பரமாத்மாவிடம் நேரம் கிடைக்கும் போதெல்லாம்
உணர்வுபூர்வமாக கூற வேண்டிய நல் வார்த்தைகள்.
இந்த சரீரத்தை பிரபஞ்ச சக்தியால் வழி நடத்தும் உயிர் சக்தியே,
உயிர் சக்தியை செவ்வன்னே வழி நடத்தும் , பரமாத்மாவின் சிறு அங்கமாகிய ஆன்மாவே,
பிரபஞ்ச சக்தியையும், உயிரையும், ஆன்மாவையும் கண்காணிக்கும் பரமாத்மாவே,
சிரம் தாழ்ந்த வணக்கங்களும், நன்றிகளும்.
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
பெற்றோர் வைத்த பெயரும்"பிணம்" என்று மாறுது.
விரும்பி அணிந்த துணியும்"கந்தல்"என்று ஆகுது,
பாடுபட்டு சேர்த்த சொத்தும்"வாரிசு"இடம் சேருது,
கூடி வாழ்ந்த மனைவி
கூடவே வா , சாகுது..? இல்லையே,
ஒடி, ஆடி உழைத்த உடம்பு"உயிரை"விட்டு கிடக்குது,
உயிர் கொடுப்பேன் என்று கூறிய நண்பர்கள் எல்லாம்"ஊமை"யாக நிற்குது,
சொந்தம் என்று சொல்வதெல்லாம்
"உனக்கு"சொந்தம் இல்லை,
நீ வந்த , இந்த உலகில்,
"அவன் "தந்த உடம்பில்,
சொந்தம் என்பது ஏது ?
"வந்தோம்"
பூமியில் "தங்கி" செல்கிறோம்..!!
ஆக யாரையும் நம்பாதே.
உன் உடலில் உள்ள கடவுளை நம்பு,
உன்னை நீயே நம்பு.
உன் உடலில் உள்ள கடவுள் உன் வாழ்க்கைக்கு தேவையான வழி காட்டுவார்.
உன் உடலில் உள்ள உயிரே கடவுள். மூச்சுக்காற்றே கடவுள்
கடவுள் ஒருவரே,
மனிதன் தான் தன் வசதிக்கு ஏற்ப பல பெயர் வைத்துக்கொள் கிறான்.
மதத்தையும்உருவாக்கி இருக்கிறான்.
மதம் மனிதனை பிடிக்கவில்லை.
மனிதன் தான் மதத்தை பிடித்து இருக்கான்!
பரம்பொருள் ஒன்றே!
கடவுள் கருணை மிக்கவர்!யாருக்கு, எதை, எப்போது, எப்படி தர வேண்டும் என்று தெரியும்!
நம்மை முற்றிலும் அறிந்தவன்!
அவனின்றி ஓர் அணுவும் அசையாது!
எல்லாம் அவன் செயல்.............
No comments:
Post a Comment