மனித உடலில் பிரபஞ்ச சக்திகள்:
பிரபஞ்ச சக்திகள் அனைத்தும் மனிதன் உட்படஅனைத்து ஜீவராசிகளிலும் நிறைந்துள்ளது. இதனால்தான் திருமூலர் ஊண் உடம்பே ஆலயம் என்றார். இந்த வாத பித்த கபம் எவ்வாறு மனித உடலில் உள்ளது என்பதையும் வாத பித்த கப நிலைப்பாட்டின் தன்மையை இந்த பிரபஞ்சத்தில் ஐம்பூதங்களானமண், காற்று, நீர், நெருப்பு, ஆகாயம் இவற்றின் பிரதிபலிப்பு ஒவ்வொரு உயிரிலும் நிறைந்துள்ளது. அண்டத்திலுள்ளதே பிண்டம் பிண்டத்திலுள்ளதே அண்டம்
அண்டமும் பிண்டமு மொன்றே அறிந்து தான் பார்க்கும் போதே பொதுவாக எலும்பு க்கூடு, நரம்பு, தசை, தமனி, முதலானவைகள் தான் மனிதன் என்று சொல்வது அறியாமை என்கின்றனர் சித்தர்கள். அண்டத்தில் அதாவது பிரபஞ்சத்தில் உள்ளதுஅனைத்தும் பிண்டத்தில் உள்ளது என்கிறார். பிண்டம் என்றால் உடம்பைக் குறிக்கும்.பிரபஞ்ச சக்தியானது உடலில் கரு உற்பத்திக்கு முக்கிய காரணமாகிறது. சுக்கிலமும் சுரோனிதமும் இணையும்போது, காற்று நீர், நெருப்பு மூன்றும் சேர்ந்து மண் உருவு கொண்டு உடலாய் மாறி உயிர் சேர்ந்து வாதம், பித்தம்,கபம் என நிலைப்படுகின்றது.இவ்வாறு பஞ்ச பூதங் களுள் அமைந்துள்ள உடலானது உலகில் உள்ள தாதுப்பொருட்கள் தாவரப் பொருட்கள் அனைத்தும் சங்கமமாகின்றது. மனித உடல் ஐம்பெரும் பூதங்கள் அடங்கிய சிறிய பிரப ஞ்சம்என்றே சித்தர்கள் கூறுகின்றனர்.மேலும் மனித உடலில் உள்ளஒவ்வொரு உறுப்பும் பிரபஞ்சத்தில் உள்ள பொருட்களோடு தொடர்புடைய தாகவும், இந்த தத்து வங்களின் அடிப்படையில்தான் மனித உயிர் அனைத்து சக்திகளையும் அடக்கி ஆளும் தன்மை கொண்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.சூரிய சக்தியானது மனிதனின் தமரகம் என்னும் இதயத்துடன் தொடர்புடையது என்றும், மூளை நரம்புகள் அனைத்தும் சந்திரனோடு தொடர்பு உடையவை என்றும், பித்தப்பை இரத்தம், செவ்வாயோடு தொடர்பு உடையவை என்றும் உடலை பிரபஞ்சத்துடன் ஒப்பிட்டுள்ளனர்.சூரிய சக்தி - தமரகம் (இதயம்) ,சந்திர சக்தி - மூளை நரம்புகள் ,செவ்வாய் - பித்தப்பை, இரத்தம் (செந்நீர்) ,சுக்கிரன் - இடுப்புப் பகுதி ,புதன் - நுரையீரல் ,குரு (வியாழன்) - கல்லீரல் சனி - மண்ணீரல் ஆகவே மனித உடலானது கிரகங்கள் (கோள்கள்) நட்சத்தி ரங்களின் ஆதிக்கத்தைப்பொறுத்து மாறுபாடு அடைகிறது என்பது புலனாகிறது.பிரபஞ்ச சக்தியை அடைந்த சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள் இந்த கோள்களின் ஆதிக்கத்தை மாற்றியும், நட்சத்திரங்களின் தன்மைகளை மாற்றி அமைக்கும் சக்தி பெற்றவர்கள். சில சமயங்களில் இவற்றில் மாற்றங்களை ஏற்படுத்திஇயக்குபவர்களும் இவர்களே. பிரபஞ்சத்தில் மனிதனே முதன்மையானவ னாகவும் அவன் தன்னைத்தானே அறிந்து
