இதிகாசத்திலும், புராணத்திலும் பூமியில் அவதரித்த அவதார புருஷர்களை வணங்குவதை விட்டு விட்டு ,
பூமியில் தோன்றிய அவதார புருஷர்களை விட ,
பல்லாயிரம் மடங்கு மேம்பட்ட பரமாத்மாவை மனிதர்கள் வணங்குவது தான் தலை சிறந்த, தலையாய கடமையுமாகும், நன்றியுமாகும்.
அவ்வாறு வணங்குவது மூலம் தான்,
மனிதர்கள் பிறவியற்ற நிலைக்கு ஆளாக முடியும்.
ஏனெனில் அவர் தான் எல்லோருக்கும் தந்தை.
அவர் நம் சரீரத்திலே இருந்து நம்மை கண்காணிக்கிறார்.
அவரே ஒன்றே குலம். ஒருவனே இறைவனாகும்.
இதுவே அண்ட ஆகாசத்தில் உள்ள இறைவன் ,நம் பிண்ட உடலிலே இருக்கிறார்.
பரிசுத்த ஆன்மாவாக உள்ள பரமாத்மா, எப்பொழுதும்,
எள்ளலவும் பாவம் செய்யாத இறைவன்,
நம் சரீரத்திலே செம்மண் நிறமாக, நட்சத்திர பிழம்பாக,
இறைவன் மனிதனுக்கு கொடுத்த சரீரத்தில்,
சரீரத்தில் உள்ள ஆன்மாவை கண்காணித்து கொண்டிருக்கிறார்.
மனிதன் உபயோகிக்க கூடிய நான்,எனது, என்னுடையது என்ற வார்த்தை தவறானதே,
மனிதன் உபயோகிக்கும் சரீரத்தை,
என்னுடைய சரீரம் என்று மனிதன் ஆணித்தரமாக கூற முடியாது.
மனிதன் உபயோகிக்கும் பொருளை,
என்னுடையது என்று மனிதன் ஆணித்தரமாக கூற முடியாது.
மனிதன் உபயோகிக்கும் சொத்துக்களை,
என்னுடையது என்று மனிதன் ஆணித்தரமாக கூற முடியாது.
மனிதர்களுடைய தாய், தகப்பன், மனைவி, கணவன் , மகன், மகள்,
என்னுடையது என்று ஆணித்தரமாக மனிதன் கூற முடியாது.
மனிதன் உபயோகிக்கும் இவைகள் அனைத்தும்,
பூமியில் உள்ள அனைத்து ஜீவராசிகளையும் வழிநடத்தும் பகவானுடையதே.
இவைகளில் எதுவுமே மனிதன் ஆரம்ப காலம் முதல், கடைசி காலம் வரை மனிதன் சொந்தம் கொண்டாட முடியாது.
ஏனெனில் அனைத்தும் பகவானுடையதாகும்.
ஆகையால் தான் மனிதன், என்னுடைய சரீரம் என்று கூறிக் கொண்டிருந்தவன்,
சரீரத்தில் உள்ள உயிர் பிரியும் நேரத்தில், பகவானுடைய நிலைக்கு உள்ளதால்,
சரீரத்தை, பூமியில் விட்டு, விட்டு செல்கின்றான்.
மேலும் பூமியில் இருந்து கொண்டு,
உண்டு, வளர்ந்து, வாழ்ந்த உடலை பூமியிலே விட்டு செல்ல வேண்டும் என்ற நியதி உள்ளதால்,
சரீரத்தை பூமியிலே விட்டு செல்கின்றான்.
ஒருவரை ஒருவர் மனதால் தேர்ந்தெடுத்த
கணவன் மனைவியாயினும்,
பெற்றெடுத்த பிள்ளைகளாயினும்,
உழைத்த பணம் பொருளாயினும் அனைத்தும் பகவானுடையதே.
அவ்வாறாக பூமியில் உள்ள ஓரறிவு முதல் ஆறரிவு வரை உள்ள அனைத்து ஜீவராசிகளும் பகவானுடைய குழந்தைகளாவார்கள்.
பூமி என்பது அனைத்து ஜீவராசிகளுக்கும் ஒரு நாடக மேடை.
பூமிக்கு வந்தோமா , உயிர் உள்ளவரை நாடகம் ஆடினோமா,
நாடகம் முடிந்ததும் போய் கொண்டே இருக்க வேண்டும்.
பூமியில்,எந்த ஜீவராசிகளுக்கும் எந்த உடைமைகளும் சொந்தம் இல்லை.
மனிதர்களுக்கு எதுவும் நிரந்தரமும் இல்லை, எதுவும் நிலையானதும் இல்லை.
இவ்வாறு இருக்க என்னுடைய உடல், என்னுடைய சொத்து , என்னுடைய பணம் என்று மனிதன் எவ்வாறு கூற முடியும்?.
