Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Saturday, May 25, 2019

மூளை பற்றிய நீண்ட சுருக்கமான பதிவு.

மூளை பற்றிய நீண்ட சுருக்கமான பதிவு. 

விருப்பமுள்ளவர்கள் படிக்கவும். 

சிந்தித்துப் பார்த்தால் ஒரு பறவை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எப்படி கூடு கட்டி முடையிட்டதோ அப்படித்தான் இன்னும் கூடுகட்டுகிறது. காகம் கூடு கட்டுகிறது, குயில் வந்து அதில் முட்டை இட்டு விட்டு ஓடி விடுகிறது. இது மாறுவதே இல்லை. இரை தேடுவது, தன் இனத்தினை உணவு உண்ண அழைப்பது போன்ற மற்ற எல்லா விஷயங்களும் கூட அப்படியே மாறாமல் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றது. மிருகங்களும் அப்படித்தான் இரை தேடுகின்றன, இன விருத்தி செய்கின்றன மடிந்து போகின்றன. விஞ்ஞானம் இதை இயல்புணர்வு என்கிறது. இவையெல்லாம் இப்படி இயற்கையின் நியதியின் படி வாழ்ந்து மடிந்து போகின்றன. அவற்றால் வேறு விதமாகச் செயல்பட முடியாது. ஆனால் மனிதன் அப்படியல்ல. அன்று வனங்களில், குகைகளில் உடையின்றி நிர்வாணமாக, விலங்குகளை வேட்டையாடி உயிர் வாழ்ந்து கொண்டிருந்தவன், இன்று அடுக்குமாடி வீடு கட்டிக் கொண்டு, உழைத்து, உணவுப் பொருள்களை உற்பத்தி செய்து, சமைத்து உண்கிறான். நாளைய தேவைக்காக சேமித்தும் வைத்துக் கொள்கிறான். பூமியைத் தாண்டி வான்வெளிக்கும் கூடப் போகிறான். இப்படி பல வகைகளில் தன்னையும், தன் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்திக் கொண்டிருக்கிறான். இது எப்படி சாத்திமானது ? இதற்கெல்லாம் காரணம் என்ன ? 

இதற்கெல்லாம் காரணம் மூளைதான். எதனிடமும், எதற்காகவும் பாகுபாடு காட்டமல் நேர்மையாகச் செயல்படும் இயற்கை மனிதனுக்கு மட்டுமே அளவு கடந்த சக்தி வாய்ந்த தன் முழு செயல் திறனையும் உள்ளடக்கிய மூளையை வழங்கியிருக்கிறது. எனவே இயற்கை தன் முழு ஆற்றலையும் உள்ளடக்கிய மனிதனாகவே தன்னை வெளிப்படுத்தியுள்ளது என்பது தெளிவாகப் புரிய வருகிறது. மனிதனின் மூளைக்கு இருக்கிற சிந்திக்கும் திறன் விலங்குகளுக்கோ, பறவைகளுக்கோ மற்ற உயிரினங்களுக்கோ இல்லை. மேலும் அவைகளின் வினைகளைப் பதிவு செய்து மீண்டும் தேவைப்படும் பொழுது அதை எடுத்து உபயோகப்படுத்திக் கொள்ள மனம் என்கிற ஒன்று அவைகளுக்கு இல்லை. மனிதர்களில் கூட பெரும்பாலானோர் மூளையை உபயோகப்படுத்துவதே இல்லை. என் தாயார் என்னைப் பார்த்து அடிக்கடி சொல்லும் வார்த்தை ''அவனுக்கு மூளை இல்லை'' என்பதுதான். இதனால்தான் மனிதர்களுக்குள் மிருகத்தைப் போல வாழ்பவர்கள், மனிதனாக வாழ்கிறவர்கள், உயர்ந்த தெய்வ நிலையில் வாழ்கிறவர்கள் என்றெல்லாம் பல மாறுபாடுகள் காணப்படுகின்றன. மனித மூளையை விட திறமையான கம்ப்யூட்டர் உலகில் வேறு கிடையாது. ஆனாலும், அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டவர்களும் இது வரை யாரும் இல்லை. உலகிலேயே தலை சிறந்த அறிவாளிகள் கூட தங்களின் மூளைத் திறனை 10% சதவிகிதம் கூட உபயோகப் படுத்தவில்லை என்றே ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றார்கள். இயங்காத மூளையின் பகுதிகளில்தான் இந்த பிரபஞ்சம் குறித்த எண்ணற்ற கேள்விகளுக்கான விடை ஒளிந்து கிடக்கிறது. அற்புத சித்திகளும், சக்திகளும், அமானுஷ்ய இரகசியங்களும் அவற்றில்தான் புதைந்து கிடக்கின்றன. நடைமுறை வாழ்க்கைக்குத் தேவையான மூளையின் செயல் திறன் மட்டுமே மரபு வழியாக பயன்பட்டுக் கொண்டே வருகிறது. 

