயல்படும். அறிவு ஒன்றின் மீது பற்றுக்கொள்ளும். ஞானம் எல்லாவற் றோடும் பழகும், எதன் மீதும் பற்றுக்கொள்ளாது. அறிவை, அழிவுக்கும் பயன்படுத்தலாம். ஞானத்தால் அது முடியாது.
பாவத்திற்கு போக மூன்று வாசல்கள். அவை நரக வாசல்.காமம் (பேராசை), குரோதம் (சினம்), லோபம் (கஞ்சதனம்)பூமிக்கு செல்ல இரண்டு வாசல். அவை பாவம், புண்ணியம்.தாயின் கருவறைக்கு செல்ல ஒரு வாசல்.புத்தர் போதி மரத்தடியில் ஞானம் பெற்றார்.நம்மாழ்வார் புளியமரத்தடியில் ஞானம் பெற்றார்.திருமூலர் அரச மரத்தடியில் அமர்ந்து திருமந்திரம் (தவம்) செய்தார்.மணிவாசகர் குருந்தமரத்தடியில் குருவை கண்டார்.மரங்கள் ஞானிகளுக்கு நிழல் தந்து, ஞானம் பெற தேடி சென்ற இடம் மரங்கள். எந்த மரங்களை வெட்டாதீர்கள். அது எந்த ஞானிக்காக காத்திருக்கிறதோ! ஆப்பிள் மரத்தடியில், ஐன்ஸ்டீன் புவி ஈர்ப்பு விசையை கண்டுபிடித்தார்..........
No comments:
Post a Comment