கொள்பவனாகவும் இருக்கிறான். இதனால்தான் மனிதன் ஐம்பெரும் பூதங்களை அடக்கி ஆளும் சக்தியைப் பெற்று இயற்கையின் போக்கை இயக்கவும், மாற்றவும் வல்லவன் ஆகிறான் என்கின்றனர்.இந்த பிரபஞ்ச சக்தியை அடைவது பற்றி நாம் வர்மத்தின் மர்மங்கள் என்ற தொடரில் திலர்த கால ஒளியின் மூலம் இந்த சக்தியை அடைவது பற்றி விரிவாக அறிந்துகொண்டிருப்பீர்கள்.இதுபோல் மனித உடலில் உள்ள நரம்பு மண்டலங் கள் ஆதாரங்களுடன் தொடர்பு உள்ளது போல் ஐம்பூதங்களின் ஆதிக்கம் மனித சக்தியி லும் நிறைந்துள்ளது. ஆகையால் மனிதன் ஐம்பூதங்களை அடக்கியாள முடிகிறது. இதைத் தான் சித்தர்கள் பல நூல்களிலும், சோதிட சாஸ்திரங்களிலும் மனிதனுக்கு கோள்களின் மாற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளை துல்லியமாக கணித்துக் கூறியுள்ளனர்.பஞ்ச பூதங்கள் வாத பித்த கபமாக நிறைந்து அதனதன் நிலைப்பாட்டுடன் உள்ளது. பிரபஞ்ச த்தில் கோள்களின் ஆதிக்கம் மாறும்போது உடலிலும் வாத பித்த கப மாறுபாடு ஏற்ப டுகிறது. இதனால் மனிதன் பல நோய்களுக்கு ஆளாக நேரிடுகிறது.இப்படிப்பட்ட கோள்களின் ஆதிக்கத்தைத் தெரிந்துகொண்டு அதன்மூலம் மனிதன் நோய் நொடியின்றி தன்னைக்காத்துக்கொள்ளவே வான சாஸ்திரம், ஜோதிட சாஸ்திரம் போன்றவற்றை சித்தர்கள் உருவாக்கினர்.மனித உடலானது பிரபஞ்சத்தில் ஒரு பிரபஞ்சம் என்றே சித்தர்கள் கூறுகின்றனர்.நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இந்த ஐம்பெரும் பூதங்கள் நம் உடலில் செயல்படுகிறது.ஐம்பூதங்களின் தன்மையினால் உருவான உடலானது அண்டத்தின் செயல்பாடுகளால்தான் இயக்கப் படுகிறது.இத்தகைய உடலை இயக்கும் உயிர்ஸ்தானம் எங்குள்ளது என்பதை தியானம் மூலமே அறிந்துகொள்ள முடியும்.சித்தர்கள் தங்களின் தவப்பயனால், உடலின் சாராம்சங்களை அறிந்து கொண்டு
மனதை செம்மைப்படுத்தி ஒருநிலைப்படுத்தும் போது உடலில் உள்ளஆதாரங்கள் அனை த்தும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு ஒரே நேர்க்கோட்டில் வரும்போது திலர்த காலம் என அழைக்கப்படும் சுழிமுனையில் ஒளியை ஏற்படுத்துகிறது. இந்த நிலையி ல்தான் உடலில் பஞ்ச பூதங்களின் செயல்பாடுகளுக்கும்,கோள்களின் ஆதிக்க த்திற் கும் நேரடி தொடர்பு இருப்பதை கண்டறிந்தனர் இதைத்தான் சித்தர்கள் அகாரம் உகாரம் மகாரம் என்ற சொல்லின் வடிவம்தான் ‘ஓம்’ என்று அழைத்தனர். இந்த ‘ஓம்’ என்ற சொல் எந்த ஒரு மதத்தினருக்கும் சொந்தமானதல்ல. அனைவருக்கும் பொதுவானது. மனிதனின் முகம் ஓம் என்ற வடிவில் அமைந்துள்ளது என சித்தர்கள்கூறுகின்ற னர்.ஆகையால் தான் தமிழ்மொழியில் ‘அ’ என்ற எழுத்தை முதல் உயிரெழுத்தாக கொண்டுள்ளது. இந்த ஓங்கார சக்திதான் உடலை இயக்கும் மாபெரும் சக்தி என்கின்றனர் சித்தர்கள். இத்தகைய சக்தியை அடைந்துவிட்டால் மனம் என்னும் அடங்காத குதிரையை அடக்கி அதன்மேல் சவாரி செய்வதுபோல் கம்பீரம் கிடைக்கும் என்கின்றனர்.