எனவேதான் இன்றைய விஞ்ஞானிகள் சில மனிதர்களின் அமானுஷ்ய செயல்பாடுகள் மற்றும் செயற்கரிய செயல்பாடுகளுக்குக் காரணமாக மனித மூளையின் இயங்காமல் இருக்கும் பகுதிகளின் இயக்கத்தை காரணமாக முன் வைக்கின்றனர். இது அவர்களின் அனுமானம்தான். ஆனால், இது உண்மை என்று நம் முன்னோர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி வைத்திருக்கிறார்கள். மூளையைப் பொருத்த வரை நமது ஒவ்வொரு செயல்களுக்கும், அவற்றால் பெறும் அறிவுகளுக்கும் தனித்தனி மையங்கள் உள்ளன. பெரும்பாலும் நமது ஐந்து புலன்கள், அவற்றால் செய்யப்படும் செயல்கள், அந்த நுகர்ச்சியின் விளைவால் பெறும் அறிவு இவற்றிற்கான மையங்கள் மட்டுமே நம் மூளையில் இயங்குகின்றன. மற்ற அனைத்து மையங்களும் உபயோகப்படாமல் வீணாகிப் போய் விடுகின்றது. எனவேதான் புலன்களில் இருந்து மனதை பிரித்து விட வேண்டும் என்று சொல்கிறார்கள். சில பேருக்கு பிறக்கும் பொழுதே சில புலன் கடந்த ஓரிரு மையங்கள் செயல்பட்டு விடுவதால்தான் அவர்கள் மற்றவர்களை விட வேறு பல மாறுபட்ட செயல்பாடு உள்ளவர்களாகவும், அபார ஞானம் உள்ளவர்களாகவும் திகழ்கின்றனர். நம் முன்னோர்கள் இதற்குக் காரணம் முற்பிறவி என்று சொல்கிறார்கள். விஞ்ஞானம் கரு உருவாகும் பொழுது தாயின் உள்ளுறுப்புகளின் செயல் திறன் மற்றும் சுரக்கும் இரசாயன திரவங்களின் செயல்திறனால் இது நடக்கின்றது என்று சொல்கிறது. 

இப்பொழுது நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் உபயோகப்படாமல் இருக்கும் மூளையின் பிற பகுதிகளை, மையங்களை அதிகபட்சமாக உபயோகப்படுத்திக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதுதான். விஞ்ஞானத்தின் படி மூளையின் இயக்கங்களெல்லாம் ஒரு உயிர்புள்ள மின் சக்தியால்தான் நடைபெறுகின்றது. அந்த உயிர்ப்புள்ள மின் சக்தி என்பது பரம்பொருளின் சக்தியாகிய ப்ராண சக்தியே ஆகும். உடலிலே உற்பத்தியாகும் உயிர்மின் சக்தியின் அளவை அதிகப்படுத்துவதன் மூலம் மூளையின் இயங்காத பகுதிகளை இயக்கச் செய்து விடலாம். மின் சக்தியின் வலிமைக்கேற்ப மூளையின் செயல் திறன் மேம்படும். இதற்கு மனதின் ஒத்துழைப்பும் இன்றியமையாதது என்பதை மறந்து விடக் கூடாது. மூளையின் ஆற்றலைத் சரியாகவோ, தவறாகவோ பயன்படுத்தி வினைகளையும், விளைவுகளையும் உருவாக்குவது மனமேயாகும். இதனடிப்படையிலேயே நம் முன்னோர்கள் ப்ராணாயாமம், தியானம், ஆசனம் போன்ற யோகப் பயிற்சிகளை மேற்கொண்டு ஒழுகி ஜீவ மின் சக்தியை அதிகப்படுத்திக் கொண்டனர். இதனால் மூளையை மட்டுமல்ல, உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும், இந்திரியங்களையும், முள்ளந்தண்டு போன்ற உறுப்புகளையும் திறம்பட இயங்க வைத்து தெய்வீக ஆற்றல்களையும், அஷ்டமகா சித்திகளையும் பெற்றனர். 

