Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, May 22, 2019

வள்ளலார் கொடுத்த சவுக்கடி !

வள்ளலார் கொடுத்த சவுக்கடி !

கடவுள் பல உண்டு என்பவருக்கும்.கடவுள் இல்லை எனபவருக்கும் சரியான பாடலால்  சவுக்கடி கொடுத்தவர் வள்ளலார்..

கடவுளின் உண்மைத் தெரியாமல் தத்துவங்களை கடவுள்களாக பாவித்து படைத்து ஆலய வழிபாட்டை உறுவாக்கினார்கள்..

ஆலயங்களைக் கட்டியவர்கள் அக்கால மன்னர்கள்...

மன்னர்களை
அவர்களின் ஆட்சியை புகழ்ந்து பாடி பேசி ஏமாற்றி அவர்களை நம்ப வைத்து ஆலயங்களை எழுப்ப வைத்தது ஒரு கும்பல்..

தங்களுடைய சுய நலத்திற்காக வேதம் ஆகமம்.புராணம்.
இதிகாசங்கள் போன்ற பொய்யான காவியங்களை கற்பனைகளாகப் படைத்து மக்களையும்,
மன்னர்களையும். கடவுளின் பெயரால்  நம்ப வைத்து ஏமாற்றி பிழைத்து கொண்டு வந்துள்ளார்கள்..
அவர்களுக்கு உயர்ந்த சாதி என்றும் உயர்ந்த பதவி என்றும் மன்னர்கள் கொடுத்து வந்தார்கள்.

கடவுள் பெயரால். சாதி.சமய.
மதங்களைத் தனித்தனியே பிரித்து மக்களை.உயர்ந்த சாதி.தாழ்ந்த சாதி எனப்பிரித்து மக்களை அடிமைப்படுத்தி அலைய விட்டார்கள்..

ஒவ்வொரு சாதிக்கும்.சமயத்திற்கும்.மதத்திற்கும் தகுந்தாற்போல் கடவுளையும் பிரித்து வைத்து விட்டார்கள்...

அதிலே சைவக்கடவுள்.அசைவக்கடவுள் என பிரித்து வைத்து விட்டார்கள்.
அதாவது உயிர்களை பலிவாங்கும் தெய்வங்கள்.
பலிவாங்காத தெய்வங்கள் என பிரித்து,ஒவ்வொரு தெய்வத்திற்கும் வெவ்வேறு பெயர்களை வைத்து நம்ப வைத்து விட்டார்கள்.

சுமார் ஐந்து ஆயிரம் ஆண்டுகளாக கடவுளின் உண்மைத் தெரியாமல்  இந்த மோசடி செயல்கள் உலகம் முழுவதும் நடந்து வருகின்றன..

வள்ளலார் சகட்டுமேனிக்கு எல்லாத் தெய்வங்களையும் சிறு தெய்வங்கள் என்றும்.சிறு தெய்வ வழிபாடு வேண்டாம் என்றும் ஆணித்தரமாக சொல்லிவிட்டார்.

உண்மைக் கடவுள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் வருவிக்க உற்ற வள்ளலார் வந்து வாழ்ந்து இறைவன் அருளைப் பெற்று மரணத்தை வென்று.கடவுளின் உண்மையை உலகிற்கு பறை சாற்றுகிறார்..

தெய்வங்கள் பலப்பல உண்டு என்பவர்களுக்கும் அவற்றைப் படைத்தவர்களுக்கும் .வழிபடுபவர்களுக்கும்.அறிவு தெளிவு இல்லை.

அறிவு இல்லாமல் பல தெய்வங்களை வழிபாடு செய்து வணங்கி வருகிறார்கள். அவர்களுக்கு உண்மை அறிந்து கொள்ள அறிவை கொடுங்கள் என்று... உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி யிடம் மக்களுக்காக வேண்டுகின்றார்.

மேலும் வேதம் ஆகமம் புராணம் இதிகாசங்கள் யாவும் பொய் அவற்றை நம்பாதீர்கள்...

மக்களுக்கு உண்மையை சொல்லாமல் பொய்யானவற்றை சொல்லி மக்களை ஏமாற்றுவதால் என்ன பயன் அடையப் போகிறார்கள்.போகிறீர்கள் என்பதை தெளிவாக பறை சாற்றுகிறார்..