பின்னே மனிதன் உபயோகிக்கும் நான் , எனது, என்னுடையது என்கின்ற சொல் எதைப் பற்றி கூறுகிறான் ?
மனிதன் முற்பிறவியில் செய்த பாவச் செயல்களை நீக்குவதற்கு,
ஆன்மாவே, பரமாத்மாவின் ஆசியோடு ஒரு உடலை எடுக்கிறது.
ஆன்மா எடுத்த உடலை வழி நடத்துவதற்கு ,பஞ்ச பூத சக்தியின் துணைக் கொண்டு,
ஆன்மா, உயிர் சக்தி என்ற நிலைக்கு உடலை வழி நடத்துகிறது.
பஞ்ச பூத சக்திகள் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயமாகும்.
பஞ்ச பூத சக்தி மூலம் சரீரம் வழி நடத்தி, வாழ்ந்து கொண்டிருப்பது அறியாமல்,
தான்தோன்றித்தனமாக நான், நான் என்று கூறுகின்றான்.
மனிதன் ஆகப்பட்டவன் நான் தான் உழைத்தேன், உழைத்ததனால் கிடைத்தப் பணம், அதன் மூலம் கிடைத்த சொத்து,
என்னுடைய தாய் தகப்பன், கணவன், மனைவி, பிள்ளைகள் என்றெல்லாம் போலித்தனமான சொந்தம் கொண்டாடுகிறான்.
போலித்தனமான சொந்தம் கொண்டாட்டங்களின் மூலம்,மேலும் பாவத்தையே சம்பாதிக்கின்றான்.
பாவத்தையே சம்பாதிப்பதன் காரணம் ,
பூமி என்பது என்ன? நம்மை யார் படைத்தது?நாம் எதற்க்காக பூமியில் வந்தோம்? நம்முடைய அவதார கோலம் என்ன?நம்மை பின்னி பிணைத்திருக்கும் சொந்தங்கள் யார்? நம் மூலம் உருவான, கருவான பிள்ளைகள் யார்? நம்முடைய வாரிசுகள் நமக்கு எதற்கு?
இவைகள் எல்லாம் எதற்க்காக என்று அறியாமல்,
படைத்தவனையும், சரீரத்தை வழிநடத்துபவனையும் அறியாமல், அறிய முற்படாமல்,
படைத்தவன் யார் என்ற நிலையே அறிந்து கொள்ளாமல்,
நான் தான்,எனது, என்னுடையது என்ற மிருகத்தனமான கோட்பாடின் மூலம், தான்தோன்றித்தனமாக வாழ முற்படும்போது,
பலவந்தமான பாவத்திற்கும், பாவத்தின் மூலம் கஷ்ட நஷ்டத்திற்கும், தீராத வியாதிக்கும் ஆளாகி , வினைப்பயனை அதிகமாக்கி,
முற்பிறவி பாவமும் கலையாமல், இப்பிறவி பாவமும் கூடுதலாக்கி,
அடுத்த பிறவிக்கு மீண்டும் பிறக்கும் நிலைக்கு ஆளாகின்றான்.
மனிதன் ஆகப்பட்டவன் எண்ணம், சொல், செயல் என்ற முக்காரண குணத்தின் அடிப்படையில்,
முக்குண விளைவுகளான சத்வம்,ரஜோ,தமோ நிலைகளுக்கு உட்பட்டு வாழ முற்படும் போது,
குணத்தின் விளைவால் மனதை நாசம் செய்யும்போது,
அவனையே அறியாமல் நான்,எனது, என்னுடையது என்ற வார்த்தைகளை உபயோகிக்கிறான்.
மனம் கொண்டவனே ஈசன்.
குணத்தின் அடிப்படையில் மனிதனாகப்பட்டவன்,
மனம் என்கின்ற நிலைக்கு தள்ளப்பட்டு ஈசனையே அவமதிக்கிறான்.
இருப்பினும் மனம் கொண்ட ஈசனே, மனிதனின் கடைசி காலம் வரை இருக்கின்றான்.
எவன் ஒருவன் இயற்கையின் இறை சட்டப் பிடியிலிருந்து மாறி வாழ்கின்றானோ,
அவர்களுக்கு எல்லாம் மூன்று விதமான தண்டனைகள் அனுபவித்தே ஆக வேண்டும்.
அதில், நம்மால் வரும் தடைகள், பிறரால் வரும் தடைகள், இயற்கையால் வரும் தடைகள்.
இங்கு தடைகள் என்பது கஷ்டம், நஷ்டம், வியாதி கண்டம், சொல்லண்ணா துயரம், வீண் பழி, அவமானப்படுதல் இன்னும் ஏகபோக காரணங்கள்.
