பரியாகி கடவுளை அறிவான் ! ஆனால் அறிதல் ஓமிடி செயலில்தானடா ! உணரடா ! உண்மை நானடா !
கடவுள் உன்னோடு பேசுவான் !
அன்பிற்கினியவன், ஆளுமை மிகுந்தவன் எண்ணிலடங்கா ஜீவகோடிகளை ஈன்ற அப்பன் என் நெஞ்சில் சிரிக்கும் தூயவன் உன்னோடு பேசுவான் ! எப்போது ? நீ நன்மை செய்து துன்பத்தில் உணரும் போது !
நீ எந்த செயல் செய்தாலும் முதலில் ஒரு விநாடி ஒரு கூக்குரல் கேட்கிறது. வேண்டாம் என்றும், செய் என்றும் ! ஆனால் கடவுள் பேசுகிறான் என்று நீ அதனை உணரவில்லையே ?
மனதில் ஆசையை அடக்கும் போதும், இல்லையேல் அதை கடந்து செல்லும் போதும் உன் உள் உணர்வு தாமதமாக ஆணந்தபடும் ! அப்போது கடவுள் பேசுவான் ! இங்கே பூமியில் தவறு செய்பவனிடம் கடவுள் பேசுவதில்லை. பிறந்த குழந்தை ஒரு வருடம் (தேவர்களுக்கு ஒரு நாள்) கடவுளிடம் பேசும் ! சிரிக்கும் ! அழும் ! உணர் !
உணர்ந்தும் கடவுளின் இருப்பை அறியாமல் இருக்கின்றாயே ? தவம், தியானம் இருந்தால் தான் கடவுள் பேசுவான் என்று அர்த்தமில்லை. ஞானியர்கள் தன்னை ஒடுக்கி உள்ளே விரிந்தார்கள். துன்பத்தில் கடவுளை கண்டார்கள் ! கடவுள் நீ மேலே செல்லும் போது ஒரு தடவை தான் ஒரு வார்த்தை பேசுகிறான். ஆனால் பூமியிலே எப்போதும் பேசுவான் !
யுகத்தில் பிறந்த மானிடன் தவம் செய்தவன் ! ஆனால் கடவுளோடு பேசுவதை மறந்துவிட்டான். உன் சத்திய பாதையை செம்மையாக்கு. ஆசையை விலக்கு. எல்லாம் உனக்கு காலத்தில் கிடைக்கும் !
கடவுளோடு எப்போதும் பேசி ஆணந்தப்படு ! எப்போதும் நன்மையே நினை. ஒழுக்கம் உன்னை கடவுளிடம் அழைத்து செல்லும். மது, மாது தொடாதே ! ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற உணர்வோடு வாழ் ! உயிர் போக நினைத்தலும் ஒழுக்கதில் தவறாதே !
தர்மத்தை செய்யாவிட்டாலும், தர்ம சிந்தனையோடு இரு !
நீ ஆணந்தமாவாய் ! ஆணந்தமானவன் உன்னோடு பேசுவான் ! நான் தினமும் உன்னோடு பேசுகிறேன். நீ தான் உன் செவி திறக்காது தீவினைக்குள் இருக்கின்றாய். உன் ஆளுமை உன்னுள் உறங்கி கொண்டிருக்கின்றது. நீ தான் தட்டி எழுப்ப வேண்டும் !
எண்ணம் நல் எண்ணமாக திண்ணியமாக இருக்கும் போது கடவுள் எப்போதும் உன்னோடு பேசிக் கொண்டிருப்பான். கடவுளோடு பேசிக் கொண்டிருப்பதால் தான் ஞானிகள் உன்னோடு பேசுவதில்லை !
நான் எப்போதும் எனக்குள்ளே பேசி ஆணந்தமாய் இருக்கின்றேன் ! அளவிளா பேரின்பமாய் இருக்கின்றேன். நானும் என் தந்தையும் எப்போதும் பேசிக் கொண்டிருக்கின்றோம். நான் உன் நெஞ்சில் இருப்பதை நினைத்து நீயும் கர்வப்படு !
ஒழுக்கத்தை எப்போதும் உன் உயிருக்கு மேலாக மதி ! உன் துன்பத்தை பனி போல ஒரு நொடியில் உருக வைப்பான்.
உண்மையை சொல்கிறேனடா ! கடவுள் உன்னோடு பேசுவான் ! உன் வழி அமைத்து தருவான் ! உன் சுட்டு விரல் பிடித்து அழைத்து செல்வான் லோகத்திற்கு !
வீறு கொண்டு எழு ! வீணாய் புலம்பாதே ! துன்பம் என்று ஏதுமில்லை ! எல்லாம் இன்பம் தான் ! என்னை பெறு ! நான் உன்னோடு பேசுவேன். இது சத்திய வார்த்தை. நித்சலன் வேண்டாம். ஏனென்றால் நானே சத்தியம் !
என்னை உணர்ந்தவன் ஞானியாவான் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment