Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Thursday, September 14, 2017

கேள்வி : - ஞானிகளும் ஒரு வகையில் பைத்தியம்தான் என்று கூறுகிறீர்கள் . இதைச் சற்று விளக்க முடியுமா ?

கேள்வி : - ஞானிகளும் ஒரு வகையில் பைத்தியம்தான் என்று கூறுகிறீர்கள் . இதைச் சற்று விளக்க முடியுமா ?
ஓஷோ பதில் : - " ஆம் .
★ இது உண்மைதான் . ஏனெனில் இருவரும் சாதாரண மனநிலையில் , சாதாரண மக்களைப் போல பெரும்பாலும் இருப்பது இல்லை . ஞானி என்பவன் சாதாரண மனதைக் கடந்து மேலே சென்றவன் . பைத்தியம் என்பவன் மனதிற்குக் கீழே சென்றவன் . இதுதான் ஒரே வித்தியாசம் . ஆனால் இதன் பின்விளைவுதான் அசாதாரணமானது .
★ஞானி மனதைக் கடந்து மேலே சென்று பேரானந்த நிலையில் இருக்கிறான் . பைத்தியம் மனதிற்குக் கீழே சென்று ஒருசில எண்ணச் சுழலிலேயே சிக்கித் தவிக்கறான் . மேலே சென்றவன் , எண்ணங்களை ஒதுக்கிச் சென்றிருக்கிறான் . கீழே சென்றவன் மன இறுக்கம் , கவலை , எதிர்பாராத பெருத்த ஏமாற்றம் எல்லாம் சேர்ந்து அவனுடைய மனநிலையைப் பாதித்து அவனை கீழே கொண்டு சென்றுவிட்டது .
★ஆனால் இருவரது கண்களையும் பாருங்கள் . அவை ஒன்றுபோலவே ஒருவித வெறுமையில் இருக்கும் . இருவரும் இந்த உலகத்தைப் பற்றி கவலைப்படாமல் எங்கேயோ சஞ்சரித்துக்கொண்டு இருப்பார்கள் . இருவரும் பலசமயம் தங்களுக்குத் தாங்களே பேசிக்கொள்வார்கள் ; தானே சிரிப்பார்கள் ! இதனால் கீழை நாட்டில் , அநேக பைத்தியங்களை ஞானிகள் என்று கருதி மக்கள் வழிபடுகிறார்கள் ! இது கிராமத்தில் சகஜம் .
★ஆனால் மேலைநாட்டில் ஒரு ஞானியைக்கூட பைத்தியக்காரன் என்றுதான் எண்ணுவார்கள் . ஜீசஸ் , சாக்ரடீஸ் போன்றவர்களைப் பலர் பைத்தியக்காரன் என்றே கருதிவருகிறார்கள் . பொதுவாக பைத்தியம் ஒரு மிருகம்போல செயல்படும் . மனம் அவன்வசம் ஒருக்காலும் இருக்காது . ஆனால் ஞானியிடம் மனம் ஒரு வேலைக்காரன்போல செயல்படும் . அதைப் பார்த்துத்தான் அவன் சற்று சிரிப்பான் . இவன் வானத்தில் பறப்பவன் . ஆனால் பைத்தியம் பூமிக்கு அடியில் சென்றவன் .
★ஞானி விழிப்புணர்வில் முழுமையாக இருப்பவன் . பைத்தியக்காரன் விழிப்புணர்வின் அதல பாதாளத்தில் இருப்பவன் . ஆனால் வெளிப்பார்வைக்கு இருவருமே ஒன்றுபோலவே காணப்படுவார்கள் . இருவரும் ஆடை மற்றும் உணவு விஷயங்களில் அக்கறை காட்டமாட்டார்கள் . ஏதோ கிடைத்ததை உண்டு வழியில் எங்கேயாவது தன்னை மறந்து கிடப்பார்கள் .
★ஒருவன் ஞானி என்று எப்படி அடையாளம் காண்பது ? அதற்கு உங்கள் உள்ளுணர்வையும் , பகுத்தறிவையும் மேன்மைப்படுத்த வேண்டும் . அப்பொழுது அது உங்களுக்குச் சரியாகச் சுட்டிக்காட்டும் . வேறு வழியில்லை . " .
:-ஓஷோ

No comments:

Post a Comment