Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Sunday, November 2, 2014

மனம் இயங்கும் விதம் RAMALINGA SWAMYGAL

தானதுவாகு மருந்து , பரஞானவெளியில் நடிக்கு மருந்து மோன வடிவா மருந்து, சீவன்
முத்தருளத்தே முடிக்கு மருந்து. -வள்ளலார்
ஆழ்மனது வெளிமனது , உள்மனது என இருபிரிவாக உள்ளன. அது போக என உயர்ந்த நிலை மனதாகவும் உள்ளது. மேல் மனது ஒரு எண்ணஅலை நீளத்தில் இயங்கும் & ஆழ்மனதும் வேறு ஒரு எண்ண அலைநீளத்திலும் இயங்கும். அதுபோல் சூப்பர் கான்சியஸ் மனதும்  அதன் அருகில் இயங்கும் நிலையில்உள்ளது.காலை சூரிய உதயத்திற்கு முன் ஆழ்மனது மிகவும்  நிலைக்குச் சென்று சுறுசுறுப்பாகவும், அதிக விழிப்பு, தெளிவு நிலையில் இருக்கும். அமைதியான குளத்து நீரின் தன்மையை ஒட்டி இருக்கிறது.அந்த நேரம் நாம் எப்படி சிந்திக்கிறோமோ, அமைதி, ஆனந்தம், ஆரோக்கியம், அறிவு, படிப்பு, விளையாட்டு பற்றிய சிந்தனை செயல்கள் மூளையில் பதிந்து செயல்படுகின்றன. அதற்கான இயக்கம் அன்று நடைபெறுகின்றன.                  ஆராய்ச்சி செய்யும் மனது & தேர்ந்தெடுக்கும் மனது & புத்தகம், உடைகள். வாகனங்கள், வீடுகள், உணவுகளைத் தேடும் மனது & தடுமாறும் மனது. சூழலால் பாதிப்படையும் மனது & எல்லா முடிவுகளையும் தீர்மானிக்கும் மனது வெளி மனது.
ஆனால் சில அனிச்சை செயல்கள் நமது உடலில் பல நேரம் இயங்க வேண்டும். அவைகள் புற மனதைத் தவிர்த்தே பல நேரங்களில் நடைபெறுகின்றன.
உணவு, ஜீரணம், இரத்த ஓட்டம், மூச்சு சுவாசம், ஜீரண நீர் சுரப்புகள், நாளமில்லா சுரப்பி இயக்கங்கள் இவைகள் அனைத்தும் ஆழ்மனதினால் நம்மை அறியாமலே இயல்பாக, இனிமையாக, சுலபமாக பல நேரம் நடைபெறும். அதுவே ஆரோக்கியத்தின் உன்னத நிலை.குறிப்பாக ஆழ்மனது ஏதேனும் விஷயத்தில் ஒன்றிவிட்டால் அதை செயல்படுத்த முனையும். காரணங்கள் தேடாது. ஆராய்ச்சி செய்யாது. வாதம், விவாதம் செய்யாது.          ஆழ்மனதில் எது ஆழமாக பதிவு செய்யப்படுகிறதோ அது பல மடங்கு உத்வேகத்துடன் செயல்பட்டு பல்கிப் பெருகும்.அது நல்லதாகவும், கெட்டதாகவும் இருக்கலாம். புறமனது உலக விஷயங்களை, அனுபவங்களை வாங்கி ஆழ்மனது மூலம் பதிவுகளைத் தருகின்றன.பல நேரம் புறமனது வழியாகவே ஆழ்மனதுக்கு செய்திகளின் பதிவு நடக்கின்றன. சில நேரம் புறமனது தவிர்த்தும் ஆழ்மனதில் சில பதிவுகள், சிந்தனைகள் பதிவு ஏற்படும். அதன் தாக்கம் அதனால் உருவாகும் உன்னத செயல்கள் வாழ்வில் பிரமிப்பை அளிக்கும். அது  நிலையில் உன்னத, பூரண நிலை எய்தும்.
புறமனது :புற மனது & மேல் மனது & ஐந்து இந்திரியங்களின் துணையுடன் இயங்குகிறது. நம்மை சுற்றிய சூழல் செயல்பாடுகள். அதன் மூலம் பொது அறிவு, கல்வி, அனுபவம் மூலம் புற மனம் செயல்படுகிறது.சூழல் மாறும் சமயம் புறமனது செயல்பாடுகளை உடன் மாற்றும், உயிரைக் காப்பாற்றும் அவசர நடவடிக்கையில் நமது புற மனமும், செயலும் எப்படி இருக்கும் என தீர்மானிக்க இயலாது.                                                                                                             