மேலும் அவர்கள் அம் என்று இரு ,இம் என்று இரு ,உம் என்று இரு என்று கூறுகின்றனர். பிராண வாயுவின் செயல் பாடுகள் இந்த வடிவில்தான் செயல்படுகின்றது. தவக்கோலத்தில் பிராண வாயுவை அம், இம், உம் என்ற நிலையில் செயல்படுத்தினால் மூலாதாரத்தில் இருந்து எழும்பும் (அதா வது குண்டலினி) ஓங்கார சக்தி மேல் நோக்கி எழுந்து தனஞ்செயன் வாயு அடங்கியி ருக்கும் இடத்திற்குச் சென்று அங்கிருந்து சுழிமுனையை அதாவது திலர்த காலத்தை அடைகின்றது. இதனால்தான் சித்தர்கள் அண்ட சாரத்தினை தங்களின் ஆற்றலினால் மாற்றி அமைக்க முடிந்தது.சாதாரணமாக மனித உடலில் கிலேசம் என்ற நீர் உற்பத்தி யாகிறது. இந்த கிலேச நீரை ஒருநிலைப் படுத்தும்போது உருவாகும் நீரைத்தான் அமிர்த கலை நீர் என்று அழைக்கின்றனர். இந்த கிலேச நீர் என்பது ஒன்றை பார்த்தவுடன், கேட்டவுடன் அல்லது உணர்ந்தவுடன் உடலில் ஊறும் ஒரு அபரிமிதமான நீராகும். இந்த நீர் எண்ணங்களுக்கு ஏற்ப உற்பத்தியாகிறது... மாறுபடுகிறது.உதாரணமாக ஒரு ஆண் ஒரு பெண்ணைப் பார்க்கும்போது அல்லது ஒரு பெண் ஒரு ஆணைப் பார்க்கும்போது உடலில் ஒருவகையான மனக் கிளர்ச்சி உண்டாகும். அப்போது சுரக்கும் நீர் மனக் கிலேச நீராகும். அதுபோல் தொடும்போது, உணர்ச்சிவசப்படும்போது, இனிமையான பாடலைக் கேட்கும்போது பலவிதமான எண்ணங்களை வெளிப்படுத்தும் போது உடலில்மாற்றம் ஏற்பட்டு மனநிலை மாறி கிலேச நீர் உற்பத்தியாகிறது. இந்த கிலேச நீர்தான் அனைத்து
செயல்பாட்டினையும் தூண்டும் சக்தியாக விளங்குகிறது.மூலாதாரத்திலிருந்து உயிர் சக்தி சீற்றமாகி மேல் எழும்பி ஆதாரங்களைத் தூண்டி தனஞ்செயனை தொடும்போது கிலேசன் என்னும் அமிர்த நீர் உற்பத்தியாகிறது. இதைத்தான் சிவனின் தலையிலிருந்து உற்பத்தி யாகும் கங்கை நீராக புராணங்களில் சித்தரிக்கின்றனர்.ஒருவரை பார்க்கும்போதும், பேசத் தூண்டும் போதும் கிலேச நீர் அபரிமிதமாக தோன்றி எண்ணங்களை மேலோங்கச் செய்கி றது.அதிக மகிழ்ச்சியடையும்போது ஆனந்தக் கண்ணீராக வெளிவருவதற்கும், துக்கம டையும்போது கண்ணீராக வெளிவருவதற்கும் இந்த கிலேச நீர்தான் காரணம். இந்த கிலேச நீர் வாத, பித்த கப உடல்கூறுகளுக்குத் தகுந்தவாறு எவ்வாறு மாறுகிறது, அப்படி மாறும்போது உடலில் அதிக மாற்றம் உருவாகிறது.ஐம் பூதங்களின் மொத்த உருவே பிரபஞ்சம். இதுபோல் மனித உடலும் ஐம் பூதங்களால் ஆன சிறிய பிரபஞ்சம் என்கி றார்கள் சித்தர்கள். இதைத்தான் அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் உள்ளது என்கின் றனர்.இந்த பஞ்ச பூதங்கள் எவ்வாறு மனித உடலை தீர்மானிக்கின்றன, அவற்றின்
செயல்பாடுகள் என்ன என்பதை விரிவாக அறிந்துகொள்வோம். மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இவையே பஞ்ச பூதங்கள்.இவையனைத்தும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து உருவானது தான் மனித உடல் எனும் பிரபஞ்சம்.
No comments:
Post a Comment