Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, May 22, 2019

பரமாத்மா, ஆத்மா, உடல் இம்மூன்றின் வினோதனமான விசித்திர விளையாட்டு.

பரமாத்மா, ஆத்மா, உடல் இம்மூன்றின் வினோதனமான விசித்திர விளையாட்டு.

பரமாத்மாவின் ஒரு சிறு அங்கமான ஆத்மா, வானிலிருந்து இறங்கி வந்து, பூமியில் ஓர் உடலை எடுத்து, பஞ்ச பூத சக்திகளின் (ஆகாசம், நெருப்பு, வாயு, காற்று, மண்) துணைக் கொண்டு வழி நடத்துகிறது. அதன் பெயர் பிறப்பு.

ஆன்மா , பஞ்ச பூத சக்திகளின் துணைக் கொண்டு உடலை எடுத்தாலும், சரீர பலத்தால் செய்த துஷ்பிரயோக காரியத்திற்கு உட்பட்ட மும்மலத்தால் ஏற்பட்ட காரியத்திற்கு ஏற்றார் போல் வாழ்க்கை பாதிப்பும், உடல் அங்க ஹீன குறைபாடும். அதன் பெயர் விதி.

ஆன்மா, தான் வசித்த உடலின் மீது , எந்த ஒரு எதிர்ப்பார்ப்பும் இல்லாமல், அதாவது அவ குணங்களான காமம், கோபம், ஆசை, பற்று, அகங்காரம் இவைகளை வாழ்க்கையில் உபயோகம் செய்யாமல், அனைத்து காரிய கடமைகளை , அனைவரின் நன்மை பொருட்டு செய்து, அதன் படி வாழ்க்கையை எதிர்க் கொண்டு வாழ்வது, அதன் பெயர் வைராக்கியம்.

ஆன்மா, தான் வாழும் உடலில், பஞ்ச பூத உயிர் சக்திகளின் மூலம் வாழும் வாழ்க்கையில், உபயோகப் படாத காரியத்திற்கு, உயிரை ,சக்தி மையமாக்கி, உயிருக்கு சக்தி கொடுக்கிறோம். அதன் பெயர் தான் பிரச்சனை, மன கஷ்டம், நஷ்டம்.

ஆன்மா, தான் வாழும் உடலில் பஞ்ச பூத உயிர் சக்தியின் மூலம் வாழும் வாழ்க்கையில், எந்த காரியத்திற்கு நாம் உயிர் சக்தியை பயன்படுத்த வேண்டும் என்று தெரியாமல், உயிர் சக்தியை மதிக்காமல், தன் இஷ்டம் போல் மமதையாக வாழ்வதினால் தான் வாழ்க்கையே பிரச்சனை.

ஆன்மா, தான் வசித்த உடலை, இறை நிலைக்கு பயன்படுத்தாமல் , எந்த ஒரு புது முயற்சிக்கு உண்டான செயலையும் செய்யாமல், மீண்டும் தன் ஆன்ம உலகத்திற்கு போக வேண்டும் என்று அறியாமையில் அடம் பிடிப்பது , அதன் பெயர் சந்நியாசம்.

ஆன்மா , தான் வசித்த உடலில், அனைத்து தகுதியினை பெற்றிருந்தாலும், எதிர்பாராத விதமாக ஏற்படும் அசம்பாவிதம் காரணமாக , ஆன்மா உடலை இழந்தால், அதன் பெயர் அகால மரணம்.

ஆன்மா , தான் வசித்த உடலில், அனைத்து தகுதியினை பெற்றிருந்தாலும் ,தன் உடலை தானே அழித்து, அதனின்று ஆன்மா வெளியேறினால் , அதன் பெயர் தற்கொலை .

ஆன்மா, தான் வசித்த உடலில் , பஞ்ச பூத சக்திகள் சமநிலையற்ற நிலைக்கு வரும்போது, வியாதியின் காரணமாக பிராணனும், உயிர் சக்தியும் ஒடுங்கி, உடலை விட்டு வெளியேறும் போது, ஆன்மா வாழும் தகுதியை இழந்து உடலை விட்டு வெளியேறும் போது, பயத்துடன் ஆன்மா உடலை விட்டு செல்ல வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டால் , அதன் பெயர் மரணம்.

ஆன்மா, பஞ்ச பூத சக்திகளின் சமநிலைக்கு அப்பாற்பட்ட நிலை ஏற்படும் போது, பிராணன் ஒடுங்கி, உயிர் உடலை விட்டு வெளியேறும் போது, வாழும் உடலை விட்டு விட்டு, மீண்டும் இன்னொறு உடலை தேர்ந்தெடுக்கும் நிலைக்கு, அதன் பெயர் மருபிறப்பு .

ஆன்மா, தான் வசித்த உடலில் வாழ்ந்தபடியே, பரமாத்மா உலகிற்கு செல்வதற்க்காக, தன்னை தான், ஓர் இடத்தில் முற்றிலுமாக முடக்கி கொள்வது , அதன் பெயர் ஜீவன் சமாதி நிலை (ஜீவ சமாதி)

ஆன்மா, தான் வசித்த உடலை விடும் போது, அடுத்து எந்த உடலை எடுக்கப் போகிறோம் என்பதை முன்னரே அறிந்து, மரண பயமின்றி ஒரு சட்டையை மாற்றுவது போல், அதனை மிக மகிழ்ச்சியாக செய்தால், அதன் பெயர் ஜீவ முக்தி.

ஆன்மாவானது, வாழும் உடலை விட்டு விட்டு, வேறொரு உடலை, ஆடையை மாற்றுவது போல் எடுத்ததின் காரணம், பரமாத்மாவின் தூய ஒளிப் போன்று, ஆன்மாவானது , ஆன்மாவில் ஏற்பட்டுள்ள மும்மல அழுக்குகளை கலைந்து, ஆன்மா தன்னை, தூய தாக்கி பரமாத்மாவுடன் இணைவதற்க்கே, அவ்வாறு மீண்டும் எடுத்த உடலில் மும்மலங்கள் கழியவில்லை என்றால், வேறொரு உடலை மீண்டும் எடுக்க வேண்டிய நிலைக்கு ஆளாகி, ஆன்மாவுடன் பரமாத்மாவும் வேறொரு உடலில் வடிவம் கொள்கிறது. ஆக ஆன்மாவுடன் பரமாத்மாவும் கண்காணிப்பதனால், ஆன்மாவின் பாதிப்பினால் பரமாத்மாவுக்கும் பாரமாகியதே, ஆக பரமாத்மாவே, ஆன்மாவில் ஏற்பட்ட மும்மலப்பாவங்கள் எந்நாள் கழியுமோ, பரமாத்மாவே, ஆன்மாவை அருள் புரிந்து ஏற்றுக் கொள்வீர்களாக

பிறப்பு, இறப்பானது ஒவ்வொரு யுகத்திற்கும் மாறுபடும்.

சத்தியயுகம், திரேதாயுகத்தில்
ஜீவன்முக்தி.

துவாபர யுகத்தில் *ஜீவசமாதி, சந்நியாசம், மரணம்.

கலியுகத்தில் *மரணம், அகால மரணம், தற்கொலை.

சங்கம யுகத்தில் வைராக்கியம்.

இதுவே ஞானம், பக்தி மற்றும் வைராக்கிய சுழற்சியாகும்.

No comments:

Post a Comment