 ஆழ்மனது:
ஆழ்மனது உணர்ச்சிகளின் சங்கமத்தால் இயங்கும். மேலும் முக்கிமான எண்ணங்களின் பதிவு அலுவலகம், சேமிக்கும் அறை  எனலாம். ஆழ்மனது நமது உடம்பில் இருந்து வெளிசென்று வரலாம். நினைத்தவுடன் வேறு இடம், உலகு, நாடு சென்று வரும். பல சமயம் டெலிபதி  மூலம் காரண மனது அறியாமல்  பல செய்திகள், தீர்வுகளை, உண்மை விஷயங்களை உணர்த்தும்.பல நேரம் ஆழ்மனதின் செயல்பாடுகள் புரியாத புதிராக இருக்கும். பிரமிக்கத்தக்கதாக இருக்கும். ஆச்சரியப்பட வைக்கும். அதிகாலை நேரமும் தியான சமயத்திலும் ஆழ்மனதின் ஓட்டத்துடன் புறமனது இணைந்தி டுவதால் இயங்குவதால் அளப்பரிய உன்னத பிரமிப்பு ஊட்டும். மாயாஜால சக்திகளைப் பெற்றிடுகிறோம். அனுபக்கிறோம். பிறருக்கும் வல்லமை வழங்கும் வலிமையைப் பெறுகி றோம். ஆரோக்கியம் அடைகிறோம். மன அழுத்தம் சமன் ஏற்பட அதுவே உகந்த காலம் & நமது ஆர்வ சக்தி, வாழ்க்கை சக்தி பேட்டரி முழு அளவில் அப்பொழுது சார்ஜ் செய்யப் படுகிறது.
நமது புறமனது பல நேரம் ஆழ்மனதின் காவல்காரன், வாட்ச்மேன் மற்றும் பல தவறான செய்திகளைத் தவிர்க்கவும், தவறான செயல்களைத் தவிர்க்கவும் செய்கின்றன. சில நேரம் ஆழ்மனது சில குறிப்பிட்ட ஆலோசனை படியும் புறமனதை இணைத்து இயங்கச் செய்யும். பல நேரம்ஆலோசனைக்குசெவிசாய்க்காது.ஒரு பிரச்சனையில் புறமனது பல தீர்வுகளைத் தரும் சமயம் அதன் செயலை அகமனதிடம் ஒப்படைக்க வேண்டும். சரியான நேரத்தில் சரியான ஒரு தீர்வை அகமனதின் மூலம் மறுநாளோ, ஓய்வுநேரத்திலோ, அதிகாலை நேரத்திலோ, தியான நேரத்திலோ உணவு நேரத்திலோ நமக்குத் தந்திடும். பலா இதை உணர்ந்திருக்கலாம்.                                       நம்மில் மறைந்து இருக்கும் அற்புத சக்தியை, மாய உலகை வெளிக் கொண்டுவதில் தியானமும் இயற்கை உணவுகளும் பெரும் பங்கு வகிக்கின்றன.சிந்தனை சக்தி, அறிவு சக்தி, செயல் சக்தி, ஞாபக சக்தி அனைத்தையும் உள்ளடக்கியது மனம்.மனித சக்தி & இரத்தம் ஓட்டம் + காற்று ஓட்டம் + பிராண சக்தி ஓட்டம்.சரியாகக் கவனிக்கவில்லை எனில் குறையும்.இரத்த ஓட்டம்  & பார்க்கலாம் & அறியலாம் & உணரலாம் & நம்மிடம் இருந்து குறைவுபடாது & தளர்வுறும். நம் உடலுக்குள்ளேயே அமைந்தது. காற்று ஓட்டம் & அறியலாம் & உணரலாம். மூக்கருகில் விரல் வைத்துப் பார்த்தும் உணரலாம். பரவெளியில் இருந்து உள் வரும் & வெளியேறும்.பிராண ஓட்டம் & பார்க்க இயலாது. உள் மன ஆற்றலால் உணரலாம்.காந்த சக்தி ஓட்டம் & இயங்க இயங்க சக்தி விரயமாகும். வெளியேறும் தினமும் சார்ஜ் செய்யப்பட வேண்டும்.இரத்த ஓட்டம், காற்று ஓட்டம், பிராண ஓட்டம், வெப்ப ஓட்டம் நமது உடலின் மின்காந்த சக்தி அளவுகளை நிர்ணயம் செய்கின்றன. உடலின் காந்த சக்தி அளவை உயர்த்தும் கலை உள்ளது.                                                                                                                    பிரபஞ்சத்திலும் இவ்வகை சக்தி பரவியுள்ளது. மனம் எனும் கருவியை செம்மைப்படுத்தி, நல்ல விளை நிலமாக்கி பிரபஞ்ச காந்த சக்தி அபிரிதமாகப் பெற்று அற்புதப் பலன் பெற லாம்.