பணம் எனும் காகிதம் மட்டுமே பலரது நிம்மதிகளை அள்ளித்தின்று விடுகிறது...
அவமானங்களையும்அள்ளித்தர தயங்காத ஒன்றும் அதுவே...*
அங்கே மட்டும் எந்த ஜாதியும்,எந்த தீண்டாமையும்
சம்மணமிட்டு கொள்வதில்லை...
பாவங்களும்,குற்றங்களும் போக்க இப்போதெல்லாம்
பணம் மட்டுமே போதுமாகிப் போகிறது...
பதவிக்காகவும், அதிகார துஷ்பிரயோகத்திற்க்காகவும் பணம் மட்டுமே போதுமாகிறது.
காலம் கண்டிப்பாக பதில் சொல்லும்.
அந்த கணம் மனிதன் நடைபிணமே.
அந்நேரம் உடலில் உள்ள கடவுள் அம்போன்னு வேடிக்கைப் பார்ப்பார்.
இந்த செய்தி உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் பொருந்தும்.
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
எதுவுமே சொந்தம் இல்லை என்று வரும் போது சொத்துக்கள் மட்டும் எப்படி சொந்தமாக முடியும். எதுவுமே நிறந்தரம் இல்லை என்கிற போது வாழ்க்கை மட்டும் எப்படி நிறந்தரமாகும். இழந்து போன உறவுகளோ, சொத்துக்களோ என்றும் நிலையானவை அல்ல என்று தெரிந்த பின்னரும் மனம் வருந்துவது எதனாலே இந்த பாழாய் போன மனதாலே இது நன்கு தெரிந்த பின்னும் ஏன் இந்த கலக்கம்.சிறிது நேரம் மனதை அமைதிபடுத்தி சற்று சிந்தியுங்கள் நீங்கள் இழந்தவற்றை ஒன்றுமே இல்லை என உணரும் வரை சிந்தியுங்கள் பிரபஞ்சம் அதை உங்களுக்கு கண்டிப்பாக உணர்த்தும்.இருந்தால் நல்லா இருக்கும் இல்லை என்றால் அதைவிட மிகமிக நல்லா இருக்கும். எது சொத்து சுகம். ஆமாங்க சொத்துக்காக பெத்தவங்களை கொலை செய்யும் அவலம், சொத்துக்காக பொறாமை போட்டி, தேவையா யோசிங்க. ஏதோ இருந்த சொத்துக்களையும் இழந்து விட்டோமே என்ற மனநிலை கொண்ட என் அன்பு உறவுகளே கவலையே படாதீங்க நமக்கு நிம்மதி மட்டும் தேவை அது இதில் கண்டிப்பாக இல்லை. மேலே பார்த்தால் வானம் கீழே பார்த்தால் பூமி இதை நமக்கு பிரபஞ்சம் வழங்கி உள்ளது யாரது தயவும் தேவை இல்லை இது தான் உண்மையான பேரானந்த்தின் இருப்பிடம்.வீனாக மனதை போட்டு வருந்தாதீங்க.நாளைய தினம் நல்ல தினமாக மாறும் கண்டிப்பாக மாறியே தீரும் அதற்கு உங்க மனதில் நேர்மறை விதையை விதையுங்கள்.நல்லதே நடக்கும்.
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
தெய்வ சக்திகளை வீட்டினுள் அழைக்கும் தர்ப்பை புல்லும்,பச்சை கற்பூரமும் !!!
1)வீட்டுக்கு வெளியே வீட்டோடு நான்கு பக்கமும், இரண்டு தர்ப்பை புல்லை எடுத்து,
அதில் பச்சை கற்பூரத்தை தடவி நான்கு பக்கத்துக்கும் போட வேண்டும்
வீட்டுக்கு வெளியே போட வாய்ப்பு இல்லையென்றால் வீட்டிற்குள் போடலாம்.
2) தர்ப்பை புல்லை பச்சை கற்பூரம் தடவி சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி,
அதை தூபம் போட வேண்டும். அப்போது புகை கொஞ்சமாக வரும், அந்த புகையை வீடு முழுவதும் பரவும் படி செய்ய வேண்டும்.
தர்ப்பை புல்லுக்கும், பச்சை கற்பூரத்துக்கும் தெய்வ சக்திகளை வீட்டினுள் அழைக்கின்ற சக்தி உண்டு.
No comments:
Post a Comment