ஆழ்மன சக்தியும் -. என் அனுபவமும்.
சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து என் கண்களை மூடி, மானசீகமாக ஆஞ்சநேயர் கோவிலுக்கு போயிட்டு அவரை தரிசித்து விட்டு வந்தேன்...
இந்த மானசீகமான ஒரு தரிசனம் ஒரு அரை மணி நேரத்துக்கு மேலாக நீடித்து இருந்தது, என் மனம் என்னை அறியாமலேயே அந்த ஆழ்மன தளத்துக்கு சென்றிருந்தது...
அந்த சமயத்தில் என் எதிர் வீட்டு வாசலில் ஒரு நாய் ஒன்று ஓயாமல் குறைச்சிட்டு இருந்தது...
சத்தம் கேட்டு என் வீட்டு வாசலில் நான் வந்து நிற்கிறேன் எனக்கும் அந்த ஐந்தறிவு ஜீவனுக்கும் ஒரு முப்பது அடிக்கு மேல இடைவெளி இருக்கும்...
நான் அந்த ஜீவனை பார்த்து என் கண்களால் உற்று நோக்கி என் ஆழ்மனதுக்குள் சில கட்டளைகளை பிறப்பித்தேன்,
குறைத்துக் கொண்டிருந்த அந்த ஜீவனை நிறுத்தச் சொன்னேன் உடனே நிறுத்தியது, கீழே படுக்கச் சொன்னேன் உடனே படுத்தது,
எழுந்து ஓட சொன்னேன் உடனே ஓடியது...
நான் ஆச்சரியம் தாங்காமல் என் வீட்டில் இருந்த என் உறவினர்கள் மீதும், அவர்களுக்குத் தெரியாமல் சில உத்தரவுகளை பிறப்பித்தேன் அவர்களும் அதை செய்து முடித்தனர்...
அந்த தருணம் நான் ஆழ்மனதின் அற்புத சக்தியை பரிபூரணமாக உணர்ந்தேன்...
இந்த சம்பவம் நடந்து ஒரு இரண்டு மூன்று நாட்களுக்கு பிறகு என்னுடைய நண்பர் ஒருவர் போனில் தொடர்பு கொண்டு அவருடைய கடன் பிரச்சனையை பற்றி சொல்லிட்டு இருந்தார்...
அவர் கடன் வாங்கிய இடத்தில் இருந்து அவருக்கு நிறைய பிரஷர் கடன் கொடுத்தவர் என் நண்பரின் வீட்டுக்கு வந்து ரொம்ப தொல்லை பண்ணிட்டு இருந்தார், இதனால் என் நண்பர் தற்கொலை எண்ணத்துக்கு
சென்றுவிட்டார்...
பிறகு நான் அவருக்கு சில சமாதானங்கள் கூறி அந்த கடன் கொடுத்த நபர் வீட்டுக்கு வந்து பிரச்சனை பண்ணாம இருக்க நான் என்னால் ஆன காரியங்களை செய்கிறேன் என்று அவருக்கு வாக்குறுதி அளித்தேன்...
என் நண்பரையும் அவருக்கு கடன் கொடுத்த நபரையும் எனக்கு நன்றாக தெரியும் என்ற காரணத்தால் நான் ஆழ்மன சக்தியை உபயோகித்து அந்த கடன் கொடுத்த நபரை என் மனதுக்குள் நினைத்து அவருக்கு சில கட்டளைகள் இட்டேன்...
இந்த சம்பவம் நடந்து ஒரு வருஷம் இருக்கும், என் நண்பர் எனக்கு போன் பண்ணி அந்த கடன் கொடுத்த நபர் கடனை திருப்பி கேட்க வரவே இல்லை என்று சொன்னார்... மேலும் அவருடைய பொருளாதாரம் உயர்வடைந்து அந்தக் கடனைத் நல்லபடியா திருப்பிக் கொடுக்கணும் என்று கேட்டு கொண்டார்.... ஆறு மாதம் கழித்து அதுவும் நடந்தது.
ஆழ்மனசக்தியை உபயோகித்து எண்ணிலடங்கா அற்புதங்கள் செய்யலாம்..
ஆழ் மன சகதி தொடரான ஒரு தேவதையின் ஆத்மார்த்தமான உபாசனையால் வாக்கு பலிதம் அடுத்தவர்களின் மனநிலை இவர்களை உணரலாம்.
அவர்களின் சில செயல்களால் நமக்கு தொல்லை தராமல் செய்யலாம்.அவர்களை கட்டுப்படுத்து என்பதை நம்ப முடியவில்லை.
அரைமணியில் ஆழ்மன சக்தி வெளிப்படுவதை நம்பமுடியவில்லை. நாம்
நினைப்பதை அடுத்துவர்கள் செய்யவைப்பது குறிப்பாக ஆழ் மன சக்தியை மனிதர்கள் மீது பிரயோகிப்பது மிக தவறு.
நன்றி.
No comments:
Post a Comment