பரமாத்மா, ஆத்மா, உடல் இம்மூன்றின் வினோதனமான விசித்திர விளையாட்டு.
பரமாத்மாவின் ஒரு சிறு அங்கமான ஆத்மா, வானிலிருந்து இறங்கி வந்து, பூமியில் ஓர் உடலை எடுத்து, பஞ்ச பூத சக்திகளின் (ஆகாசம், நெருப்பு, வாயு, காற்று, மண்) துணைக் கொண்டு வழி நடத்துகிறது. அதன் பெயர் பிறப்பு.
ஆன்மா , பஞ்ச பூத சக்திகளின் துணைக் கொண்டு உடலை எடுத்தாலும், சரீர பலத்தால் செய்த துஷ்பிரயோக காரியத்திற்கு உட்பட்ட மும்மலத்தால் ஏற்பட்ட காரியத்திற்கு ஏற்றார் போல் வாழ்க்கை பாதிப்பும், உடல் அங்க ஹீன குறைபாடும். அதன் பெயர் விதி.
ஆன்மா, தான் வசித்த உடலின் மீது , எந்த ஒரு எதிர்ப்பார்ப்பும் இல்லாமல், அதாவது அவ குணங்களான காமம், கோபம், ஆசை, பற்று, அகங்காரம் இவைகளை வாழ்க்கையில் உபயோகம் செய்யாமல், அனைத்து காரிய கடமைகளை , அனைவரின் நன்மை பொருட்டு செய்து, அதன் படி வாழ்க்கையை எதிர்க் கொண்டு வாழ்வது, அதன் பெயர் வைராக்கியம்.
ஆன்மா, தான் வாழும் உடலில், பஞ்ச பூத உயிர் சக்திகளின் மூலம் வாழும் வாழ்க்கையில், உபயோகப் படாத காரியத்திற்கு, உயிரை ,சக்தி மையமாக்கி, உயிருக்கு சக்தி கொடுக்கிறோம். அதன் பெயர் தான் பிரச்சனை, மன கஷ்டம், நஷ்டம்.
ஆன்மா, தான் வாழும் உடலில் பஞ்ச பூத உயிர் சக்தியின் மூலம் வாழும் வாழ்க்கையில், எந்த காரியத்திற்கு நாம் உயிர் சக்தியை பயன்படுத்த வேண்டும் என்று தெரியாமல், உயிர் சக்தியை மதிக்காமல், தன் இஷ்டம் போல் மமதையாக வாழ்வதினால் தான் வாழ்க்கையே பிரச்சனை.
ஆன்மா, தான் வசித்த உடலை, இறை நிலைக்கு பயன்படுத்தாமல் , எந்த ஒரு புது முயற்சிக்கு உண்டான செயலையும் செய்யாமல், மீண்டும் தன் ஆன்ம உலகத்திற்கு போக வேண்டும் என்று அறியாமையில் அடம் பிடிப்பது , அதன் பெயர் சந்நியாசம்.
ஆன்மா , தான் வசித்த உடலில், அனைத்து தகுதியினை பெற்றிருந்தாலும், எதிர்பாராத விதமாக ஏற்படும் அசம்பாவிதம் காரணமாக , ஆன்மா உடலை இழந்தால், அதன் பெயர் அகால மரணம்.
ஆன்மா , தான் வசித்த உடலில், அனைத்து தகுதியினை பெற்றிருந்தாலும் ,தன் உடலை தானே அழித்து, அதனின்று ஆன்மா வெளியேறினால் , அதன் பெயர் தற்கொலை .
ஆன்மா, தான் வசித்த உடலில் , பஞ்ச பூத சக்திகள் சமநிலையற்ற நிலைக்கு வரும்போது, வியாதியின் காரணமாக பிராணனும், உயிர் சக்தியும் ஒடுங்கி, உடலை விட்டு வெளியேறும் போது, ஆன்மா வாழும் தகுதியை இழந்து உடலை விட்டு வெளியேறும் போது, பயத்துடன் ஆன்மா உடலை விட்டு செல்ல வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டால் , அதன் பெயர் மரணம்.
ஆன்மா, பஞ்ச பூத சக்திகளின் சமநிலைக்கு அப்பாற்பட்ட நிலை ஏற்படும் போது, பிராணன் ஒடுங்கி, உயிர் உடலை விட்டு வெளியேறும் போது, வாழும் உடலை விட்டு விட்டு, மீண்டும் இன்னொறு உடலை தேர்ந்தெடுக்கும் நிலைக்கு, அதன் பெயர் மருபிறப்பு .
ஆன்மா, தான் வசித்த உடலில் வாழ்ந்தபடியே, பரமாத்மா உலகிற்கு செல்வதற்க்காக, தன்னை தான், ஓர் இடத்தில் முற்றிலுமாக முடக்கி கொள்வது , அதன் பெயர் ஜீவன் சமாதி நிலை (ஜீவ சமாதி)
ஆன்மா, தான் வசித்த உடலை விடும் போது, அடுத்து எந்த உடலை எடுக்கப் போகிறோம் என்பதை முன்னரே அறிந்து, மரண பயமின்றி ஒரு சட்டையை மாற்றுவது போல், அதனை மிக மகிழ்ச்சியாக செய்தால், அதன் பெயர் ஜீவ முக்தி.
ஆன்மாவானது, வாழும் உடலை விட்டு விட்டு, வேறொரு உடலை, ஆடையை மாற்றுவது போல் எடுத்ததின் காரணம், பரமாத்மாவின் தூய ஒளிப் போன்று, ஆன்மாவானது , ஆன்மாவில் ஏற்பட்டுள்ள மும்மல அழுக்குகளை கலைந்து, ஆன்மா தன்னை, தூய தாக்கி பரமாத்மாவுடன் இணைவதற்க்கே, அவ்வாறு மீண்டும் எடுத்த உடலில் மும்மலங்கள் கழியவில்லை என்றால், வேறொரு உடலை மீண்டும் எடுக்க வேண்டிய நிலைக்கு ஆளாகி, ஆன்மாவுடன் பரமாத்மாவும் வேறொரு உடலில் வடிவம் கொள்கிறது. ஆக ஆன்மாவுடன் பரமாத்மாவும் கண்காணிப்பதனால், ஆன்மாவின் பாதிப்பினால் பரமாத்மாவுக்கும் பாரமாகியதே, ஆக பரமாத்மாவே, ஆன்மாவில் ஏற்பட்ட மும்மலப்பாவங்கள் எந்நாள் கழியுமோ, பரமாத்மாவே, ஆன்மாவை அருள் புரிந்து ஏற்றுக் கொள்வீர்களாக
பிறப்பு, இறப்பானது ஒவ்வொரு யுகத்திற்கும் மாறுபடும்.
சத்தியயுகம், திரேதாயுகத்தில்
ஜீவன்முக்தி.
துவாபர யுகத்தில் *ஜீவசமாதி, சந்நியாசம், மரணம்.
கலியுகத்தில் *மரணம், அகால மரணம், தற்கொலை.
சங்கம யுகத்தில் வைராக்கியம்.
இதுவே ஞானம், பக்தி மற்றும் வைராக்கிய சுழற்சியாகும்.
No comments:
Post a Comment