வெளிமனம்  துள்ளிடும் மனம். அலை பாயும் மனம் & குரங்கு குட்டிக்கு சமம். தன்னிறைவு கொள்ளாது. ஐம்புலன்  உதவியால் இயங்கும் & அன்றாட வேலைகள். கடமைகளை வெளிமன உதவியுடன் இயல்பாகச் செய்ய இயலுகிறது. வெளிமனம்  சிறப்பாகச் செயல் படாத போது அன்றாடப் பணிகள் நிலை தடுமாறி நமது குணம் மாறுபட்டு அவப்பெயர் அடைகிறோம். மனிதனை எளிதில் தூங்கவிடாது.ஆழ்மனம் ,உள்மனம்: & அபார சக்தி கொண்டது & ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக உள்ளது. அளப்பரிய ஆற்றல்கள் அடங்கிய நிலையில் உள்ளது. உறங்கும் பூதம் எனலாம்.கடல் தண்ணீர் ஒன்றுதான் & மேல் நிலையில் எவ்வளவு ஆர்ப்பாட்ட அலை & அடிப்பகுதி எவ்வளவு அமைதி நிலை & அதுபோலே உள்மனம் & ஆழ்மனம், உள்மனம் பார்க்காமல், கேட்காமல் இயங்கும். உள்மனம் வெளிமனக் கட்டளைப்படி மறுப்பில்லாமல் செய்து முடிக்கும். ஆனால் அவசர காலத்தில் உள்மனக்கட்டளைப் படி மனிதன் செயல்படுகி றான். அவசர காலம் முடிந்தவு டன் வெளிமனம் தனது பொறுப்பை மறுபடி ஏற்றுக் கொள்கிறது.தூங்கும்போது & வெளி மனம் ஓய்வு எடுக்கிறது. உள்மனம் நிறைய நேரம் முழு ஓய்வு எடுப்பதில்லை & அரை குறை விழிப்பு நிலையில் உள்ளது. உள் மனதினால் ஜீரணம், சுவாசம், கழிவு வெளியே ற்றம் பிறந்தது முதல் இறப்பு வரை நடைபெறுகின் றன. அதனால் உள்மனதிற்கு ஓய்வு இல்லை. ஆழ்ந்த, அமைதியான, சுகமான, கவலை யற்ற உறக்கத்தில் உள்மனம் குறுக்கி டுவதில்லை. அதுவும் பூரண ஓய்வெடுக்கிறது. அப்போதும் உயிர் நிலை செயல்கள், ஜீரணம், புதிய திசுக்கள் உருவாகுதல் நடைபெறு கின்றன. சுவாசம் 20 விழுக்காடு நிலையில் நடைபெறுகின்றன. நன்றாக உறங்கியவர்கள் மறுநாள் அதீத சுறுசுறுப்பு, உந்து சக்தி, உற்சாகம், சந்தோஷம் மிகுந்து காணப்படுவர்.மனிதன் மனோ சக்தி மூலம் தேக காந்த சக்தியை பிரபஞ்சத்து சக்தி மூலம் கூட்டும் வல்லமையால் ஆரோக்கியத்தை அடைய இயலும். தேக காந்த சக்தி குறையும் சமயம் ஆரோக்கியம் குறைகிறது. இத்தேக காந்த சக்தி அபரிதமாகும் போது பிறரை வசியப்படுத்தும், குணப்படுத்தும், வல்லமை பெறலாம்.                                                  * தியானத்தின் போது மூளை அணுக்களின் பலம் கூடுகிறது. தினமும் பதினைந்து நிமிடங்களாவது தியானம் செய்ய வேண்டியது அவசியமாகும். காலையிலோ மாலையிலோ எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். தியானத்தின் போது அவசரம் இருக்கவே கூடாது. ஏதாவது ஒரு வேலையச் செய்ய மனதில் நினைத்துக் கொண்டு தியானம் செய்ய ஆரம்பிக்கக் கூடாது. உணவு உட்கொள்வதற்கு முன் செய்ய வேண்டும். உண்ட பின் மூன்று மணிநேர இடைவெளியின் பின் தியானம் செய்யலாம். தன்னம்பிக்கைக்கும் ஆழ்மனதிற்கும் நெருங்கிய தொடர்புண்டு, ஆழ் மனதின் வல்லமை யை தட்டி எழுப்ப நம்பிக்கை தருகின்ற விஷயங்களை, வார்த்தைகளை அதற்கு கொடுத்து க்கொண்டே இருக்க வேண்டும். எத்தனை தோல்விகளை நீங்கள் சந்தித்திருந்தாலும் 'வீழ்வது இழிவல்ல வீழ்ந்தே கிடப்பதுதான் இழிவு' எனவே விழித்துக்கொள், வெற்றியை நோக்கி விரைந்திடு சற்றும் தாமதியாதே என்று ஆழ்மனதில் பதித்துக்கொள்ளுங்கள், உங்கள் லட்சியத்தையும் பெரிதாக வைத்துக்கொள்ளுங்கள்எனவே தன்னம்பிக்கை என்னும் உந்து சக்தியை உயர்ந்த குறிக்கோளை நோக்கி வைங்கள்.



No comments:

Post a Comment