எல்லா உலகத்திற்கும் ஒரே கடவுள் தான் உண்டு அவரே அருட்பெருஞ்ஜோதி யாக எல்லா உயிர்களையும் இயக்கிக் கொண்டு உள்ள அருள் ஆற்றல் படைத்த இயற்கை உண்மை என்னும் அருள் ஒளிதான் தனிப்பெரும் தலைமை கடவுள் என்பதை அறிந்திடாத.உணர்ந்திடாத .சமய மதவாதிகள்  பொய்யான சாத்திரங்களையும் அதற்குண்டான கடவுள்களையும் படைத்து எமது தெய்வம் .எமது தெய்வம் என்று பங்குபோட்டு வணங்கி வழிபாடு செய்து.. அவர்களும் அழிந்து.மக்களையும் அழிய வைத்து விட்டார்கள் ...

கடவுளின் உண்மையை தெரிவித்த வள்ளலார் மீது..சமய மதவாதிகள்  கடுமையான கண்டனம் தெரிவித்து.அவர் எழுதிய திருஅருட்பாவை மருட்பா என்று வாதம் செய்து நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தோல்வி அடைந்தார்கள்...

எனவே கலையை உரைக்க  வந்த கற்பனைக் கதைகளை நம்பி ஏமாறாதீர்கள் என்று..இருட்டில்  தவித்த  மக்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர் வள்ளலார்..

 கலை உரைத்த கற்பனையை நிலையானது என்றும் உண்மை என்றும் கண்மூடித்தனமாக மக்களை நம்ப வைத்த கற்பனைக் கதைகள் அனைத்தையும் மண்ணில் போட்டு புதைக்க வேண்டும் என்கிறார் வள்ளலார்...

இப்படி எவரும் சொல்லாத சொல்லமுடியாத உண்மைகளை உலக மக்களுக்கு எடுத்து உரைத்து,உண்மை ஒழுக்க நெறிகளை கடைபிடித்து...மக்கள் நல்வாழ்வு  வாழ்வதற்கு நல்வழிக் காட்டியவர் தான் வள்ளலார்...

கடவுள் இல்லை என்பவர்கள் !

சில
பகுத்தறிவாளர்கள்.
மற்றும் நாத்தீகம் பேசுபவர்கள் கடவுள் இல்லை.இல்லவே இல்லை என்பவர்களுக்கு வள்ளலார் சரியான பதிலடி கொடுக்கின்றார்...

 இறைவனைப் பற்றியும் நம் உடம்பில் இறைவன் எவ்வாறு இயங்கிக் கொண்டு உள்ளார் என்பதையும் அனுபவித்து சொல்லிக் கொண்டே வந்து இறுதியில் ...

நாத்திகம் சொல்கின்றவர் தம் நாக்கு முடை நாக்கு என்றும் அவர்கள் நாக்கு ருசிக் கொள்வது நாறிய பிண்ணாக்கு என்கிறார்...

நாக்கு முடை நாக்கு என்றால் ஊமையன் என்பதாகும் ..

நாரிய பிண்ணாக்கு என்றால் மலம் என்பதாகும் ..

கடவுள் இல்லை என்பவன் ஊமையன் என்றும் அவன் நாக்கு ருசிக் கொள்வது மலம் தின்பதற்கு சமமானது  என்கிறார்..

இதைவிட கீழ்த்தரமான வார்த்தைகளே கிடையாது...

எனவே பல கடவுள் உண்டு என்று வழிபடுபவன் பைத்தியக்காரன் என்றும்..

கடவுள் இல்லை என்பவன் தன்னையே ஏமாற்றிக் கொள்பவன் என்றும்.

கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி ! ஆண்டவர் என்று அறிந்தவன் உண்மையான அறிவுள்ளவன் என்றும் புரிந்து தெரிந்து அறிந்து கொள்ள வேண்டும்..

எப்படி இருப்பினும் எவ்வளவு தாழ்ந்த தரத்தில் உள்ளவர்களாய் இருந்தாலும் அவர்களையும் நம்மவர்களாக்கி கொள்வதே வள்ளலார் காட்டும் சுத்த சன்மார்க்க ஆன்மநேய  ஒருமைப்பாட்டு உரிமையாகும்.....
மனித நேயமாகும்.

உலகில் உள்ள எல்லா ஆன்மாக்களும் உயிர்களும்.  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் படைக்கப்பட்டது  என்பதுவே உண்மையாகும்.

சிந்திப்போம் திருந்துவோம் செயல்படுவோம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

No comments:

Post a Comment