ஓம், ஆதியும், அநாதியும் அற்ற அகிலாண்ட கோடி, பிரம்மாண்ட நாயகன், உலகை படைத்த ஒருவன், என்னை இயக்கும் சிவன், சிவனடி என்னுள் ஜீவனாய் இருக்கிறான்.
ஜீவன் = சீவன்,இங்கு ஜீ என்பது வடமொழி, சீ என்பது தமிழ் மொழி.
என்னுள் உயிராய் இருப்பது நீ என்று அறியாமல், கண்கள் காணும் காட்சிகளையும் , காணத் தகாத காட்சிகளையும் கண்டும், கேட்டும், என்னை காணும், உன்னை காணாமல் காலத்தை கொன்று கழித்தேனே சிவனே
நீயெல்லாம் சுகமே, நிம்மதி என்றுணர்ந்த மனமே, நிகழும் காலத்தில் நிம்மதி பெறுமே, நான் நினைத்ததெல்லாம் நடத்தி கொடுக்கும் உயிரே சிவன், இறைவனே
சாத்தியம் இல்லா நேரத்திலும், நான் இருக்கும் இடத்திலும், என்னோடு இருப்பவர்கள் தானே முன்வந்து, அந்நேரத்தில் அற்புத சக்திகள் எனக்கு தந்து, சத்தியமாய் சாதித்து செய்பவன் நான். ஏனெனில் நான் என் சிவன். சர்வம் செய்பவன் இறைவன்
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
இவ்வாறெல்லாம் நம் சரீரத்தை இயக்குபவன் சிவன்.
இது போன்ற சிவனுக்கு , நம் சரீரத்தில் சிவனுக்கு எவ்வாறு உருவம் இல்லையோ, அது போல் சிவ ஆலயத்தில் சிவனுக்கு உருவம் இல்லை.
சரி, சிவ ஆலயத்தில் சிவனுக்கு உருவம் இல்லை. பின் லிங்கம் என்று கூறி ஒரு சிலையை வைத்து இருக்கிறார்களே , அதற்கு லிங்கம் என்று ஏன் பெயர் வைத்தார்கள் என்று நோக்கும் போது,
சிவ ஆலயத்தில் லிங்கத்தை மேலே இருந்து நோக்கினால் , நம் வலது கண்ணை குறிக்கும். பொதுவாக கண்களானது நம்ஆன்மாவின் வாசல் நம் கண்களே .
லிங்கத்தை மேலே இருந்து பார்க்கும் போது நீண்டு கொண்டு இருக்கும் பகுதி மேலே இருந்து பார்த்தால் வட்டமாக தெரியும்.
வட்டமாக தெரிவது நம் கண்களின் வெளிப்புற கருப்பு வட்டம் .
விங்கத்தில் பொட்டு வைக்கும் இடம் நம் கண்களின் பார்வைக்கு உண்டான கண் பாப்பா.
அபிஷேகம் உளற்றி வரும் நீர் பகுதி நம் கண்களின் வெளிப்புறப் பகுதி. அபிஷேக நீர் வெளியே வருவது நாம் அழுகின்ற இடத்தில் வரும் வலது பாக நீர் .
இந்த லிங்கத்தை மேலே இருந்து பார்த்தால் சாட்சாத் வலது கண்ணைதான் குறிக்கும்.
லிங்க வடிவத்தில் தண்ணீர் கீழே ஊற்றும் பாகம் வலது பாகத்தில் உள்ளதால் , லிங்கமானது வலது கண்ணை குறிக்கும்.
நம் உடலில் வலது பாகம் super consciouns mind உள்ளது.
ஆக வலது கண்ணில் உள்ளே உள்ள திரை விலக்கப்பட்டால் நெற்றியில் உள்ளே உள்ள இறைவனின் இருப்பிடம் அறியலாம் என்ற அடிப்படையில் வலது கண்ணே சிவலிங்கம்
நம் உடலில் உருவமற்ற ஆன்மா எவ்வாறு ஜோதியாக உள்ளதோ, அதேபோல் சிவனுக்கு உருவம் இல்லை.
ஆக கண்களே ஆன்மாவின் வாசல் என்ற அடிப்படையில் கண்களில் உள்ள திரைமறைக்கப்பட்டு உள்ளது.
இந்த கண்களில் உள்ள திரைகளை விலக்கினால் , நம் உடலில் உள்ள ஆன்மாவாகப்பட்ட ஜோதியை காணலாம் என்ற அடிப்படையில் வள்ளலாரும் கூறுகிறார். இதையே வடலூரிலும் ஏழு திரைகளை அகற்றி ஜோதியை காண்பிக்கிறார்கள்.
No comments:
Post a Comment