மூளை பார்ப்பதற்கு ஒரே விதமாகத் தோன்றினாலும், நமக்கு கை, கால், கண், காது போன்ற உறுப்புகளைப் போல அதுவும் இரண்டாகவே இருக்கிறது. இடப்பகுதி வலப்புறத்தையும், வலப்பகுதி இடப் புறத்தையும் நிர்வகிக்கிறது. இடது மூளையே தன்னுடைய பணிகளைச் செய்வதோடு வலது மூளையின் கட்டளைகளையும் செயல்படுத்துகிறது. சிலர் சிந்தனையும், சொல்லும் நன்றாக இருக்கும். ஆனால், செயல் என்று வரும் பொழுது கோட்டை விட்டு விடுவார்கள். இதற்குக் காரணம் வலது மூளையின் முடிவை அல்லது கட்டளையை இடது மூளை திறம்பட செயல்படுத்தாமல் போவதுதான். பசி, தாகம், தூக்கம், துக்கம், வலி, ஆனந்தம் போன்ற பல தரப்பட்ட உணர்வுகளை மூளையின் மூலமாகத்தான் நாம் உணர்கிறோம். நமது மூன்றாவது கண் என்கிற நெற்றிக் கண் மூளையின் அடியில் இரு அரைக் கோளங்களுக்கு நடுவே வெளியில் தெரியாதபடி கார்பஸ் கலோசம் அருகே சிகப்பு நிறத்தில் பைன் மரத்தைப் போன்ற கூம்பு வடிவத்தில் புதைந்து கிடக்கிறது. இதன் நரம்பு நுணிகள் புருவ மத்தியில் இருப்பதால் அதையே நெற்றிக் கண் என்பார்கள். பைன் மரத்தையொத்த கூம்பு வடிவத்தைக் கொண்டிருப்பதால் இதை Pineal Gland என்பார்கள். இதையே தமிழில் பீனியல் சுரப்பி என்கிறோம். பரிணாம வளர்ச்சியில் முந்தைய கண்ணான இது சுரப்பியாக மாறி விட்டது என்று சொல்வதுவுமுண்டு. ஆரம்பத்தில் பிட்யூட்டரி என்ற சுரப்பியையே தலைமை சுரப்பி என்று சொல்லி வந்தார்கள். தற்பொழுது அந்த முடிவில் மாற்றம் ஏற்பட்டு பீனியல் சுரப்பியின் சிறப்பு உணரப்பட்டுள்ளது. 

பொதுவாக இது ஒரு நாளமில்லா சுரப்பி  என்று சொல்லப்பட்டாலும் மற்ற சுரப்பிகளுக்கெல்லாம் இல்லாத பல தனிச் சிறப்பு இதற்கு உண்டு. இதன் அமைப்பு கண்களைப் போவே உள்ளது. வெளிப்புறத்தில் பளிங்கு போன்ற லென்ஸ் உண்டு. அதற்குள்ளே விட்ரியஸ் அங்கம் எனப்படும் ஒளி புகும் தன்மையுள்ள ஒரு வகையான ஜெல்லி நிறைந்துள்ளது. ஒளிக் கூருணர்வு கொண்ட செல்கள் நிறைந்த விழித்திரையும், இரத்தநாளப் படலங்களும், தனி நரம்பும் இருக்கிறது. மேலும், பெரு மூளையில் மட்டுமே காணப்படும் அஸ்ட்ரோசைஸ்டுகள் இதிலும் உள்ளன. இது ஒரு வித ஹார்மோன்களை உற்பத்தி செய்து மூளையின் பகுதிகளான ஹைப்போதாலமஸ், ஹைப்போபிசிஸ் கூட்டு அமைப்பின் மீது வினை புரிகின்றது. உடல் வளர்ச்சியின் தரத்தை நிர்ணயம் செய்கின்றது. பிட்யூட்டரி சுரப்பியுடன் கூட்டாகச் செயல் புரிகின்றது. அட்ரினல், தைராயிடு சுரப்பிகளின் பணிகளைப் பாதுகாக்கிறது. நீர், உப்பின் சம நிலை, சர்க்கரை அளவு, குருதியின் அமைப்பு, உணவு செரிமாணம், பாலின உறுப்புகளின் வளர்ச்சி, பாலின நடவடிக்கைகள் அனைத்தும் நடவடிக்கைகளும் இதன் கட்டுப்பாட்டில்தான் உள்ளன. மன நடவடிக்கைகளின் முழுமையான தன்மையை இதுதான் நிர்ணயிப்பதாகச் சொல்கிறார்கள். உடலின் தட்ப வெப்ப நிலைகளைச் சீராக வைக்கிறது. மெலடோனின் என்ற ஹார்மோனை உற்பத்தி செய்து சருமத்தின் நிற மாற்றங்களுக்குக் காரணமாகவும் அமைகிறது. வெளிப் புறத்தில் நடைபெறும் அனைத்தும் இதற்கு முன் கூட்டியே தெரிந்து விடும் என்று சொல்கிறார்கள். 

எல்லாவற்றிற்கும் மேலாக இதுதான் ஆன்மா இருக்கும் இடம் என்றும், உடலையும் உள்ளத்தையும் இணைக்கும் இணைப்பு என்றும் சொல்கிறார்கள். முன் ஜென்ம வினைகளின் கருவூலம் என்றும், பின் வரும் பிறவிகளுக்கான வித்து இங்குதான் உள்ளது என்றும் நம் முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது. அவர்கள் இதையே மனோன்மணி என்றார்கள். அவர்கள் இதை அருட் சுரப்பி என்கிறார்கள். இது சிறப்பாக இயங்கினால் ஞானம் விளையும் என்கிறார்கள். ஆழ்நிலை தியானம், குண்டலினி யோகம் போன்ற யோகங்களின் மூலம்தான் இதைத் தூண்டுதல் செய்ய முடியும். பரிணாம வளர்ச்சியில் மனிதனின் மேல் மட்ட மூளை வளர்ச்சியடைந்த அளவு உணர்ச்சிகளின் பிறப்பிடமான அடி மூளையிலுள்ள ஹைப்போதாலமஸ் என்கிற உறுப்பு  வளர்ச்சியடைய வில்லை என்றாலோ, அதன் செயல் திறன் குறைந்திருந்தாலோதான் அவனுடைய தெய்வீகப் பண்புகள், அன்பு, தியாகம் போன்ற மேன்மையான குணங்கள் மறைந்து சுயநலம், ஆணவம், சூது, பொறாமை, வஞ்சகம், கொலை செய்யும் எண்ணம், காம வெறி, கோபம் போன்ற உணர்ச்சிக் கொந்தளிப்பின் விளைவுகளான தீய குணங்களுக்கு ஆளாகி விடுகிறான். 

இந்த ஹைப்போதாலமஸ் என்கிற உறுப்புக்குத்தான் உடலில் அதிக இரத்தம் வழங்கப்படுகிறது. இது நம் உடலில் நடைபெறும் அனைத்து நடவடிக்கைகளிலும் பங்கு கொள்கின்றது. நாம் தூங்கும் பொழுது மூளையும் ஓய்வு எடுத்துக் கொள்ளும். ஆனால், இந்த ஹைப்போதாலமஸ் 24 மணி நேரமும் விழிப்புடன் இருந்து செயல்படுகின்றது. உடலுக்கு உள்ளேயும், வெளியேயும் நடக்கும் அனைத்தையும் கண்காணித்துக் கொண்டே இருக்கிறது. அவசியம் ஏற்படும் பொழுது அந்தந்த மையங்களுக்கு தகவல் தந்து, செயல்படத் தூண்டியும் விடுகின்றது. தூங்குபவரை தட்டி எழுப்பும் பொழுது மூளைக்குத் தகவல் கொடுப்பது இதுதான். ஆனால் சுயமாக சிந்திக்கும் திறன் இதற்கு இல்லை. இதன் மேல் புற நுணியில் பீனியல் சுரப்பியும், கீழ் புற நுணியில் பிட்யூட்டரி சுரப்பியும் அமைந்திருப்பது இதன் தனிச் சிறப்பாகும். யோகிகள் குண்டலினியை மேல் நோக்கி எழுப்பி சொண்டு செல்வது ஹைப்போ தாலமஸையும், மற்ற இரு சுரப்பிகளையும் ஊக்குவிக்கத்தான். இதன் மூலம் உயிர் மின்சக்தி பற்றாக் குறையால் உபயோகப்படுத்தப்படாமல் செயல்படாமல் இருக்கும் நமது மூளையின் 90% கும் அதிகமான பகுதிகளில் ஓரளவையேனும் உபயோகத்துக்குக் கொண்டு வந்து ஞானத்தையும், அற்புத ஆற்றல்களையும், அஷ்ட மகா சித்திகளையும் பெற்றுக் கொண்டார்கள்.

No comments:

Post a Comment