இதை அறியாத மனிதர்கள், மனதை, அதாவது ஈசனை அவமதித்து விட்டு,
என்னுடைய மனம் சரியில்லை என்றும்,
சரியில்லா மனதால் வியாதி வந்துவிட்டது என்றும்,
நான்,எனது, என்னுடையது என்ற போலித்தனமான வார்த்தைகளை உபயோகிக்கின்றான்.
எண்ணம், சொல், செயல் = குணம் (மனிதன்).
மனம் = ஈசன்.
மனமே குரு.
மனமே ஈசன்.
ஆக, இது போன்ற தீய விளைவுகளிலிருந்து,
நரகத்திற்கு உட்பட்ட கொடிய, தீங்கான வாழ்க்கையிலிருந்து விடுபட,
:::::::::::::::::::::::::::::::::::
என்னுடைய தந்தை பரமாத்மா அழிவற்றவர்.
தந்தையாகப்பட்டவர் செம்பழுப்பு நிறமாக, நட்சத்திரத்திற்க்கு எல்லாம் உயர்ந்த நட்சத்திரமாக,
நட்சத்திரபிழம்பாக உலகையும், அனைத்து ஜீவராசிகளையும் கண்காணித்து கொண்டு இருக்கிறார்.
அந்த பரமாத்மாவே இந்த சரீரத்திலும் அணுவாக இருக்கிறார்.
நான் ஒரு ஆன்மா,
என்னை நெருப்பால் எறிக்க முடியாது.
நீரால் நனைக்க முடியாது.
என்னை வெட்டவும் முடியாது,
என்னை கொள்ளவும் முடியாது.
கொல்லப்படுவதெல்லாம்,
அழிக்கப்படுவதெல்லாம்,
காயப்படுத்துவதெல்லாம்,
துக்கமும், வேதனையும், மன துயரம் படுவதெல்லாம்,
பஞ்ச பூதத்தால் உண்டான சரீரத்திற்கே,
என்னுடைய ஆன்மாவிற்கு அல்ல.
சரீரம் சட்டையை போன்றது.
சட்டையை எவ்வாறு மாற்றி கொள்கிறோமோ,அது போல்,
சரீரம் அடுத்த பிறவியில் மாறும்.
நான் ஒரு அழிவற்றவன்.
என்னுடைய ஆன்மாவில் உள்ள பாவப்புண்ணியத்தை கலைய,
நானே பிறவி எடுத்து,
என்னுடைய ஆன்மாவிற்கேற்ற சரீரமெடுத்து,
புருவ மையத்தில் உயிர் சக்தியாக பஞ்ச பூதத்தின் துணையால்,
இந்த சரீரத்தை வழி நடத்தி செயல்படுகின்றேன்.
என்னுடைய அனைத்து செயல்களையும் பரமாத்மா கண்காணித்து கொண்டிருக்கிறார்.
பரமாத்மாவின் அருளால்,
என்னுடைய ஆன்மாவையும், பஞ்ச பூத அருளால் உள்ள சரீரத்தையும்,
சரீரத்திற்கு ஏற்படுகின்ற அனைத்து செயல்களையும் ஆசிர்வதித்து வழி நடத்துகிறார்.
இந்த சரீரத்தையும், சரீரத்தில் உள்ள ஆன்மாவையும், நல்வழி பாதையில் கொண்டு சென்று, ஆரோக்யமாய் வழி நடத்தும் பரமாத்மாவே,
இந்த சரீரத்திற்கு தேவையான சகல ஐஸ்வரியமும் கொடுத்து கொண்டிருக்கும் பரமாத்மாவே,
இந்த சரீரத்தை சுற்றியுள்ள கோடான கோடி மக்களின் நடுவே பாதுகாத்து கொண்டிருக்கும் பரமாத்மாவே,
இந்த சரீரத்திற்கு இயற்கையிலிருந்து ஏற்படுகின்ற சீற்றத்திலிருந்தும்,
ஜீவான்மாவால் ஏற்படுகின்ற எழுச்சியிலிருந்தும்,
பிறரால் ஏற்படக்கூடிய எண்ணற்ற இச்சைக்கு உண்டான தடையிலிருந்தும்,
இந்த சரீரத்தை பாதுகாத்து வழி நடத்தி கொண்டிருக்கும் பரமாத்மாவே,
என்னுடைய இந்த ஆன்மாவால் ஏற்ப்பட்ட, ஏற்படுகின்ற பாவப்புண்ணியத்தைதங்கள் திருவடியில் சமர்ப்பிக்கிறேன்.
பரமாத்மாவே,இந்த ஆன்மாவை ஏற்றுக்கொண்டு பிறவி அற்ற நிலைக்கு ஆளாக்குவீர்களாக என்று மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்.
தங்களுக்கு கோடான கோடி பாத வணக்கங்களும், நன்றிகளும்.
No comments:
Post a Comment