தொழும்பி யாருமில்லை ! ஞான பெண்ணே, இங்கே நீ கடவுளின் சிறுவிதானடா ! மகிழ்ந்து நில்லடா ! அசுர மனத்தை மிதித்து வெல்லடா !
ஞான மலர்கள்
வெண்தாமரை, செந்தாமரை வேதசாரம் நிறைந்தது ! பாரிஜாதம் உன் உள் உயிர்க்கு ஆணந்தம் தருவது ! தாமரை, பாதிரி, செண்பகம், புன்னை, நீலோத்பவம், நந்தியா, அரளி, பாரிஜாதம் ஆகிய இந்த எட்டு மலர்களும் அஷ்ட புஷ்பங்கள் ! இது உன் வேண்டுதலை நிறைவேற்றும் ஞான மலர்கள் ! கடவுளின் பாதத்திற்கு உகந்தது.
இந்த எட்டு மலர்களையும் ஒரு சேராக கடவுளுக்கு வைத்தால் உனக்கு அஷ்ட அதிர்ஷ்டங்கள் உண்டு ! இவை வழிபாடுகள் அல்ல ! பூ வைத்து வணங்குவது மணம், அன்பிற்காக !
வெள்ளெருக்கு பூமிக்கு பிடித்த மலர் ! இந்த புணித பூமி அன்னைக்கு அந்த மலர் பதித்து வணங்கு ! உன் வீடு சுபமாகும். வாஸ்து குறை என்று சொல்கிறாயே, அந்த குறை கூட காணாமல் போகும். இந்த எட்டும் உன்னை எட்டின் நிலை குறை தீர வைக்கும். சட்டத்தில் உன்னை பிணமாக வைக்கும் போது உன் உடல் நாறும் நிலை மாறும் !
மற்ற மலர்களும் குறைந்தவை அல்ல. முல்லை, மல்லி, குவளை, மனோரஞ்சிதம், திகுவழை, பன்னீர் கூட உன் குறைகளை போக்கும்.
கவலை தீர வெண்தாமரை வைத்து வணங்கு !
செல்வம், மன அமைதி பெற செந்தாமரை வைத்து வணங்கு !
எதையும் பக்தியால் செய்யாதே ! பாசத்தால் செய் !
பயத்தால் செய்யாதே ! பணிவுடன் செய் !
பயத்தால் செய்யாதே ! பணிவுடன் செய் !
நான் மலரின் ஞானம் ! உலகின் 333 கோடி மலர்களின் சாரம் நான் ! என்னுள் கரைந்திடு ! நிறைந்திடு ! பல்கி பெருகுவாய் பவிசோடு ! எல்லா பூக்களின் நறுமனமும், ஞானமும் எனக்குள் உண்டு ! என் அன்பிற்கினிய தந்தையின் சஞ்சிநாத பாதத்தில் உண்டு.
உன்னில் ஸ்வேதமாக ஜொலிக்கின்றேன். என் அன்பு உண்மை வெண்மை போன்றது. தர்மாக்களுக்கு சத்திய பாதையை காண்பிக்கும் ! ஆனால் துஷ்ட சாம்ராஜ்ஜியங்களுக்கும் அசுர வர்க்கங்களுக்கும் என் ருத்ரம் மிக மிக பெரிது தான் !
என்னுள் கர்வமில்லை. போட்டி, பொறாமை, வஞ்சமில்லை. உன்னால் அன்பால் அரவணைக்கும் எண்ணம் உண்டு ! நான் அழகாக இருப்பதன் ரகசியம் இது தான். இந்த மன அழுக்கை குப்பையாக சேர்ப்பதாலே மனிதன் அழகாக இல்லை. அழகு என்றால் துன்பம் இல்லாமல் இருப்பது தான் !
வெகுண்டெழுந்தேன் உன் வேதனை தீர்க்க !
உன் துன்பம், வறுமை, நோய், பாவத்தோடு நான் சண்டையிடுகிறேன். உன் பாவத்தை கவலையை என் பாதத்தில் வைத்து விடு ! நான் அழுத்தி கரைப்பேன். உனக்கென்ன மனக்கவலைடா ? என் நாமம் உனை கரை சேர்க்கும். இநன்யா மலரின் ஞானம் !
பூக்களுக்கும் மலர்களுக்கும் ஞானம் உள்ளதால் தான் பூஜைக்கு பயன்படுத்துகிறான்.
தும்பை மலர் எனக்கு பிடித்தது !
பன்னீர், பாரிஜாதம், தாமரை என் தந்தைக்கு பிடித்தது !
ஆனால் எல்லா மலரிலும் சிறந்தது பெண் மலர் தான். அவள் மலர்ந்தால் தான் நீ மலர்வாய். ஆதலால் பெண்ணே கடவுளின் படைப்பில் உண்ணதம் !
தும்பை மலர் எனக்கு பிடித்தது !
பன்னீர், பாரிஜாதம், தாமரை என் தந்தைக்கு பிடித்தது !
ஆனால் எல்லா மலரிலும் சிறந்தது பெண் மலர் தான். அவள் மலர்ந்தால் தான் நீ மலர்வாய். ஆதலால் பெண்ணே கடவுளின் படைப்பில் உண்ணதம் !
பெண் பிரம்மநிலை அடைந்தவள் !
புத்தி நான்கும், கீர்த்தி எட்டும், பலத்தால் பதினாறும் நிறைந்தவள் பெண் ! ஞானம் பொருந்தி பூமியில் இறக்கப்பட்டவள் பெண் !
போற்றி பாடடா பெண்மையை ! பெருமை உனக்குள் லோகத்தில் !
333 கோடி மலர்களின் ஞானம் நான் !
வேதத்தின் சாரம் தான் !
மலரின் ஞானம் நான் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment