உண்மை சம்பவம் என் வாழ்க்கையில் நடந்தது ....
சனிபகவானை தீய எண்ணத்தோடு பார்த்ததை ......
நண்பர் ஒருவரை நீண்ட இடைவெளிக்குப்பிறகு சந்திக்க நேர்ந்ததது.
மிகவும் சோர்வாக வருத்தம் தோய்ந்த முகத்துடன் காணப்பட்டார்.
எப்போதும் கலகலப்பாக சந்தோஷமாகக் காணப்படுவார்.
என்னாயிற்று என்று விசாரித்த போது மிகவும் அலுப்புடன் ..........
''அஷ்டமத்துச் சனி'' பாடாய்
படுத்திவிட்டான்.
படுத்திவிட்டான்.
குடும்பத்தில் குழப்பம்,
தொழில் முடக்கம்,
கடன், வியாதி,
என்று அடுக்கிக் கொண்டே போனார்.
தொழில் முடக்கம்,
கடன், வியாதி,
என்று அடுக்கிக் கொண்டே போனார்.
இடைஇடையே சனீஸ்வர பகவானுக்கு அர்ச்சனை (திட்டு) வேறு.
அவர் பேசி முடிக்கும் வரை காத்திருந்த நான்.........
அஷ்டமத்துச் சனி என்றால் என்ன ?
என்று கேட்க , 8 ஆமிடத்துச் சனி என்றார்.
முதலில் எட்டாமிடம் என்பது மறைவு ஸ்தானம் என்கிற வரையில் நிறைய பேர் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
அப்படி என்றால் நம்மை விட்டு மறைந்து போய்விட்ட கிரகம் எப்படி நமக்கு தீமை செய்ய முடியும்......
யோசித்துப் பார்க்க வேண்டும்........
8 ஆமிடம் என்பது மறைவு ஸ்தானம் மட்டுமல்ல நமக்கு எதிரில் வெகு தொலைவில் இருக்கும் இடம்.
அதாவது அந்த கிரகத்துக்கும் நமக்குமான தொடர்பு துண்டிக்கப் பட்டுவிட்டது,
அல்லது அந்த கிரகத்தின் ஆற்றல்களை நாம் பெற முடியவில்லை என்பதே உண்மை.
ஆக .... சனீஸ்வர பகவானின் ஆற்றலை பெற்றுக் கொண்டிருக்கும் வரை இன்பமாக இருந்த நாம்,
அவரது ஆற்றல் கிடைக்காத போது துன்பப்டுகிறோம் என்றால் .....
அவர்தானே நமக்கு நன்மைகளை அதிகமாகச் செய்பவர்.
எனவே இனிமேலாவது திட்டுவதை விடுத்து அந்த கிரகத்தின் ஆற்றல்களைப் பெற நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கும் வழிமுறைகளைக் கையாண்டு பலன் பெறுவோமாக.
பொதுவாக பிறக்கும் போது தீய ஸதானங்கள் என்று சொல்லப்படும் இடங்களில் கிரகங்கள் இருக்கிறது என்றால்,
அந்த கிரகங்களின் கதிர் வீச்சை நாம் பெற மிடியவில்லை என்பதே பொருள்.
பிறக்கும் போது நமக்கு கிடைத்த கிரகங்களின் கதிர்வீச்சை நம் உடல் ஏற்றுக் கொள்ளும்.
ஆனால் பிறக்கும் போது நமக்கு கிடைக்காத கதிர்வீச்சு நம் உடலுக்கோ மனதுக்கோ ஒவ்வாமையை ஏற்படுத்தும்.
இளமையிலேயே அதைக் கண்டுபிடித்து அந்த கிரகங்களின் ஆற்றலை மேம்படுத்தி பழகிக் கொண்டால் எல்லாம் சுகமே.
உதாரணமாக புதிய சூழ்நிலைகள்,
புதிய ஊர்,
தண்ணீர்
இதெல்லாம் நமக்கு பிரச்சனைகளை உண்டு பண்ணும்.
புதிய ஊர்,
தண்ணீர்
இதெல்லாம் நமக்கு பிரச்சனைகளை உண்டு பண்ணும்.
பிறகு போகப் போக பழகிவிடும் ....
அது போலத்தான் இதுவும்.....
எல்லா கிரஹங்களின் பாதுகாப்பில் தான் நாம் இருக்கிறோம் ...
எந்த கிரகத்தையும் குறை கூறாமல் இருப்பதே நல்லது . இதுவே தீர்வு. .
தன்னையே சரிபடுத்த முடியாதவன் கிரஹங்களை குறை கூறுவது அர்த்தமேயில்லை.
குரு கொடுப்பான் ...சனி கெடுப்பான் என்று குறை கூற நமக்கு என்ன தகுதியிருக்கு ....
கிரஹங்களின் நிழலில் வாழும் நாம் ,,,,
கிரஹங்களையே குறை சொல்லலாமா ,,,
மாபெரும் தவறே ,,,
மாற்றிக் கொள்ளுங்கள் உங்கள் குணாதிசயத்தை ....
நன்றி ......
No comments:
Post a Comment